மெழுகுவர்த்தி வெளிச்சம்! நிர்வாண ஆராதனைகள்! ஆபாச வீடியோக்கள்! பாதிரியார் நடத்திய மன்மத சாம்ராஜ்யம்!

dd

வெள்ளை அங்கியுடன் பாதிரியார் என்ற பெயரில் உலவிவந்த ஒரு மன்மத ஓநாயால், குமரி மாவட்டமே பதட்டப் பரபரப்பில் இருக்கிறது.

குமரி மாவட்டக் கொல்லங்கோடு பாத்திமா நகரைச் சேர்ந்த பெனிட்டிக் ஆன்டோ என்பவர், கடந்த ஆண்டு அழகியமண்டபம் பிலாங்கலை புனித விண்ணேற்பு அன்னை திருத்தலத்தில் பாதிரியாராக வந்து சேர்ந்தார். ஆங்கிலம், மலையாளம், தமிழ் என சரளமாக பேசக்கூடிய இந்தப் பாதிரியார், சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் அன்பொழுகப் பேசி, அவர்களைத் தன் வலையில் விழவைத்து... தன் வேலையைக் காட்ட ஆரம்பித்திருக்கிறார்.

dd

சிறுமிகளையும் மாணவிகளையும் திருமணமான பெண்களையும் கூட விட்டுவைக் காத இவர், 80-க்கும் மேற்பட்ட பெண்களை வேட்டையாடியிருப்பதாக சர்ச் தரப்பே சொல்கிறது. தான் வசப்படுத்திய பெண்களை பலவாறாக நிர்வாணமாக்கிப் படம் பிடித்து ரசித்திருக்கிறார் பாதிரியார். அதேபோல் அவர்களை உடையில்லாமல் வீடியோகாலில் வரவழைத்தும், அந்தக் கன்றாவிகளைப் பதிவு செய்திருக்கிறார் அந்த கிளுகிளு பாதிரியார். இவற்றை காட்டி மிரட்டி, மிரட்டியே விருப்பப்படும்போதெல்லாம் அவர்களைத் தன் அந்தரங்க ஆசைகளுக்கு இரையாக்கியிருக்கிறார். பெண்கள் பலருடனும் அவர் நடத்திய ஆபாச லீலைகள், இப்போது சமூக வலைதளங்களிலும் வெளியாகி பகீரை ஏற்படுத்தி வருகின்றன.

"அந்தப் பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் மீது, பாதிரியார் கொடுத்த பொய்ப் புகார்தான்... இந்தப் பாதிரியாரின் முகமூடியை இப்போது கிழித்திருக்கிறது' என்பது இதில் உள்ள ’"திடுக்'’ திருப்புமுனை. இந்தப் பாதிரியார், தன்னை ஆலந்தட்டுவிளையைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் ஆஸ்டின்ஜியோ தாக்கியதாக போலீஸில் புகார் கொடுக்க... போலீசும் அவரை கைதுசெய்து சிறைக்கு அனுப்பிவைத்தது.

இதைத்தொடர்ந்து "எங்கள் ஆஸ்டின் நல்லவன். அவன், தன் தோழிக்கு நேர்ந்த கொடுமையைத் தட்டிக் கேட்டதால்தான் அவனை அந்த கேடுகெட்ட பாதிரியார், சிறைக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அந்தப் பாதிரியார், நீலப்படம் எடுத்து பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடிவரும் "மன்மத ஓநாய்'’என்று, அந்த மாணவனின் அம்மா மினிஅஜிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து புகார் கொடுத்தார். அதன் பிறகே பாதிரியாரின் லீலைகள் வெளியே வந்து பரபரப்பை ஏற்

வெள்ளை அங்கியுடன் பாதிரியார் என்ற பெயரில் உலவிவந்த ஒரு மன்மத ஓநாயால், குமரி மாவட்டமே பதட்டப் பரபரப்பில் இருக்கிறது.

