பிராமணர் சங்கத்தில் சாதி வன்மப் பேச்சு! கொந்தளிக்கும் பிற சமூகத்தினர்!

dd

மிழ்நாடு பிராமணர் சங்கத்தின் (தாம்ப்ராஸ்) கோவை மாவட்ட மாநாட்டில், ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன், நாடார் சமூகத்தினரையும், கவுண்டர் சமூகத்தினரையும், பெண்களையும் இழிவுபடுத்திப் பேசியது சமூக வலைத்தளங்களில் கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதில் அவர் பேசியதாவது...

"திருச்சியில் நான் ஒரு உபன் யாசத்துக்கு போயிருந்தபோது ஒரு நாடார் பையன் என்னை சந்தித் தான். அடுத்த பிறவியில் நான் பிராமணராகப் பிறக்க வேண்டும் என்றான். வேண்டாம், நீ நாடாராகவே பிற என்றேன். பிராமணனாகப் பிறந் தால் கஷ்டம்டா. ஆசாரத்தைக் கடைப் பிடிக்கணும். நீ நாடாராகவே இரு என்றேன். நீ பாவம் பண்ணலாம்... குடிக்கலாம்... கொள்ளையடிக்கலாம்... கூத்தியாளோட இருக்கலாம்... சீட்டாடலாம்... இந்த பாவத்தை எப்படி போக்குறது?... மாசாமாசம் அமாவாசை வருது பாத்தியா? நூறு ரூபா வச்சுக்கோ! ஒரு வேஷ்டி வச்சுக்கோ! என்னை மாதிரி பிராமணன் யாராவது இருப்பான். அவன்ட்ட குடுத்து நமஸ் காரம் பண்ணு! சகல பாவமும் அவனுக்கு போயிடும்னேன்! உடனே, சாமி, அப்புறம் அந்த பாவத்த நீங்க எப்படி போ

மிழ்நாடு பிராமணர் சங்கத்தின் (தாம்ப்ராஸ்) கோவை மாவட்ட மாநாட்டில், ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன், நாடார் சமூகத்தினரையும், கவுண்டர் சமூகத்தினரையும், பெண்களையும் இழிவுபடுத்திப் பேசியது சமூக வலைத்தளங்களில் கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதில் அவர் பேசியதாவது...

"திருச்சியில் நான் ஒரு உபன் யாசத்துக்கு போயிருந்தபோது ஒரு நாடார் பையன் என்னை சந்தித் தான். அடுத்த பிறவியில் நான் பிராமணராகப் பிறக்க வேண்டும் என்றான். வேண்டாம், நீ நாடாராகவே பிற என்றேன். பிராமணனாகப் பிறந் தால் கஷ்டம்டா. ஆசாரத்தைக் கடைப் பிடிக்கணும். நீ நாடாராகவே இரு என்றேன். நீ பாவம் பண்ணலாம்... குடிக்கலாம்... கொள்ளையடிக்கலாம்... கூத்தியாளோட இருக்கலாம்... சீட்டாடலாம்... இந்த பாவத்தை எப்படி போக்குறது?... மாசாமாசம் அமாவாசை வருது பாத்தியா? நூறு ரூபா வச்சுக்கோ! ஒரு வேஷ்டி வச்சுக்கோ! என்னை மாதிரி பிராமணன் யாராவது இருப்பான். அவன்ட்ட குடுத்து நமஸ் காரம் பண்ணு! சகல பாவமும் அவனுக்கு போயிடும்னேன்! உடனே, சாமி, அப்புறம் அந்த பாவத்த நீங்க எப்படி போக்கிப்பீங்கன்னான். நாங்க பிரம்ம யக்ஞம்னு ஒண்ணு பண்றோம். அதப் பண்ணியாச்சுன்னா எங்களுக்கு சகல பாவங்களும் போயிடும்னேன். உடனே அவன், அந்த பிரம்ம யக்ஞத்த நாங்க பண்ணலாமா?ன்னு கேட்டான். நீ பண்ணப்பிடாது... நீ பாவந்தான் பண்ணணும்னேன்'' என்று நாடார் சமூகத்தவரை இழிவாகப் பேசிய வீடியோ க்ளிப்பிங் வைரலாகப் பரவுகிறது.

ff

நாடார் சமூகத்தை மட்டுமல்லாது, கவுண்டர் சமூகத் தவரையும் அவர் இழிவுபடுத்திப் பேசியிருக்கிறார். அவரது பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனத்தைப் பதிவிட்டுவருகிறார்கள்.

முன்பு சாணார்கள் என்றழைக்கப்பட்ட நாடார் சமூகத்தவர் கள், சனாதனக் கோட்பாடுகளால் தாழ்த்தப்பட்டு, கோவில்களில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட வரலாறுகள் உண்டு. பனை மரத்தில் கள் இறக்கும் தொழிலில் ஈடுபட்டதைக் காரணமாகக் காட்டி, அவர்களைத் தீண்டத்தகாதவர்களாக... சூத்திரர்களெனக்கூறி பிராமணர்கள் மட்டுமல்லாமல், நீதிமன்றமே தீர்ப்பெழுதி ஒதுக்கியது.

