பொதுவாக முடிதிருத்தும் தொழிலுக்குச் செல்லவேண்டுமென யாரும் ஆசைப்படமாட் டார்கள். இதனால் அந்தத் தொழிலில் பாரம் பரியமாக குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் கள்தான் ஈடுபட்டு வருகிறார்கள்.
கார்ப்பரேட் நிறுவனங்கள், தமிழகத்தில் முடிதிருத்தும் நிலையங்களைத் தொடங்கி வடமாநிலத்தைச் சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் பணியமர்த்தியுள்ளனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அனைத்து முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்க கூட் டமைப்பு தலைவர் கார்த்திகேயன், "முடிதிருத்தும் தொழில் என்பது குறிப்பாக மருத்துவர்கள் சமுதா யத்தைச் சேர்ந்தவர்களால்தான் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. எங்க சமுதாயத்தின் அடையாள மாக இருக்கும் இந்தத் தொழி லையும் விட்டுவைக்காமல் கார்ப்பரேட் நிறுவனங் கள் உள்ளே புகுந்து எங்க தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்க இறங்கி யுள்ளன.
"வந்தா வெட்டுவோம்' என்ற பெயரில் தமிழ்நாட்டில் திடீரென்று 90 கடைகளைத் திறந்து கட்டிங், சேவிங், ஃபேசியல் என அனைத்து வகைகளுக் கும் நாங்க வாங் கிட்டு இருந்த கட்டணங்களில் நேர் பாதியாக குறைத்து வாங்குவதோடு அதை விளம்பரப்படுத்தி யும் வருகிறார்கள். இதனால் அங்கு வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்து நின்று முடி திருத்திக்கொள்கிறார்கள்.
எந்தெந்த பகுதியில் கார்ப்பரேட் நிறுவனத்தின் கடை இருக்கிறதோ அந்தப் பகுதியை சுற்றியிருக்கும் எங்களின் கடைகளில் ரெகுலர் வாடிக்கையாளர்களே வருவதை நிறுத்திவிட்டனர். தொழிலாளர் நல ஆணையத்தில் பதிவுசெய்யப் பட்ட எங்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புப்படி கட்டணத்தைத் தீர்மானித்துள்ளோம் ஆனால் கார்ப்பரேட் நிறுவனம் எந்தப் பதிவும் இல்லாமல் அவர்கள் விருப்பப்படி கட்டணத்தை தீர்மானித் திருக்கிறார்கள்.
நாங்க எல்லாருமே வாடகைக் கட்டடத் தில்தான் கடை நடத்தி வருகிறோம். வாடகையும் சம்பளமும் கொடுத்தது போக கையில் ஏதோ செலவுக்கு மிஞ்சும். நாங்க எல்லாருமே பொருளாதாரத்தில் மிகவும் பின்தங் கியே இருக்கிறோம். ஆனால் கார்ப்ப ரேட் நிறுவனம் பல லட்சம் கொடுத்து கடைகளை எடுத்து பல லட்சங்கள் செலவு செய்து அலங்காரம் செய்திருக்கிறார்கள். இது எங்களால் முடி யாது.
கார்ப்பரேட் நிறு வனத்தின் திட்டம் என்னவென்றால் ஆடம்பர மான கடையைக் காட்டி குறைந்த கட்டணத்தை வாங்கி வாடிக்கையாளர் களை அவர்கள் பக்கம் இழுத்து, அதன் மூலம் எங்க கடைகளை இழுத்து பூட்ட வச்சிட்டு அதன் பிறகு அவர்கள் கட்ட ணத்தை முடிவு செய்வார் கள். அது நாங்க வாங்கிட்டு இருந்ததைவிட அதிகமா தான் இருக்கும். தற்போது மணமக்கள் அலங்காரத்துக்கு கவர்ச்சி ஆஃபர்களை போட்டு செல்போனில் மெசேஜ் அனுப்பி அழைக்கிறார்கள். மணமக்களுக்கு தனி கிப்ட்டும் கொடுக்கிறார்கள்.
