மிழ்நாடு அரசியல் வரலாற் றில், மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசுக்கு இணையாக ஒரு அரசை ஆளுநர் நடத்த முயற்சிக்கும் வரலாறு ஆர்.என்.ரவியின் நியமனத்திற்ப் பிறகுதான் உச்சம் தொட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு பா.ஜ.க. ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்தே பா.ஜ.க. ஆளாத மாநிலங் களை ஆளுநர்கள் மூலமாக அதிகாரம் செலுத்தும் கேந்திரமாக மாற்றியுள்ளது.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், புதுச் சேரியில் நாராயணசாமி, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, கேரளாவில் பினராயி விஜயன், தமிழ் நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பஞ்சாபில் பகவந்த்மான் அரசுகளுக்கு எதிராக மோடி -அமித்ஷாவால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் இடையூறுக் கொடுத்துக்கொண்டேயிருக்கிறார் கள். இதில் ஒருபடி மேலே சென்று, தமிழ் நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியலமைப்பு சட்டத்தை மீறி ஒரு ஆளுநர் அரசியல்வாதி போல் செயல்படுவதும், ஆரிய -பார்ப்பன -இந்துத்துவ சிந்தாந்தத்தை திணிப்பதைப்போல பொதுவெளியில் பேசுவதும் வழக்கமாகிவிட்டது.

ravi

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதில் பன்வாரிலால் புரோக்கித்தின் அதிகார உச்சமும், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தியதும் என தனது அரசியலமைப்பு சட்டம் வழங்கிய எல்லைகளை மீறி செயல்பட்டார்.

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையில் பன்வாரிலால் புரோகித்திற்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்த கதையை இந்தியா நன்கு அறியும். ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரத்திலும்கூட உச்சநீதிமன்றம் பலமுறை ஆளுநரின் அதிகாரத்தை வரையறுத்தும்கூட, ஒன்றிய பா.ஜ.க.வையும் மோடியையும் திருப்திப்படுத்த அரசியலமைப்பை மீறியே ஆளுநர் ஆர்.என். ரவி செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். 2021 செப்டம்பர் 10ஆம் தேதி தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டது முதலேயே தனது ஆர்.எஸ்.எஸ். -மோடி விசுவாசத்தை காட்டத்தொடங்கிவிட்டார்.

Advertisment

யாருக்கு அதிகாரம்? -ஆர்.என்.ரவியின் அறியாமை

தமிழ்நாட்டின் அரசு நிர்வாகத்தில் தனக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என நினைத்துக்கொண்டு ஆளுநர் ஆர்.என். ரவி செயல்படுகிறார். பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை விவகாரத்திலும் பஞ்சாப் அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இடையூறாக இருக்கிறார் என்ற வழக்கிலும், "ஆளுநரை விட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது' என உச்சநீதிமன்றம் தெளிவு படுத்திவிட்டது. இருப்பினும்கூட, தனக்குத்தான் வானளாவிய அதிகாரம் இருப்பது போன்று ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்துகொள்கிறார்.

மசோதாக்களை நிறுத்தி வைத்ததற்கு எதிராக "தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், சட்டப் பிரிவு 200-ஐ மீறும் வகையில் ஆளுநர் நடந்துகொள்கிறார்' என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. 12 மசோதாக்களில் 10 மசோதாக்களை கிடப்பில் போட்டுவிட்டு, 2 மசோதாக் களை மட்டுமே குடியரசு தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பியுள்ளார். "10 மசோதாக்கள் எதன் அடிப்படையில் நிறுத்தி வைக்கப்பட்டன. 2 மசோதாக் கள் எதன் அடிப்படையில் குடியரசு தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டன?' என்பதற்கான பதில் ஆளுநரிடம் இதுவரை இல்லை. "மசோதாக்கள் மீது பதிலளிப்பதற்கு, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் கால அவசாகம் நிர்ணையிக்கப்படவில்லை' என்ற வாதம் ஆளுநர் தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது.

