"கவுன்சிலர் களான எங்களை சேர்மன் மதிப்பதில்லை, மரியாதை தருவதில்லை. எங்கள் நகராட்சியில் பொய்க் கணக்குகள் எழுதி சேர்மனும், அதிகாரிகளும் லட்சம் லட்சமாகக் கொள்ளையடிக்கிறார்கள்' என ஆளும்கட்சி கவுன்சிலர்களே குமுறுகிறார்கள்.
திருப்பத்தூர் நகராட்சியின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியை சேர்ந்த 10 கவுன்சிலர்கள் நம்மிடம், "நகரமன்ற கூட்டம், அரசு நிகழ்ச்சிகள் தவிர மற்ற எல்லாவற்றிலும் சேர்மனின் கணவர்தான் சேர்மன் நாற்காலியில் அமர்ந்து உத்தரவு போடறார். நாங்கள் வெற்றி பெற்றுவந்து 8 மாதங் களைக் கடந்துவிட்டது. இப் போதுவரை வார்டுக்கு எந்த வேலையும் செய்யல. அ.தி.மு.க. கவுன்சிலர்களின் 6 வார்டுகளில் எல்லா வேலையும் நடக்குது. சொந்தக் கட்சி கவுன் சிலர்களை மதிக்கற தேயில்லை.
நகராட்சி பகுதியில் ரோடுபோட முதலில் 8.40 கோடி, அதன்பின் 8.20 கோடி, தெருவிளக்கு எல்
"கவுன்சிலர் களான எங்களை சேர்மன் மதிப்பதில்லை, மரியாதை தருவதில்லை. எங்கள் நகராட்சியில் பொய்க் கணக்குகள் எழுதி சேர்மனும், அதிகாரிகளும் லட்சம் லட்சமாகக் கொள்ளையடிக்கிறார்கள்' என ஆளும்கட்சி கவுன்சிலர்களே குமுறுகிறார்கள்.
திருப்பத்தூர் நகராட்சியின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியை சேர்ந்த 10 கவுன்சிலர்கள் நம்மிடம், "நகரமன்ற கூட்டம், அரசு நிகழ்ச்சிகள் தவிர மற்ற எல்லாவற்றிலும் சேர்மனின் கணவர்தான் சேர்மன் நாற்காலியில் அமர்ந்து உத்தரவு போடறார். நாங்கள் வெற்றி பெற்றுவந்து 8 மாதங் களைக் கடந்துவிட்டது. இப் போதுவரை வார்டுக்கு எந்த வேலையும் செய்யல. அ.தி.மு.க. கவுன்சிலர்களின் 6 வார்டுகளில் எல்லா வேலையும் நடக்குது. சொந்தக் கட்சி கவுன் சிலர்களை மதிக்கற தேயில்லை.
நகராட்சி பகுதியில் ரோடுபோட முதலில் 8.40 கோடி, அதன்பின் 8.20 கோடி, தெருவிளக்கு எல்.இ.டி. லைட் அமைக்க 4.80 கோடி, புது லைட் கம்பம் அமைக்க 80 லட் சம், 4 குழந்தைகள் விளையாட்டுத் திடல் அமைக்க 1 கோடி வந்துள் ளது. இந்த தொகையில் எந்த வார்டுக்கு எவ்வளவு நிதி ஒதுக் கப்படுகிறது என்கிற விவரத்தைக் கூட கவுன்சிலர்களுக்கு சொல்ல வில்லை.
மழைக்காலத்தில் கால்வாய் தூர் வாரியதாக முதலில் 8.30 லட்சம் பில் எடுத்தார்கள், நகராட்சி பொறியாளர் பிரிவு மூலம் தூர்வாரியதாக மீண் டும் 6 லட்சம் பில் எடுத் துள்ளார்கள். மூன்றாவதாக மீண்டும் 6.2 லட்சத்துக்கு பில் போடமுயல்கிறார்கள். 36 வார்டில் எந்த வார் டில் தூர் வாரினாங் கன்னு தெரியல. வைஸ் சேர்ம னின் 8-வது வார்டிலுள்ள ரோட்டில் 4 மாதமாக ஐமாஸ் லைட் எரியவில்லை. பலமுறை சேர்மன், கமி ஷனர் ஜெய ராமராஜாவிடம் புகார் தந்தும் இதுவரை சரிசெய்யவில்லை. சௌகத்அலிபேட்டையில் நகராட்சிக்கு சொந்தமான 60 சதுரஅடி இடத்தை ஆக்கிரமித்து ஒருவர் கடை கட்டமுயன்றார். சேர்மன் கணவர் அதை அவுங் களுக்கே விட்டுட்டார். கவுன்சிலர்கள் ஏதாவது கோரிக்கை வைத்தால் கண்டுகொள்வதில்லை, மரியாதையும் தருவதில்லை. இந்த பதவி சும்மா வந்துடல. 4 கோடி ரூபாய் செலவு செய்துதான் சேர்மனாகியிருக்கேன்னு சொல்றார். அவரை சம்பாதிக்க வேண்டாம்னு சொல்லல. அதுக்காக எந்த வேலையும் வார்டுக்கு செய்யாம இருக்கறது எந்தவிதத்தில் நியாயம்? மக்களை தினமும் சந்திக்கிற நாங்கதானே அவுங்க கேள்விக்கு பதில் சொல்லவேண்டியதா இருக்கு''’ என்றார்கள்.
குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம்பெற நகரமன்ற தலைவர் சங்கீதாவைத் தொடர்புகொண்டபோது அவரது கணவர் வெங்கடேசன் நம்மிடம் பேசினார். "செலவு செய்ததைத் தவிர வேறு எதற்கும் பில் எடுக்கறதில்லை. இதுவரை என்னோட சொந்தப் பணத்திலிருந்துதான் கவுன்சிலர்களுக்கும், உதவிகேட்டு வர்றவங்களுக்கும் செலவு செய்யறேன். எங்களுக்கு டெக்ஸ்டைல்ஸ் தொழில், 5 கடைகள் இருக்கு. நகராட்சி இடத்தில் கடை கட்டறாங்கன்னு தகவல் வந்ததுமே அதிகாரிகளை அனுப்பி அளந்தபோது அது அவுங்க சொந்த இடம்னு தெரிஞ்சது. சின்ன கடையா இருந்தாலும் ப்ளான் அப்ரூவல் வாங்கிக் கட்டுங்கன்னு சொல்லியாச்சி. கவுன்சிலர் களுக்கு தீபாவளி, நியூ இயர்க்கு பரிசுப் பொருள் தந்து வாழ்த்து சொன்னால் நகராட்சியிலிருந்து எவ்ளோ எடுத்தாங்கன்னு கேட் கறாங்க. பள்ளிகளில் கழிவறையைச் சுத்தம் செய்ய டெண்டர் எடுத்தவங்க சுத்தம் செய்துட்டு எச்.எம்.மிடம் கையெழுத்து வாங்கிவந்தால்தான் பில் தருவோம்னு சொல்லியிருக்கேன். கவுன்சிலர்களின் வார்டுகளில் எது நடந்தாலும் தகவல் சொல்றோம். எவ்வளவு செய்தாலும் திருப்தியடையாத 2, 3 கவுன்சிலர்கள் எங்கள்மீது வீண் அவதூறுகளை கிளப்புகிறார்கள்''’என்றார்.
தி.மு.க. நகர நிர்வாகிகளிடம் பேசியபோது, "சேர்மன் பதவியைப் பிடிக்க 2 தரப்பு முட்டி மோதுனாங்க. இதில் ந.செ. ராஜேந்திரன் முன்னிறுத்திய சங்கீதா வெங்கடேசன் ஜெயிச் சாங்க. தேர்தல் முடிந்து 9 மாதங்கள்தான் ஆகிறது, அதற்குள் எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்துவிடுமா? சேர்மன், பட்டிய லின சமூகத்தைச் சேர்ந்தவர். மூன்று கவுன்சிலர்கள், நாங்க உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதிக்காரன்கிட்ட போய் நிக்கனுமான்னு கேட்கறாங்க. தங்களோட வார்டுக்கு தேவையானதைக்கூட கேட்க நேரில் வராம ஆள் மூலமா சொல்லியனுப்பறாங்க. கவுன்சில் கூட்டத்துக்கும் வந்து உட்கார்றதில்ல. கையெழுத்துப் போட்டுட்டு கவர் வாங்கிக்கிட்டு போய்டறாங்க. அவுங்கதான் மத்த கவுன்சிலர்களைத் தூண்டிவிடறாங்க. இதுதான் பிரச் சனைன்னு எங்களுக்கும் தெரியும். என்ன செய்ய... முக்கியமான வங்க அவுங்களுக்கு சப்போட்டா இருக்காங்க''’என்கிறார்கள்.