சுபஸ்ரீ கண்ணால் கண்டது என்ன..? ஈஷா பெண் கொலை மர்மம்...!

ss

"ஜக்கியின் ஈஷா மையத்தில் பாலியல் குற்றங்கள் அதிகம். பார்க்கக்கூடாத எதையோ சுபஸ்ரீ பார்த்திருக்கின்றார். அது பிடிக்காமல் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து தலைதெறிக்க தப்பி ஓடியிருக்கின்றார். எனினும், அவரை பின்தொடர்ந்து வந்த ஜக்கியின் சீடர்களிடம் சிக்கி தற்பொழுது மர்மமான முறையில் கொலையாகி இறந்திருக் கின்றார்'' என ஜக்கியின் ஈஷா மையத்திற்கு பயிற்சிக்காக சென்ற இளம்பெண் ஒருவரின் மர்மக் கொலைக்கு நியாயம் கேட்டு தெய்வீக தமிழ் பேரவை சார்பில் வடவள்ளியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சந்தேகங்களை எழுப்பினர் அங்கு பங்கேற்றவர்கள்.

ss

கோவையைச் சேர்ந்த ஒருவரோ, "உறவினர் எனும் அடிப் படையில் நானும் பழனிக்குமார் குடும்பத்தாரோடு சேர்ந்துதான் சுபஸ்ரீயைத் தேடினேன். ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றபொழுது ஈஷாவினைச் சேர்ந்த இரண்டு ஆட்கள் எங்களோடு இருந்தாங்க. நானும் பழனிக்குமாரும், உறவுக்காரர்களும் பேசுவதை காது கொடுத்து கேட்டுக் கொண்டேயிருந்தாங்க. எனக்கு அவர்கள் மேல் சந்தேகம் வலுத்தாலும், பழனிக்குமார் ஜக்கியை தீவிரமாக நம்புவதால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. புகார் மனுவை எழுதியதே அவர் கள்தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் "எஃப்.ஐ.ஆர். போடு வதற்கு ஒருமணி நேரம் ஆகும், நீங்க சாப்பிவிட்டு வந்து வாங்கிக்கங்க' என

"ஜக்கியின் ஈஷா மையத்தில் பாலியல் குற்றங்கள் அதிகம். பார்க்கக்கூடாத எதையோ சுபஸ்ரீ பார்த்திருக்கின்றார். அது பிடிக்காமல் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து தலைதெறிக்க தப்பி ஓடியிருக்கின்றார். எனினும், அவரை பின்தொடர்ந்து வந்த ஜக்கியின் சீடர்களிடம் சிக்கி தற்பொழுது மர்மமான முறையில் கொலையாகி இறந்திருக் கின்றார்'' என ஜக்கியின் ஈஷா மையத்திற்கு பயிற்சிக்காக சென்ற இளம்பெண் ஒருவரின் மர்மக் கொலைக்கு நியாயம் கேட்டு தெய்வீக தமிழ் பேரவை சார்பில் வடவள்ளியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சந்தேகங்களை எழுப்பினர் அங்கு பங்கேற்றவர்கள்.

ss

கோவையைச் சேர்ந்த ஒருவரோ, "உறவினர் எனும் அடிப் படையில் நானும் பழனிக்குமார் குடும்பத்தாரோடு சேர்ந்துதான் சுபஸ்ரீயைத் தேடினேன். ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றபொழுது ஈஷாவினைச் சேர்ந்த இரண்டு ஆட்கள் எங்களோடு இருந்தாங்க. நானும் பழனிக்குமாரும், உறவுக்காரர்களும் பேசுவதை காது கொடுத்து கேட்டுக் கொண்டேயிருந்தாங்க. எனக்கு அவர்கள் மேல் சந்தேகம் வலுத்தாலும், பழனிக்குமார் ஜக்கியை தீவிரமாக நம்புவதால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. புகார் மனுவை எழுதியதே அவர் கள்தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் "எஃப்.ஐ.ஆர். போடு வதற்கு ஒருமணி நேரம் ஆகும், நீங்க சாப்பிவிட்டு வந்து வாங்கிக்கங்க' என எங்களை அனுப்பிவைத்தார். உடனே போடவேண்டிய எஃப்.ஐ.ஆரை ஒருமணி நேரம் கழித்து போட வேண்டிய அவசியம் என்ன.? என்ற கேள்வி இருந்தாலும் மாயமான இடத்திலுள்ள பிள்ளையார் கோவில், தெருமுனையிலிருந்த சி.சி.டி.வி. கேமரா இவற்றை பார்த்துவிட்டு வருகையில், "என்ன பார்த்தீங்க? அங்க என்ன இருந்துச்சு?' பல கேள்விகளையும் ஜக்கியோட சீடர்கள் கேட்டாங்க. ஏன் பதறிக்கிட்டே இருந்தாங்கன்னு தெரியலை. அவங்க கிட்ட தப்பு இல்லாமல் பதறு வாங்களா?'' என கேள்வி எழுப்பினார் அவர்.

