இந்தியா சுதந்திரமடைந்த போது எல்லையோர மாநிலங்களிலிருந்த இந்துக்களும், முஸ்லிம்களும் கலவரத்தில் ஈடுபட்டார்கள். அப் போது காந்திஜி உண்ணாவிரதமிருந்து அரும்பாடுபட்டு போராடியபின், பேதங்களை மறந்து ஒன்றாக மாறினார்கள். அப்படி இன்று குக்கி- மெய்தி மக்களை இணைக்கக்கூடிய ஒரு தலைவர் தேவையிருக்கிறது. ஆனால், கலவரத்தைத் தூண்டுபவர்கள்தான் அங்கே நிறைய இருக்கிறார்கள்.
ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் பேசினேன். குஜராத்திலிருந்து வந்து இங்கே குடியேறியவர். மணிப்பூரில் நன்றாகச் சம்பாதித்தவர். இப்பொழுது சம்பாதிக்கமுடியாத விஷயத்தைக் கூறினார். பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் மக்கள் போராட்டத்தில் மட்டுமே ஈடுபடுகின்றனர். மக்களின் சக்தி வீணடிக்கப்படுகிறது என்று வருந்தினார்.
மீரா போபெய் போராட்டக் குழுவில் ஒருவர் ஆங்கிலத்தில் எழுதி வைத்துக்கொண்டு எங்களிடம் வீடியோ பதிவொன்றைக் கொடுத்தார். அதில் மே 3-ஆம் தேதி ஒரு மெய்தி இனப் பெண் கற்பழிக்கப்பட்டதாகவும் அதற்கு சி.பி.ஐ. விசாரணை வேண்டுமெனப் போராடுவதாகவும் குறிப்பிட்டார்
"எப்பொழுதும் நாங்கள் அவர்களுடன் சண்டை போட்டதே இல்லை. நாகா இனத்தவர்களே அவர்களுடன் சண்டை போடுவார்கள். மே 3 அன்று எங்கள் கடைகளை எரித்தார்கள், தாக்கவந்தார்கள். எங்களுக்குள்ள உரிமையை மறுத்தார்கள். அதனால் நாங்கள் திருப்பித் தாக்கவேண்டியதாகிவிட்டது. அவர்கள் வம்புக்கு வராமலிருந்திருந்தால் ஏன் அவர்களைத் தாக்கப்போகிறோம்''’என்று அந்தக் குழுவில் ஒருவர் பேசினார்.
"சரி இதற்கு முடிவுதான் என்ன?'' என கேட்கும்போது, போதைப் பொருள் பற்றி பேச ஆரம்பித்தார்கள். "குக்கி இனத்துக்கு எதிராகப் போராடவில்லை, நார்கோடிக் -போதைப் பொருள் ஒழிப்புக்காகத்தான் போராடுகிறோம். குக்கிகள் போதைப்பொருள் விவசாயம் செய்கிறார் கள் போதை மருந்து கடத்துகிறார்கள், போதைப் பொருட்கள் சம்பந்தப்பட்ட அனைவரையும் தண்டிக்கும்வரை இந்த போராட்டம் தொடரும்'' என்றார்கள்
அவர்களின் எல்லா கதைகளையும் பொறுமையாக கேட்டுக்கொண்டோம். நாம் தீர்ப்புச்சொல்ல வரவில்லை. இரு பக்கமும் உள்ள சிக்கல்களை காதுகொடுத்துக் கேட்கவே வந்துள்ளோம்.
எங்களுடன் வந்த மெய்தி இனத்தவர் அங்கு ஒரு பெரிய கட்டடத்தைக் காட்டினார். ஒரு ஷாப் பிங் காம்ப்ளக்ஸ். முழுக்க தீக்கிரையாக்கப்பட்டி ருந்தது. மே ஊர்வலத்தில் இந்த அட்டகாசங்கள் நடந்தது. இதற்குப் பதிலாகத்தான் ஒன்றுகூடி நாங்கள் திருப்பித் தாக்கவேண்டியதாகிவிட்டது என்றார்.
