மூன்றாம் உலகப்போராக உருவெடுக்கு மோவென்ற அச்சத்தை ஏற்படுத்திவந்த இஸ்ரேல் -ஈரான் இடைப்பட்ட போரை நிறுத்திக்கொள்வ தென்ற உடன்பாட்டுக்கு கடந்த செவ்வாயன்று இரு நாடுகளும் வந்திருப்பதில், அனைத்து மக்களும் நிம்மதிப்பெருமூச்சு விடுகின்றனர். இஸ்ரேல் -ஈரானுக்கு இடைப்பட்ட போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நுழைந்ததும், கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஈரானிலுள்ள மூன்று அணுசக்தி உற்பத்தி நிலையங்கள் மீது நேரடியாகத் தாக்குதலில் ஈடுபட்டது. 

ஈரான் தலைநகரான டெஹ்ரானிலிருந்து தென்மேற்காக சுமார் 100 கி.மீ. தொலை வில் அமைந்துள்ள போர்டோவ் அணுசக்தி நிலையமானது, இரண்டு மலைகளுக்கிடையே பாதுகாப்பாக, நிலத்துக்கு அடியில் பல நூறு மீட்டர் ஆழத்தில் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கே யுரேனியம் செறிவூட்டல் பணி, ஈரான் இஸ்லாமியப் புரட்சிகர காவல் படையின் பாதுகாப்புடன் நடந்துவந்தது. இந்த அணுசக்தி நிலையமானது, வான்வெளித் தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த அணுசக்தி நிலையத்தின்மீது, கடந்த ஞாயிறன்று அமெரிக்கா பங்கர் பஸ்டர் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த வெடிகுண்டுகள் ஆழத்துக்கு ஊடுருவிச்சென்று வெடிக்கக்கூடிய தாகும். இத்தாக்குதலால் அப்பகுதியே வான்முட்டு மளவுக்கு புகை மண்டலமாகக் காட்சி தந்தது.

அடுத்ததாக, யுரேனிய செறிவூட்டலைப் பொருத்தவரை, ஈரானின் கிரீடமென்று பெருமை யோடு அழைக்கப்படும் நடான்ஸ் அணுசக்தி நிலையமானது, டெஹ்ரானுக்கு தென்கிழக்காக 229 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த மையத்திலும் யுரேனியம் செறிவூட்டல் பணி நடை பெற்றுவருகிறது. இந்த மையத்தின் மீது ஏற்கெனவே இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது இதன் மேற்பகுதி மட்டுமே பாதிக்கப்பட்டது, நிலத்துக்கு அடியில் செயல்பட்டுவரும் இதன் முக்கிய பகுதிகள் பாதுகாப் பாகவே இருந்துவந்தது. தற்போது அதன்மீதும் அமெரிக்கா குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது.

Advertisment

iran-israel1

மூன்றாவதாக, சீன ஆதரவுடன் ஈரானில், டெஹ்ரானுக்கு தென்கிழக்கே 350 கி.மீ. தொலை வில் அமைக்கப்பட்ட இஸ்பஹான் அணுசக்தி நிலையத்தின் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த மையத்தில் மூவாயிரத்துக் கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பணியாற்றிவரும் நிலையில், இங்கே அதிநவீன ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது. இந்த அணுசக்தி நிலையத்தின் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. 

அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்கள் ஈரானின் கோபத்தை அமெரிக்கா மீது திருப்பியது. ஏற்கெனவே அமெரிக்கா தனது துருப்புக்களை கத்தார், சவுதி அரேபியா, பஹ்ரைன், சிரியா உள் ளிட்ட பல்வேறு நாடுகளில் நிலைநிறுத்தியுள்ளது. 

Advertisment

எனவே அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக, திங்களன்று கத்தாரின் தோஹாவிற்கு வெளியே 24 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளமான அல் உதெய்த் மீது குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்த படைத்தளத்தில் சுமார் 10,000 அமெரிக்க வீரர்கள் பணியாற்றிவருவதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு ஆபரேஷன் பஷாரத் அல்பாத் என்று பெயரிட்டது ஈரான். இதற்கு வெற்றியின் மகிழ்ச்சியான செய்தி என்று அர்த்தம். இத்தாக்குதல் நடத்தப்படுமென்று முன்கூட்டியே வெளியான தகவலையடுத்து அமெரிக்கா, தனது படைவீரர்களையும், விமானங்களையும் பாது காப்பாக அப்புறப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படைத்தளத்தின்மீது 10 ஏவுகணைகளை ஈரான் ஏவியது. இந்த ஏவுகணை களில் 7 ஏவுகணைகளை வழிமறித்து தாக்கி யழித்தது அமெரிக்கா. இதில் தப்பிய 3 ஏவுகணைகள், அமெரிக்க படைத்தளத்தை தாக்கின. 

இத்தாக்குதலில், தங்கள் ஆதரவு நாடான கத்தாரிலுள்ள பொதுமக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் ஈரான் கவனமாக இருந்தது. எனவே குடியிருப்புப் பகுதிகளுக்கு வெளியே மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது. கத்தாரில் சுமார் 7.5 லட்சம் இந்தியர்கள் வசித்துவரும் நிலையில், இந்திய தூதரகம் அவர்களை பாதுகாப்பான இடத்திலும், வீட்டிலும் இருக்கும்படி எச்சரித்தது. அதேபோல், அமெரிக்க விமானப்படைத்தளப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்றும் எச்சரிக்கை விடப்பட்டது. கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் தங்கள் வான்வழிப் பரப்பை மூடின. 

ஈரானின் பதிலடியையடுத்து, மூன்றாம் உலகப்போராக உருவெடுக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது. குறிப்பாக, ஈரானிலுள்ள ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடப்போவதாக அறிவித்தது. அந்த நீரிணை வழியாகத்தான் உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெற்று வருகின்றது. எனவே கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் பெரும்பாதிப்பு ஏற்படக் கூடுமெனத் தெரியவந்ததால், இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவை உலக நாடுகள் நிர்பந்தம் செய்தன. அதையடுத்து, செவ்வாயன்று காலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்ரேல், ஈரான் நாடுகள் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டதாக தெரிவித்தார். ஆனால், அதனை ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஏற்கமுடியாதென்று அறிவித்ததோடு, இறுதி வெற்றிவரை ஈரான் துணிச்சலாகப் போராடுமென்று அறிவித்தார். இதையடுத்து, ஈரானுடன் பேசி மத்தியஸ்தம் செய்ய கத்தார் முன்வந்தது. பின்னர், ஒருவழியாக ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்துக்கு சம்மதித்தன. இதிலும், போர் நிறுத்தத்தை ஈரான் மீறினால் இஸ்ரேல் பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாக இஸ்ரே-ய பிரதமர் நெதன்யாகு அறிவித்தார்.  எனினும், 12 நாட்களாக நடைபெற்ற போர் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நிம்மதியடைந்தன.