குமரி மாவட்டக் கொல்லங்கோடு பாத்திமா நகரைச் சேர்ந்த பெனிட்டிக் ஆன்டோ என்பவர், கடந்த ஆண்டு அழகியமண்டபம் பிலாங்கலை புனித விண்ணேற்பு அன்னை திருத்தலத்தில் பாதிரியாராக வந்து சேர்ந்தார். ஆங்கிலம், மலையாளம், தமிழ் என சரளமாக பேசக்கூடிய இந்தப் பாதிரியார், சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் அன்பொழுகப் பேசி, அவர்களைத் தன் வலையில் விழவைத்து... தன் வேலையைக் காட்ட ஆரம்பித்திருக்கிறார்.

dd

சிறுமிகளையும் மாணவிகளையும் திருமணமான பெண்களையும் கூட விட்டுவைக் காத இவர், 80-க்கும் மேற்பட்ட பெண்களை வேட்டையாடியிருப்பதாக சர்ச் தரப்பே சொல்கிறது. தான் வசப்படுத்திய பெண்களை பலவாறாக நிர்வாணமாக்கிப் படம் பிடித்து ரசித்திருக்கிறார் பாதிரியார். அதேபோல் அவர்களை உடையில்லாமல் வீடியோகாலில் வரவழைத்தும், அந்தக் கன்றாவிகளைப் பதிவு செய்திருக்கிறார் அந்த கிளுகிளு பாதிரியார். இவற்றை காட்டி மிரட்டி, மிரட்டியே விருப்பப்படும்போதெல்லாம் அவர்களைத் தன் அந்தரங்க ஆசைகளுக்கு இரையாக்கியிருக்கிறார். பெண்கள் பலருடனும் அவர் நடத்திய ஆபாச லீலைகள், இப்போது சமூக வலைதளங்களிலும் வெளியாகி பகீரை ஏற்படுத்தி வருகின்றன.

"அந்தப் பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் மீது, பாதிரியார் கொடுத்த பொய்ப் புகார்தான்... இந்தப் பாதிரியாரின் முகமூடியை இப்போது கிழித்திருக்கிறது' என்பது இதில் உள்ள ’"திடுக்'’ திருப்புமுனை. இந்தப் பாதிரியார், தன்னை ஆலந்தட்டுவிளையைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் ஆஸ்டின்ஜியோ தாக்கியதாக போலீஸில் புகார் கொடுக்க... போலீசும் அவரை கைதுசெய்து சிறைக்கு அனுப்பிவைத்தது.

இதைத்தொடர்ந்து "எங்கள் ஆஸ்டின் நல்லவன். அவன், தன் தோழிக்கு நேர்ந்த கொடுமையைத் தட்டிக் கேட்டதால்தான் அவனை அந்த கேடுகெட்ட பாதிரியார், சிறைக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அந்தப் பாதிரியார், நீலப்படம் எடுத்து பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடிவரும் "மன்மத ஓநாய்'’என்று, அந்த மாணவனின் அம்மா மினிஅஜிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து புகார் கொடுத்தார். அதன் பிறகே பாதிரியாரின் லீலைகள் வெளியே வந்து பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

dd

இது தொடர்பாக மாணவர் ஆஸ்டினின் அம்மா மினிஅஜிதாவிடம் நாம் கேட்டபோது...

"என் மகன் ஆஸ்டின், ஒரு தனியார் சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறான். அதே கல்லூரியில் பிலாங்கலையைச் சேர்ந்த அனுஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி படித்துவருகிறார். எனது மகனும் அனுஷாவும் நெருங்கிய நண்பர்கள். இதன் மூலம் எங்கள் குடும்பத்துக்கு அனுஷா மிகவும் அறிமுகமானவளாக ஆனார். மேலும் அனுஷா பிலாங்கலையில் உள்ள சர்ச்சுக்கு அடிக்கடி போவாள். இந்த நிலையில், அனுஷா எங்களிடம் பதட்டத்தோடு வந்து, "சர்ச் பாதிரியார் பெனிட்டிக் ஆன்டோ எனக்கும் என் சகோதரிக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார். எங்களை மிரட்டி ஆபாசமாகவும் படம் எடுத்து வைத்திருக்கிறார். அவர் கூப்பிடும்போதெல்லாம் அவருடைய இல்லத்துக்கு நாங்கள் போகவேண்டும். இல்லையென்றால் அவர் எடுத்துவைத்திருக்கும் எங்கள் ஆபாசப் படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று எங்களை மிரட்டி வருகிறார். இதனால் எங்கள் நிம்மதியே போய் விட்டது. நாங்கள் தற்கொலை செய்துகொள்ளப் போறோம்' என்றார்.

