சேலம், திருவண்ணா மலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது கல்வராயன் மலை. சுமார் 2000 ச.கி.மீ. பரப்பளவில் 105 கிராமங்களைக் கொண்டது. சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ளது. சுற்றுலா வாசிகளைக் கவர்ந்துள்ள இயற்கை எழில்கொஞ்சும் மலையை மேலும் அபிவிருத்தி செய்ய பெரிய அளவில் எந்த முயற்சியும் இதுவரை அரசு எடுக்கவில்லை. இச்சூழலில் இம்மலை கிராமங் களில், கள்ளச்சாராயம் காய்ச்சுவது, கஞ்சா பயிர் செய்வது, கள்ளத் துப்பாக்கி தயாரிப்பது, அதை விற்பனை செய்வதென போக்கே மாறியுள்ளது.
இம்மாவட்டத்தில் காவல்துறை அதிகாரி களாக வருபவர்கள் அவ்வப்போது ரெய்டு நடத்து வதும், சாராய ஊறல்களை, கஞ்சா தோட்டத்தை அழிப்பதும், காய்ச்சுபவர்களை கைது செய்து வழக்கு போடுவதும் வழக்கமானதுதான். பலமுறை கள்ளத் துப்பாக்கி தயாரித்தவர்களை கைது செய்ததோடு, நூற்றுக்கணக்கான நாட்டுத் துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள். எனினும் இன்றுவரை சமூக விரோதச்செயல்களைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறார்கள்.
"இந்த மலை கிராமங்களில் தொடக்கப் பள்ளிக்கே 3, 4 கி.மீ. செல்ல வேண்டும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு 7 முதல் 25 கிமீ. வரை செல்ல வேண்டியிருக்கிறது. இந்த மலைக் கிராமங் களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மூத்த வழக்கறிஞர் கே. ஆர். தமிழ்மணி 2015-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின்படி, மலை கிராமங்களுக்கு நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு வழக்கறி ஞர்கள் சுரேஷ், மோகன், அனிருத் கிருஷ்ணன் ஆகிய சட்ட ஆணையர்களை நியமித்தது. அவர்
சேலம், திருவண்ணா மலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது கல்வராயன் மலை. சுமார் 2000 ச.கி.மீ. பரப்பளவில் 105 கிராமங்களைக் கொண்டது. சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ளது. சுற்றுலா வாசிகளைக் கவர்ந்துள்ள இயற்கை எழில்கொஞ்சும் மலையை மேலும் அபிவிருத்தி செய்ய பெரிய அளவில் எந்த முயற்சியும் இதுவரை அரசு எடுக்கவில்லை. இச்சூழலில் இம்மலை கிராமங் களில், கள்ளச்சாராயம் காய்ச்சுவது, கஞ்சா பயிர் செய்வது, கள்ளத் துப்பாக்கி தயாரிப்பது, அதை விற்பனை செய்வதென போக்கே மாறியுள்ளது.
இம்மாவட்டத்தில் காவல்துறை அதிகாரி களாக வருபவர்கள் அவ்வப்போது ரெய்டு நடத்து வதும், சாராய ஊறல்களை, கஞ்சா தோட்டத்தை அழிப்பதும், காய்ச்சுபவர்களை கைது செய்து வழக்கு போடுவதும் வழக்கமானதுதான். பலமுறை கள்ளத் துப்பாக்கி தயாரித்தவர்களை கைது செய்ததோடு, நூற்றுக்கணக்கான நாட்டுத் துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள். எனினும் இன்றுவரை சமூக விரோதச்செயல்களைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறார்கள்.
