பூத் கமிட்டி! அதிருப்தியில் இ.பி.எஸ்! கலக்கத்தில் மா.செ.க்கள்!

ss

2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு ஒவ்வொரு கட்சியும் தயாராகி வருகின்றன. வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டத்தினை தமிழ்நாட்டில் மண்டலவாரியாக 5 இடங்களில் நடத்தி ஆலோசனை கூறியுள்ளது ஆளும்கட்சியான தி.மு.க. எதிர்க்கட்சியான அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களை சேர்க்கச் சொல்லி மா.செ.க்களுக்கு உத்தரவிட்டுள்ளது. பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக கட்சித் தலைமை கூறியுள்ள கண்டிஷன்களால் திணறிவருகின்றனர் அ.தி.மு.க. நிர்வாகிகள்.

dd

இதுபற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர், “"தமிழ்நாட்டில் சுமார் 90,000 வாக்குச்சாவடிகள் உள்ளன. தி.மு.க.வில் ஒரு வாக்குசாவடிக்கு 20 பேர் என சேர்த்து பயிற்சி வழங்கிவருகிறார்கள். எங்கள் கட்சியில் ஒரு வாக்குசாவடிக்கு 69 பேரை சேர்க்கச்சொல்லி உத்தரவிட்டுள்ளது தலைமை. ஒவ்வொரு பூத் அளவிலும் மகளிரணி, பாசறையை உருவாக்கச் சொல்லியுள்ளனர். மகளிரணிக்கு தலைவர், இரண்டு துணைத்தலைவர், செய லாளர், இரண்டு இணைச்செய லாளர், இரண்டு துணைச் செயலா ளர், பொருளாளர் என 9 பேர், செயற்குழு உறுப்பினர்கள் 9 பேர், உறுப்பினர்கள் 7 பேர் என 25 பேர் இருக்கவேண்டும். அதேபோல் ஒவ் வொரு பூத் அளவிலும்

2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு ஒவ்வொரு கட்சியும் தயாராகி வருகின்றன. வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டத்தினை தமிழ்நாட்டில் மண்டலவாரியாக 5 இடங்களில் நடத்தி ஆலோசனை கூறியுள்ளது ஆளும்கட்சியான தி.மு.க. எதிர்க்கட்சியான அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களை சேர்க்கச் சொல்லி மா.செ.க்களுக்கு உத்தரவிட்டுள்ளது. பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக கட்சித் தலைமை கூறியுள்ள கண்டிஷன்களால் திணறிவருகின்றனர் அ.தி.மு.க. நிர்வாகிகள்.

dd

இதுபற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர், “"தமிழ்நாட்டில் சுமார் 90,000 வாக்குச்சாவடிகள் உள்ளன. தி.மு.க.வில் ஒரு வாக்குசாவடிக்கு 20 பேர் என சேர்த்து பயிற்சி வழங்கிவருகிறார்கள். எங்கள் கட்சியில் ஒரு வாக்குசாவடிக்கு 69 பேரை சேர்க்கச்சொல்லி உத்தரவிட்டுள்ளது தலைமை. ஒவ்வொரு பூத் அளவிலும் மகளிரணி, பாசறையை உருவாக்கச் சொல்லியுள்ளனர். மகளிரணிக்கு தலைவர், இரண்டு துணைத்தலைவர், செய லாளர், இரண்டு இணைச்செய லாளர், இரண்டு துணைச் செயலா ளர், பொருளாளர் என 9 பேர், செயற்குழு உறுப்பினர்கள் 9 பேர், உறுப்பினர்கள் 7 பேர் என 25 பேர் இருக்கவேண்டும். அதேபோல் ஒவ் வொரு பூத் அளவிலும் இளைஞர், இளம் பெண் பாசறை உருவாக்க வேண்டும். அதில் தலைவர், துணைத் தலைவர்கள், செயலா ளர், துணை, இணைச் செயலா ளர்கள், பொருளாளர், செயற் குழு உறுப்பினர்கள் 6 பேர் என 15 பேரும், உறுப்பினர் கள் 10 பேர் என 25 பேர் நியமிக்கவேண்டும் என தனித்தனியாக இரண்டு புக்லெட் தந்துள்ளார்கள்.