குக்கி இன மக்கள் எங்களிடம் விவரித்த இறையாண்மை பற்றி அவரிடம் சொன்னேன். கலவரத்தில் குழந்தைகள், பெண்கள், நோயாளிகளைத் தொடமாட்டோம். போர் முறைகளை மீறமாட்டோம் என்றார்கள். கலவரத்தின்போது குக்கி பகுதியில் ஒரு மெய்தி பெண் சிக்கிக்கொண்டபொழுது அவரை பத்திரமாக திருப்பி அனுப்பியுள்ளனர். இதுபோன்ற சில விஷயங்களை எடுத்துச் சொன்னேன். ஆனால் அவர்களுக்கு கேட்க மனமும் இல்லை, காதும் இல்லை. ஒன்றுமட்டும் புரிந்தது. ஒருவரின் மேல் ஒருவர் கோபப்படுவதும், பழிசொல்வதும் கூடிக்கொண்டே வருகிறதே தவிர குறையவில்லை.
ஊருக்கு வெளியே உள்ள பிஷ்ணுபூர் முகாமுக்குச் சென்றோம். ஒரு மார்க்கெட் இடத்தை முகாமாக மாற்றியிருந்தனர். அங்கு வசதிகள் மிகக்குறைவு. அவர்களில் தூக்கம்வராத நபர்களுக்கு பயிற்சி கொடுத்தேன்.
அருகில்தான் சுர்ச்சான்பூர் இருந்தது. எனக்குப் போகவேண்டும் என ஆசை. பலரையும் தொடர்புகொண்டேன். அல்ஜஸீரா ஊடகத்தைச் சேர்ந்த, முன்பு அறிமுகமான நிருபர் மறுநாள் சுர்ச்சான்பூர் போவதாகத் தகவல் வந்தது. ஆனால் எங்களுக்கோ இரண்டு மணிக்கு விமானம். 12 மணிக்கு நாங்கள் ஏர்போர்ட்டில் இருக்கவேண்டும்.
மனதில் சுர்ச்ச்சான்பூர் போயே ஆகவேண் டும் என தீர்மானம்.
கே.கே.எல். தலைவர் ஒருவருக்கு போன் செய்தேன். இன்னொரு பக்கம் டெல்லியிலிருந்து சிலர் வருவதாகவும், கார் ஏற்பாடு செய்திருப்ப தாகவும் தன்னார்வலர் சொன்னார். தன்னார்வலர் கள் யாரும் எங்கு செல்வதையும் தடுக்கவில்லை. அதை நல்ல விஷயமாகப் பார்த்தேன். நம் சுதந்திரத்தில் பெரும்பாலும் தலையிடுவதில்லை. என்னுடன் வந்த மெய்தி தன்னார்வலர் தன்னால் முடிந்தவரை எங்களுக்கு உதவினார். உண்மையைச் சொன்னால் மிக நன்றாக ஒத்துழைத்தார். அவரது பெயர் மைக். அன்பானவர். நல்ல மனிதர். ஆனால் அவரும் மெய்தி பக்கமே பேசினார். இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வழிவகை செய்தார்.
சுர்ச்சான்பூருக்கு நான் தனியாகப் போகவேண்டாம் என்றார் அல்ஜஸீரா நிருபர். என் நண்பர்களும் வேண்டாம் என்றார்கள். ஏனோ போயே தீரவேண்டுமெனத் தோன்றியது. அந்த இஸ்லாமிய ஆட்டோ நண்பரை வரச்சொன்னேன்.
அதிகாலை ஐந்து மணி ஆட்டோ வந்து நின்றது. என்னுடைய லக்கேஜ் எல்லாம் எடுத்துக்கொண்டு சென்றேன். போகும்வழியில் ஒரு கட்டடம் பார்த்தேன். பலத்த பாதுகாப்பு, வாச்- டவர் எல்லாம் இருந்தது. பா.ஜ.க.வின் கட்சி அலு வலகம். மக்களுக்கே இங்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் அலுவலகத்துக்கு கச்சிதமான பாதுகாப்பு.
வழியில் மீரா போபெய் அமைப்பினர் எங்கள் பை முழுவதையும் சோதித்தனர். அமைதியாகப் பார்த்தேன். ஆட்டோவுக்கு அனுமதி கிடைத்து நகர்ந்தது. வழியில் ஆர்மி செக்போஸ்ட். ஒன்றல்ல,… இரண்டல்ல, எட்டு இடத்தில் நிறுத்தப்பட்டது. நான்கு இடங்களில் ஆதார் கார்டு கேட்டார்கள். நான் போன் கையில் வைத்திருந்ததைப் பார்த்து சந்தேகப்பட்டு பிடுங்கி செக் செய்தார்கள். உண்மை யில் ஒரு சின்ன வீடியோ எடுத்திருந்தேன். அதை உடனே டெலீட் செய்து விட்டேன். வீடியோ எடுக்கக்கூடாது எனக் கட்டுப்பாடு உள்ளது.
