"ஹலோ தலைவரே, மறுபடியும் உதயநிதி துணை முதல்வராகிறார்ங்கிற செய்தி 18ஆம் தேதி குபீர்னு பரவி, தி.மு.க.வினர் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கு.''”

"ஆமாம்பா, தி.மு.க.வின் முப்பெரும் விழா முடிந்ததும் இது குறித்த செய்தி வரும்ங்கிற நம்பிக்கை அறிவாலயத் தரப்பிலேயே இருந்ததே?''”

"உண்மைதாங்க தலைவரே, அன்று செந்தில்பாலாஜி ரிலீஸ் ஆவார் என்று தி.மு.க. தரப்பு பலமாக எதிர்பார்த்திருந்தது. அதனால் அமைச்சரவை மாற்றத்தை நிகழ்த்த தி.மு.க. தலைமையும் தயாரானது. ஆனால், செந்தில்பாலாஜியின் வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவர் விடுப்பு போட்டுச் சென்றதால், அந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டு விட்டது. இந்த நிலைமை குறித்தும், உதயநிதி குறித்தும் அன்று தி.மு.க.வின் சீனியர் தலைவர்களுடன் அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்த நிலையில் ஒரு பத்திரிகையாளர், உதயநிதி துணை முதல்வராகிறார் என்று ஒரு தகவலை வெளியிட, அது வெளியே பற்றிக்கொண்டது.''

"ம்...''”

Advertisment

rr

"அதனால் இந்தமுறை உதயநிதி துணை முதல்வராவது பொய்க்காது என்கிற நம்பிக்கை தி.மு.க. உடன்பிறப்புகள் மத்தியில் உருவானது. அதனால் இனிப்பு மற்றும் பட்டாசுகளுடன் அறிவாலயத்தில் வந்து கூடத்தொடங்கினர். எனினும் 18 ஆம் தேதி இரவுவரை எந்த அறிவிப்பும் வராததில் அவர்களிடம் கொஞ்சம் சுணக்கத்தைப் பார்க்க முடிந்தது. இதுகுறித்து தி.மு.க. மேலிடத் தரப்பில் விசாரித்தபோது, ”துணை முதல்வர் விசயத்தில் மூத்த அமைச்சர்கள் சிலருக்கு அதிருப்தி இருப்பதை உணர்ந்த ஸ்டாலின், இது குறித்து அவர்களிடம் வெளிப்படையாகப் பேசினாராம். அதனால் அவர்களும் உங்கள் விருப்பமே எங்கள் விருப்பம் என்று தெரிவித்தார்களாம். அதனால் விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வரலாம் என்கிற நிலை இருக்கிறது.''”

"18 ஆம் தேதி கவர்னர் ரவி ஊரில் இல்லை போலிருக்கிறதே?''”

Advertisment

"வெளியூர் சென்ற கவர்னர் அன்று இரவுதான் திரும்புவார் என்று சொல்லப்பட்டது. உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி என்கிற அறிவிப்பு மட்டும் என்றால், முதல்வரின் அறிவுறுத்தலின்படி தலைமைச் செயலாளர் ஒரு ஆர்டர் போட்டுவிட்டாலே போதுமானது. அதற்கு கவர்னரின் ஒப்புதல் தேவையில்லை. ஆனால், துணை முதல்வர் பதவி உயர்வுடன், சில இலாகாக் களையும் உதயநிதி கூடுதலாக கவனிக்க இருப்ப தால், அதற்கு கவர்னரின் ஒப்புதல் தேவை. இப்படிப்பட்ட சூழல்கள் இருப்பது குறித்தும் உதயநிதி ஆதரவாளர்கள் ஆலோசித்து, மனதைத் தேற்றிக்கொண்டார்களாம். இதற்கிடையே, கட்சியின் பவள விழா பொதுக்கூட்டத்தை காஞ்சிபுரத்தில் 28ஆம் தேதி தி.மு.க. நடத்துகிறது. இதில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் மேடை ஏறுகிறார்கள். அப்போது, உதயநிதி துணை முதல்வராக மேடையில் இருப்பார் என்கிறார்கள் தி.மு.க.வினர். அந்தப் பவளவிழா மேடை, உதயநிதிக்கான வாழ்த்து மேடையாகவும் இருக்கும் என்கிற எதிர் பார்ப்பு அவர்கள் மத்தியில் வலுத்திருக்கிறது.''”

