தேர்தலில் இறுதிக்கட்டமாக சென்னையில் பிடிபட்ட நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் 4 கோடி பணம் தொடர்பாக 22ஆம் தேதி ஆஜராகச் சொல்லி தமிழக காவல்துறை உத்தரவிட்டிருக் கிறது. திருச்சியில் அ.தி.மு.க. மா.செ. பரஞ்ஜோதி உறவினர் வீட்டில் ஒரு கோடி ரூபாயை போலீசார் பிடித்திருக்கிறார்கள். திருப்பூரில் பா.ஜ.க.வினர் வீட்டில் 80 லட்சம் ரூபாய் கைப்பற்றப் பட்டிருக்கிறது. காங்கேயத்தில் அ.தி.மு.க.வின ரிடமிருந்து 32 லட்சம் ரூபாய் கைப்பற்றப் பட்டிருக்கிறது. இவையனைத்தும் தமிழகப் போலீசார் கைப்பற்றிய பணம். இதுவரை அ.தி.மு.க., பா.ஜ.க.வினரிடமிருந்து 10 கோடி ரூபாய் தமிழக போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பா.ஜ.க. மா.தலைவர் இதுவரை 1000 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறார். ஜக்கி வாசுதேவ் 100 கோடி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 50 கோடி, மணல் மாபியா 300 கோடி, பா.ஜ.க.வின் தேசியத் தலைமை நட்சத்திரத் தொகுதிகளுக்கு 40 கோடி, சுமாரான தொகுதி களுக்கு 10 கோடி, சாதாரணத் தொகுதிகளுக்கு 8 கோடி என 500க்கும் மேற்பட்ட கோடிகளை தமிழகத்திற்கு அனுப்பியுள்ளது.
இந்தப் பணத்தை நிர்வாகம் செய்ய பொதுவாக நிர்வாகி கள் கொண்ட அமைப்பு ஏற்படுத்தப் படும். இந்தமுறை பணத்தை நிர்வாகம் செய்ய பா.ஜ.க.மா.த. அவருக்கு நெருக்கமான அமர் பிரசாத் ரெட்டி உட்பட மூவர் குழுவை அமைத்துள்ளார். தேசியத் தலைமை கொடுத்த பணத்தில் பாதிப்பணத்தை மா.த. எடுத்துக் கொண்டார். இது தவிர மாநிலம் முழுவதும் கறாரான வசூல் வேட்டையில் இறங்கியும் பணம் சேர்த்துள்ளார் என்கிறார்கள் பா.ஜ.க. நிர்வாகிகள். இதில் ஒரு சிறு பகுதியை மட்டும் தேர்தல் களத்தில் இறக்கி இருக்கிறார். தி.மு.க.வைச் சேர்ந்த மண்டலத் தலைவர்கள் 30 பேர் கோவை யில் இருக்கிறார்கள். அவர்களுக்கு தலா 3 லட்சம் என அவர்களுக்கு நெருக்கமான பா.ஜ.க. தொண்டர்கள் மூலம் ஒரு கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவை, தேனி, வேலூர் ஆகிய தொகுதிகளில் பா.ஜ.க. வினரின் பண விநியோகம் மும்முரமாக நடந்து வருகிறது. வேலூர் தொகுதியில் மட்டும் ஓட்டுக்கு 500 ரூபாய் என பா.ஜ.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகம் கொடுக்க ஆரம்பித்து விட்டார். தேனி தொகுதி யில் டி.டி.வி.தினகரன் பணத்தை அள்ளி இறைக்கிறார்.
திருச்சி தொகுதியில் அ.தி.மு.க. பணத்தை வாரியிறைக்கிறது. அத்துடன் திருப்பூர், பொள்ளாச்சி, விருதுநகர் தருமபுரி ஆகிய தொகுதிகளிலும் அ.தி. மு.க.வின் பண விநி யோகம் ஜரூராக நடந்துவருகிறது. வாக்குப் பதிவுக்கு முந்தைய நாட்களில் தேனி, கோவை, தருமபுரி, வேலூர், திருப்பூர் பொள்ளாச்சி போன்ற தொகுதிகள் அனைத்திலும் அ.தி.மு.க.வின் பண விநியோகம் கண்டிப்பாக நடைபெறும் என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலிலும், ஒரு இடைத்தேர்தல் போல கொங்கு மண்டலப் பகுதி களில் அரசியல் கட்சிகள் மக்களைப் பழக்கப்படுத்தி வைத்துள்ளன. இங்கே நடைபெறும் தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு, பணம் மற்றும் பரிசுப் பொருட்களுக்குதான் உண்டு. இதை ஒரு தேர்தல் மெக்கானிசமாகவே மாற்றி விட்டார்கள். இதன் காரணமாகவே கடும் போட்டி நிலவுவதாக செய்திகள் வருகின்றன. இங்கு போட்டியிடும் வேட்பாளர்கள் மீது பரபரப்பான புகார்களும் எழுகின்றன.