இதனால் அதிர்ந்துபோன நாங்கள், "இது வெளியே தெரிந்தால், அந்த இரண்டு பிள்ளைகளின் நிலைமை மோசமாகிவிடும்' என நினைத்துக் கலங்கினோம். உடனே, நானும் எனது மகனும் அனுஷா மற்றும் அவளுடைய சகோதரியும் நேராக பாதிரியாரிடம் சென்று, "கடவுள் போல் உங்களை நம்பிய இந்த பிள்ளைகளிடம் இப்படி நீங்கள் நடந்து கொள்ளலாமா?' என்று கேட்டு, "அந்த வீடியோ மற்றும் போட்டோக்களை உடனே அழித்து விடுங்கள்' என்றோம். எங்களுக்கு விசயம் தெரிந்துவிட்டதால் பயந்து போன பாதிரியார், "தெரியாமல் நடந்துவிட்டது. இனிமேல் இப்படி நடந்துகொள்ள மாட்டேன். வெளியில் சொல்லிவிடாதீர்கள்' என காலில் விழாத குறையாக கெஞ்சினார். அதோடு, "செல்போனில் உள்ள வீடியோக்களை அழித்துவிடு' என்று அனுஷாவிடமே தன் செல்போனையும் கொடுத்தார். அந்த செல்போனைப் பார்த்த போது நூற்றுக்கணக்கான பெண்களின் ஆபாச வீடியோக்களும் புகைப்படங்களும் இருந்தன. மேலும் அந்த பகுதியைச் சேர்ந்த 15 வயதுக்கு உட்பட்ட 5 சிறுமிகளின் ஆபாச புகைப்படங்களும் இருந்தன. பல பெண்களிடம் பாதிரியார் கள்ளஉறவு வைத்துக்கொள்ளும் வீடியோக்களும் அதில் இருந்தன. மேலும் எனக்குத் தெரிந்த ஒரு முக்கிய பிரமுகரின் மகளான மருத்துவக் கல்லூரி மாணவி ஒருத்தியின் ஆபாச படங்களும் அதில் இருந்தது.

dd

இதைப் பார்த்ததும் எங்களுக்கு ஆத்திரம் வந்தது. இதையடுத்து பாதிரியாரின் லேப் டாப்பையும் பார்த்தபோது, அதிலும் இப்படிப் பட்ட வீடியோக்களும் புகைப்படங்களும் இருந்தன. இதையெல்லாம் அழித்துவிடுவதாக பாதிரியார் சொன்னார். இதை நம்பினோம். ஆனால் பாதிரியாரோ, தன்னை "என் மகன் தாக்கியதாக' கொல்லங்கோடு போலீசில் பொய்ப் புகார் கொடுத்தார். உடனே போலீசாரும் அவர் பேச்சைக் கேட்டுக்கொண்டு, என் மகனை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டார்கள். ஏராளமான பெண்களைச் சீரழித்த பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்காமல், அதைத் தட்டிக்கேட்ட என் மகன் மீது அவர்கள் நடவடிக்கை எடுத்தார்கள், இப்படி ஒரு கொடுமை எங்கேனும் நடக்குமா? அதனால்தான் எஸ்.பி.யிடமே போய் புகார் கொடுத்தேன்''’என்றார் கலக்கத்தோடு.

இந்த நிலையில் பாதிரியார் பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோக்களும் புகைப் படங்களும் சமூக வலைத்தளங்களில் அடுத்தடுத்து வெளியாக, அந்தப் பாதிரியார் தலைமறைவாகி விட்டார். அவரைப் பற்றி நாம் மேலும் விசாரித்தபோது, நாகர்கோவில் காசியை விட பெரிய காசியாக... அந்தப் பாதிரியார், ஒரு மன்மத சாம்ராஜ்யத்தையே நடத்திவந்தது தெரியவந்தது.

