மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்ட பின்னர், படிப்படியாக அணையின் நீர்மட்டம் குறைய, அணைக்கு வரும் தண்ணீர் வரத்தும் குறைந்தது. இதையடுத்து, குறுவை சாகுபடிக்கு முறைத்தண்ணீர் வைத்துத் திறந்துவிட்டனர். இந்நிலையில், கடைமடையில் குறுவைக்கு தண்ணீர் போதாது என்று சம்பா சாகுபடிக்கு தயாராகிவந்த நிலையில். மேட்டூர் அணையில் நீர் முற்றிலும் வற்றியது. எனவே தமிழ்நாட்டுக்கு கர்நாடகா தரவேண்டிய தண்ணீருக்காக சட்டரீதியாகவும், பேச்சுவார்த்தை மூலமும், காவிரி ஆணையம் மூலமாகவும் போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். தண்ணீரின்றி பயிர்கள் கருகுவதால் தமிழ்நாட்டு விவசாய சங்கங்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தியும் பலனில்லாததால், 11ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. மற்றொரு பக்கம், தி.மு.க. கூட்டணி கட்சியினர் மற்றும் விவசாய சங்கங்கள் இணைந்து, தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, செங்கிப்பட்டி, மன்னார்குடி, புதுக்கோட்டை எனப் பல்வேறு இடங்களில் சாலை மறியல், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட, ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

farmers

போராட்டத்தில் கலந்துகொண்டோர், "ஒவ்வொரு ஆண்டும் இதேபோல கர்நாடகத்திற்கு எதிராகப் போராட வேண்டியுள்ளது. நட்ட பயிர்கள் கருகத் தொடங்கியதைப் பார்த்து கண்ணீர் வடிக் கிறோம். கடைமடைப் பகுதியில் விதைக்கப்பட்ட நெல் விதைகளோ முளைக்குமுன்பே கருகிவருகின்றன. இதையெல்லாம் ஒருமுறை யாவது பிரதமர் வந்து பார்க்க வேண்டும்'' என்றனர் வேதனையோடு.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் உள்ள கீரமங்கலம், வடகாடு, கொத்தமங்கலம், அரசடிப்பட்டி உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒரு நாளைக்கு சுமார் 20 டன் வரை மல்லிகை, கனகாம்பரம் உள்ளிட்ட அனைத்து பூக்களும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். 11ஆம் தேதி கடையடைப் புப் போராட் டத்தால் பல டன் பூக்கள் தேக்கமடைந்து வீணாகின.

Advertisment

திருச்சியில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பாக, உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரைத் திறந்துவிட வலியுறுத்தி, தி.மு.க. கூட்டணிக் கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமை தாங்க, மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன் முன்னிலை வகித்தார். வி.சி.க. மாநகர மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ், இ.கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சிவா, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, மாக்சிஸ்ட் கம்யூ. மாவட்ட செயலாளர் ராஜா உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.