முதலில் மிஸ்டு கால் கொடுத்து கட்சிக்கு ஆள் சேர்த்து எடுபட வில்லை. அடுத்து "தற்போது ஒரு கோடி உறுப் பினர்கள் சேர்ப்பு' என்று இலக்கு வைத்து பா.ஜ.க. கடந்த இரண்டு மாதங்கள் மக்க ளிடம் சென்று கடுமையான ஆள்சேர்ப்பு நடத்தி வரும் நிலையில், ஒரு இரகசிய திட்டம் தீட்டப்பட்டு, தமிழகம் முழுவதும் கொடிகட்டிப் பறந்த ரவுடிகளைப் பற்றி ஒரு பக்கா லிஸ்ட் தயாரித்து, அவர்களை ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், விஸ்வ ஹிந்து பரிசத் போன்ற இயக்கங்களில் சேர்த்து, இந்துத்வா வகுப்பெடுத்து, தமிழ்நாட் டில் பா.ஜ.க.வின் பாதுகாவ லர்களாக உருவெடுக்கச் செய்வதில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது.
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய மதுரையின் முக்கிய ரவுடியான ஒருவர் நம்மிடம், ""என்னை சும்மாவே "ஏதாவது காரணம் இருக்கா' என்று துழாவிக் கிட்டு இருக்கி றார்கள். இதை வெளியே சொன்னா எனக்கு என்கவுண் டர்தான். என்னை ஆர்.எஸ்.எஸ். தலைமையில் இருந்து பார்க்க வருவதாக சொல் கிறார்கள். பா.ஜ. க.வில் சேர்ந்தால் அரசியல் நிகழ்ச்சி களால் செலவுதான் வரும். ஆனால் "இதில் உங்களை சம்பளத்தோடு இயக்கப் பணியில் சேர்ப்பாங்க. உங்களுக்கு பிடித்திருந்தால் சரி' என்று பேசினார்கள். அந்த சம்பளம் சரியா வரலை. அதோடு, நான் பழைய சம்பவங்களை மூட்டைகட்டிட்டு, பேரப் பிள்ளைகளோடு அமைதியா வாழ முடிவு பண்ணிட்டேன்'' என்றார்.
மதுரையில் பிரபல ரவுடியாக இருந்த டாக் ரவி மீது பல்வேறு கொலைவழக்குகள் இருந்த போதும், தற்போது அனுமன் சேனா தலைவராக உள்ளார். இந்துத்வாவின் துணை இயக்கங்களை வலுப்பெற செய்வது, தமிழகத்தின் பிரபல ரவுடிகளை அதற்கு தளபதிகளாக உருவாக்குவது என்பதுதான் பா.ஜ.க.வின் "ஆபரேஷன் திராவிடா'வின் முதல் அத்தி யாயம்.
அடுத்து, டாக்டர் சேதுராமன், ஸ்ரீதர் வாண் டையார் போன்றோர் ஏற்கனவே வைத்த கோரிக்கையான தமி ழகத்தை வடக்கு- தெற்கு என்று இரண்டாக பிரித்து தனித்தனி மாநிலமாக்குவது என்பதற்கான அசைன்மெண்ட்டும் பா.ஜ.க. தரப்பில் ரெடியாகிறதாம். அதற்காக தென்மாவட் டங்களைக் குறி வைத்து கவனம் செலுத்துகின்றனர். திராவிடக் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகளில் சேராமல் தனியாக வெவ்வேறு பெயர்களில் சாதிக் கட்சியாக இயங்குபவர்களை நேரடி யாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் சந்தித்து இந்துத்வா அமைப் போடு இணக்கமாக ஒருங் கிணைக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பிரித்விராஜ் சவ்கான் இங்கே வந்து இந்தப் பணிகளை மேற்கொண்டு திரும்பி யிருக்கிறார். அதன் தொடர்ச்சி யாக மருத மரம் நடல் நிகழ்ச்சியை பா.ஜ.க.வைச் சேர்ந்த சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியின் அமைப்பாளர், மருது சேனை அமைப்பின் தலைவர் கல்லிக்குடி ஆதி நாராயணன் நம்மிடம், ""தேசியத்தையும், தெய் வீகத்தையும் இரு கண்களாக கருதி முத்துராமலிங்க தேவர் வழியில் செயல்படும் எங்களது கொள்கைகளை அரசியல் கட்சியான பா.ஜ.க.வினர் எப்போதுமே முன்னெடுத்து வருகின்றனர். இந்த பகுதியை பொறுத்தவரை எங்களது சமுதாயம் அரசியலை நிர்ண யிக்கக்கூடியதாக இருக்கின்றது. பா.ஜ.க.வின் மாநில செயலாளர் சீனிவாசன், கீழ உரப்பனூர் எட்டு நாட்டு தேவர் வகை யறாவை சேர்ந்தவர்களின் ஆதரவோடுதான் மருதமரம் நடக்கூடிய அந்த நிகழ்ச்சியை நடத்தி முடித்தோம். இது தொடக்கம்தான். எங்களின் அடுத்தகட்ட அரசியலை எதிரி கள்தான் தீர்மானிப்பார்கள். எங்கள் சமூகமும் இனி மோடி யின் பின்னால் அணிவகுக்கும்'' என்றார்.
