சி.பி.ஐ. கண்காணிப்பில் பதிவுத்துறை மோசடிகள்! சிக்குமா திமிங்கலங்கள்!

dd

அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த பத்திரப்பதிவு மோசடிகளை தோண்டித் துருவுகிறது மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. மோசடிகள் குறித்த புகார்கள் பறந்திருப்பதால் இதன் வில்லங்கங்கள் விரைவில் அம்பலமாகும் என்கிறார்கள் தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறையினர்.

இதுகுறித்து நம்மிடம் மனம்திறந்த பதிவுத்துறையினர், "சசிகலா தொடர்பான பல்வேறு இடங்களில் 2019-ல் அதிரடி ரெய்டு நடத்தியது வருமானவரித்துறை. அப்போது சசிகலாவின் அண்ணி இளவரசி வீட்டில் நடந்த ரெய்டின்போது, இளவரசி மகள் கிருஷ்ண பிரியாவின் மொபைல் போன்களை ஆராய்ந்தனர்.

அதில், பணமதிப்பிழப்பின்போது (2016) செல்லாததாக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து பாண்டிச்சேரிக்கு அருகேயுள்ள ஒரு பீச் ரெசார்ட்டை சசிகலா வாங்கிய விபரங்கள் கிடைத்தன. நகைக்கடை உரிமையாளர் ஒருவருக்கு சொந்தமான அந்த ஹோட்டலை 148 கோடிக்கு வாங்கினார் சசிகலா.

இதற்கு இடைத்தரகராக முன்னாள் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உதவியாளர் ஒருவரும், பத்திரப்பதிவுத் துறையின் மாவட்ட பதிவாளர் பாலசுப்பிரமணியம் என்பவரும் செயல்பட்டனர். 148 கோடிக்கு விலை பேசப்பட்டு, அதில் 110 கோடி ரூபாய் உரிமையாளருக்கு கொடுக்கப்பட்டது.

இந்த டீலிங்கில் சம்பத்தின் உதவியாளருக்கு 38 கோடி ரூபாய் கமிஷனாகக் கிடைத்திருக்கிறது. இந்த பண பரிவர்த்தனை விவகாரங்கள் தற்போது வருமானவரித்துறைக்கு தெரியவந்துள்ள நிலையில், போலி பத்திரப்பதிவு மோசடிக

அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த பத்திரப்பதிவு மோசடிகளை தோண்டித் துருவுகிறது மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. மோசடிகள் குறித்த புகார்கள் பறந்திருப்பதால் இதன் வில்லங்கங்கள் விரைவில் அம்பலமாகும் என்கிறார்கள் தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறையினர்.

இதுகுறித்து நம்மிடம் மனம்திறந்த பதிவுத்துறையினர், "சசிகலா தொடர்பான பல்வேறு இடங்களில் 2019-ல் அதிரடி ரெய்டு நடத்தியது வருமானவரித்துறை. அப்போது சசிகலாவின் அண்ணி இளவரசி வீட்டில் நடந்த ரெய்டின்போது, இளவரசி மகள் கிருஷ்ண பிரியாவின் மொபைல் போன்களை ஆராய்ந்தனர்.

அதில், பணமதிப்பிழப்பின்போது (2016) செல்லாததாக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து பாண்டிச்சேரிக்கு அருகேயுள்ள ஒரு பீச் ரெசார்ட்டை சசிகலா வாங்கிய விபரங்கள் கிடைத்தன. நகைக்கடை உரிமையாளர் ஒருவருக்கு சொந்தமான அந்த ஹோட்டலை 148 கோடிக்கு வாங்கினார் சசிகலா.

இதற்கு இடைத்தரகராக முன்னாள் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உதவியாளர் ஒருவரும், பத்திரப்பதிவுத் துறையின் மாவட்ட பதிவாளர் பாலசுப்பிரமணியம் என்பவரும் செயல்பட்டனர். 148 கோடிக்கு விலை பேசப்பட்டு, அதில் 110 கோடி ரூபாய் உரிமையாளருக்கு கொடுக்கப்பட்டது.

இந்த டீலிங்கில் சம்பத்தின் உதவியாளருக்கு 38 கோடி ரூபாய் கமிஷனாகக் கிடைத்திருக்கிறது. இந்த பண பரிவர்த்தனை விவகாரங்கள் தற்போது வருமானவரித்துறைக்கு தெரியவந்துள்ள நிலையில், போலி பத்திரப்பதிவு மோசடிகள் பற்றிய விபரங்கள் சி.பி.ஐ.க்கு பறந்துள்ளன''’என்கிறார்கள்.

