டந்த இதழில் விதிமீறலாகச் செயல்படும் பட்டாசு ஆலைகள் மற்றும் பட்டாசுக் கடைகளில் வெடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்கள் ப-யாவது, பட்டாசுப் பெட்டிகளில் எம்.ஆர்.பி. விலை தாறுமாறாக இருப்பது, பட்டாசுத் தொழிலும் லஞ்சமும் பின்னிப் பிணைந்திருப்பது குறித்து விரிவான கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

அதன் தொடர்ச்சி..

ff

பட்டாசு ஆலைகளை இயக்குவதற்கு சென்னை, நாக்பூர், டி.ஆர்.ஓ. ஆகிய மூன்று பிரிவுகளில் உரிமம் வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் வழங்கப்படும் டி.ஆர்.ஓ. உரிமம் தவிர மற்ற இரண்டும் மத்திய அரசின் கீழ் இயங்கும் பெசோ அமைப்பின் மூலம் வழங்கப்படுகிறது. டி.ஆர்.ஓ. உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகளில் குருவி வெடி, தரைச்சக்கரம் போன்ற சாதாரண வெடிகளை மட்டுமே தயாரிக்கவேண்டும். விருதுநகர் மாவட்டத்திலோ விதிமீறலாக ஃபேன்ஸி ரக பட்டாசுகளை உற்பத்தி செய்கின்றனர். டி.ஆர்.ஓ. உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பன்மடங்கு இருப்பு வைத்திருப்பதெல்லாம் சாதாரணமாக நடக்கிறது. 17-ஆம் தேதி 13 பேர் உயிரைப் பறித்த வெடிவிபத்தில் கைதாகியிருக்கும் கனிஷ்கர் பட்டாசு ஆலையின் உரிமையாளர் சுந்தரமூர்த்தி, விதிமீறலாக ஃபேன்ஸி ரக வெடிகளை அதிக அளவில் தயாரித்திருக்கிறார். அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி விதிமீறலைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்திருந்தால், விபத்து நடந்திருக்காது; உயிர்ப்பலிகளும் ஏற்பட்டிருக்காது.

Advertisment

பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உடல்களை வாங்க மறுத்து, அரசு அறிவித்துள்ள ரூ.3 லட்சம் நிவாரண நிதி போது மானதல்ல, ரூ.25 லட்சம் நிதியுதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, இலவச வீட்டு மனைப்பட்டா ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அழகாபுரி சாலையில் சாலை மறியல் செய்தனர். அரசுக்கு பரிந்துரை செய்வதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உறுதியளித்த பிறகுதான் போராட்டத்தை கைவிட்டு உடல்களைப் பெற்றனர். அரசாங்க சம்பளம்பெறும் அதிகாரிகள், கையூட்டுக்காக கடமையாற்றத் தவறி, அரசுக்கு இத்தனை சிக்கல்களை ஏற்படுத்து கின்றனர்.

விபத்து உயிர்ப் பலிகளைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்வதற்கு, தொழிலாளர் நலத்துறை, வருவாய்த் துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள் அடங்கிய 4 குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. அரசுத்துறையினர் தற்போது சோம்பல் முறித்து, 19-ஆம் தேதி அதிரடியாக ஆய்வு செய்து, விதிமீறல் காரணங்களுக்காக சிவகாசி பகுதியில் 6 பட்டாசு கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.