இந்த அணிகளை உருவாக்கியபின் பூத் கமிட்டி உருவாக்கவேண்டும். அதில், கழக நிர்வாகிகள் 7 பேர், மகளிரணியிலிருந்து 5 பேர், இளைஞர் பாசறையிலிருந்து 3 பேர், இளம் பெண் பாசறையிலிருந்து 2 பேர், தகவல்தொழில் நுட்ப அணியிலிருந்து 2 பேர் என 19 பேர் இருக்கவேண்டும். இந்த 19 பேரிலிருந்து ஒருவரை தலைவராக நியமிக்கவேண்டும். மகளிரணி, பாசறை, பூத் கமிட்டியில் சேர்க்கப் படும் 69 பேரும் அந்தந்த பூத் பகுதியில் வசிக்கவேண்டும். அவர்களின் பெயர், முகவரி, ஆதார் எண், வாக்காளர் எண், போட்டோ, செல் நம்பர் போன்றவற்றை அதற்கான பக்கத்தில் நிரப்பி இந்த 3 புத்தகத்தை பொறுப்பாளர்களி டம் ஒப்படைக்கவேண்டும் எனக் கூறியுள்ளனர்.

இப்படி ஒவ்வொரு பூத்துக்கும் 69 பேரை சேர்த்துவருகின்றனர். அந்தந்த பகுதி நிர் வாகிகள். இந்தப் பணிகள் சரியாக நடக்கிறதா என கண்காணிக்க வேலூர் மாநகரிலுள்ள 60 வார்டுகளுக்கும், வார்டுக்கு 3 பொறுப்பாளர் களை நியமித்துள்ளார் மாநகரச் செயலாளர் அப்பு. மாவட்டம் முழுவதும் இந்த பணிகள் சரியாக நடக்கிறதா என கண்காணிக்க மாவட் டத்துக்கு ஒருவர் என பொறுப்பாளர்களை நியமித்துள்ளார் இ.பி.எஸ். வேலூர் மாவட்டத் துக்கு முன்னாள் அமைச்சர், அமைப்புச் செயலாளர் முக்கூர்.சுப்பிரமணி பொறுப்பாளர். அவர் வேலூர் மாவட்டத்தில் மகளிரணி, பாசறை, பூத் கமிட்டி பட்டியலை ஆய்வுசெய்த போது, மகளிரணியில் பெண்களின் எண்ணிக்கை குறைவு, இளைஞர் இளம்பெண் பாசறையில் பெயர்மட்டும் இருந்துள்ளது, ஆதார், மொபைல் எண், புகைப்படம் எதுவும் இல்லாததைப் பார்த்து அதிர்ச்சியாகியுள்ளார். அவர்களிடம் கேட்டபோது, கட்சியில் உள்ள பெண்களே, போட்டோ, ஆதார் கார்டு தரமறுக்கிறார்கள் என்றுள்ளார்கள். ஏன் எனக் கேட்டவரிடம், ஆதார் கார்டை வச்சி பணம் எடுக்கலாம்கிறதால் பெண்கள் ஆதார் நம்பர் தரப் பயப்படறாங்க என்றுள்ளனர். இதனை அப்படியே தலைமைக் குக் கூறியுள்ளார். வேறுசில மாவட்டப் பொறுப்பாளர்களும் இதேபோல் கூறியதைக் கேட்டு கோபமாகியுள்ளார் இ.பி.எஸ்.''’என்றார்.