நம்மிடம் பேசிய சர்ச் தரப்பைச் சேர்ந்த சிலர், "2021-ல் பேச்சிப்பாறை ஜீரோ பாயின்டில் உள்ள புனித அல்போன்சாள் சர்ச்சில் இந்த பெனிட்டிக், 7 மாத காலம் பயிற்சி பாதிரியாராக இருந்தபோது, சர்ச்சுக்கு சென்ற 18 வயதான நர்சிங் மாணவியிடம் நைசாக பேசியுள்ளார். அதன்பிறகு தனியாக ஆசி வழங்குவதாகக் கூறி மதிய நேரத்தில் சர்ச்க்கு வரவழைத்துள்ளார். அப்போது அந்த மாணவியுடன் நெருக்கமாக நின்று செல்பி எடுத்துள்ளார். பின்னர் தொடர்ந்து அந்த மாணவிக்கு வீடியோகால் செய்து, அவளை தன்வசப்படுத்தி, நிர்வாணக் கோலத்தில் பேச வைத்து அதை பதிவு செய்திருக்கிறார். அந்தப்பதிவைக் காட்டி மிரட்டி, விரும்பும் போதெல்லாம் அந்த நர்ஸிங் மாணவியை விருப்பம்போல் வேட்டையாடியிருக்கிறார். அவரின் மன்மதப் பிடியில் சிக்கித் தவித்துவந்த அந்த நர்ஸிங் மாணவி, பாதிரியார் புகாரில் சிக்கியது தெரிந்ததும் தைரியமாகி, அவரும் இப்போது போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்.

அதேபோல் அந்த சர்ச்க்கு வந்த 15 வயது சிறுமியிடம், "நான் சொல்வதுபோல் செய்தால் உனக்கு இயேசுவைக் காட்டுகிறேன்' என்று நம்ப வைத்து, அந்த சிறுமியை நிர்வாணமாக படுக்க வைத்து, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அவளை அங்கம் அங்கமாக ரசித்து , ஆராதனை செய்து வீடியோ எடுத்திருக் கிறார். இதேபோல் பலமுறை அந்த மெழுகுவர்த்தி லீலையை அவர் நடத்தி, சிறுமியை வேட்டை யாடியிருக்கிறார்.

இந்த விசயம் சிறுமியின் பெற்றோருக்கு அரசல் புரசலாகத் தெரியவர, அவர்கள் பாதிரியா ரிடம் வந்து பிரச்சினை செய்திருக்கிறார்கள். உடனே, அவர்களிடம் மன்னிப்புக் கேட்ட பாதிரியார், "இதைப் பெரிதுபடுத்தினால் உங்கள் மகளின் வாழ்க்கைதான் பாதிக்கும். நான் இங்கிருந்து மாறி வேறு சர்ச்சுக்கு போய்விடு கிறேன். இதைப் பெரிதுபடுத்தி அசிங்கப்படுத் தாதீர்கள்' என்று அவர்கள் வாயை அடைத்துவிட் டான். பலரும் இந்த விவகாரத்தை வெளியே சொல்ல அஞ்சியதைத் தனக்குக் கிடைத்த வாய்ப்பாகக் கருதிய பாதிரியார், இந்த சர்ச்சுக்கு வந்த பிறகு, தன் ஆபாச வேட்டையை அதிகரித்திருக்கிறார்''’என்றார்கள் வேதனையோடு.

அவர்களே, "இதேபோல் முளகுமூடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரிடம், "கேரளாவில் உள்ள மலங்கரை கத்தோலிக்க சபையில் உனக்கு நல்லவேலை வாங்கித் தருகிறேன்' என்று ஆசை காட்டி யிருக்கிறார். இந்த சாக்கில் அவளை அடிக்கடி வரவழைத்து, தன் வலையில் விழ வைத்துவிட்டார். அந்தப் பெண் ஒருகட்டத்தில் பிரச்சினை செய்ய... அவளுக்கு இந்தப் பாதிரியாரே வேறொரு மாப்பிள்ளையைப் பார்த்து திருமணமும் செய்து வைத்துவிட்டார்.

