னிமங்கள் ஒரு நாட்டின் வருவாய் ஆதாரங்கள். சில நேரங்களில் மக்கள் வாழும் பகுதிகளில் கனிமங்கள் கிடைக்கும்போது மக்களின் கடுமையான எதிர்ப்பால் மத்திய அரசு அத்திட்டத்தைக் கைவிடவேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கும், நியுட்ரினோ திட்டத்துக்கும் அந்தப் பகுதியின் மக்களின் கடுமையான எதிர்ப்பால் ஒன்றிய அரசு அத்திட்டதையே கைவிட நேர்ந்தது.

cc

தென்காசி மாவட்டத்தின் குருவிகுளம் யூனியனில் வருகிற குருஞ்சாகுளம், சங்குபட்டி, வெள்ளா குளம் கிராமங்களின் சுற்றுப்புறங்களில் கிரானைட் புதைந்து கிடக்கின்றது. ஒன்றிய அரசு கிரா னைட்டை அகழ்வதற்காக மக்களின் நிலங்களைக் கையகப்படுத்த முயல்கிறது என்று பரவிய செய்தி அப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய அரசின் சாட்டிலைட் அனுப்பிய கனிமவளம் பற்றிய சார்ட் தமிழக புவியியல், சுரங்கத்துறை மற்றும் வருவாய்த்துறையின் தலைமையகத்திற்கு வந்திருக்கிறது.

இந்தியாவிலுள்ள சட்டீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, பீகார், உ.பி., குஜராத், தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களின் 20 இடங்களில் அரிய வகை கனிமமான கிராபைட் மற்றும் கிராபைட்டுடன் கூடிய மேக்னீசியம் போன்றவை புதையுண்டுள்ளன. அவற்றைக் கையகப்படுத்த வேண்டுமென்று, அந்தப் பகுதிகளின் குறிப்பிட்ட சர்வே புல எண்களையும் ஒன்றிய அரசு உடனே அனுப்பக் கேட்டுள்ளது.

cc

Advertisment

ஒடிசாவில் 3 இடங்களில் கிராபைட்டும், மேக் னீசியமும் சேர்ந்தே கிடைக்க, தமிழகத்தில் மட்டும் பரவலாக 7 இடங்களில் கிராபைட் உள்ளதாம். இதனால் ஒன்றிய அரசுக்கு டபுள் பம்பர் லாட்டரி அடித்திருக்கிறது என்கிறவர்கள், தமிழகத்தில் குறிப் பிடப்பட்ட 7 இடங்களில் தென்காசி மாவட்டத்தின் குருவிகுளம் யூனியனின் குறிஞ்சாகுளம் பிர்க்கா சார்ட்டின் படி 14-வது இடத்தில் உள்ளது என்றனர். அண்டை மாவட்டமான தூத்துக்குடி மாவட்டத்தின் மலைப்பகுதியும் இதில் அடங்கியுள்ளது.

தென்காசி மாவட்டத்தின் கடைசிப் பகுதியான குருவிகுளம் யூனியனில் வருகிற குறிஞ்சாகுளம், வெள்ளாகுளம், சங்குபட்டி, சின்னக்காபட்டி, புதுப்பட்டி இந்த கிராமங்களின் நேர்கோட்டின் தென்பகுதியில் தூத்துக்குடி மாவட்டத்தின் லட்சுமிபுரம், கழுகுமலை, சாயமலையிலும் கிராபைட் உள்ளதாக ரிப்போர்ட் வந்துள்ளது.