"இந்த மலை கிராமங்களில் தொடக்கப் பள்ளிக்கே 3, 4 கி.மீ. செல்ல வேண்டும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு 7 முதல் 25 கிமீ. வரை செல்ல வேண்டியிருக்கிறது. இந்த மலைக் கிராமங் களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மூத்த வழக்கறிஞர் கே. ஆர். தமிழ்மணி 2015-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின்படி, மலை கிராமங்களுக்கு நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு வழக்கறி ஞர்கள் சுரேஷ், மோகன், அனிருத் கிருஷ்ணன் ஆகிய சட்ட ஆணையர்களை நியமித்தது. அவர் களின் கள ஆய்வில், கல்வராயன் மலைப்பகுதிகளில் போதிய அடிப்படை வசதிகள் இன்னும் நிறைவேற் றப்படவில்லை. இங்குள்ளவர்கள் வேலை வாய்ப் புக்காக சுற்றியுள்ள மாவட்டங்கள், மாநிலங்களுக்கு செல்கிறார்கள். உடல் வலுவானவர்களான இவர் களை செம்மரக் கடத்தலுக்கு கூலியாட்களாகப் பயன்படுத்தும்போது, ஆந்திர வனத்துறையிடம் சிக்கிக்கொள்கிறார்கள். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கொடுமையும் உண்டு. இதையெல்லாம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்கள்.
இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், அப்போதைய பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அர்ச்சனா கல்யாணி தாக்கல் செய்த அறிக்கை யில், "கல்வராயன் மலை மக்களுக்கான அடிப்படை வசதிகளுக்கு, 24 துறைகள் சார்பில் 24 அரசாணை கள் பிறப்பிக்க வேண்டியுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் நடைபெறும்' என்றார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "கல்வராயன் மலை மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது குறித்து தகுந்த அரசாணையை ஒரு மாதத்திற்குள் தமிழக அரசு பிறப்பிக்கும் என்று நம்புகிறோம்'' என்றனர். அதே நேரம், பழங்குடி யினர் நலத்துறை இயக்குனர் நேரில் ஆஜராகி, இந்த மலைக் கிராம மக்களுக்கு அரசு வேலை வழங்க இயலாதென்றும், பல்வேறு பயிற்சிகளை வழங்கி அவர்களது திறனை வளர்த்து, அதற்கேற்ப வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறினார். இதெல்லாம் 2015ஆம் ஆண்டில் நடைபெற்றவை.
இந்த வழக்கு நடைபெற்று ஏழு ஆண்டுகளான பின்னும் அரசு அளித்த உறுதிமொழி நிறைவேற்றப் படவில்லை. வேலை வாய்ப்பு உருவாக்கப்படாததால், இப்பகுதி மலைமக்கள், கள்ளச்சாராயம், கள்ளத் துப்பாக்கி, கஞ்சா வளர்ப்பு என குற்றச்செயல்களில் இறங்கிவிட்டார்கள். இதைத் தடுக்க இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த என்ன செய் யப் போகிறார்கள்?'' எனக் கேள்வி யெழுப்புகிறார்ர் சமூக ஆர்வலர் கள்ளக் குறிச்சி ஏழுமலை "முன்பு ஒருங் கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் கல்வ ராயன் மலை இருந்த போது மலை கிரா மங்களில் பணி செய்யச் செல்லும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வாரம் ஒரு முறை சுற்றுலா செல்வதுபோல் கடமைக்காக சென்று வருவார்கள். கல்வராயன் மலைப்பகுதிக்கு பணி மாறுதல் என்பதே தண்ட னையாகப் பார்க்கப்பட்டது. தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டமாகப் பிரிக்கப் பட்டதும், மலைக் கிராமங் கள், கள்ளக்குறிச்சியிலிருந்து 50 கி.மீ. தொலைவில் இருக் கிறது. இப்பவும் போக்குவரத்து வசதி சரியாக இல்லாததால் பெரிய மாற்றம் ஏதுமில்லை. அப்படியானால் மலை மக்களை அதிகாரிகள் பழிவாங்குகிறார்களோ என்ற கேள்வி எழுகிறது. மலைக் கிராம மக்களுக்கான திட்டங்களை பினாமிகள் பெயரில் அபகரித்துக் கொள்கிறார்கள்.
இதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கே பதிவு செய்துள்ளது. இப்படித்தான் அரசு அறிவிக்கும் சலுகைகள் இடைத்தரகர்களால் சுருட்டப்படுகிறது. இதனால் மலைக்கிராம மக்களின் நிலை மேம்படாமல், நோயாளிகளை மருத்துவ சிகிச்சைக்காக கட்டிலில் வைத்து தூக்கிச் செல்லும் நிலை உள்ளது. கல்வராயன் மலைக் கிராமங்களில் அடிப்படைத் தேவை கள் முற்றிலும் நிறைவேற்றப்பட வேண்டுமானால், அதற்கெனத் தனி அதிகாரி தலைமையில் குழு நியமித்து, சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்'' என்கிறார் சமூக ஆர்வலர் வழக்கறிஞர் சுரேஷ்.