eps

ஒரு கோடி உறுப்பினர்கள் உள்ள கட்சி எனச் சொல்லும் அ.தி.மு.க.வில் ஒரு பூத்துக்கு 69 பேரை நியமிக்கமுடியவில்லையா என திருவண்ணாமலையைச் சேர்ந்த வட்டச்செயலா ளர் ஒருவரிடம் கேட்டபோது, “"திருவண்ணா மலையில் 39 வார்டுகள் உள்ளன, இதில் பல வார்டுகளில் 5 முதல் 7 பூத்கள் வரை உள் ளன. ஒரு பூத்துக்கு 69 பேர் என்றால் 7 பூத்து களுக்கு 483 பேரை உறுதியாக சேர்க்கவேண்டிய நிலை. 5 ஆயிரம் வாக்காளர்கள் உள்ள ஒரு வார் டில் 483 பேரை எப்படி சேர்க்கமுடியும்?. எங்கள் கட்சிக்காரர்களின் வீட்டுப் பெண்களிடம், மக ளிரணியில் சேருங்க, பாசறையில் இணைங்கன்னு அழைத்தால் மூஞ்சியில் அடித்தாற்போல நாங்க சேரவிரும்பலன்னு சொல்றாங்க. அ.தி.மு.க.வில் இருந்தால் அரசின் சலுகைகள் கிடைக்காதோ குறிப்பா ஆயிரம் ரூபாய் கிடைக்காதோ என தயங்குகின்றனர்''’ என்றார்.

இதுபற்றி அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, "அம்மா உயிரோடு இருந்தவரை கட்சி நிர்வாகிகள், தொண்டர்களி டம் பயமிருந்தது. அவரின் குட்புக்கில் இடம் பெற கட்சி வேலைகளை ஒழுங்காகச் செய் தார்கள். இப்போது இ.பி.எஸ் கட்டுப்பாட்டில் கட்சி இருந்தாலும் நிர்வாகிகள் உட்பட யாரும் அவர் சொல்வதைக் கேட்பதில்லை. 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போதே தங்களுக்குத் தெரிந்த அல்லது குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்களை எழுதி, யார், யார் போட்டோவோ ஒட்டித்தந்து கணக்கு காட்டினார்கள். 2021 சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு தரச்சொல்லி தலைமை தந்த பணம் 50 சதவிகிதம்கூட வாக்காளர்களுக்கு போய்ச்சேரவில்லை. இந்த குளறுபடிகளைச் சரிசெய்ய முயல்கின்றனர். பெண்கள், இளைய சமுதாயத்தின் ஆதரவை எங்கள் கட்சி இழந்துள்ளது, தி.மு.க. வலிமையாகி இருக்கிறது என இ.பி.எஸ். எடுத்த தனியார் நிறுவன சர்வே சொல்லியுள்ளது. தி.மு.க.வுக்குச் செல்லும் இளையசமுதாயம், பெண்களைத் தடுக்கவே பூத் லெவலில் மகளிரணி, பாசறை உருவாக்கப்படு கிறது. மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு மா.செ.க்கள் நியமிக்கப்பட்டதும் கட்சியை வலிமையாக்கவே. அதேபோல் கட்சியின் கீழ்மட் டத்தில் கிளை, வார்டு பதவிகளை காலிசெய்து பூத் அளவிலான பதவிகளைக் கொண்டு வரலாமா என ஆலோசனை நடக்கிறது'' என் றார். மகளிரணி, பாசறை, பூத் கமிட்டி உறுப்பினர்களை சேர்க்கவில்லையென பல மா.செ.களை தொடர்புகொண்டு இ.பி.எஸ். கடுமையாகப் பேசினார். பல மா.செ.க்கள் பதவி பறிபோகுமோ என கலக்கத்தில் உள்ளனர்'' என் கிறார்கள் விவரமறிந்த அ.தி.மு.க. பிரமுகர்கள்.

ss

nkn071223
இதையும் படியுங்கள்
Subscribe