இதுகுறித்து மேலும் நாம் விசாரித்தபோது, கடந்த காலத்தில் பல மோசடிகள் ஆதாரப்பூர்வமாக நமக்குக் கிடைத்தன. உதாரணத்துக்கு,…திருச்சி அம்மாப்பேட்டை கிராமத்தில் சர்வே எண்கள் 94/2-ல் 39 சென்ட், 95/2 பி1-ல் 6 ஏக்கர் 3 சென்ட், 95/1ஏ-ல் 2 ஏக்கர் 67 சென்ட் என மொத்தம் 9 ஏக்கர் நிலம் பொன்னுச்சாமி என்பவருக்கு இருக்கிறது.

அதேபோல, காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பண்ருட்டி கிராமத்தில் 5 சென்ட் நிலம் சென்னையைச் சேர்ந்த சுரேஷ்குமாருக்கு இருக்கிறது. இந்த 5 சென்ட் நிலத்தோடு அம்மாப்பேட்டையில் உள்ள 9 ஏக்கர் நிலத்தை இணைத்து வாலாஜாபாத் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. இதனை பதிவு செய்தவர் சந்திரன். பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தவர் காஞ்சி மாவட்ட பதிவாளராக இருந்த பாலசுப்பிரமணியன்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பதிவுத்துறை அதிகாரிகள், "அந்த 9 ஏக்கர் நிலத்தை கணேசன் என்பவருக்கு 2012-ல் பவர் கொடுக்கிற பொன்னுசாமி, அதனை 2019-ல் கேன்சல் செய்துவிட்டு (டாகுமெண்ட் எண்: 5483/2019), ஜே.ஜே. கல்வி நிறுவனத்துக்கு செட்டில்மெண்ட் பத்திரமாக பதிவு செய்து (டாகுமெண்ட் எண்: 5484/2019) கொடுக்கிறார்.

இப்படியிருக்கும் நிலையில், பவர் கேன்சல் செய்ததை மறைத்துவிட்டு, இந்த சொத்தை மோகன் என்பவருக்கு கிரையம்பண்ணி பதிவுசெய்து கொடுக்குமாறு சார்-பதிவாளர் சந்திரனிடம் விண்ணப்பிக்கிறார் கணேசன். சந்திரனும் இந்த சொத்தில் வில்லங்கம் ஏதேனும் இருக்கிறதா என்பதையறிய திருச்சி சார்பதிவாளர் சுசீலாவுக்கு கடிதம் எழுதுகிறார்.

அதில், இந்த 3 சர்வே எண்களிலுமுள்ள சொத்துக்கள் தனியாருக்கு சொந்தமானதா? அதன் வழிகாட்டி மதிப்பு என்ன? கணேசனிடம் பவர் இன்னும் லைவ்வில் உள்ளதா? என கேட்கிறார் சந்திரன். இதனை ஆராய்ந்த சுசீலா, 3 சர்வே எண்களில் 2 எண்களில் உள்ள சொத்துக்கு வழிகாட்டி மதிப்பு இல்லை; ஒன்றுக்குத்தான் வழிகாட்டி மதிப்பு இருக்கிறது; பவர் ரத்து செய்யப்பட்டுள்ளது என பதில் அனுப்புகிறார்.

வழிகாட்டி மதிப்பு இல்லையெனில் அந்த நிலம் புறம்போக்கு நிலமாகவே கருதப்படும். இதனால் இது மோசடியானது என முடிவு செய்து பத்திரத்தைப் பதிவு செய்யாமல் கணேசனிடம் திருப்பிக் கொடுத்து விடுகிறார் சார்-பதிவாளர் சந்திரன்.

இந்த நிலையில்தான், மோகனும் கணேசனும் எம்.சி.சம்பத்தின் உதவி யாளரை அணுக, அவரோ, சந்திரனின் உயரதிகாரியான மாவட்ட பதிவாளர் பாலசுப்பிரமணியனிடம் மோகனை அனுப்பி வைக்கிறார். இதனையடுத்து, இந்த நிலத்தை பதிவு செய்யுங்கள் என சந்திரனுக்கு கடுமையாக உத்தரவிடுகிறார் பாலசுப்பிரமணியன்,

இதற்காக சந்திரனுக்கு பாலசுப்பிர மணியன் அனுப்பிய உத்தரவில், மாவட்ட பதிவாளர், மாவட்ட நீதிமன்றம் என முத்திரையிடப்பட்டு அதில் கையெழுத் திட்டிருக்கிறார் பாலசுப்பிரமணியன். நீதிபதியாகத் தன்னை நினைத்து அவர் கையெழுத்திட்டிருப்பதே சட்ட விரோதம். மாவட்ட பதிவாளர் செயல்முறை ஆணைகள் பிறப்பிக்கத் தான் அதிகாரமிருக்கிறதே தவிர, நீதிபதியாக நினைத்து உத்தரவிட அதிகாரம் கிடையாது.