Advertisment

சமீபத்தில், பீகார் தலைநகர் பாட்னாவில் சபா நாயகர்கள் மாநாடு நடைபெற்றது. அதில், சபாநாயகர் அப்பாவு இந்த விவகாரத்தை எழுப்பி, "மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க கால நிர்ணயத்தைக் கொண்டு வரவேண்டும்' என பேசினார். ஆனால், அந்த பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. பிரிட் டீஷ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட அதி காரத்தை, மக்கள் ஜனநாயக காலத்திலும் கடைபிடித்து, தன்னை சர்வாதிகாரி போலவும், மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசை காலனிய கால நீட்சியாகவும் பா.ஜ.க., -ஆர்.எஸ்.எஸ்., -ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இது தமிழர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியர்களுக்கு எதிரான செயல்பாடாக உள்ளது.

rr

ஆர்.என்.ரவி எனும் கருத்தியல் திரிபுவாதி

தமிழ்நாடு என்ற பெயரைப் புறக்கணித்து தமிழகம் என்று பேசியதும், திராவிடம் என்பது பிரிட்டிஷார் அறி முகப்படுத்திய கோட்பாடு என்று கூறியதும், திராவிட மாடலே காலாவதியான கொள்கை என ஆங்கில நாளேட்டில் எழுதியதும், திருவள்ளுவர் படத்திற்கு காவி சாயம் பூசியதும், திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக ரவி பேசியதும், அப்பட்டமான ஆர்.எஸ். எஸ். திரிபுவாத கொள்கை. 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடந்த பழங்குடி யினர் தின விழாவில் பேசிய ரவி, "விந்திய மலைக்கு தெற்கே இருப்பது பஞ்ச திராவிடப் பகுதி, வடக்கு பகுதி பஞ்ச ஆரிய பகுதி' என்று வரலாற்றைத் திரித் துக் கூறினார். பிரிட்டிஷார் தான் திராவிடம் என்ற கருத்தை உருவாக்கினார்கள் என்று ஆளுநர் பொய் மூட் டையை அவிழ்த்துவிட்டாலும், ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பாகவே மகாபாரதம், காஞ்சி புராணம் ஆகியவற்றில் திராவிடம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதை அறியாமல் பிதற்றி னார் ஆளுநர் ரவி. ஆதிசங்கரர் ஞானசம்பந்தரைக் குறிப்பிடும் போது கூட திராவிட சிசு என்று தான் கூறினார். ஆதி சங்கரர் என்ன ஆங்கிலேயர்கள் காலத்திலா இருந்தார். அல்லது ஞான சம்பந்தர் தான் ஆங்கிலேயர்கள் காலனிய காலத்திலா பிறந்தார்? வரலாற்று அறிவே இல்லாமல் ஆளுநர் ரவியின் மொன்னைத் தனமான கருத்துக்கள் தமிழ் நாட்டின் வரலாற்றை அறியாத சிறுபிள்ளைத் தனமானது.

தேசிய கீதம் -தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை

தமிழுக்கு எதிராக சமஸ்கிருதத்தை முன்னி றுத்துவதும், திராவிடத்திற்கு எதிராக ஆரியத்தை முன்னிறுத்துவதும், திராவிடர்களுக்கு எதிராக பார்ப்பனர்கள் திரண்டு நிற்பதும், தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எதிராக தேசியகீதத்தை முதன்மைப் படுத்துவதும், திருக்குறளுக்கு எதிராக மனுஸ்மிருதியையும் பகவத்கீதையை மையப் படுத்துவதும், ஆர்.எஸ்.எஸ். சனாதனவாதிகளின் சூழ்ச்சி. திருக்குறள் பெருமையை பேசும் சனாதன ரவி கும்பல், அதை மெல்ல மெல்ல நகர்த்தி, மனுஸ்மிருதி, பகவத்கீதைக்குள் அடைக்கும் வேலைகளும் தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக நடந்துகொண்டேயிருக்கிறது.

rr

முதல் திருக்குறளிலுள்ள ஆதி பகவன் என்ற வார்த்தை ரிக் வேதத்திலிருந்து பெறப்பட் டது. அது இந்திய ஆன்மிகத்தின் மையப்புள்ளி. திருவள்ளுவர் ஓர் ஆன்மிகவாதி!” என ஆர்.என். ரவியின் கருத்து இதனை புலப்படுத்தும். இதன் ஒரு அங்கமாகத்தான், திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவதும், தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எதிராக தேசியகீதத்தை நிறுத்துவதும், அப்படியே தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள திராவிடம் என்ற சொல்லை நீக்குவதும் என ஆர்.எஸ்.எஸ். சித்து வேலைகளைக் காட்டிக்கொண்டிருக்கிறார்.