ஒன்றிய அரசின் உத்தரவுப்படி மேற்படி கிரா மப் பகுதிகளின் குறிப்பிடப்பட்ட இடங்களின் சர்வே நம்பர்களை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே வருவாய்த்துறையினர் அனுப்பிவிட்டனர். ஆனாலும் வருவாய்த் துறையினரோ இந்த விஷயம் ஏரியா மக்களிடம் கொந்தளிப்பைக் கிளப்பலாம் எனக் கருதி, இந்த ரகசியத்தை வெளியிடவில்லை. மத்திய கனிமத் துறை இந்தப் பகுதியிலிருந்த கிராபைட் குவாரி அமைத்து அதனை வெட்டியெடுக்க சுமார் 657 ஏக்கர் நிலங்களை மக்களிடமிருந்து கையகப்படுத்தத் திட்டம் வைத்திருக்கிறது. அண்மையில் இந்திய அரசின் சுரங்கத் துறை அமைச்சகத்தின் பொறுப்பு அதிகாரி, இந்தியாவின் கனிமங்பன் நிறைந்த 20 இடங்களின் சார்ட்டை வெளியிட்டதோடு குவாரி அமைப்பதற்கான மின்னணு டெண்டர் பற்றிய விவ ரங்கள் விரைவில் ஒன்றிய அரசால் வெளியிடப்படும் என்று பத்திரிகைகளில் வெளியிட்டார். இத னால் குறிஞ்சாகுளம், பிர்க்காவிலுள்ள மக்கள், ஒன்றிய அரசால் தங்களது வாழ்வாதாரம் பறிக் கப்பட்டுவிடுமே என்ற அதிர்ச்சியிலும் பதற் றத்திலும் ஆழ்ந்திருக்கிறார்கள். இதையடுத்து ஜன 7-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி மக்களைத் திரட்டி திருவேங்கடம் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன போராட்டத்தை நடத்தியது. ஒன்றிய அரசு கிராபைட் வெட்டியெடுப்பதற்கான இ-டெண்டரை முற்றிலும் ரத்து செய்யவேண்டும் என்று கடும் குரலெழுப்பினர்.

cc

ம.தி.மு.க.வோ, கண்டனப் போஸ்டரை வெளியிட்ட துடன், மாவட்டத்தில் டெண்டரை எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்துவதற்கான முஸ்தீபுகளில் இறங்கியுள்ளது.

இதுகுறித்து குறிஞ்சாகுளம் பகுதியின் அழகர்சாமி, சாத்தூர்சாமி, வெங்கடசாமி ஆகியோர், "மத்திய அரசாங்கம் வெளியிட்ட டெண்டர்ல குறிஞ்சாகுளம் ஏரியாவைப் பத்தி சொல்லியிருக்கு. டெண்டர ஆங்கிலப் பத்திரிகைல வெளியிட்டிருக்காக. எங்களுக்கு அதப் பத்தி அறிவிப்பேயில்ல. இங்க உள்ள பாதி மக்களுக்குமேல ஆங்கில பத்திரிகை அறிவிப்பு பத்தி தெரியவே தெரியாது. ஆங்கிலமும் புரியாது. ஆண்டாண்டுகாலமா நாங்க இதுலதாம் பயிர் வெச்சு குடும்பத்தக் காப்பாத்தி வாரோம். கோடியே குடுத்தாலும் அது தேவயில்ல. இந்த நிலம் எங்க உசுரு. ஊரவிட்டுக் காலிபண்றதா? அது முடியாது. எப்படிப்பட்ட போராட்டத்தையும் நாங்க எதிர்கொள்ளத் தயார்'' என்று’ஆவேசப்பட்டனர்.

Advertisment

cc

அழகர்சாமியோ, "1980ல எம்.ஜி.ஆர். ஆட்சி. விவசாயிகளான நாங்க 31.12.1980ல எங்க கோரிக்கைகள முன்வச்சி தமிழ்நாடு பூராவும் விவசாய போராட்டம் நடத்தினோம். அதுல எங்க ஊர்ல போலீஸ் நடத்துன துப்பாக்கிச் சூட்டுல 5 பேர் செத்து விழுந்தாக. நாடே பேசுச்சு. தோட்டாவுக்கே நெஞ்சக் காட்டுன விவசாயிக நாங்க''’என்றார் படபடவென்று.

குறிஞ்சாகுளம், வெள்ளாகுளம் கிராமத்தின் வீரபத்ரசாமி யும், சுப்பையாவும்... "90 சதவிகித மக்க இந்த நிலத்த நம்பித்தான் பொழைக்குறோம்யா. அத நாங்க எப்புடி விட்டுக் குடுப்போம். கடைசிச் சொட்டு ரத்தம் இருக்குறவரை போராடுவோம்யா. இங்க உள்ள நிலம அரசுக்குத் தெரியல. இதப் பரிசீலிக்காம அரசாங்கம் “இ“ டெண்டர ஏம் வுட்டுச்சு''” என்றார் ஆவேசமாய். வெள்ளாகுளம் சுப்பையாவோ, "எங்க பூமிய வுட்டுப்பிட்டு அனாதையா அலையத் தயாரில்ல'' என்றார்.

சம்பந்தப்பட்ட விவசாயிகளின் உணர்வுகளோடு விளை யாடாமல், ஒன்றிய அரசு வெளிப்படையாக உண்மையைப் பேசவேண்டும்.

-செய்தி, படங்கள்: ப.இராம்குமார்

cc