பட்டாசு தொழிலாளர் பாதுகாப்புக்காக தொடர்ந்து போராடிவரும் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தேவா நம்மிடம், "தமிழ்நாடு முழுவதும் 1482 பட்டாசு ஆலைகள் உள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 1085 பட்டாசு ஆலைகள் உள்ளன. இது சட்டமன்றத்தில் அமைச்சரே தெரிவித்த புள்ளிவிபரம். இங்கே விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்ற பட்டாசுக் கடைகள் 1500-ம், வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை உரிமம் பெற்ற பட்டாசுக் கடைகள் 600-ம் உள்ளன. ஏற்கெனவே உள்ள பட்டாசுக் கடைகளுக்கு உரிமம் புதுப்பிப்பதும், புதிய பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெறுவதும் வழக்கமான நடைமுறை. இதற்காக பட்டாசுக் கடை உரிமையாளர்களை பாடாய்ப்படுத்துகின்றனர். கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாள்கணக்கில் காத்திருக்க வைக்கிறார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் பல விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இதில் கொடுமை என்னவென்றால், புது உரிமம் பெறுவதற்கும், ஏற்கெனவே உள்ள உரிமத்தைப் புதுப்பிப்பதற்கும், பட்டாசு கடை நடத்துபவர்கள் பல்லாயிரக்கணக்கில் லஞ்சம் கொடுத்தபிறகும் அலைக்கழிக்கப்படுவதுதான். உரிமம் புதுப்பித்தலுக்கு யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் தெரியுமா? கிராம நிர்வாக அலுவலருக்கு ரூ.5000, வருவாய் ஆய்வாளருக்கு ரூ.10,000, வட்டாட்சியருக்கு ரூ.20,000, கோட்டாட்சியருக்கு ரூ.30,000, மாவட்ட வருவாய் அலுவலருக்கு ரூ.40,000 என பட்டியலிட்டு, பட்டாசு உற்பத்தி யாளர்களிடமும் பட்டாசு கடை உரிமையாளர் களிடமும் பெருமளவில் லஞ்சம்பெறும் அரசுத்துறை அதிகாரிகளால், பட்டாசு ஆலை களில் காணப்படும் பாதுகாப்பு குறைபாட்டை களைய எப்படி நடவடிக்கை எடுக்கமுடியும்? உரிய பயிற்சியோ, அனுபவமோ இல்லாமல் பட்டாசு ஆலைகளில் பணிபுரிபவர்கள், மருந்துக் கலவை உள்ளிட்ட பட்டாசு பொருட்களைக் கையாள் வதில் கவனக்குறைவாக நடந்து உராய்வினால் வெடிவிபத்துகள் ஒருபுறம் ஏற்பட்டாலும், லஞ்ச அதிகாரிகளால் கண்டுகொள்ளப்படாத விதி மீறலாலும், பாதுகாப்புக் குறைபாடுகளாலுமே பெரும்பாலான வெடிவிபத்துகள் நடக்கின்றன. அதிகாரிகளின் லஞ்ச வெறிக்கு பட்டாசு தொழிலாளர்களின் உயிர்கள் இரையாகின்றன'' என்று வேதனைப்பட்டார்.

Advertisment

ff

தீபாவளி சீசன் விற்பனையில் பிசியாக இருந்த புதிதாக பட்டாசுக் கடை நடத்துபவர் “பட்டாசுக் கடை உரிமத்துக்காக எந்த அரசு அலுவலகத்திலும் காத்திருக்க வேண்டியதில்லை. அலைய வேண்டியதும் இல்லை. இதற்கென்றே புரோக்கர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு அரசு அலுவலகத்துக்கும் நேரடியாகச் சென்று நம் கையாலேயே லஞ்சம் கொடுத்தால், அந்த கம்யூனிஸ்ட் தலைவர் சொன்னபடி ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வரை ஆகும். புரோக்கர்கள் மூலம் கொடுத்தால் ரூ.1,30,000-லிருந்து ரூ.1,40,000 வரை ஆகும். ஒரு பட்டாசுக் கடைக்கு தீயணைப்புத் துறையினர் வாங்கும் லஞ்சம் ரூ.2500-லிருந்து ரூ.3000 வரைதான். விடுபட்ட இன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன். என்னுடைய பட்டாசுக் கடை பஞ்சாயத்து லிமிட்டில் வருகிறது. கடைக்கான கட்டி டத்துக்கு பிளான் அப்ரூவல் பெறுவதற்கு, ரூ.50,000-லிருந்து ரூ.75,000 வரை பஞ்சாயத்து தலைவருக்கு லஞ்சம் கொடுக்கவேண்டும். கட்டடத்துக்கான பிளான் அப்ரூவல் பெற்றால்தான் மின் இணைப்பு கிடைக்கும். இதுபோக, தடையின்மைச் சான்று (சஞஈ) பெறு வதற்கு மாவட்ட வருவாய் அலுவலருக்கு ரூ.45,000 கொடுக்கவேண்டும்''’என்றார்.