2025ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி வெறும் 3 நிமிடங்கள் மட்டுமே சட்டமன்றத்திற்கு வந்த ஆளுநர் ரவி, தனது ஆளுநர் உரையைக்கூட படிக்காமல் வெளியேறினார். இதற்கு அவர் கூறிய காரணம், "தனது உரைக்கு முன்பாக தேசிய கீதம் பாடப்பட வேண்டும்' என கூறியதாகவும், ஆனால், "தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதாக'வும் கூறி அவசர, அவசரமாக வெளியேறினார். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில், அப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில் எங்கே நம்மை நோக்கி கேள்விகள் எழுமோ என்ற பயம் ரவிக்கு இருந்திருக்கும். அதை மறைக்கவே தமிழ்த்தாய் வாழ்த்து -தேசியகீத சர்ச்சையை முதன்மைப்படுத்தி நகர்ந்தார். தமிழ்த்தாய் வாழ்த்தை வைத்து ரவியின் நாடகம் புதிது அல்ல, 2024 பிப்ரவரி சட்டப்பேரவை நிகழ்வின் போதும்கூட இதே அரசியலைக் கையில் எடுத்தார். இதில் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், ஒரு மாநிலம் தனது மாநில கீதத்தை ஏற்றுக்கொள்வதை எந்த அரசிய லமைப்பும் தடை செய்யவில்லை. இதனை புரிந்துகொள்ளாத ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகள் உண்மையிலேயே வெட்கக் கேடானது.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை குறித்து எதிர்க்கட்சிகள் விமர் சனத்தை முன்வைத்தனர். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பங்கேற்று உரையாற்றிய் பிரதமர் மோடி, "குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, ஒன்றிய அரசின் உரையை வாசிக்கிறார். அதேபோல் மாநில சட்டமன்றங் களில் அந்தந்த மாநில அரசுகள் வழங்கும் உரையை ஆளுநர்கள் வாசிப்பதும் நாட்டின் மிகப்பெரிய பாரம்பரியம்'' ஆகும்”என்றும், குஜராத் சட்டமன்ற பொன்விழாவின்போது, அம்மாநில முதல்வராக 50 ஆண்டுகால ஆளுநர் உரையை தொகுத்து வெளியிட்டதை பெருமையாகவும் பேசினார் பிரதமர் மோடி. இதற்கு ஆளுநர் ரவி என்ன பதில் சொல்லப் போகிறார்?

பின்வாங்கி ஓடும் ஆர்.என். ரவியின் வரலாறு

ஒரு அரசியல்வாதியைப் போலவே செயல் படும் ஆர்.என்.ரவி, சர்ச்சைப் பேச்சை வெளிப் படுத்துவதும், உடனே அதில் இருந்து பின்வாங்கி ஓடுவதும் என்பது வழக்கமான ஒன்றாகவே இருக்கிறது. செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதும், பிறகு அந்த ட்விட்டை அழிப்பதும், பிறகு அதே செந்தில்பாலாஜிக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்து தனது அரசியல் உறுதியற்ற தன்மையை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்பது ஆர்.என். ரவிக்கு புதியது அல்ல. 2025 சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணித்துவிட்டு ஓடிய ஆர்.என். ரவி உடனே அதற்கான காரணத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு விட்டு, அதை நீக்கி மீண்டும் திருத்தங்களுடன் பதிவிட்டது, தான் ஒரு கோழை என்பதையும், அது முன்னரே திட்டமிடப்பட்ட நாடகம் என்பதையும் நிரூபித்தது.

ஆளுநர் ஆர்.என்.ரவி கூறும் எந்தக் கருத் திலும் உண்மைத்தன்மை இல்லை. தமிழ்நாட்டில், உரிமைக்காக நடக்கும் மக்கள் போராட்டங்களை யும் கொச்சைப்படுத்தி, அதில் வெளிநாட்டு பணம் விளையாடுகிறது எனக்கூறி அதற்கான ஆதாரங்களை இதுவரைக்கும் சமர்பிக்கவே இல்லை. "வெளிநாடுகளில் இருந்து தொண்டு நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் நிதி வருகிறது. அந்த நிதிகள் உரிய வகையில் பயன்படுத்தப்படாமல், நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் பயன்படுத்தப்படுகிறது' எனக் கூறினார். ஆனால், அதற்கான ஆதாரங்களை ஒரு முன்னாள் உளவுத்துறை அதிகாரி என்ற அடிப்படையில்கூட வெளியிடவில்லை. போகிறப்போக்கில் பொய்யைக் கூறிவிட்டு கடந்துபோகிறார்.