கார்ப்பரேட் நிறுவனம் வியாபாரரீதியாக மட்டுமே முடிதிருத்தும் தொழிலில் இறங்கியுள் ளது. ஆனால் நாங்க குடும்பங்களின் வாழ்வாதாரத் துக்காக இந்த தொழிலில் காலம் காலமாக ஈடுபட்டு வருகிறோம். எங்க சமுதாயத்தைச் சேராத வடநாட்டுக் காரர்களை இந்த தொழிலில் குறைந்த சம்பளத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். தமிழகத்தில் 3 லட்சம் குடும்பங்கள் இந்த தொழிலை நம்பியிருக்கிறார்கள்.
இந்தத் தொழிலில் தற்போது இறங்கியிருக்கும் கார்ப்பரேட் நிறுவனம் மற்றும் வடமாநில தொழிலாளர்களைக் கட்டுப்படுத்தி ஒரு ஒழுங்குமுறைக்குள் பாரம்பரிய தொழிலாளர்களான எங்களின் வாழ்வும் நசுக்கப்படாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டரிடம் மனு கொடுத் திருக்கிறோம். முதல்வரின் கவனத்துக்கும் இதைக் கொண்டுசெல்ல இருக்கிறோம்''’என்றார்.
குமரி மாவட்டச் செயலாளர் கருப்பசாமி கூறும்போது, "சமூகத்தில் எங்க தொழிலில் எங்களைத் தவிர வேற யாரும் ஈடுபடமாட்டார்கள் என நம்பியிருந்தோம். ஆனால் அதையும் விட்டு வைக்காமல் கார்ப்பரேட் உள்ளே நுழைந்துவிட் டது. இங்கே 3 இடங்களில் கார்ப்பரேட் நிறுவனம் கடையை ஆரம்பித்துள்ளது. இதில் திங்கள் சந்தையில் கார்ப்பரேட் கடையைத் திறந்து வைத்தவர் அந்த பகுதி காவல்அதிகாரி.
அந்தக்கடையின் வெளியில் வைக்கப்பட்டி ருந்த குறைந்த கட்டணம் பலகையை கடைக்கு உள்ளே வையுங்கள் என்று சங்க நிர்வாகிகள் சென்று கூறினோம். அந்த காவல் அதிகாரியை வைத்து எங்களை மிரட்டினார்கள். எல்லாருமே கார்ப்பரேட் நிறு வனத்துக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள். நாங்க உயி ருள்ள மனிதனுக்கு மட்டுமல்ல… உயிரிழந்த பிணத் துக்கும் சுடுகாடு வரை போய் வேலை செய்கிறோம். அதை கார்ப்பரேட் செய்யுமா?''’என்றார்.
கார்ப்பரேட் கடையில் வேலைசெய்யும் வடமாநில தொழிலாளர்களிடம் பேசியபோது, “"முடிவெட்டுறது, சேவிங் செய்றது தெரியுமானு இன்டர்வியூ வச்சுதான் எங்களை எடுத்தாங்க. எல்லாருக்கும் மாதச் சம்பளம்தான். வேலையிருந் தாலும் இல்லாவிட்டாலும் சம்பளம் கிடைக்கும். இப்ப அதிகம் வேலை இருக்கு. காலையிலிருந்து இரவுவரை குழந்தைகள், இளைஞர்கள், வய தானவர்கள் என பல தரப்பினரும் வருகிறார்கள்.
கடைக்குத் தேவையான பொருட்களை கம்பெனியே வாங்கித் தந்துவிடும். எந்த பொருளும் நாங்க வாங்கவேண்டியது இல்லை. கடையில் நடப்பதையெல்லாம் முதலாளி சி.சி.டி.வி.யில் பார்த்திட்டு இருப்பார்''’என்கின்றனர்.
"மேடையைப் போலவே, அரசியல் பேசுவதற்கான, பகுத்தறிவு பிரச்சாரத்துக்கான இடமாக சலூன் கடைகள் இருந்ததாக திராவிட தலைவர்களே மேடைகளில் பேசியிருக்கிறார்கள். இப்படி திராவிடத்தையும் தமிழர்களின் வாழ் வியலையும் வளர்த்த ஒரு தொழில், கார்ப்பரேட் முதலாளிகளின் கையில் சிக்கியிருக்கிறது' என ஆதங்கப்பட்டுக்கொள்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.