முக்குலத்தோர் அமைப்பை சேர்ந்த மணி முத்தையா நம்மிடம், ""எங்கள் ஊரைச் சுற்றி சுமார் 78 கிராமங்களுக்கு முக்குலத்து அமைப்பிலிருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தேன். பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் என்னை வந்து பார்த்து இயக்க கூட்டங்களுக்கு அழைத்து சென்றார்கள். எனக்கு ஆர்வம் அதிகமாகி இந்த தேசத்திற்காக என் னை கட்சியில் இணைத்துக் கொண்டு, மோடியை தலைவ ராக ஏற்று செயல்பட ஆரம்பித்தேன். ஒவ்வொரு ஊரிலும் ஆன்மிகம் சம்பந்த மாக விழாக்களை கையில் எடுப்பது, பெண்களை அதில் இணைத்து செயல் படவைப்பது, தாமரை விளக்கு ஏற்றுதல் உள்ளிட்ட நிகழ்வு மற்றும் சட்டப்பிரிவு 370 நீக்கியதை வரவேற்று நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கிறேன். இதுவரை புற நகர் மாவட்டத்தில் மட்டும் இரண்டு லட்சத்து பத்தாயிரம் உறுப்பினர்களை சேர்த்து இருக்கிறேன். அதற்கான அங்கீ காரம் எனக்கு கிடைத்திருக் கிறது. சாதிக்குள் மட்டும் இதை அடக்கி விட முடியாது'' என் றார்.
"திராவிட ஆபரஷேன் 0.2' என, தமிழகத்தில் ஓடும் நதிகளை புனிதப்படுத்தும் இயக்கங் களையும் பா.ஜ.க. தொடங்கு கிறது. அதற்கான முன்னோட் டம்தான் "வைகைப்பெருவிழா' என்ற பெயரில் வைகை மாதா சிலை நிறுவி, 5000 சாதுக்களை கூட்டிவந்து யாகம் நடத்தியது. இதுகுறித்து வைகை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ராஜன் நம்மிடம், ""நதிகள் இந்துமதத்தின் அடையாளங்கள். கங்கை, யமுனை, சரஸ்வதி போல் தமிழகத்தின் நதிகளான வைகை, காவேரி, தாமிரபரணி போன்ற அனைத்தையும் புனித நதி களாக்கி அதற்கான விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்'' என்று முடித்துக் கொண்டார்.
சாதி அமைப்பினர், குற்றப் பின்னணி கொண்ட ரவுடிகள் உள்ளிட்டோரை ஈர்ப்பது குறித்து பா.ஜ.க.வின் சீனிவாச னிடம் கேட்டபோது, ""தேசியமும் தெய்வீகமும் என் இரு கண்கள் என்று தாரக மந்திரமாக சொல்லிவந்த முத்து ராமலிங்க தேவரின் முக்குலத்து சமூகம், இந்துத்வா கொள்கை யின் பின்னால் வருவது இயற்கை யானது. மனிதர்கள் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. நல்வழியில் பய ணம் செய்வது நல்லதுதானே. எங்கள் கட்சியில் சேர்ந்தபிறகு எந்த தப்பான குற்றச் செயல்களில் ஈடு பட்டாலும் உடனே கட்சி நடவடிக்கை எடுக்கும்'' என்றார்.
காஷ்மீரை இரண்டாக்கு வதில் வெற்றி பெற்ற பா.ஜ.க., தமிழகத்தையும் அதே பாணியில் குறி வைத்து, அதற்கேற்ற களப்பணிகளைத் தொடங்கிவிட் டது. திராவிடக் கட்சிகளுக்கு எதிரான இந்த "ஆபரேஷன் திராவிடா' குறித்து அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எந்தளவு விழிப்புடன் இருக் கின்றன என்பது தெரியவில்லை.
-அண்ணல்