சுபஸ்ரீ மாயமான வேளையில், கேமராவில் சிக்கிய ஒருமணி நேரத்தில் மட்டும் ஈச்சர் வாகனம் உட்பட 6 வெளி மாநில வாகனங்கள் அந்தப் பகுதியைக் கடந்திருப்பது அதே சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைப் பற்றிய எவ்வித குறிப்பும் ஈஷா வாகனப் பதிவேட்டிலும் காவல்துறையிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வாக னம் ஒன்றில் கூட சுபஸ்ரீ கடத்தப்பட்டிருக்க லாம் என்பதும் சந்தேகத்திற்குரிய ஒன்று.

aa

"ஈஷாவை பொறுத்தவரை அங்கு பாலியல் குற்றங்கள் அதிகம். கண்ணைக் கட்டிக்கொண்டு சைலன்ஸ் ஹவரில் இருக்கும்போது பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்திருக்கும். இல்லை, மிகப்பெரிய ஒருவரின் யோக்யதையை சுபஸ்ரீ கண்ணால் பார்த்திருக்கலாம். அதனாலேயே தப்பிக்க முயற்சி செய்து சர்ப்ப வாயிலை விட்டு வெளியேறியுள்ளார்.. இது வெளியில் தெரிந்தால் தனக்கு ஆபத்து என்பதால் ஜக்கியின் சீடர்கள் சுபஸ்ரீயை மீட்டு வந்து தங்களுக்கு பரிச்சயமான வீட்டில் அடைத்து வைத்திருந்து, திரும்ப யோகா மையத்திற்கு கொண்டு சேர்ப்பிக்க திட்டமிட்ட நிலையில் சுபஸ்ரீயின் தேடுதல் வேட் டையில் அச்சப்பட்டு கொலை செய்திருக்க வாய்ப்புண்டு. ஏனெனில், அங்கு அந்த பாலியல் குற்றங்களுக்கு உடன்படுபவர்கள் சுகபோக வாழ்க்கை அனுபவிக்க, எதிர்ப்பவர்களை மொட்டையடித்து கொடுமைப்படுத்துவது ஜக்கியின் கை வந்த கலை'' என்கிறார் பேராசிரியர் காமராஜ்.

s

இது இப்படியிருக்க, மொட்டை ஆண் சாமிகளுக்கெல்லாம் தலைமை மொட்டை சாமியாக இருக்கும் உல்லாச சாமி பதற்றத்தில் இருப்பதாகவும், அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி கர்நாடகாவில் துவங்கவுள்ள ஆசிரமத்திற்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருவதும், அதற்கான காரணம் என்ன என்பதையும் மறைக் கும் வண்ணம் அங்கு நிகழ்வுகள் உள்ளதாகக் குறிப்பிடுகின்றனர் அங்கு பணியாற்றுபவர்கள்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச்செயலாளரான ராதிகாவோ, "ஏறக்குறைய 15 ஆண்டுகளாக இது மாதிரி பெண்கள் மாயமாவதும், மர்மமான முறையில் இறப்பதும் நடந்து வருகின்றது. ஆட்சி மாறினாலும், அதிகார மையம் மாறவில்லை என்பதுபோல எந்தவொரு காவல்துறை அதிகாரியும் ஈஷாவில் போய் விசாரித்ததாக குறிப்புகள் இல்லை. சுபஸ்ரீ விஷயத்தில் காவல்துறையின் அணுகுமுறை ஏற்புடையது அல்ல. ஜக்கியை விசாரிக்க வேண்டுமென்ற அக்கறையும், வெளிப்படைத் தன்மையும் காவல்துறையிடம் இல்லை. சி.சி.டி.வி.யில் ஓடிவரும் காட்சிகளைப் பார்த்தால் சாதாரணமாக ஓடி வருவதுபோல் தெரியவில்லை. யாரோ ஒருவரிடமிருந்து தப்பி வருவதுபோல் உள்ளது. இதற்குப் பின்னால் ஏதாவது அங்கு குற்றசம்பவம் நிகழ்ந்திருக்க வேண்டும். பாலியல் ரீதியான துன்புறுத்தல் அச்சுறுத்தல் என பல ஜக்கியை நோக்கி நீள்கிறது. எங்களைப் பொறுத்தவரை அரசு, இந்த ஈஷா யோகா மையத்தை சீல் வைத்து சுபஸ்ரீ மரணத்தின் உண்மைத் தன்மையை தெளிவுபடுத்த வேண்டும்'' என்கிறார் அவர்.