"நடிகர் விஜய் பெரியார் திடலுக்குச் சென்று வணங்கியிருக்கிறாரே?''”

rr

"தந்தை பெரியார் பிறந்தநாளான செப்-17ல் தி.மு.க.வின் பவளவிழா மற்றும் முப்பெரும் விழாவை, மிகப்பிரமாண்டமாக தி.மு.க. நடத்தியது. காலையில் இருந்தே பவள விழா தொடர்பான நிகழ்வுகள்தான் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண் டிருந்தது. ஆனால், இதனை உடைக்கும் விதமாக திடீரென்று சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்குச் சென்ற விஜய், அவரது உருவச்சிலைக்கு மலர்களைத் தூவி வணங்கினார். அதேசமயம் அருகில் இருக்கும் பெரியாரின் சமாதிக்கு அவர் செல்லவில்லை. அன்று காலையில்தான் திடீரென்று பெரியார் திடலுக்கு அவர் செல்ல முடிவெடுக்கப்பட்டதாம். அங்கு செல்லும் வரையில் அவர் எங்கு போகிறார் என் பது அவரது கட்சி நிர்வாகிகளுக்கே தெரியாதாம். ஏன், 24 மணி நேரமும் விஜய்யை வாட்ச்பண்ணிக் கொண்டிருக்கும் உளவுத்துறைக்குக்கூட இந்த விசிட் பற்றி தெரியவில்லை. அவர் அங்கு சென்ற தும் மீடியாக்கள் எல்லாம் அதை போகஸ் செய் யத் துவங்கி விட்டன. தி.மு.க.வின் கம்பீர அடை யாளம் பெரியார். அந்த குகைக்குள்ளே விஜய் சென்றதும் அதனை மீடியாக் கள் போகஸ் செய்ததும் தி.மு.க.வை சற்றே சங்கடப் படுத்தியிருக்கிறதாம். அதே சமயம், திராவிட அரசிய லுடன் விஜய் நேரடியாக மோதத் தொடங்கிவிட் டார் என்கிறார்கள் த.வெ.க.வினர்.''”

"தேசிய அளவில் எதிர்ப்புகள் இருக்கும் நிலையிலும், மோடி அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் கொடுத் துள்ளதே?''”

"ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா? என் பதை ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை அமைத்திருந் தார் மோடி. அந்த குழு கடந்த 6 மாதங்களாக ஆராய்ந்து விட்டு, தனது பரிந்துரையை சமீபத்தில் பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த பரிந்துரைகளுக்கு இப்போது மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த பரிந் துரைகள் தாக்கல் செய்யப்பட்டு அடுத்த கூட்டத் தொடரில் அது நிறைவேற்றப்பட இருக்கிறது. அதனால் 2029-ல் இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆள்கிற மாநில அரசுகள், இந்தத் திட்டத்தை தொடர்ச்சியாக எதிர்த்துவருவது குறிப்பிடத்தக்கது.''”

"சென்னையின் பிரசித்திபெற்ற ரேஸ்கோர்ஸ் நிலத்தை தமிழக அரசு மீட்டிருக்கிறதே?''”

modi

"சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் நிலம் அரசுக்கு சொந்தமானது. நிலத்தின் மொத்தப் பரப்பளவு 160 ஏக்கர். தனிநபரின் குத்தகை ஆளுகையில் இந்த நிலம் இருந்து வந்தது. தமிழக அரசுக்கு தரவேண்டிய குத்தகை பாக்கி 750 கோடி ரூபாயைத் தரா மல் அவர்கள் டிமிக்கி கொடுத்து வந்தனர். அந்த நிலத்தை தமிழக அரசின் வருவாய் நிர் வாக ஆணையர் அமுதா ஐ.ஏ.எஸ். தற்போது அதிரடியாக மீட்டெடுத்திருக்கிறார். இந்த நிலையில், கிண்டி ரேஸ்கோர்ஸ் நிலத்தை மீட்டெடுத்தது போல சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான குமரி மாவட்டத்தில் பார்வதிபுரத்தில் இருக் கும் அரசு நிலத்தையும் அமுதா ஐ.ஏ.எஸ். மீட்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. சிறையில் மரண தண் டனையை நிறைவேற்றுகிற ஆரச்சார் களுக்காக ஒரு காலத்தில் ஒதுக்கப்பட்ட நிலம், அவர்களுக்கு வாரிசு இல்லாத தால் தமிழக அரசுக்கு சொந்தமானதாக மாறிவிட்டது. அந்த நிலத்தை குமரி மாவட்ட அரசியல்வாதிகள் சிலர் போலி டாகுமெண்ட்டுகள் மூலம் அபகரித்து வைத்திருக்கிறார்கள். இது குறித்த தகவல்கள் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ்.சிற் கும், வருவாய் நிர்வாக ஆணையர் அமுதா ஐ.ஏ.எஸ்.சிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம். இந்த அரசு நிலமும் மீட்கப்படுமா? என்கிற கேள்வி பரவலாக எழுந்திருக்கிறது.''”