இதையெல்லாம் மெய்ப்பிக்கும் வகையில் கல்வராயன் மலையில் கள்ளச்சாராய ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. குபேந்திரன், வெங்கடேசன், ரியாஸ் அகமது, பாலகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்ட மதுவிலக்கு போலீசார் வடலூர் பகுதியில் சாராய வேட்டை யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலி மது பாட்டில் விற்றவரிடம் விசாரணை நடத்தியதில், கல்வராயன் மலையில் போலி மதுபானங்கள் தயாரித்து விற்பனை செய்வதாகவும், அங்கிருந்து வாங்கி வந்து விற்பனை செய்ததாகவும் தெரிவித் தார். இதையடுத்து மதுவிலக்கு போலீசார் கள்ளக் குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளர் மோகன் ராஜுக்கு தகவல் கொடுக்க, தனிப்படை போலீ சாரை மலைப்பகுதிக்கு அனுப்பி வைத்தார். மலைப் பகுதியில் உள்ள நடுத்தொரக்கடிப்பட்டு கிராமத்தில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான குடோ னில் போலி மதுபானம் தயாரித்து கொண்டிருந்த வர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டம் தென்குத்து கிராமத்தைச் சேர்ந்த குபேந்திரன், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், திருச்செந்தூர் அருகே துறையூர் கிராமத்தைச் சேர்ந்த ரியாஸ் அஹமது ஆகியோர், சிறையில் ஏற்பட்ட நட்பால், போலி மதுபான ஆலையை கல்வராயன் மலையில் தொடங்கியதாகத் தெரியவந்தது. ஒரிஜினல் சரக்கு போல சீல் பாட்டில் மூடி, போலி மதுவில் கலக்கப்படும் எசன்ஸ் ஆகியவற் றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இங்கு தயாரிக்கப்பட்ட போலி மது பாட்டில்களை கள்ளக் குறிச்சி, கடலூர், சேலம் மாவட்டங் களுக்கு கடத்தி விற்பனை செய்ததாகத் தெரிவித்தனர். இதையடுத்து நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.
அப்பாவி மலை கிராம ,மக்கள் தங்களது உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைத்தால் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டார் கள். ஒவ்வொரு தேர்தலிலும் இங்கு போட்டியிடும் வேட்பாளர்கள், தாங்கள் வெற்றி பெற்றதும் மலை மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை யும் உடனுக்குடன் நிறைவேற்றுவோம், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம், கடுக்காய் தொழிற்சாலை யை கொண்டு வருவோம் என்றெல்லாம் வாக்குறுதி அளிக்கிறார்கள். வெற்றி பெற்றதும் ஏமாற்றுகிறார்கள். எனவே மலை மக்களின் வாழ்க்கை முறையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. குற்ற நட வடிக்கைகளும் அதிகரிக்கின்றன.
காவல்துறை மட்டுமே கல்வராயன் மலை மக்களின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துமா? என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன் ராஜிடம் கேட்டபோது, "அந்த மக்களின் வாழ்க் கைத்தரம் உயர்ந்தால் குற்றச் செயல்களுக்கு போக மாட்டார்கள். நிச்சயம் மாற்றம் ஏற்படும். இதற்காக சிறப்புத் திட்டங்களை மாவட்ட ஆட்சியர் தலைமையில் வனத்துறை, வருவாய்த்துறை உட்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் செயல்படுத்த உள்ளனர். ஏற்கெனவே தேனி மாவட்ட மலைப் பகுதி மக்களுக்கு கறவை மாடுகள் வழங்கி பால்ப் பண்ணை அமைத்துக் கொடுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேபோன்று கல்வராயன் மலையிலும் பல்வேறு சிறப்புத் திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்'' என்றார். மலை மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசும், அதிகாரிகளும் விரைந்து நிறைவேற்றினால் தான் கல்வராயன் மலைக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயர் நீங்கும்!