sha

இதற்கிடையே இன்னொரு திடுக்கிடும் தகவலும் சொல்லப்படுகிறது.

நஞ்சுண்டாபுரம், போத்தனூர் வீரகேரளம், துடியலூர் உள்ளிட்ட 13க்கும் மேற்பட்ட பகுதிகளிலுள்ள மின்மயானங்களை பராமரிக்கும் பொருட்டு கோவை மாநகராட்சியுடன் இணைந்து ஜக்கி ஈஷாவின் காயந்த ஸ்தானம் மின்தகன மையங்களை ஆக்கிரமித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்காக வேலுமணி காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம் ஆட்சி மாறியும் காலாவதி ஆகாமல் இருப்பதுதான் வேடிக்கையே. இதே வேளையில், "நித்யானந்தா எப்படி "வாமச்சாரம்' என்கின்ற பூஜையினை முறைதவறிப் பயன்படுத்தி இன்று ஒன்று மில்லாமல் போனாரோ, அதுபோல் மின் மயானங்களில் எரிப்பிற்கு முன் எடுக்கப்படும் மனித உடலின் சில பகுதிகளை வைத்து "கபாலிகா பூஜை'யை செய்துவருகிறார் ஜக்கி. பிளாக் மேஜிக் எனப்படும் தாந்திரீக வேலைகளுக்காகவே, இந்த மின் மயானங்களை பராமரித்து வருகிறார் அவர்'' என்கின்றனர் அவருடன் தொடக்க காலத்தில் பணியாற்றிய சிலர்.

s

ஈஷாவில் தொடர்ச்சியாக நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்த சுபஸ்ரீயின் கொலை வழக்கு தொடர்பாக, ஈஷா மையத்தில் தமிழக காவல் துறை தீவிர விசாரணை நடத்த வேண்டு மென்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு!

_________________

சர்ச்சையில்... கர்நாடகாவில் ஈஷாவின் 2வது கிளை!

பெங்களூரிவிலிருந்து சுமார் 70 கி.மீ. தொலைவிலுள்ள சிக்பல்லாபுரா மாவட்டத்தில் நந்திமலைக்கு வடக்கே, பினாகினி ஓடை பாயும் அவலகுர்கி கிராமத்தில் ஈஷாவின் இரண்டாவது கிளை வருகின்ற ஜனவரி 15ம் தேதி திறக்கப்படவுள்ளது. கர்நாடக வருவாய்த்துறை அமைச்சராக இருந்த அசோகாவின் உதவியாளர் லஞ்சம் கேட்ட வழக்கில் சிக்க, அமைச்சர் பதவி ஆட்டம் கண்டது. இவ்வேளையில் "எனக்கு பா.ஜ.க.வின் தலைமை பொறுப்பிலுள்ளவர்களை தெரியும். நான் உன்னுடைய பிரச்சினையை சரிசெய்கிறேன்' எனக் கூறி அடிமாட்டு விலையில் அவலகுர்கி கிராமத்தில் 100 ஏக்கரை தன் வசப்படுத்திய ஜக்கி, தன்னுடைய அரசியல் செல்வாக்கைக் காட்டி சுற்றியுள்ள 600 ஏக்கர்களையும் வளைத்துப் போட... பிரச்சினை விஸ்வரூபமெடுத்துள்ளது. திறப்புவிழா நாளில் ஏதாவது அசம்பாவிதம் நடக்க வாய்ப்பிருப்பதால், காவல்துறையின் உதவியை நாடியிருக்கின்றது ஜக்கியின் தரப்பு.

nkn070123
இதையும் படியுங்கள்
Subscribe