ராங்கால் பூமராங் ஆன கவர்னர் புகார்! அண்ணாமலை கைது! தப்பிக்கும் அதிகாரி! தவிக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை! தி.மு.க. இளைஞரணி ஆதங்கம்!

ff

"ஹலோ தலைவரே, ராஜ்பவன் வீசிய புகார் குண்டு, கவர்னர் தரப்புக்கே சங்கடத்தை ஏற்படுத்துகிறது.''”

"ஆமாம்பா, காவல்துறை மீதும், தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் மீதும் கவர்னர் தரப்பு அடுக்கிய புகார்கள் வலுவிழந்து போயிடுச்சே?''”

"ஆமாங்க தலைவரே, போதைக்கு அடிமையான கருக்கா வினோத் என்ற நபர், ராஜ்பவன் வாசல் பகுதியில் பெட்ரோல் குண்டுவீசி பிடிபட்ட நிலையில், கவர்னருக்கு தி.மு.க. மற்றும் அதன் தோழமைக்கட்சிகள் தரப்பில் இருந்து அச்சுறுத்தல் இருப்பதாகவும், குற்றவாளிகள் சிலர் பெட்ரோல் குண்டுகளுடன் ராஜ்பவனுக்குள் நுழைய முயன்றதாகவும் காவல்துறையில் கவர்னர் சார்பில் பரபரப்பான புகார் கொடுக்கப்பட்டது. கூடவே, இந்த வழக்கில் தேச விரோத செயலுக்கான செக்சன் 124 ஐ பிரயோகிக்க வேண்டும் என்றும் ராஜ்பவன் வலியுறுத்தியது. இந்த நிலையில் காவல்துறை டி.ஜி.பி. சங்கர் ஜிவாலும், சென்னை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரும், ’கவர்னர் மாளிகையை நோக்கி வினோத் மட்டும் தனியாக வரும் வீடியோ கிளிப்பிங்ஸை போட்டுக் காட்டி, கவர்னரின் குற்றச்சாட்டை அதிரடியாக மறுத்து விளக்கம் கொடுத்தனர். டி.ஜி.பி.யே, தனக்கு எதிராக இப்படியொரு விளக்கத்தைக் கொடுப்பார் என்று எதிர்பார்க்காத கவர்னர் ரவி, இதில் ஷாக் ஆகிவிட்டாராம். மேலும், செக்ஷன் 124-ஐ, எந்த அரசும் பயன்படுத்தக்கூடாது என்று உச்சநீதி மன்றம் தடை விதித்திருப்பதைக்கூட அறிந்து கொள்ளாமல், கவர்னர் மாளிகை சொல்லிவந்ததும் இப்போது சர்ச்சையாகி வருகிறது. தேவையற்ற ஆத்திரத்தில், பெட்ரோல் குண்டு விவகாரத்தை தி.மு.க. அரசுக்கு எதிராக, வீச முயன்று, கவர்னர் சங்கடத்தை சந்தித்து வருவதாக ராஜ்பவன் அதிகாரிகள் மட்டத்தி லேயே பேச்சு எழுந்திருக்கிறது.''”

rr

"பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை கைதாகலாம் என்று, அவர் தரப்பிலேயே பதட்டம் ஏற

"ஹலோ தலைவரே, ராஜ்பவன் வீசிய புகார் குண்டு, கவர்னர் தரப்புக்கே சங்கடத்தை ஏற்படுத்துகிறது.''”

"ஆமாம்பா, காவல்துறை மீதும், தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் மீதும் கவர்னர் தரப்பு அடுக்கிய புகார்கள் வலுவிழந்து போயிடுச்சே?''”