ஈரோடு அ.தி.மு.க. வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் ‘சதுரங்க வேட்டை’ சினிமாப் படம் போல மோசடி செய்தவர். போலி பல்கலைக்கழகம் நடத்தி அது புகாராக ஆனதும் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடினார். அவர் மீது ‘லுக் அவுட்’ நோட்டீஸ் இருக்கிறது. அவரது சொந்த சகோதரர் மருத்துவர் ஆனந்தகுமார், அவரது மனைவி சாந்தி ஆனந்தகுமார், தாய்மாமா செல்வராஜ் ஆகியோர் ஆற்றல் மீது மோசடிப் புகார்களை போலீசில் கொடுத்திருக்கிறார்கள். இத்தனை புகார்களுடன் களத்தில் இருக்கும் இவர், எனக்கு 600 கோடி ரூபாய் சொத்து என போலியாக தனது தேர்தல் வேட்பு மனுவில் அளித்திருக்கிறார் என்ற புகாரும் சேர்ந்திருக்கிறது. ஆனால், தேர்தலில் இவர் கட்சிக்காரர்களுக்கு ஒழுங்காகப் பணம் தரவில்லை என்ற புகார் எழவே... அ.தி.மு.க. கடும் போட்டியை ஏற்படுத்தக்கூடிய தொகுதிகளில் ஒன்றாக எடப்பாடியே நேரடியாகக் களமிறங்கி பண விநியோகத்தை சரி செய்துள்ளார்.
இப்படி தமிழகம் எங்கும் புகார்களும், பண விநியோகமும், ரெய்டுகளும் என இந்தத் தேர்தல் களம் இறுதிக் கட்டத்தை எட்டி யுள்ளது. இதில் தேனி, தருமபுரி, ஈரோடு, விருதுநகர் ஆகிய தொகுதிகளில் கடும் போட்டி ஏற்பட் டுள்ளது. விருதுநகரில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், விஜயகாந்த் இறந்த சென்டிமெண்டை மட்டும் பயன்படுத்தி வாக்குக் கேட்கிறார். தர்மபுரியில் வாக்குக் கேட்பதில் சாதி அதிகம் பயன்படுததப்படுகிறது. ஈரோட்டில் அ.தி.மு.க.வின் ஆற்றல் அசோக்குமார் பழைய பா.ஜ.க.காரர் என்பதால் பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் மறைமுகக் கூட்டணி ஏற் படுத்தியுள்ளன. தேனியில் டோக்கன் மூலம் பண விநியோகம் நடைபெறுமென மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி களைகட்டியுள்ள தமிழகம் முழுவதும் பண விநியோகத்தை எதிர்பார்த்து கடைசிக் கட்ட தேர்தல் நிலவரங்கள் இருக் கிறது என்கிறார்கள் தேர்தல் பார்வையாளர்கள் இதில் ஒன்றிய வருமான வரித்துறையைப் பயன்படுத்தி தி.மு.க.வினரை குறி வைக்கிறது பா.ஜ.க. தமிழகப் போலீசாரைப் பயன்படுத்தி அ.தி.மு.க.வினரையும், பா.ஜ.க.வையும் இறுக்குகிறது தி.மு.க.
_____________
அ.தி.மு.க. - பா.ஜ.க. பணப் பதுக்கல் உறவு!
ஈரோடு அ.தி.மு.க. வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பா.ஜ.க.விலிருந்து சில மாதங்களுக்கு முன்பு அ.தி.மு.க.வுக்கு வந்ததுமே எடப்பாடி சீட் கொடுத்தார். அசோக்குமாரோ லோக்கல் அ.தி.மு.க. நிர்வாகிகளை மதிக்காமல், நம்பாமல் வாக்காளர்களுக்கான பணப்பட்டுவாடாவுக்காக ஆங்காங்கே பா.ஜ.க. நிர்வாகிகளிடம் பணத்தைக் கொடுத்துவைத்திருந்தார். இந்நிலையில், வெள்ளக்கோயிலருகே தீத்தம்பாளையம் பரப்புமேடு பகுதியில் வசிக்கும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகி ஜவகர் என்பவர் வீட்டில் 32 லட்சம் ரூபாயை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளார்கள்.
அவர்களிடம் ஜவகர் கொடுத்த வாக்குமூலத்தில், "வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக அ.தி.மு.க. வேட்பாளர் அசோக்குமார்தான் இப்பணத்தை கொடுத்துவைத்திருந்தார்' என்பதைத் தெரிவித்துள்ளார். ஆக, அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி இல்லை பா.ஜ.க. மா.த.வும், எடப்பாடியும் கூறிக்கொண்டாலும், அ.தி.மு.க. வேட்பாளருக்கும், பா.ஜ.க. நிர்வாகிக்குமான பணப்பதுக்கல் உறவு அம்பலமாகியுள்ளது!
-ஜீவா