dd

பாலசுப்பிரமணியனின் அந்த உத்தரவினை மீறமுடியாததால் அந்த போலி ஆவணங்களை பத்திரப்பதிவு செய்துகொடுக்கிறார் சார்-பதிவாளர் சந்திரன். அம்மாப்பேட்டை சொத்தின் மதிப்பு சுமார் 8 கோடி ரூபாய். வாலாஜாபாத் சொத்தின் மதிப்பு 1 லட்சம் ரூபாய். அப்படியிருக்கையில், சொத்தினை வாலாஜா பாத்தில் பதிவு செய்ய முடியாது என்பதும், அவை போலி ஆவணங்கள் என்பதும் பாலசுப்பிரமணியனுக்கு தெரியும். இருந்தும் அவர் உத்தரவு போடுகிறார் எனில் பின்னணியில் இருப்பது லஞ்சத்தைத் தவிர வேறில்லை''’என்கிறார்கள் அழுத்தமாக.

பொதுவாக, எம்.சி.சம்பத்தின் உதவியாளரும் பாலசுப்பிரமணியனும் இணைந்து வில்லங்கத்திலுள்ள சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்வதை அ.தி.மு.க. ஆட்சியில் வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்கள்.

காஞ்சி மாவட்டம் வல்லம் மற்றும் வடகால் கிராமங் களில் தமிழக அரசின் சிப்காட் நிறுவனத்துக்கு தானமாக (கிப்ட் டீடு) ஓ.எஸ்.ஆர். நிலங்கள் இருக்கிறது. இந்த நிலத்திற்கு போலி பத்திரம் தயாரித்து சிப்காட் நிறுவனத்திடமிருந்து 21 கோடி ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளது ஒரு மோசடிக் கும்பல். தானமாகக் கொடுத்துவிட்டால், அது தமிழக அரசுக்கு சொந்தமான நிலம். அதனை போலி ஆவணம் மூலம் மோசடியாகப் பதிவு செய்து விற்பனை செய்திருக்கிறார்கள். இதற்கு உதவியவர் பாலசுப்பிரமணியன்.

உச்சநீதிமன்றம் மற்றும் சி.பி.ஐ.யின் கண்காணிப்பிலுள்ள பி.யு.சி.எல். நிறுவனத்துக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களில் பலவற்றை போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வில்லங்கத்திலும் பாலசுப்பிர மணியன் இருக்கிறார். இப்படி நிறைய சொத்துக்கள் அ.தி.மு.க. ஆட்சியில் மோசடியாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதும், தி.மு.க. ஆட்சியிலும் இதனை பாலசுப்பிரமணியன் தொடர் வது குறித்தும் புகார்கள் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு போயிருக்கிறது. ஆனால், அந்த புகார்கள் மேலதிகாரிகளுக்குப் போய்ச் சேர்வதில்லை.

இதனால், இத்தகைய பதிவுத்துறை மோசடிகள் குறித்து மத்திய அரசுக்கும், சி.பி.ஐ.க்கும் புகார்கள் பறந்துள்ளன. சி.பி.ஐ. களத்தில் இறங்கும்போது இந்த வில்லங்கத்தால் அவருக்கு மட்டுமல்ல; உயரதிகாரிகளுக்கும் சிக்கல்தான் என்பது நமது விசாரணையில் தெரியவருகிறது.

இது குறித்து பாலசுப்பிரமணியனை தொடர்புகொண்டு கேட்டபோது, "என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது. போலி பத்திரப் பதிவுகளுக்கு எதிராக பல நட வடிக்கைகளை எடுத்தவன் நான். அப்படி கடுமையாக நடவடிக்கை எடுத்ததால் எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். நான் கொடுத்த ரிப்போர்ட்டில்தான் என்னுடைய உயரதிகாரியான சீனிவாசனே சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த எம்.சி.சம்பத், வீரமணி இருவருக்குமே நான் எதிரி. அவர்களின் உதவியாளர் கள் யாரையும் எனக்குத் தெரியாது. எனது சர்வீசில் ஒருமுறை கூட எந்த குற்றத்தையும் நான் செய்ததில்லை'' என்கிறார்.

nkn180123
இதையும் படியுங்கள்
Subscribe