நாடார் சமூகத்தைச் சேர்ந்த சுயமரியாதை இயக்கப் பற்றாளர்கள் தீண்டாமைக்கெதிராக நாடார்களின் உரிமைக்காக பெரியார், வைத்தியநாத அய்யர், ஆர்.எஸ்.நாயுடு போன்ற பல தலைவர்களும் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள்.

தங்களது சமூகத்தின் கூட்டு முயற்சியால், கல்விக்கூடங்களை, கோவில்களை, தொழில் நிறுவனங்களை உருவாக்கி, பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டனர். நாடார்கள் சமூகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சரான காமராஜர், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கும் அடித்தளமிட்டதால், கல்விக்கண் திறந்த காமராஜரென்று போற்றப்பட்டவர். அப்படிப்பட்ட சமூகத்தினைப்பற்றி, பிராமண சங்க மாநாட்டில் இழிவாகப் பேசி யிருப்பது சனாதனத்தின் வெளிப் பாடாகவே தெரிகிறது.

dd

கல்யாணராமனின் பேச்சு குறித்து நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் கூறுகையில், "பிராமணர்கள் ஆரம்ப காலத்தில் நாடார்களோடு இணைந்துதான் கோவில்களில் பூஜைகள் செய்துவந்தார்கள். நாடார்களுடைய கருமாபுரம் ஆதீனத்தில் இன்றைக்கும் பிராமணர்கள்தான் பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு பூஜை செய்துவருகிறார்கள். விஜயநகரப் பேரரசு படையெடுப்புக்குப் பின்னர் தான் பிராமணர்கள்- நாடார்களிடையே வேறுபாடு ஏற்பட்டது. நாடார் களைத் துண்டாட வேண்டுமென்று நினைத்துத் துண்டாடிவிட்டார்கள். அதற்குப்பின்னர் நாடார்கள், பிராமணர்களால் மந்திரம் ஓதப்படாத சுயமரியாதைத் திருமணங்களை நடத்தத் தொடங்கினார்கள். அதோடு, தங்களுக்கெனத் தனியாகக் கோவில்கள் கட்டி, நாடார்களே பூஜை செய்து நிர்வகித்துவந்தார்கள்.

மேலும், நாடார்கள் தங்களது கூட்டு முயற்சியால் கல்வி நிறுவனங்கள் தொடங்கி, தொழில் நிறுவனங்களை உருவாக்கி பொருளாதார முன்னேற்றம் கண்டார்கள். இத்தகைய முன்னேற் றத்துக்குப் பின்னர் தற்போது கோவில் கும்பாபிஷேகங்களுக்கும், வசதி படைத்தவர்கள் தங்கள் வீட்டுத் திருமணங்களுக்கும் பிராமணர்களை அழைக்கும் வழக்கம் உருவாகியிருக்கிறது. இப் படியான சமூக மாற்றம் நிகழ்ந்துள்ள சூழலில் இத்தகைய பேச்சு தேவையற்றது. அதேபோல, அவர் களுடைய சமூக மாநாட்டில் அவர்களுடைய சமூகத் தைப் பற்றி உயர்த்திப் பேசலாமே தவிர, மற்ற சமூகத் தினரைக் கேலி பேசக்கூடாது. தங்களை வளர்ந்த சமூகமென்று சொல்லிக்கொள்பவர்கள் இப்படியான சின்னத்தனமான செயல்களில் ஈடுபடுவது மிகவும் அபத்தமானது. சட்டரீதியாகவும் இப்படியான பேச்சுக்கள் தவறானவை. சமூகத்தின் போக்கையே சீர்குலைக்கக்கூடியது.

dd

30 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடெங்கும் ஜாதிக்கலவரங்கள் நடந்துகொண்டிருந்தன. இப் போது தமிழகத்தில் ஜாதி ரீதியான கலவரங்களே இல்லாத சூழல் நிலவுகிறது. இந்தத் தருணத்தில் திரும் பத் திரும்ப ஜாதிகளுக் குள் போட்டியாக, உயர்வு தாழ்ச்சியாகப் பேசுவது அரு வருக்கத்தக்கதாக இருக்கிறது. ஒரு ஜாதியை வளர்ப்பதற்கான நல்ல கருத்துக்களை பதிவு செய்யலாம். எந்த ஜாதியையும் யாரும் இழிவு படுத்திப் பேசக்கூடாது. இன்றைக்கு அனைத்து ஜாதியினரும் பொருளாதாரரீதியாக நல்ல வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறார்கள். நாடார் சமூகத்தினர் நிர்வகித்துவரும் கல்விக்கூடங்களில் அனைத்து ஜாதியினரும் கல்வி கற்று நல்ல நிலைக்கு முன்னேறிவருகிறார்கள். நாடார் சமூகத்தினரின் நிறுவனங்களில் பிராமணர்களும் பணியாற்றுகிறார் கள். இப்படியான சூழலில் மற்ற ஜாதியினரைக் குறைத்துப்பேசுவது கண்டிக்கத்தக்கது!'' என்று கண்டனத்தைப் பதிவுசெய்தார்.

சமூக நீதியைத் தூக்கிப்பிடிக்கும் கால கட்டத்தில், ஜாதிக்கலவரத்தைத் தூண்டக்கூடிய பேச்சுக்களை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.

nkn150223
இதையும் படியுங்கள்
Subscribe