திருவண்ணாமலை மாவட்டம், இடப்பாளையம் கிராமம் எம்.ஜி.ஆர். நகரில் வசிப்பவர் சரோஜா. இவரது கணவர் முருகன். சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தனது இரண்டு மகள்கள், ஒரு மகனை சரோஜாதான் விவசாயக் கூலிவேலை பார்த்து வளர்த்தார். இவரின் கடைசி மகள் ராஜேஸ்வரி, எலி பேஸ்ட் தின்று தற்கொலை செய்து கொண்டது கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

cc

இறந்த பெண்ணின் தாயார் துயரத்தால் பேசவிரும்பாத நிலையில், அந்தப் பகுதி முக்கியஸ்தர் எம்.ஏழுமலை நம்மிடம், "நல்லா படிக்கற பிள்ளை, சாரோன்ல இருக்கற அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் படிச்சது. 12-ஆவதில் 375 மார்க் எடுத்திருக்கு. காலேஜ் படிக்க சாதி சர்டிபிகேட் வேணும்னு இரண்டு வாரத்துக்கு முன்னாடி கலெக்டர் ஆபிஸ்ல மனு தந்திருக்கு. அப்போ கலெக்டர், "தாசில்தாரிடம் சொல்லியிருக்கேன், தருவாங்க வாங்கிக் கங்க'ன்னு சொல்லியிருக் காரு. தாசில்தார் அப்படி சொல்லலைன்னு சொல்லியிருக்காங்க. இதனால் காலேஜ் படிக்க முடியல யேங்கற வருத்தத்தில் தற்கொலை செய்துக்கிட் டது. என் மகன் ஜெய ராமன் பத்தாவது பாஸ் செய்தான். அதுக்கப்பறம் படிக்கமாட்டேன்னு சொல்லிட்டான். மேல படிக்கணும்னா சாதி சர்டிபிகேட் வேண்டும், அதைத் தரமாட்டேன்கிறாங்க. இப்பம் அவன் பள்ளிக்கூடம் போகாம வேலைக்குப் போய்க் கிட்டு இருக்கான்'' என்றார்.

இளம் குடும்பத் தலைவி விஜயலட்சுமி, "சர்டிபிகேட் இல்லாம பசங்க, பொண்ணுங்க 12-ஆவதோட நின்னுடறாங்க. இங்க டீச்சர் டிரைனிங், ஐ.டி.ஐ., டிகிரி படிச்ச அண்ணங்க இருக்காங்க. வேலைக்கு அப்ளை செய்தால் சாதி சர்டிபிகேட் கேட்கறாங்க. நாங்க எஸ்.சி. சர்டிபிகேட் கேட்கறோம், அதிகாரிங்க எம்.பி.சி. சர்டிபிகேட் தர்றேன்னு சொல்றாங்க. அதையும் தர்றதில்லை. அப்படி 10-ஆவது, 12-ஆவதோடு படிப்பை நிறுத்துனவங்க 25 பேர் இருக்காங்க இங்கயே'' என்றார்.

Advertisment

cc

மஞ்சுவோ, "10-வது படிச்சி பாஸ் செய் தேன், மேல படிக்கணும்னா சாதி சர்டிபிகேட் தேவை. நாங்க போராட்டம் செய்தும் எஸ்.சி. சர்டிபிகேட் தரல. அப் பறம் படிச்சி என்ன வாகப்போகுதுன்னு என்னை கல்யாணம் செய்து தந்துட்டாங்க'' என்றார். ஆட்டோ ஓட்டும் கோபியோ, "திருவண்ணா மலையில் மட்டும் 150 குடும்பங்கள் இருக்கு. தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எங்கள் இந்து பன்னியான்டி சாதி மக்கள் வசிக்கிறாங்க. அந்த மாவட்டங் களில் எஸ்.சி.ன்னு சாதிச் சான்றிதழ் தந்திருக்காங்க. திருவண்ணாமலையிலும் சிலருக்கு தந்திருக்காங்க. இப்போ ரினிவல் செய்யப் போனால் எஸ்.சி.ன்னு சர்டிபி கேட் தரமாட்டோம், எம்.பி.சி.ன்னு வேணும்னா தர்றோம்னு சொல் றாங்க. அப்பா எஸ்.சி.ன்னு சர்டிபிகேட் வச்சிருக்கார், மகனுக்கு எம்.பி.சி.ன்னு தர்றேன்னு சொல் றாங்க இது எந்த விதத்தில் நியாயம்?'' எனக் கேள்வியெழுப் பினார்.