"பெரியார் பிறந்த மாவட்டத்தி லேயே அவரது பிறந்தநாள் விழா கூட் டத்தை நடத்த போலீஸ் தடைவிதித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே,தி.மு.க. அரசு பெரியாரைத் தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறது. முப்பெரும் விழா மூலம் தமிழகம் முழுக்க பெரியார் சிந்தனைகளை தி.மு.க. பரப்பிக்கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், பெரியார் பிறந்த ஈரோடு மாவட்டத்தில் பங்களாபுதூர் காவல் லிமிட்டில் உள்ள தூக்கநாயக்கன் பாளையத்தில் பெரியா ரிய உணர்வாளர்களும் புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினரும் பெரியார் பிறந்தநாளான கடந்த 17ஆம் தேதி, சிறப்புக் கூட்டத்தை நடத்துவதற் கான அனுமதியை காவல்துறையிடம் கேட்டிருக்கிறார்கள். பங்களாபுதூர் காவல் நிலைய உதவிஆய்வாளர் பிரபாகரனோ, பெரியார் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தை நடத்தக்கூடாது என்று மறுத்திருக்கிறார். இதை எழுத்துப்பூர்வமாக அவர் எழுதியும் கொடுத்தாராம். இத னால் அதிர்ச்சி அடைந்த கூட்ட ஏற்பாட்டாளர்கள், அனுமதி தராவிட்டால் காவல் நிலையத்தை முற்றுகையிடுவோம் என அறிவிக்க, இந்தத் தகவல் ஈரோடு எஸ்.பி. ஜவகர் காதுக்குப் போனதால், அவர் கூட்டத்திற்கு அனுமதி கொடுத்திருக்கிறார். இதுபற்றி நம்மிடம் பேசிய தமிழர் உரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் கந்தசாமியோ, "இது இப்போதுள்ள காவல்துறை அதிகாரிகளின் காவி மனநிலை யைக் காட்டுகிறது. பெரியார் கூட்டத்திற்கு தடைவிதித்த அதி காரிமீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்'’என்கிறார் ஆதங்கமாக.''

"நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மரண விவகாரத்தில் காவல்துறை தொடர்ந்து திணறிவருகிறதே?''”

"கடந்த மே 4 ஆம் தேதி காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் தனது வீடடின் பின்புறமுள்ள தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இந்த வழக்கை விசாரித்துவரும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ், இது தொடர்பாக 175 பேருக்கு சம்மன் அனுப்பி, அவர்களில் 140 பேர்களிடம் விசாரணை நடத்தியிருக்கிறது. இருந்தும் ஜெயக்குமார் மரணம், கொலையா, தற்கொலையா என்று உறுதிசெய்ய முடியாமல் அது திணறி வருகிறது. இதற்கிடையே அண்மையில் ஜெயக்குமாரின் உறவுக்காரரான திசையன் விளையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் அந்தப் பகுதியின் ஒரு இளம் பெண் ஆகிய மூன்று பெண்களை சம்மன் மூலம் விசாரணைக்கு வரவழைத்தவர்கள், தீவிர விசாரணை நடத்தியிருக்கிறார்கள். இவர்களில் அந்த இளம் பெண்ணிடம் ஜெயக்குமார் உள்ளிட்ட சிலர் நட்புரீதி யாக பழகிவந்தார்களாம். இதுதொடர் பாக அந்த நபர்களோடு ஜெயக்குமாருக்கு முன் விரோதம் இருந்ததாம். இதையும் அலசி வருகிறார்கள். இதற்கிடையே, அந்த ஏரியாவின் முக்கிய அரசியல் புள்ளியின் உதவியாளர் ஒருவர், ஜெயக்குமார் மரண சம்பவத்திற்குப் பின் திடீரென்று மாயமாகிவிட்டாராம். இன்னும் அவர் ஊர் திரும்பவில்லையாம். அவர் குறித்தும் துழாவி வருகிறார்கள்.''

