பொள்ளாச்சி குற்ற வாளிகளைக் காப்பாற்ற, நக்கீரனை குற்றவாளியாக்க முயற்சித்த சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ராஜேஸ்வரி, நிர்மலாதேவி வழக்கிலும் இதே ரீதியில்தான் நடந்துகொண்டார் என்றனர் அவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மூவர் தரப்பிலும்.
ஜாமீன் கிடைக்க விடாமல், நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவரையும் சிறையிலேயே தொடர்ந்து கொடுமை அனு பவிக்கச்செய்த சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ராஜேஸ்வரியிடம் சாட்டையடி கேள்விகளைக் கேட்ட உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிடம் ராஜேஸ்வரியால் பதிலளிக்க முடியவில்லை. "இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணையில் நீதிமன்றத்துக்கு திருப்தி இல்லை'’ என்று நீதியரசர்கள் தெரிவித்தனர்.
எளிமைக்குப் பெயர்பெற்ற முன்னாள் அமைச்சர் கக்கனின் பேத்தி என்ற பாரம்பரியம் இருந்தாலும், கன்ஃபர்டு ஐ.பி. எஸ்.ஸான ராஜேஸ்வரியால் விசாரிக்கப்பட்ட மூவரும் நம்மிடம் மனம் திறந்தார்கள். ""எங்கிருந்தோ, யாரோ ஒருவர் தொடர்ந்து எஸ்.பி.ராஜேஸ் வரியைத் தொடர்புகொண்டார். அவர் இட்ட கட்டளைக்கு அடிபணிந்து, கைக்கூலியாகத் தான் இவர் செயல்பட்டார்'' என்றார்கள்.
""எஸ்.பி. ராஜேஸ்வரிக்கு சென்ட் வாடையே ஆகாது. ஏழு தனிப் படை போலீசாரும் பயன்படுத்தியதால், சி.பி .சி.ஐ.டி. அலுவலகத்தில் உள்ள கழிப்பறை நாற்றமெடுத்தபடியே இருந்தது. இரண்டு ஏர்கூலரை ஓடவிட்டு, ஏன் இப்படி வாடையடிக்குதுன்னு இன்ஸ் பெக்டர் சாவித்திரியை திட்டிக் கொண்டேயிருந்தார்.
ஒரு பெண்ணாக இருந்தும், அத்தனை மோசமான கெட்ட வார்த்தைகளும் அவர் வாயி லிருந்து வெளிப்பட்டன. "நிர்மலா தேவிக்கு நீ மாமா வேலை பார்த்தாயா? ஒரு பெண்ணை உன்னால் திருப்திப்படுத்த முடியுமா?'’என்பது போன்ற கேள்விகளை, மிகவும் அரு வருக்கத்தக்க வகையில் வேறு விதத்தில் கேட்டபோது, கூனிக்குறுகிப் போனார் முருகன்.
"எனக்கும் மாணவிகளை நிர்மலாதேவி அழைத்துப் பேசியதற்கும் சம்பந்தமே இல்லை. நிர்மலாதேவியை வரச் சொல்லுங்க. எனக்கு முன்னால விசாரிங்க...'’என்று முருகன் சீறியவுடன், நிர்மலாதேவியின் முகத்தைப் பார்த்து முருகன் பேசக்கூடாது என்ற நிபந்தனை யுடன் நிர்மலாதேவி அழைத்து வரப்பட்டார். தனக்குப் பின் னால் நின்ற நிர்மலாதேவியிடம் "நீங்க யாரையும் காப்பாற்ற வேண்டாம். உண்மையைச் சொல்லுங்க. மாணவிகள் வேண்டுமென்று என்றைக் காவது நான் உங்களிடம் கேட்டிருக்கிறேனா?'’என்று கேட்டார் முருகன். நிர்மலாதேவி “"அப்படி இல்ல மேடம் (எஸ்.பி. ராஜேஸ்வரி), மாணவிகள் குறித்து முருகன் என்னிடம் பேசியதே இல்லை'’என்று கூறிவிட... எஸ்.பி. ராஜேஸ்வரி யின் ஆத்திரம் கருப்பசாமி பக்கம் திரும்பியது. கருப்பசாமி யின் கைகளை பின்புறமாக முறுக்கி, தனது கால்முட்டியால் தாக்கிய அவர், "நீயும் (கருப்ப சாமி) கலைச்செல்வனும்... நீங்க ரெண்டு பேர்தான் எல்லாம் பண்ணிருக்கீங்க'’என்று கூச்சல் போட்டார்.
எஸ்.பி.ராஜேஸ்வரி உத்தரவிட்டதன்பேரில், சி.பி.சி.ஐ.டி. அலுவலக மாடியில் இருந்த முருகனிடம், கருப்பசாமியை இழுத்துவந்த இன்ஸ்பெக்டர் சரவணன் கட்டப்பஞ்சாயத்து நடத்தினார்.