கோவையில் நடந்த சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து பேசிய ரவி, அதை "ஒரு மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல்' எனக் கூறினார். பயங்கரவாத தாக்குதல் என்று கூறிய ரவி, அதற் கான ஆதாரங்களை இதுவரைக் கும் கூட என்.ஐ.ஏ அதிகாரிகள் வசம் ஒப்படைக்கவும் இல்லை. "பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பானது, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் சண்டையிடு வதற்கான ஆட்களை அனுப்பி யுள்ளது'. என்று ஒரு பெரிய குண்டைத் தூக்கிப்போட்டார். அதற்கான ஆதாரங்களையும் இதுவரை மத்திய அரசிடமோ, என்.ஐ.ஏ. வசமோ கொடுக்காமல் அப்பட்டமான பொய் சொல் லும் நபராக ஆர்.என்.ரவி திரிந்துகொண்டிருக்கிறார். "பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் வெளி நாடுகளில் நடக்கும் போர்களுக்கு ஆட்களை அனுப்புகிறார்கள்' என்கிறார். மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையையும், இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. இதற்காகவே ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் விசாரணை நடத்த வேண்டும்.

மசோதாக்களை கிடப்பில் போட்டு குட்டு வாங்கிய ரவி

நீட் தேர்வுக்கு எதிராக அ.தி.மு.க. அரசு கொண்டுவந்த மசோதாவை ஆளுநர் புரோகித் கிடப்பில் போட்டார். அது குறித்து எந்தவிதமான கருத்துக்களையும் கூறாமலேயே இருந்தார். பிறகு தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. நீட் தேர்வுக்கு எதிராக ஒரு மசோதாவைக் கொண்டுவந்தது. அதனை திருப்பி அனுப்பி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைவிட தான்தான் உயர்ந்தவன் எனக் காட்டிக்கொண்டார் ஆளுநர் ரவி. இதனை சாதுர்யமாக கையாண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. கொண்டு வந்த மசோதாவில் ஒரு புள்ளியைக் கூட மாற்றாமல் அதனை மீண்டும் ஆளுநருக்கே அனுப்பி வைத்து நெருக்கடிக் கொடுத்தார்.

பிறகு என்ன நடந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முன்பாக தனக்கு அதிகாரம் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, அதனை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி வைக்கும் நிலைக்கு தள்ளப் பட்டார்.

அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தபோது, செந்தில்பாலாஜியின் அமைச்சர் பதவியை நீக்குவதாக அறிவித்தார். பிறகு நடந்தது என்ன. தனது அதி காரம் முதலமைச்சர் ஸ்டாலினின் அமைச்சரவைக்கு முன்பாக எதுவும் இல்லை என்பதை உணர்ந்துகொண்டு, அன்று இரவே சட்ட ஆலோசனை கேட்டிருப்பதால் தனது முடிவை ஒத்திவைத்திருப்பதாக அறிவித்தார்.

ஒட்டுமொத்தத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்டு முதலமைச்சர் ஸ்டாலினின் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அமைச்சரவையின் முன்பாக மண்டியிட்டு நிற்கிறார்.

மொத்தத்தில் அட்டைக் கத்தியை வைத்துக்கொண்டு, ஏவு கணையைக் கையில் வைத்திருக்கும் மக்கள் ஜனநாயகத்தின் முன்பாக வெற்று நாடகமாடிக்கொண்டிருக் கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

தமிழக ஆளுநர் தேவையில் லாத வேலைகளையெல்லாம் செய் கிறார். அவர் பேசட்டும். ஆளுநர் அப்படி பேச, பேசத்தான் நமக்கு ஆதரவு அதிகமாகிறது. மோடிக்கும் அமித்ஷாவுக்கும் வைக்கும் கோரிக்கை, ஆளுநரை மாற்றிவிடாதீர்கள்!”