சுங்குடிச் சேலைக்கு உலக அளவில் பேர்போன ஊராக இருந்து வருகிறது சின்னாளப்பட்டி. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தொகுதியில் இருக்கும் சின்னாளப்பட்டியில் பெரும்பான்மை யாக நெசவாளர்கள் வசித்து வரு கிறார்கள். இந்த நெசவாளர்களுக் காகவே அறிஞர் அண்ணா நெச வாளர் கூட்டுறவு சங்கம், காந்திஜி நெசவாளர் கூட்டுறவு சங்கம், அமரர் சஞ்சய்காந்தி நெசவாளர் கூட்டுறவு சங்கம், அஞ்சுகம் நெசவாளர் கூட்டுறவு சங்கம் உட்பட பல கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல கூட்டுறவு சங்கங்கள் தனியார்களிடமிருந்து பட்டு நூல்களை வாங்கி சேலைகளை நெசவு செய்யும் நெசவாளர்களிடம் கொடுத்து பட்டுச் சேலைகளை உற்பத்தி செய்கிறார்கள். இப்படி உற்பத்தி செய்யக்கூடிய நெசவாளர் களுக்கு கூலியைக் குறைத்துக் கொடுத்து நெசவாளர்களின் வயிற்றில் அடிப்பதாகக் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

hh

இதுகுறித்து நெசவாளர் கௌரியிடம் கேட்டபோது, "கூட்டுறவு சங்கங்கள் மூலம் கோரா பட்டு சில்க் நூல்களை வாங்கி வந்து சேலை நெசவு செய்யவே இரண்டு நாட்கள் ஆகிறது. அப்படி நெசவு செய்த சேலையை சங்கங்களில் கொடுத்து கூலி கேட்டால் ஒரு சேலைக்கு ஆயிரம் ரூபாய் கூலி கொடுக்கவேண்டிய இடத்தில், பாதிக் கூலியாக ஐநூறு ரூபாய் தான் கொடுக்கிறார்களே தவிர, முழுமையான கூலியை கூட்டுறவு சங்கங்கள் கொடுப்பது இல்லை. கேட்டால், ஸ்டாக் அதிகமாக உள்ளது, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்தால்தான் உங்களுக்கு முழுமையான கூலி கொடுக்கப்படும், அதோடு விற்பனையும் மந்தமாக இருக்கிறது என்கிறார்கள். இருந்தாலும் குடும்பச் சூழ்நிலையை வைத்து உடனே கொடுங்கள் என்று கேட்டால், அப்படி எல்லாம் கொடுக்க முடியாது என்று கூறி தொடர்ந்து பட்டு நூல் பாவுகளைக் கொடுக்க மறுக்கிறார்கள். எங்களுக்கும் இந்த வேலையைத் தவிர வேறு வேலை தெரியாததால் அவர்கள் கொடுக்கக்கூடிய கூலியை வைத்துதான் குடும்பத்தை நடத்தி வருகிறோம். எங்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்க மாட்டேங்குது'' என்று கூறினார்.

Advertisment

hh

"நெசவாளர்களின் கஷ்டநஷ்டங்களைத் தெரிந்துதான் கலைஞர் முதல்வராக இருந்தபோது எங்களுக்கு இலவச மின்சாரம் கொடுத்தார். அதைத் தொடர்ந்து எங்க அமைச்சர் ஐ.பி. அய்யாவும் எங்களுக்காக ஐந்து கோடி செலவில் நவீன சுத்திகரிப்பு நிலையத்தோடு சாயப்பட்டறை கொண்டுவர இருக்கிறார். எங்கள் குறைகளைக் கேட்டறிந்து தேவையான பண உதவியும் செய்துவருகிறார். இந் நிலையில், கடந்த வாரம் சின்னாளப் பட்டிக்கு வளர்ச்சிப் பணிகளை ஆய்வுசெய்ய வந்த அமைச்சரிடம், 'நெசவாளர்கள் நெய்து கொடுக்கும் சேலைகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் முழுமையான கூலி கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள். நெசவு செய்து கொடுக்கும் சேலைகளையும் விற்பனை செய்ய ஆர்வம் காட்டுவதில்லை. அது போல் எங்களுக்கு கொடுக்க வேண்டிய சலுகைகளையும் சரிவரக் கொடுப்ப தில்லை. நீங்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக்கூறி மனு கொடுத்தோம். அதை பொறுமையாக படித்துப் பார்த்தவுடனே நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்'' என்றனர், அமைச்சரிடம் மனு கொடுத்த நெசவாளர்களில் சிலர்.

