"ஹலோ தலைவரே, பரபரப்பான சூழலில் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கி யிருக்கிறது.''”

"ஆமாம்பா, அண்ணா பல்கலைக்கழக விவகாரம் பூதாகரமாக எழுந்திருக்கும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டுவர மனு கொடுத்திருக் கிறதே?''”

"உண்மைதாங்க தலைவரே, அண்ணா பல்கலைக்கழக விவகாரம் மற்றும் வேங்கைவயல் பிரச்சினை ஆகியவை குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானத் தைக் கொண்டுவர மனு கொடுத்திருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் இருக்கும் சிறுத்தைகள் கட்சியே, இப்படி ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வருவதால், அவர்கள் தங்கள் கூட்டணிக்கு விரை வில் வரலாம் என்று அ.தி.மு.க. கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் தி.மு.க. தரப்போ, "சிறுத்தைகள் மீது இதனால் எந்த வருத்தமும் இல்லை. இந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மூலம் முதல்வரின் வெளிப்படையான கருத்து எதிரொ லிக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள். இவ்விகாரத்தில் பதிலளிக்க அரசுக்கும் ஒரு வாய்ப்பாக அமையும்' என்கிறது.''”

"இந்த நேரத்தில், சி.பி.எம். கட்சி பாலகிருஷ் ணனும், தி.மு.க. அரசு மீது கடும் விமர்சனத்தை வைத்திருக்கிறாரே?''”

"விழுப்புரத்தில் கடந்த 3ஆம் தேதி நடந்த, சி.பி.எம் கட்சியின் 24 ஆவது மாநில மாநாட்டில் பேசிய, அக்கட்சியின் மாநில செயலாளரான பால கிருஷ்ணன், ’"நான் முதல்வரைப் பார்த்து கேட் கிறேன். தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை நீங்கள் பிரகடனப்படுத்தி விட்டீர்களா? எந்தவித ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என்றால்கூட அனுமதி மறுக்கப்படுகிறதே?'’ என்று தி.மு.க. அரசு மீது அதிரடி விமர்சனத்தை வைத்து, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு தி.மு.க. தரப்பும், "குழப்பம் உண்டாக்க நினைக்கும் எதிரிகளுக்கு எதற்காக வழக்கறிஞராக மாறுகிறார் பாலகிருஷ்ணன்?' ’என்று முரசொலி வழியாகவே கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக் கிறது. இதனால் சி.பி.எம். கட்சி அணி மாறப் போகிறது என்கிற செய்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் சி.பி.எம். தரப்போ, "விழுப் புரம் மாநாட்டில் தேர்தல் குறித்தோ, கூட்டணி குறித்தோ எதுவும் பேசப்படவில்லை. அது சாதாரண விமர்சனம்தான்' என்கிறது அலட்டிக்கொள்ளாமல்.''

"பா.ஜ.க.வில் உட்கட்சித் தேர்தல் தொடங்கி யிருக்கே?''”

"ஆமாங்க தலைவரே, பா.ஜ.க.வின் மாநில நிர்வாகி மாற்றப்படுவாரா? என அக்கட்சியிலேயே பரவலாக எதிர்பார்ப்பு நிலவிவரும் நிலையில், முதற்கட்டமாக பா.ஜ.க. மாவட்ட தலைவர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தலை, கருத்துக்கேட்புக் கூட்டங்களாக நடத்தியிருக்கிறார்கள். அதில், வாக்காளர்களான உறுப்பினர்கள், மூன்றுபேரின் பெயரை மாவட்டத் தலைவர் பதவிக்குப் பரிந் துரை செய்தனர். அதன் அடிப்படையில் மாவட் டத்துக்கு 3 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியல் பா.ஜ.க.வின் கோர் கமிட்டிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த கமிட்டிதான் மாவட்டத் தலைவர்கள் யார், யார் என்று தேர்வு செய்யுமாம். அதன்படி அனைத்து மாவட்டத்துக் கும் புதிய தலைவர்கள் விரைவில் அறிவிக்கப்பட விருக்கிறார்கள். இதன் பிறகு, ஜனவரி 17-ல் தமிழக பா.ஜ.க. தலைவருக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது.''