"ஆமாங்க தலைவரே, போதைக்கு அடிமையான கருக்கா வினோத் என்ற நபர், ராஜ்பவன் வாசல் பகுதியில் பெட்ரோல் குண்டுவீசி பிடிபட்ட நிலையில், கவர்னருக்கு தி.மு.க. மற்றும் அதன் தோழமைக்கட்சிகள் தரப்பில் இருந்து அச்சுறுத்தல் இருப்பதாகவும், குற்றவாளிகள் சிலர் பெட்ரோல் குண்டுகளுடன் ராஜ்பவனுக்குள் நுழைய முயன்றதாகவும் காவல்துறையில் கவர்னர் சார்பில் பரபரப்பான புகார் கொடுக்கப்பட்டது. கூடவே, இந்த வழக்கில் தேச விரோத செயலுக்கான செக்சன் 124 ஐ பிரயோகிக்க வேண்டும் என்றும் ராஜ்பவன் வலியுறுத்தியது. இந்த நிலையில் காவல்துறை டி.ஜி.பி. சங்கர் ஜிவாலும், சென்னை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரும், ’கவர்னர் மாளிகையை நோக்கி வினோத் மட்டும் தனியாக வரும் வீடியோ கிளிப்பிங்ஸை போட்டுக் காட்டி, கவர்னரின் குற்றச்சாட்டை அதிரடியாக மறுத்து விளக்கம் கொடுத்தனர். டி.ஜி.பி.யே, தனக்கு எதிராக இப்படியொரு விளக்கத்தைக் கொடுப்பார் என்று எதிர்பார்க்காத கவர்னர் ரவி, இதில் ஷாக் ஆகிவிட்டாராம். மேலும், செக்ஷன் 124-ஐ, எந்த அரசும் பயன்படுத்தக்கூடாது என்று உச்சநீதி மன்றம் தடை விதித்திருப்பதைக்கூட அறிந்து கொள்ளாமல், கவர்னர் மாளிகை சொல்லிவந்ததும் இப்போது சர்ச்சையாகி வருகிறது. தேவையற்ற ஆத்திரத்தில், பெட்ரோல் குண்டு விவகாரத்தை தி.மு.க. அரசுக்கு எதிராக, வீச முயன்று, கவர்னர் சங்கடத்தை சந்தித்து வருவதாக ராஜ்பவன் அதிகாரிகள் மட்டத்தி லேயே பேச்சு எழுந்திருக்கிறது.''”

rr

"பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை கைதாகலாம் என்று, அவர் தரப்பிலேயே பதட்டம் ஏற்பட்டிருக்கிறதே?''”

"கிறிஸ்தவ மத நிறுவனங்கள் இந்து கலாச்சாரத்தை அழிக்க சதி செய்கின்றன என்று அண்ணாமலை பகிரங்கமாகக் குற்றம் சாட்டி, சிறுபான்மைச் சமூகத்தினருக்கு எதிரான பதட்டத்தை ஏற்படுத்தி இருந்தார். இதை எதிர்த்து சமூக ஆர்வலரான பியூஸ்மனூஸ், அண்ணாமலை மீது சேலம் காவல்துறையில் புகார் கொடுத்தார். அதை போலீஸ் ஏற்க வில்லை. ஆகவே பியூஸ்மனூஸ் நீதிமன்றத்துக் குச் சென்றார். நீதிமன்றமோ, அண்ணாமலை மீது வழக்கைப் பதிவுசெய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட் டது. இதையொட்டி, அண்ணா மலை மீது வழக்கு தொடுக்க, சேலம் ஆட்சியர் அரசிடம் அனுமதி கேட்க, அரசும் தற்போது அதிரடியாக அனுமதி வழங்கி அண்ணாமலை தரப்புக்கு ஷாக் கொடுத்திருக்கிறது. பா.ஜ.க., மாநில நிர்வாகிகளில் ஒருவ ரான அமர்பிரசாத் ரெட்டி மீது பல்வேறு வழக்குகள் பாய்ந் திருக்கும் நிலை யில், அவர் மீதான வழக்குகளிலும் அண்ணா மலைக்கு தொடர்பு இருப்பதாக புகார்கள் இருக்கின்றன. இந்த சூழலில், பியூஸின் வழக்கும் அவருக்கு எதிராக, வலுவாக வடிவெடுத்திருக் கிறது. எனவே, அண்ணாமலை விரைவில் கைதாகலாம் என்கிற பதட்டம் அவர் தரப்பைத் தொற்றிக்கொண் டிருக்கிறது.''”

