திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் பேரூராட்சியில் 12 கவுன்சிலர்கள் உள்ளனர். இந்த பேரூராட்சியின் தலைவராக தி.மு.க.வின் செல்வபாரதி உள்ளார். கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி பேரூராட்சி மன்றக்கூட்டம் நடைபெற்றது. கலசப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், கேள்வி கேட்ட ஆளுங்கட்சி கவுன்சிலரை கொலைவெறியோடு தாக்க முயன்றது பரபரப்பாகியுள்ளது.
இதுகுறித்து 8வது வார்டு கவுன்சிலர் நித்யா நம்மிடம், "திடக்கழிவு மேலாண்மை திட்ட வேலையை சேர்மன் கணவர் மனோஜ்குமார் தரப்பு செய் கிறது. அந்த வேலைக்கு தனியாக ஆட்களை நியமிக்கவேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் பேரூராட்சியில் உள்ள மஸ்தூர் பணியாளர்களை வைத்து செய்யறாங்க. அதைத்தான் கவுன்சில் கூட்டத்தில் கேள்வி கேட்டேன். இதுக்கு, சேர்ம னோட கணவர் மனோஜ்குமாரும், மஸ்தூர் பணியாளரான அவரது தம்பி மூர்த்தியும் சேர்ந்துகொண்டு, 'நீ எப்படி எங்கமேல புகார் சொல்லலாம்?' அப்படீன்னு கேட்டு, வாடி போடின்னு தகாத வார்த்தைகளால் திட்டி னார்கள். பேரூராட்சி சேர்மனின் இன்னொரு மச்சினர் ராஜ்குமார், மன்றக் கூட்டத்திலிருந்து வெளியே வந்த என்னை கொலைவெறியோடு தாக்கவந்தார். இதைக் கேள்விகேட்ட என் கணவரையும் தாக்கப் பார்த்தார்கள். இவையனைத்தும் அலுவலக சி.சி.டி.வி. கேமராவில் உள்ளது. இது பற்றி கூட்டத்துக்கு வந்த எம்.எல்.ஏ. விடம் சொன்னபோது, 'பேசிக்கலாம் போ!'ன்னு சொல்லிட்டார்'' என்றார்.
தனக்கு நடந்த அவமானத்தையும், கொலை மிரட்டலையும் பற்றி அமைச்சர் எ.வ.வேலுவுக்கும், அமைச்சரின் மகனும் மாநில மருத்துவரணி துணைத் தலைவருமான கம்பனிடம் புகாராக எழுதித் தந்துள்ளார். இதேபோல் ஆளும்கட்சியின் 4 கவுன்சிலர்கள், சுயேட்சை கவுன்சிலர்கள் இருவர், ம.தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் என 7 கவுன்சிலர்கள் கூட்டாக புகார் தந்துள்ளனர். அதில், 'பேரூராட்சிக்கு வரும் நிதியை பிரித்துத் தராமல் எல்லா வேலைகளையும் சேர்மன் தரப்பே செய்கிறது. கேள்வி கேட்கும் கவுன்சிலர்களை சேர்மனின் கணவரும் தம்பிகளும் மிரட்டுகிறார்கள். தூய்மைப் பணியாளர்களை தங்கள் வீட்டு வேலைக்கு பயன்படுத்துகிறார்கள்' என்றெல்லாம் தெரிவித் துள்ளனர்.
இதுகுறித்து புதுப்பாளையம் பேரூராட்சி தலைவர் செல்வபாரதியை தொடர்புகொண்டு கேட்ட போது, "என் வீட்டுக்காரரிடம் பேசுங்க'' எனச்சொல்லிமனோஜ்குமாரிடம் செல்போனை தந்தார்.
அவர் நம்மிடம், "நித்யா என்மீது சொல் லும் குற்றச்சாட்டுகள் பொய்யானது. மன்ற கவுன் சில் கூட்டத்துக்கு வெளியாட்கள் செல்லமுடி யாது, நான் செல்வதேயில்லை. மற்ற கவுன்சிலர் கள் என்மீது புகார் சொல்-யுள்ளார்கள் என்பது நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும். நான் எந்த வேலையையும் எடுத்துக்கொண்டதில்லை. நான் விதிமுறைகளை மீறிச் செயல்பட மாட்டேன், கவுன்சிலர்கள் சுயநலத்துக்காக செயல்படச் சொல்கிறார்கள்'' என்றார்.
இப்படி இவர்களுக்குள் அடித்துக்கொண்டால் மக்கள் பணி என்னாவது?