பேரிகேடுகள், டயர்களை பஞ்சராக்கும் முள் இரும்புகள், முள்வேலிகள் துப்பாக்கியுடன் கடும் காவல் என ஐந்து கிலோமீட்டர் கடந்தோம். சுர்ச்சான்பூர் கலெக்டர் தமிழர். அவரிடம் பேசுங்கள் என நண்பரொருவர் போன் நம்பர் அளித்திருந்தார். அவருக்கு போன் செய்தேன். "11 மணிக்கு வாருங்கள் பேசுவோம்'' என்றார்.
"11 மணிக்குள் திரும்பவேண்டும், ஒரு மணிக்கு ஏர்போர்ட் செல்லவேண்டும் என சொன்னேன். அவசர அவசரமாக மூன்று முகாம்களுக்கு அழைத்துச் சென்றனர். முகாம்கள் சைக்கோல்போல் இல்லாமல் மிகக்கூட்டமாக நெருக்கமாக இருந்தன. ஒரு மாதிரி அடைப்பாக இருந்தது. ஒரு முகாம் சிறு பள்ளியில் நடந்தது. உணவுத் தட்டுப்பாடு இருப்பதாக சொன்னார்கள். பல விஷயங்கள் இவர்களுக்குச் செய்யவேண்டியிருக்கிறது. உண்மையில் சுர்ச்சான்பூர் முகாம்கள் அதிக கவனம் எடுக்கவேண்டிய முகாம்களாக உள்ளன. சைக்கோல், காங்போக்பி ஊர்களுக்கு உதவிகள் வரும் அளவுக்கு இங்கு உதவிகள் வரவில்லை. ஏனெனில் சேனாபதி வழியாக காங்போக்பி மெயின் ரோடில் உள்ளது. அதை நாகலாந்திலிருந்து அடையலாம். ஆனால் சுர்ச்சான்பூர் செல்வதென்றால் இம்பால் வழியாகவே செல்லவேண்டும்.
இம்பால் வழியாக எந்த பொருளையும் எடுத்துக் கொண்டு வரமுடியாது. பொருட்களுடன் போக பெண்கள் அமைப்பினர் அனுமதிக்கமாட்டார்கள். எல்லைதாண்டி வந்தவுடன் குக்கி இனப் பெண்கள் என்னை வழிமறித்தார்கள். அதில் இருவர் பள்ளிக் குழந்தைகள் வயதே இருந்தனர். பைகளை முழுக்க செக் செய்தனர்.
அவர்களுக்கு இருக்கும் பயத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அவர்களில் இருவரை எனக்கு வழி காட்டச் சொல்லி ஏற்றிக்கொண்டேன். அவர்களிடம் "என்ன வகுப்பு படிக்கிறீர்கள்?'' என்றேன். "பத்தாம் வகுப்பு செல்ல வேண்டும்'' என்றார் ஒருவர். "ஏன் பள்ளி செல்லவில்லை?'' எனக் கேட்டேன். “"நான் ஃப்ரண்ட்லைனர் காவல்காக்க வேண்டாமா?''’ என்றாள். பெண் குழந்தைகளும் ஃப்ரண்ட் லைனராக இருப்பது மிக வருத்தத்தைத் தந்தது.
செல்லும்பொழுது 60-க்கும் மேல் வரிசையாக சவப்பெட்டிகள் வைத்திருந்தனர். இறந்தவர்களின் போட் டோக்கள் ஒட்டிவைத்து சவப்பெட்டிகளில் மலர்வளையம் வைத்திருந்தனர். கருப்பு உடையில் பலர் ஊர்வலமாகச் சென் றார்கள். "எங்கு செல்கிறார்கள்?'' என்றேன். "ஒருநாள்விட்டு ஒருநாள் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் அடையாளப் போராட்டம் செய்வதாகவும்' கூறினார்கள்.
அங்கு நான் கவனித்தது…
(தொடரும்)