பெரியவர் ஏழுமலையிடம் கேட்டபோது, "பன்னி வளர்த்து, அதனை விற்பனை செய்வதுதான் எங்க தொழில். என் அப்பா, தாத்தா இந்தத் தொழிலைச் செய்தாங்க. எங்க பிள்ளைங்களுக்கு இந்த வேலை வேணாம், வேற வேலைக்குப் போகட்டும் அப்படின்னுதான் படிக்க வைச்சிக்கிட்டு இருக்கோம். இந்து பன்னியான்டின்னு சாதி சர்டிபிகேட் கேட்கறோம். எங்க சாதிய சேர்ந்தவங்களுக்கு விழுப் புரம், தருமபுரி, கள்ளக்குறிச்சியில் எஸ்.சி.ன்னு சர்டிபிகேட் தந்திருக்காங்க. இங்க மட்டும் நீங்க பன்னியாண்டி சாதியில்ல, ஜோகி அப்படிங்கற சாதி. உங்களுக்கு எம்.பி.சி. சர்டிபிகேட்தான் தருவோம்னு சொல்றாங்க. எங்க குடியிருப்புகள்ளயே சிலர் எஸ்.சி.ன்னு சர்டிபிகேட் வாங்கியிருக்காங்க, அது இப்போ செல்லாதுன்னு சொல்றாங்க. நாங்க ஒரு வருடத்துக்கு முன்பு பன்றியோடு கலெக்டர் ஆபிஸுக்கு நேரிலேயே போய் போராட்டம் செய்து மனு தந்துட்டு வந் தோம். இதுவரை யாரும் விசாரிக்கல. நாங்க தமிழ்நாட்ல ரொம்ப கம்மியா சில ஆயிரம் பேர்தான் இருப்போம். எங்களுக்குன்னு எந்த சாதிச் சங்கமும் கிடையாது, தருமபுரியில் ஏதோ இருக்கறதா சொல்றாங்க. இதனால் எங்க கோரிக்கையை யாரும் கண்டுக்கமாட்டேன் கிறாங்க'' என்றார்.

இதுகுறித்து விளக்கம் பெறுவதற்காக திருவண்ணாமலை கோட்டாட்சியர் மந்தாகினி, மாவட்ட ஆட்சியர் முருகேஷ் இருவரையும் அவர்களது மொபைல் எண்ணுக்கு பலமுறை அழைத்தும் நமது லைனை எடுக்கவில்லை.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள், "கடந்த 17ஆம் தேதி அந்த மாணவி எலி பேஸ்ட் தின்றுள்ளார். அவரது குடும்பத்தார் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலக போர்டிகோவில் அமர்ந்து போராட்டம் செய்தார்கள். கலெக்டர் உத்தரவுப்படி அவர்களை போலிஸை வைத்து மிரட்டி அனுப்பினார்கள். முதலில் அந்தப் பெண் சாதிச் சான்றிதழ் கேட்டு மனுவே தரவில்லை என்றார்கள். அதன்பின், மனு தந்துள்ளார், அந்த சாதியினர் இந்த மாவட்டத்தில் உள்ளார்களா என விசாரணைக்காக சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள் ளது எனச்சொல்லியுள்ளார் ஆர்.டி.ஓ. சாதிச் சான்றிதழ் கேட்டு வரும் ஒவ்வொரு மனுவையும் இப்படித்தான் ஆய்வுக்காக அனுப்புகிறதா வருவாய்த்துறை?. பன்னியான்டி சமுதாயம் விழுப்புரத்தில் எஸ்.சி. என்றால் திருவண்ணாமலையில் எப்படி எம்.பி.சி.யாகிறது? எனப் பதில் சொல்ல வேண்டிய கலெக்டர் உட்பட அதிகாரிகள் மவுனம் காக்கிறார்கள்'' என்கிறார்கள்.

Advertisment