"சபாநாயகருக்கு எதிராக எடப்பாடி தரப்பு உயர்நீதிமன்றம் சென்றிருக்கிறதே?”

rr

""தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக இருக்கும் ஓ.பி.எஸ்.ஸை நீக்கிவிட்டு, புதிய துணைத்தலைவராக ஆர்.பி. உதயகுமாரை 2022 ஜூலையிலேயே நியமித்து விட்டார் எடப்பாடி. இதைத் தொடர்ந்து, அவருக்கான இருக்கையை மாற்றியமைக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை வைத்ததோடு, அவருக்கு இதுவரை 5 கடிதங்கள் வரை எழுதியிருக்கிறது எடப்பாடி தரப்பு. எனினும் எதுவும் நடக்கவில்லை. எனவே, தனது கோரிக்கையை சபாநாயகர் ஏற்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 27 ஆம் தேதி எடப்பாடி தரப்பு மனுத்தாக்கல் செய்திருக்கிறது. இந்த வழக்கு எப்படிப் போகும் என்று, தேர்தல் வழக்குகளில் அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களிடம் விசாரித்தபோது, எது குறித்தும் சபாநாயகருக்கு உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றத்துக்குக் கிடையாது. அதேசமயம் ஒரு விவகாரம் குறித்து சபாநாயகர் முடிவு எடுத்துவிட்டால், அந்த முடிவை எதிர்த்து ஒரு வழக்கு நீதிமன்றத்துக்கு வருமாயின் அந்த முடிவு சரியா? தவறா? என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியும்’ என்றார்கள். எனவே, எடப்பாடி தரப்பின் மனு தள்ளுபடி ஆகலாம் என்ற எதிர்பார்ப்பு பரவலாக நிலவுகிறது.''”

"பங்காரு அடிகளார் விவகாரத்தில் எடப்பாடி சொந்தக் கட்சியினரின் விமர்சனத் தை சந்தித்திருக்கிறாரே?''”

"உண்மைதாங்க தலைவரே, பங்காரு அடிகளாரின் மறைவை அடுத்து, அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால், எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி, அஞ்சலி செலுத்தப் போகவில்லை. உடனே, அ.தி.மு.க.வில் இருக்கும் வன்னியர் சமூகப் பிரமுகர்கள் அவரிடம் இதை நேரடியாகவே சுட்டிக்காட்டி, தேவர் ஜெயந்தி உட்பட பல சமூகத் தலைவர்களின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நீங்கள், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த அடிகளாரைப் புறக்கணித்தது ஏன்? இது சரிதானா? என்று விமர்சனத்தை வைத்தனர். இதனால் திகைத்துப்போன எடப்பாடி, சட்டென கடந்த 28ஆம் தேதி கட்சி நிர்வாகிகள் சிலருடன், துக்கம் கேட்க மேல்மருவத்தூருக்கு விசிட் அடித்திருக்கிறார். அங்கு அவர் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய எடப்பாடி, அவர் குடும்பத்தாருக்கும் ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார்.''”

"மோசடி விவகாரத்தில் தொடர்புடைய ஒரு அதிகாரி மீது, லஞ்சஒழிப்புத் துறையால் நடவடிக்கை எடுக்கமுடியவில்லை என்கிறார்களே?''”

"ஆமாங்க தலைவரே, மோசடிப் புகாரில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, தொடர்ந்து ஜாமீனுக்குப் போராடி வருகிறார். இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகையும் கூடுதல் குற்றப் பத்திரிகையும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய்யப்பட்டுவிட்டது. இந்த மோசடி வழக்கில், அரசு அதிகாரிகள் சிலரின் மீதும் எஃப்.ஐ.ஆர். போடப்பட்டது. அப்படிப் போடப்பட்ட அதிகாரி களில் ஒருவரான வெற்றிச்செல்வன், தற்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை இயக்குநராக இருக்கிறார். இவர் மீது வழக்குத் தொடர அரசின் அனுமதியை லஞ்ச ஒழிப்புத் துறை வாங்கிய நிலையில், ஒரு மூத்த அமைச்சரின் தலையீட்டால், அவரை நெருங்கமுடியாமல் அந்தத் துறை அதிகாரிகள் கைபிசைகிறார்களாம். இவரைக் குறைந்தபட்சம் துறை சார்பில் சஸ்பெண்டாவது செய்திருக்க வேண்டுமாம். ஆனால் அதற்கும் அந்த அமைச்சர் குறுக்கே நிற்கிறார் என்று அதிகாரி கள் தரப்பிலேயே சர்ச்சை கிளம்பியுள்ளது.”

