2023-24-ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி சமர்ப்பித்தார். இவர் சமர்ப்பிக்கும் 5-வது பட்ஜெட்டாகும். தனது உரையில், இந்தியப் பொருளாதாரம் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி சரியான பாதையில் சென்றுகொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

fm

Advertisment

வருமான வரி விலக்கு

பட்ஜெட் என்றாலே வருமான வரிக்கான உச்சவரம்பு உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவும். அதற்கேற்ப ரூ.3 லட்சம் வரை வருமானத்துக்கு வரி இல்லை. 3 முதல் 6 லட்சம் வரை 5% வரியும், 6 முதல் 9 லட்சம் வரை 10% வரியும், 9 லட்சம் முதல் 12 லட்சம் வரை 15% வரியும், ரூ.15 லட்சம் வரை 20% வரியும், அதற்குமேல் 30% வரியும் செலுத்தவேண்டும்.

அதிலும் பழைய வரி நடைமுறை, புதிய வரி நடைமுறை என இரண்டு நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த புதிய நடைமுறை யின்படி ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது. ஆனால், இந்த நடைமுறையைப் பின்பற்றுபவர்கள் சேமிப்புத் திட்டம், காப்பீடுகள், வீட்டு வாடகை, வீட்டுக் கடன் போன்றவற்றில் முதலீடு செய்துள்ளேன் என கணக்குக் காட்ட முடியாது. இது சேமிப்பு, காப்பீடு போன்றவற்றில் முதலீடு செய்வதை பாதிக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

Advertisment

விலை கூடும்- குறையும் பொருட்கள்

பொதுவாக பட்ஜெட் என்றாலே எது விலை குறையும், எது விலை அதிகரிக்கும் என்பதே நடுத்தர வர்க்கத்தின் கவலையாய் இருக்கும். இந்த பட்ஜெட்டில் டி.வி., ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரங்கள், லித்தியம் ஐயன் பேட்டரிகளை உருவாக்குவதற்கான எந்திரங்கள், மின்னணு வாகன தொழிற்துறைகளுக்குப் பயன்படும் கச்சாப் பொருட்கள் விலை குறையும்.

மாறாக வெள்ளி, சிகரெட், தங்கத்தாலான கலைப்பொருட்கள், இறக்குமதி கார்கள், மின்னணு வாகனங்கள், சைக்கிள்கள், நகல் செய்யப்பட்ட ஆபரணங்கள், சமையலறைக்கான மின்சார புகைபோக்கி, மொபைல் போன்களுக்கான பாகங் கள் போன்றவை விலை உயரும்.

விவசாயம்

சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனபோதும் இந்தியா இன்னும் விவசாய நாடுதான். இந்தியாவில் பெரும் மக்கள் தொகை விவசாயத்தை நம்பியே பிழைப்பை நடத்திக் கொண்டி ருக்கிறது. பட்ஜெட்டில் விவசாயத் துக்கு என்ன சகாயம் செய்யப் பட்டிருக்கிறது?

வரும் நிதியாண்டில் விவ சாயக் கடன் வழங்க ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கத் திட்டமிடப் பட்டுள்ளது. விவசாயத் துறை சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். தேசிய பசுமை ஹைப்ரஷர் மிஷன் திட்டத்துக்கு ரூ.19,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகள் இயற்கை விவசாயம் மேற்கொள்ள அரசு உதவியளிக்கும் என அறிவிக் கப்பட்டுள்ளது. ஆனால், டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் முக்கிய கோரிக் கையான விளைபொருளுக்கு நியாயமான விலை கிடைப்பதற்கான எந்தத் தீர்வும் பட்ஜெட்டில் தட்டுப்படவில்லை.

ddd

ரயில்வே

முன்பு தனி பட்ஜெட் நடை முறையிலிருந்த ரயில்வே துறைக்கு, தற்போதைய பட்ஜெட்டில் ரூ.2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. புதிய ரயில்கள் பற்றிய அறிவிப்பு எதுவும் இல்லை. கொரோனா காலகட்டத்தில் முதியவர்களுக்கான சலுகைப் பயணக் கட்டணம் ரத்தானது, இந்த பட்ஜெட்டில் அந்த சலுகை மீண்டும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பிருந்தது. அது பொய்த்துப்போனது.

நடப்பாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை 6.4 சதவிகிதம். வரும் ஆண்டில் 5.9 சதவிகிதமாக குறையுமென எதிர்பார்க்கப்படுகிறது. வரி வருவாய் நிதி பற்றாக்குறையைச் சமாளிக்க 15.5 லட்சம் கோடி கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது ஒரு ரூபாயில் கணக்கிட்டால் 34 பைசாவை கடன்வாங்கியே பட்ஜெட் சமாளிக்கப்படுகிறது.

தமிழகக் கவலை!

நகர்ப்புற கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீடு குறைவு எனத் தெரிவித்துள்ளதுடன், "தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்' என தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிருப்தி தெரிவித்துள்ளார். அதேபோல் இந்த வருடமும் மதுரை எய்ம்ஸ் திட்டத்துக்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படாததற்கு எதிர்ப்புத்தெரிவித்து சு.வெங்கடேசன் உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் முன் ஒற்றைச் செங்கலை ஏந்திப் போராடினர்.

கர்நாடகாவுக்கு ஜாக்பாட்

விரைவில் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் கர்நாடக மாநிலத் துக்கு வறட்சி பாதித்த பகுதிகளுக்கான நிவாரணம், குடிநீர்ப் பாசனம், குடிநீர்த் திட்டம் என்ற பெயரில் 5,300 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. இதனை அறிவிக்கும்போது எதிர்க்கட்சிகள் தேர் தலை மனதில் கொண்டு தரப்பட்ட சலுகை என முழக்கமிட்டனர்

பட்ஜெட்டை விமர்சித்திருக்கும் முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், “"மறைமுக வரிகள் எதுவும் குறைக்கப்படவில்லை. கடுமையான, நியாயமற்ற ஜி.எஸ்.டி. விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பெட்ரோல், டீசல், சிமெண்ட், உரங்களின் விலைகளில் குறைப்பு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இளைஞர்களுக்காக பெரிய அளவில் வேலைகள் எதுவும் உருவாக்குவதற்கான வாய்ப்புகள் தெரியவில்லை. மொத்தத்தில் ஏழைகள் இந்த பட்ஜெட்டிலிருந்து ஆதாயம்பெற எதுவுமில்லை''’என்று சாடியுள்ளார்.

சாமானியர்களுக்கு இந்த பட்ஜெட்டில் எதுவும் மிச்சமில்லை என்பதே பெரும்பாலானவர்களின் கருத்து.

-க.சுப்பிரமணியன்