"இதற்கு மத்தியில் ஜெயக்குமாரின் உடன்பிறந்தவர்களில் ஒருவர், சம்பவத் திற்கு அடிப்படைக் காரணமே அரசியல் தான் என்று தான் நீட்டிய விரலை இன்னும் மடக்கவே இல்லையாம்.''”

"பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்கவுன்டர் பற்றி பல்வேறு தகவல்கள் வருதே?''”

rr

"ஆம்ஸ்ட்ராங்க் படுகொலைக்குப் பின், எந்த ஒரு படு கொலையும் சென்னை லிமிட்டிற்குள் நடந்துவிடக்கூடாது என்று தீவிர கவனம் செலுத்திவருகிறது சென்னை போலீஸ். அதன் கடுமையைப் பார்த்த பாம் சரவணன், சிடி.மணி போன்ற சென்னையின் பெரிய பெரிய ரவுடிகள் எல்லாம் இங்கிருந்து வெளிமாநிலங்களுக்கு ஓடி விட்டார்கள்.''

"இந்த நிலையில், சென்னைக்கு வெளியே சென்று பதுங்கியிருக்கும் ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளரான காக்கா தோப்பு பாலாஜியும், பாம் சரவணனும் ஏதோ திட்டத்தில் இருப்பதாக காவல்துறைக்கு செய்தி கிடைத்ததாம். அதனால் அவர்கள் தரப்பைத் தீவிரமாக கண்காணித்திருக்கிறார்கள், அப்போது, ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பழிவாங்க, அவரது ஆதவாளர்கள் ஒரு வழக்கறிஞரின் உயிருக்குக் குறிவைத்திருப்பது தெரிய வந்திருக்கிறது.''”

"என்னப்பா சொல்றே?''”

"ஆமாங்க தலைவரே, இந்த சூழலில் காக்கா தோப்பு பாலாஜி தைரியமாக சென்னைக்குள் வந்திருக்கிறார். அவர் தரப்பால் மீண்டும் ஒரு ரத்தக்களறி சம்பவம் சென்னையில் அரங்கேறிவிடக்கூடாது என்று திட்டமிட்ட சென்னை போலீஸ் டீம், அவருக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கிறது, இதன்படிதான் அவரது என்கவுன்டர் நடந்து முடிந்திருக்கிறது. இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தேடப்பட்டு வரும் சம்பவ செந்தில், தாய்லாந்திற்கு தப்பி ஓடியிருக்கிறார் என்கிற தகவல் அறிந்த போலீஸ் டீம், அவரைத் துரத்திக்கொண்டு இருக்கிறது. ”இவருக்கு 25 லட்ச ரூபாய் ஃபைனான்ஸ் செய்த டைரக்டர் நெல்சனின் மனைவியை தீவிரமாக விசாரித்தபோதும், அவரது சினிமா பின்னணியைக் கருதி விட்டுவிட்டார்களாம்.''”

"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். லண்டன் சென்ற பா.ஜ.க. மாநில நிர்வாகி, அங்கே ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் அரசியல் சார்ந்த படிப்பிற்கான தேர்வை எழுதி யிருக்கிறார். ஆனால் இதில் அவர் இரண்டு சப்ஜெக்ட்டில் தோல்வி அடைந்திருக்கிறாராம். இதையறிந்த தமிழக பா.ஜ.க.வினர், ’இவர் ஐ.பி.எஸ். தேர்வையே ஒழுங்காக எழுதி பாஸ் ஆகவில்லை. சங்கல்ப் என்கிற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உதவியுடன்தான் அதில் பாஸ் ஆனார். ஆனால் தன்னைப் பெரிய படிப்பாளியாகவும் அறிவாளியாகவும் அவர் காட்டிக்கொள்வார்’ என்று நக்கலடித்து வருகிறார்களாம்.