"விடாது கருப்புங்கிற மாதிரி, ஆவின் சலசலப்பு இன்னும் தொடருதே?''”

rr

’"உண்மைதாங்க தலைவரே, ஆவின் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மாதவரம் பால்பண்ணையில் 10 கோடி ரூபாய் மதிப்பில் கன்வேயர் சிஸ்டம் அமைக்க, அண்மையில் டெண்டர் அறி விக்கப்பட்டது. இதில், சில நிறுவனங்கள் கலந்துகொண்டிருக்கின்றன. இருப்பினும், ராகவேந்திரா ஆட்டோமேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு அந்த டெண்டரைக் கொடுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த நிறுவனத்துக்கு கன்வேயர் சிஸ்டத்தில் அனுபவம் இல்லையாம். இப்படி அனுபவம் இல்லாத நிறுவனம் டெண்டரில் கலந்துகொள்ள வேண்டும் என்றால், அனுபவம் வாய்ந்த வேறொரு நிறுவனத்தோடு அது டை-அப் வைத்துக் கொண்டு கலந்துகொள்ள லாம். அதற்கு அந்த நிறுவனத்தின் ஆதரைசேசன் கடிதம் இணைக்கப் பட்டிருக்க வேண்டும்.''

அதனால் இந்த ராகவேந்திரா நிறுவனத்துக்கு, அனுபவம் கொண்ட, ஹைதரா பாத் இண்ட்ரோகான் கன்வேயர் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்திடம், அங்கீகாரக் கடிதம் கேட்டிருக்கிறது. ஆனால் அந்த ஹைதராபாத் நிறுவனமோ, நாங்கள் ஏற்கனவே பாலாஜி என்ற கம்பெனிக்காக ஆதரைசேசன் கடிதம் கொடுத்துவிட்டோமே என்று கைவிரித்திருக்கிறது.''”

"பிறகு?''”

"’நீங்கள் இப்படி எத்தனை நிறுவனத்துக்கு வேண்டுமானாலும் கடிதம் கொடுக்கலாம் என்று வலியுறுத்தி கடிதம் வாங்கிவிட்டது ராகவேந்திரா ஆட்டோமேஷன் நிறுவனம். இந்த நிலையில், டெண்டரில் கலந்துகொள்ள அக்டோபர் 18ஆம் தேதி கடைசி நாள். ராகவேந்திர நிறுவனத்துக்ககாக ஹைதரா பாத் நிறுவனமோ அக்டோபர் 26ஆம் தேதிதான் அந்தக் கடிதத்தைத் தந்திருக்கிறது. டெண்டர் அப்ளை செய்ய கடைசி நாள் முடிந்த பிறகு எந்த ஒரு டாகுமெண்டும் இணைக்கப்பட கூடாது என்பதுதான் டெண்டர் விதி. இருந்தும், அந்த அங்கீகாரக் கடிதத்தை இணைத்தே ஆகவேண்டும் என்று அதிகாரிகளை மிரட்டி வருகிறார்களாம். இதேபோல் இந்த டெண்டரை ராகவேந்திரா நிறு வனத்துக்கே கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்று ஆவின் அதிகாரி களும் மிரட்டப்பட்டு வருகிறார்களாம். இந்த விவகாரம் ஆவினைக் கொதிநிலைக்கு கொண்டுபோயிருக் கிறதாம்.''’

rr

"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன்.அமைச்சர் உதயநிதி, கடந்தவாரம் மதுரை, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் விசிட் அடித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது இளைஞரணியினர் திரளாக வந்து கலந்துகொண்டதுடன், எல்லா நிகழ்ச்சிகளிலும் வரிசையில் நின்று அவருக்கு பூங்கொத்து, சால்வைகளை வழங்கினர். எனினும், உதயநிதி யாருடனும் புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லையே என்கிற ஆதங்கம் இளைஞரணியினர் மத்தி யில் நிலவுகிறதாம்.''”

nkn011123
இதையும் படியுங்கள்
Subscribe