"ஆனாலும் மறுபடியும் அதே நபரே தலைவராவார் என்றும் சொல்லப்படுகிறதே?''”

’"சொல்றேங்க தலைவரே, மாநிலத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் இந்தத் தேர்தலை ஒன்றிய அமைச்சர் கிஷண்ரெட்டி முன்னின்று நடத்த இருக்கிறாராம். ஆனால் அந்த கிஷண் ரெட்டியோ ‘அந்த தமிழக பா.ஜ.க. நிர்வாகி நல்லவரல்ல. ஊழல்வாதி’ என்று சொல்லி வருகிறாராம். இந்த நிலையில், அந்த பா.ஜ.க. நிர்வாகியின் மனைவி, கோவை அருகில் சொத்து வாங்கிய விபரம் வெளியாகி, பா.ஜ.க. தொண்டர்களை பெருமூச்சுவிட வைத்திருக்கிறது.''

"இதை மறுக்கும் அந்த நிர்வாகியோ, "எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. மீண்டும் நானே தலைவராவேன்' என்கிறாராம். ஆனால் கமலாலயத் தரப்போ, மீண்டும் அவரை தலைவ ராக்கினால், ஜென்மத்துக்கும் கட்சி வளராது என்கிறது ஆதங்கமாக. இதற்கிடையே சென்னை யில் சாவர்க்கர் குறித்த நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. அந்த பா.ஜ.க. நிர்வாகியால் ஆபாசப் புகாருக்கு ஆளாக்கப்பட்டு ஓரம்கட்டப் பட்ட கே.டி.ராகவனும் அதில் பங்கேற்றார். அப்போது, அந்த மாநில நிர்வாகியின் அரசியல் குருவான பி.எல்.சந்தோஷுக்கு அருகிலேயே அமர்ந்து, அந்த பா.ஜ.க. நபரை, ராகவன் நெளியவைத்தார் என் கிறார்கள்.''”

"பா.ஜ.க. பெண் பிரபலங்கள் கவர்னரை சந்தித்து மனு கொடுத்திருக்கிறார்களே?''”

ss

"தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தலைமையில் நடிகைகள் குஷ்பு, ராதிகா மற்றும் சசிகலாபுஷ்பா உள்ளிட்ட பெண் நிர்வாகிகள் தமிழக கவர்னர் ரவியை சந்தித்தார்கள். அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து புகார் கொடுக்கவே இந்த சந்திப்பு நடந்தது. அப்போது, இவ்விவகாரத்தில் பல உண்மைகளை தி.மு.க. அரசு மூடி மறைக்கிறது என்றும், இதற்குக் காரணம்... குற்றவாளி ஞானசேகரனைத் தவிர வேறு நபர்களை நோக்கி விசாரணை நகரக்கூடாது என்கிற நோக்கத்திலேயே இப்படி செய்கிறார்கள் என்றும், அதனால் இதில் சி.பி.ஐ. விசாரணை நடக்க நீங்கள் பரிந்துரைக்க வேண்டுமென்றும் அவர்கள் கவர்னரிடம் கோரிக்கை வைத்திருக் கிறார்கள். இது தொடர்பான புகார் மனுவையும் கொடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே, கவர்னரை சந்தித்த தேசிய பெண்கள் ஆணையமும் இதே கருத்தை கவர்னரிடம் வைத்துச்சென்ற நிலையில், பா.ஜ.க. மகளிர் தரப்பும் இப்போது அதையே வலியுறுத்தியிருக்கிறது. எனவே இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்க, தனக்கு அதிகாரம் இருக்கிறதா? என்று வழக்கறிஞர்களிடம் ஆலோசனை கேட்டிருக்கிறாராம் கவர்னர்.''”

"நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸை அறிவித்திருக்கிறார் முதல்வர். ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்க இருந்த பொங்கல் ரொக்கப்பரிசு தவிர்க்கப்பட்ட நிலையிலும், தங்களுக்கு போனஸ் வழங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் இவர்கள். தொழில் நுட்பக் கல்வித் துறையின் டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி., எஸ்.டி. பணியாளர் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் மகிமைதாஸ், தலைவர் மணிமொழி ஆகியோர், போனஸ் அறிவிப்புக்காக, முதல்வருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.''