மத்திய வெடிபொருள் கட்டுப் பாட்டுத்துறையினரின் செயல்பாடுகள் குறித்து நம்மிடம் பேசிய பட்டாசு உற்பத்தியாளர் ஒருவர், "சிவகாசியில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள் சுமார் 850 உள்ளன. ஆனால், சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்தில் துணை முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி நியமிக்கப்படாமல், அந்த இடம் காலியாகவே இருக்கிறது. பட்டாசுத் தொழிலாளர்கள் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசும் மெத்தனமாகவே செயல்படுகிறது. வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்தில் கிணற்றில் போட்ட கல்லாக எந்த வேலையும் நடப்பதில்லை. அதேநேரத்தில், வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினர் ஆய்வுக்கு வரும்போது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சரவெடி உற்பத்தி செய்யக்கூடாது, பச்சை உப்பை உபயோகிக்கக்கூடாது என்று அறிவுறுத்துவதோடு நிறுத்திக்கொள்வார்கள்.

வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளை பெரிய அளவில் தொடர்ந்து கவனித்துவருவது டாப் 10 பட்டாசு ஆலைகள்தான். அதனால், சிவகாசியில் நம்பர் 1 பட்டாசு ஆலை அதிபர் கட்டுப்பாட்டிலேயே வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை இயங்குகிறது. அதிகாரிகளின் வீட்டு வாடகை, வீட்டுத் தேவைகள், போய்வர கார், விமான டிக்கெட் உள்ளிட்ட சகல தேவைகளையும் ஒன்றிரண்டு ffபெரிய பட்டாசு ஆலை அதிபர்கள் கவனித்துக்கொள்கிறார்கள். பணமோ, தேவையோ தங்களைத் தேடிவருவதால், வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினரின் செயல்பாடுகளும் ஆய்வுகளும் மெத்தனமாகவே இருக்கும். பட்டாசு ஆலைகளில் தப்பித்தவறி ஆய்வுசெய்து தடைசெய்யப் பட்ட சரவெடிகள் உற்பத்திசெய்வதைக் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்கும்போது, பெரிய பட்டாசு ஆலைகளில் ஒருமாதிரியாகவும், சிறிய பட்டாசு ஆலைகளில் வேறுமாதிரியாகவும் நடந்து கொள்வார்கள்.

அந்த அதிகாரியின் மகளுக்கு ரத்த புற்று நோய். வேலூரில் வீடு பிடித்து மனைவியைத் தங்கவைத்து மகளுக்கு வைத்தியம் பார்த்தார். இதைச் சொல்லியே, இன்னும் சொல்லப்போனால் மிரட்டியே, அந்த அதிகாரி கோடிகளில் லஞ்சம் வாங்கிக் குவித்தார். வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையில் அதிகாரிகளும் அலுவலர்களும் அதிகமாக லஞ்சம் வாங்கியது புகாராகி 4 பேரை டிரான்ஸ் பர் செய்துவிட்டார்கள். தற்போது டிரைவர் மூலம் லஞ்சம் வாங்குவதும், ஜி-பே மூலம் லஞ்சம் பெறுவதும் நடக்கிறது. தற்போது இன்சார்ஜ் பொறுப்பிலுள்ள அதிகாரி, பெரிய நிறுவனங்கள் தரும் பெரும்தொகையை சத்தமில்லாமல் வாங்கிக்கொள்கிறார். வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்தில் தற்போது நேரடியாக லஞ்சம் வாங்கு பவர்கள் எண்ணிக்கை சுருங்கிவிட்டது''’என்றார்.

அந்த வட்டாட்சியரை ‘பகல் கொள்ளைக்காரன்’ என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் திட்டித் தீர்க்கிறார்கள். வருவாய்த்துறையினர் மட்டுமல்ல, மற்ற துறையினரும் ஆய்வு என்ற பெயரில் நடத்திவரும் கொள்ளைகள் அதிரடியானவை.

பட்டாசு ஆலைகளின் விதிமீறலுக்கு பச்சைக்கொடி’காட்டி விபத்துகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கும் லஞ்ச அரக்கர்களின் கோரமுகம் தோலுரிக்கப் படுவது தொடரும்…

-அதிதேஜா