ஒருகட்டத்தில், "முருகன் எதையும் ஒத்துக்கமாட்டேங்கிறான். சொன்னபடியும் நடக்கமாட்டேங்கிறான். அரெஸ்ட் பண்ணவா?' என்று, இரவு 10 மணிக்கு யாரோ ஒரு மேலதிகாரி யிடம் கேட்டார் எஸ்.பி.ராஜேஸ்வரி. அவர் ஓ.கே. சொன்னதும் அரெஸ்ட் பண்ணிவிட்டார். “
சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் நடவடிக்கைகள் சுத்த மோசம். ரிமான்ட் பண்ணும்போது ஒரு வாக்குமூலம். சார்ஜ்-ஷீட்டில் வேறொரு வாக்கு மூலம். இரண்டாவது வாக்குமூலம், எங்கோ ரூம் போட்டு, யாருடைய டைரக்ஷனிலோ டிஸ்கஸ் பண்ணி எழுதியது. ரிமான்ட் பண்ணியபோது, “"இந்த வாக்குமூலம் கோர்ட்ல செல்லாது, சும்மா கையெழுத்து போடு'’என்று அவசரம் காட்டி னார்கள். வாக்குமூலத்தைப் படிக்க விடவில்லை.
எஸ்.பி.ராஜேஸ்வரியின் தில்லுமுல்லு நடவடிக்கைகளால் எரிச்சலான நிர்மலாதேவி, அவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. கால் மேல் கால்போட்டு அமர்ந்திருந்த நிர்மலாதேவி யிடம், வாக்குமூலத்தில் கையெழுத்து போடச் சொன்னார் எஸ்.பி. ராஜேஸ்வரி. அதற்கு நிர்மலா தேவி, "இந்த வழக்கில் யார் யார் பெயரை நாங்க ளாகவே சேர்த்தோம் என்று எழுதுங்க. வேண்டு மென்றால், அதற்குக் கீழே நான் கையெழுத் திடுகிறேன்'’என்று தோரணையாகச் சொன்னார். அப்போது, எஸ்.பி.ராஜேஸ்வரியின் முகத்தில் ஈயாடவில்லை.
மாணவிகளை நிர்மலாதேவி அழைத்ததில் முருகனுக்குத் துளியும் தொடர்பில்லை என்று அறிந்திருந்தும் வழக்கில் சிக்க வைத்தனர். அதேநேரத்தில், இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை சிபாரிசுகளாலும், பணத்துக்காகவும் தப்பவிட்டார் எஸ்.பி.ராஜேஸ்வரி.
இந்த வழக்கில், உண்மையிலேயே சம்பந்தப் பட்ட ஆராய்ச்சி மாணவர் தங்கப்பாண்டிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சந்திரபிரபா சிபாரிசு செய்தார். மணிக்கணக்கில் காத்திருந்து தங்கப்பாண்டியை விடுவிக்கச் செய்தார். ஆனாலும், எஸ்.பி.ராஜேஸ்வரி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசார், வெயிட்டான கவனிப்புக்குப் பிறகே அவரை விட்டனர். புத்தாக்கப் பயிற்சி இயக்குநர் கலைச்செல்வனுடன் அதிக தொடர்பில் இருந்தார் நிர்மலாதேவி. கலைச்செல்வனுக்கு அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமா ரும் செல்லூர் ராஜுவும் பக்கபலமாக இருந்து உதவினார்கள். கலைச்செல்வன் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கொடுத்த தொகை "30 எல்' என்கிறார்கள். தொலைக்கல்வி இயக்குநர் விஜயதுரையிடமிருந்து "20 எல்' கறந்துவிட்டே வழக்கிலிருந்து விடுவித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தன்னைப் பற்றி எதுவும் பேசிவிடக்கூடாது என்றுதான் நிர்மலாதேவியின் வாயை போலீசாரை விட்டு மூடச்செய்தார் எஸ்.பி.ராஜேஸ்வரி. மதுரையிலும், உயர் நீதிமன்ற விசாரணை நடந்தபோது, நிர்மலாதேவி பக்கத்திலேயே மிரட்டலாக நின்றுகொண்டார் எஸ்.பி.ராஜேஸ்வரி. அதனால், உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
விசாரணை அதிகாரி சந்தானம், முருகன் குடும்பத்தினரிடம், "முருகன் ஒரு அப்பாவி. அவரை ஜாமீனில் எடுக்க வேண்டுமென்றால், சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யை போய் பாருங்கள்'’என்று வழிகாட்டியிருக் கிறார். உடனே, முருகன் குடும்பம் சென்னை சென் றது. அப்போது ஐ.ஜி. அலுவலகத்தில் “இருந்தவர்களும் எஸ்.பி. பற்றி விமர்சித்துள்ளனர்'' என்றனர்.
உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காத எஸ்.பி.ராஜேஸ்வரி, நிர்மலாதேவி வழக்கில் ஜாமீனில் வெளிவந்திருக்கும் மூவர் தரப்பிலும் குமுறலாகச் சொல்லியிருக்கும் குற்றச்சாட்டுக் களுக்கு இதுவரை விளக்கமளிக்கவில்லை.
உண்மைக் குற்றவாளிகள் இருவரை தப்பவிட, லட்சக்கணக்கில் ராஜேஸ்வரி வாங்கியதை அப்போதே நக்கீரனில் அம்பலப்படுத்தியிருந்தோம். அந்தக் கோபத்தின் வெளிப்பாடுதான் கடந்த 1-ம் தேதி நமது ஆசிரியர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜரானபோது ராஜேஸ்வரி நடந்து கொண்ட விதம். கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி நாம் ஆஜரான வழக்கிற்கு சம்பந்தமேயில்லாத கேள்விகளை மிரட்ட லாக கேட்டு தனது திமிர்த் தனத்தைக் காட்டினார் ராஜேஸ்வரி.
-சி.என்.இராமகிருஷ்ணன்
படங்கள் : ஸ்டாலின், ராம்குமார்