அதேபோல், ஒரே வீட்டில் இருந்து சர்ச் சுக்கு வந்துகொண்டிருந்த தாய், மகள், மருமகள் என மூன்றுபேரையும்... ஒருவருக்குத் தெரியாமல் ஒருவரிடம் என்று, தன் வித்தையைக் காட்டி இருக் கிறார். வாட்ஸப் சாட்டிங், வீடியோகால் என அவர் கள் மூவரிடமும் லீலை புரிந்திருக்கிறார். ஒரு கட் டத்தில் அந்த தாய்க்கு சந்தேகம் வர, அவருக்கு எல்லாம் தெரிய வந்திருக்கிறது. உடனே அவர் பாதிரியாரின் காலில் விழுந்து,‘"எங்க ஒட்டுமொத்த குடும்பத்தையும் நாசம் பண்ணிட்டியே'’ என்று கதறியிருக்கிறார். இந்த விவகாரம் சர்ச்சின் ஏனைய நிர்வாகிகளுக்கும் தெரியவந்தது. எனினும், அவரது செல்வாக்கால் எல்லோரும் வாயை மூடிக்கொண் டார்கள். அந்தக் குடும்பமும், வெளியே தெரிந்தால் அவமானம் என்று அமைதியாகிவிட்டது.

"இந்த பெனிடிக் பாதிரியார், ஒரு பெண்ணை அடைய நினைத்தால் முதலில் செல்போன் மூலம் தூண்டில் போடுவார். அதில் சிக்கவில்லையென் றால், அந்தப் பெண்ணின் வீட்டிற்கே சென்றுவிடு வார். வீட்டில் இருக்கும் பெற்றோர் களும் பாதிரியாரைப் பார்த்ததும், கடவுளே வீட்டிற்கு வந்திருப்பதாக நினைத்து தடபுடலாக உப சரிப்பார்கள். பின்னர், அந்தக் குடும்பத்தில் பாதிரியார் ஒரு ஆளாக மாறிவிடுவார். பிறகென்ன? பாதிரியார், தான் நினைத்ததை ரகசியமாக சாதித்துவிடுவார்' என்று மேலும் மேலும் அதிர்ச்சி கொடுத்தார்கள்.

தனது கேமராக் குற்றங்கள் உட்பட அத்தனை யும் வெளிச்சத்திற்கு வந்து விட்டதால், அந்தப் பாதிரியார் கேரளாவிற்குத் தப்பி ஓடிவிட்டதாகச் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம், அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள், தங்கள் ஆபாசப் படங்கள் வெளியே வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.

தற்போது தலை மறைவாகியிருக்கும் வில்லங்கப் பாதிரியார் மீது பேச்சிப்பாறை நர்சிங் கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் பேரில், சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். அவரைக் கைது செய்ய சைபர் க்ரைம் ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையில் தனிப்படை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. எனினும் மன்மத பாதிரியாரைக் காப்பாற்றும் முயற்சியில் சிலர் இறங்கியிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

இதற்கிடையில் சர்ச்சில் வேலை பார்க்கும் இரண்டு பெண்கள், பாதிரியாருக்கு உடந்தையாக இருந்து வந்ததோடு, இளம் பெண்களை மற்ற பாதிரியார்களுக்கும் சப்ளை செய்ததாகவும் சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. எனவே அந்த சர்ச்சே குற்றச்சாட்டு வளையத்திற்குள் சிக்கியிருக்கிறது.

"அனைத்து மத வழிபாட்டுக் கூடங்களையும் காவல்துறை கண்காணிக்க வேண்டும்'’ என்று கூறும் ஏரியாவாசிகள், "இந்த விவ காரத்தைத் தோண்டத் தோண்ட, இன்னும் பல பகீர்த் தகவல்கள் கிடைக்கலாம்: எல்லா வற்றையும் மூடி மறைக்க சிலர் களத்தில் இறங்கி விட்டார்கள். காவல்துறை நேர்மையாக நடவடிக்கை எடுக்கவேண்டும்''’என்கிறார்கள் கவலையோடு.

காவல்துறையின் விசாரணை, எப்படிப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

nkn220323
இதையும் படியுங்கள்
Subscribe