இது சம்பந்தமாக ஊரக வளர்ச் சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி யிடம் கேட்டபோது, "சின்னாளப்பட்டி யைப் பொறுத்தவரை நெசவுத் தொழிலை வைத்துதான் நெசவாளர்கள் குடும்பம் நடத்தி வருகிறார்கள். அப்படி இருக்கும்போது அவர்களுக்கு கொடுக்கக்கூடிய கூலியைக் குறைத்துக் கொடுப்பதாகக் கூறியிருக்கிறார்கள் இன்னும் சில மாதத்தில் தீபாவளியும் வர இருக்கிறது. அதனால் சங்கங்களில் தேங்கியுள்ள சேலைகளை கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இது சம்பந்தமாக முதல்வரிடமும், கைத்தறித் துறை அமைச்சரிடமும் பேசி கூடிய விரைவில் தீர்வு காணப்படும். அதன் மூலம் நெசவாளர்களின் நிலுவைத் தொகையும் முழுமையாகக் கிடைக்கும்'' என்றார் உறுதியாக!. நெசவாளர் களுக்கான கூலியை முழுமையாகக் கொடுப்பதே அவர்களுக்கான தீபாவளிப் பரிசாக அமையும்.

Advertisment

________________

நக்கீரன் செய்தி எதிரொலி பொலிவு பெற்ற ராமசந்திரனார் பூங்கா..!!!

hh

"சுயமரியாதை குடும்பத்தில் பிறந்து பகுத்தறிவுக் கொள்கைகளை பார் புகழ வளர்த்த குடும்பங்களை விரல் விட்டு எண்ணிவிட முடியும். அந்த வகையில், இயக்கப் பணியே தனது தலையாய பணி என அமைச்சரவையிலும் இடம் பெற மறுத்தவர் அவர்'' என முத்தமிழ் அறிஞர் கலைஞரால் போற்றி புகழப்பட்டவர் சிவகங்கை ராமச்சந்திரனார். "அவரின் திருவுருவச் சிலையை தாங்கியிருக்கும் பூங்காவை மராமத்து செய்திடவும், அவரது பெயரில் துவங்கப்பட்ட அரசு மருத்துவமனைக்கு (தற்பொழுது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை) மீண்டும் அவரது பெயரைச் சூட்டி பெருமைப்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர் சிவகங்கைவாசிகள்' என பிப்.17 நக்கீரனில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

ஒவ்வொரு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வளர்ச்சிப் பணிகளை துரிதமாக மேற்கொண்டு, பொது மக்களின் கோரிக்கையின் அடிப்படையிலும், அவர்களின் தேவை அடிப்படையிலும் பல்வேறு திட்டப்பணிகளை சிறப்பாக செய்து வருகின்றது தமிழ்நாடு அரசு. இதில் பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் எழுந்த நக்கீரன் செய்தியின் எதிரொலியாக, சிவகங்கை நகராட்சி வார்டு எண் 4ல் உள்ள ராமச்சந்திரனாரின் பூங்காவின் மராமத்துப் பணிகளுக்காக ரூ.9.50 இலட்சத்தை ஒதுக்கியிருந்தது. இதனைக் கொண்டு பூங்காவில் கட்டிட மறு சீரமைப்பு, வண்ணம் பூசுதல், சிறுவர் பொழுதுபோக்கு சாதனங்கள், மின் விளக்குகள் உள்ளிட்ட பணிகளோடு, ராமச்சந்திரனாரின் சிலைக்கு பொன் வண்ணமும் பூசி பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றியது அரசு. இந்நிலையில் கடந்த 22-07-2023 அன்று ராமச்சந்திரனார் பூங்காவினைத் துவக்கி வைத்து, பொதுமக்களின் மனம் குளிரவைத்தது கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையிலான டீம்.

-நாகேந்திரன்