எரிகிற விளக்கு அணையப் போகும் முன்பு பிரகாசமாக எரியும். இதுதான் அண்ணாமலை வெளியிட்ட சொத்துப் பட்டியல் ஏற்படுத்தும் விளைவு என்கிறார்கள் பா.ஜ.க.வின் தேசியத் தலைவர்கள். தமிழக அரசியலில் எந்தப் பிரச்னையிலும் தி.மு.க.வுடன் கைகோர்த்து அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வந்ததில்லை. இந்த மூன்று கட்சிகளையும் அண்ணாமலை வெளியிட்ட சொத்துப்பட்டியல் ஒன்றுசேர்த்திருக்கிறது என்கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.
அண்ணாமலை தி.மு.க.வின் சொத்துப்பட்டியலை வெளியிட்டுப் பேசும் போது அ.தி.மு.க. வும் ஊழல் செய் துள்ளது. அ.தி. மு.க. தலைவர் களின் சொத்துப் பட்டியலை வெளியிடுவேன் என பேசியது அ.தி.மு.க. தலை வர்களை காயப் படுத்தியது. “தி.மு.க. ஊழல் கட்சி, அவர்கள் கொள்ளையடித்தவர்கள் என்பதுதான் அ.தி.மு.க.வின் அடிநாதமான தாரக மந்திரம்.” அதைப்பற்றி யார் பேசினாலும் தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளை கைப்பற்றுவதில் முன்னணி கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வுக்கு தான் இலாபம். ஆனால், தி.மு.க.வுடன் சேர்த்து அ.தி.மு.க.வையும் ஊழல் கட்சி என அண்ணாமலை சொல்வது ஏன்?
அது அ.தி.மு.க., தி.மு.க. தவிர்த்து தனி இயக்கம் கண்ட தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர், பா.ம.க., மக்கள் நீதி மையம் போன்ற கட்சிகள் செய்த செயல். அதை ஏன் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்கிறார்? என அ.தி.மு.க. குழம்பிப் போனது. அவர்கள் பா.ஜ.க.வின் தேசியத் தலைவர்களோடு தொடர்புகொண்டு “அ.தி.மு.க.வை ஊழல் கட்சி என தமிழக பா.ஜ.க. தலைவரே சொல்கிறார். எப்படி நாம் கூட்டணியாகத் தொடரமுடியும்”எனக் கேள்வி எழுப்பினார்கள்.
பா.ஜ.
எரிகிற விளக்கு அணையப் போகும் முன்பு பிரகாசமாக எரியும். இதுதான் அண்ணாமலை வெளியிட்ட சொத்துப் பட்டியல் ஏற்படுத்தும் விளைவு என்கிறார்கள் பா.ஜ.க.வின் தேசியத் தலைவர்கள். தமிழக அரசியலில் எந்தப் பிரச்னையிலும் தி.மு.க.வுடன் கைகோர்த்து அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வந்ததில்லை. இந்த மூன்று கட்சிகளையும் அண்ணாமலை வெளியிட்ட சொத்துப்பட்டியல் ஒன்றுசேர்த்திருக்கிறது என்கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.
அண்ணாமலை தி.மு.க.வின் சொத்துப்பட்டியலை வெளியிட்டுப் பேசும் போது அ.தி.மு.க. வும் ஊழல் செய் துள்ளது. அ.தி. மு.க. தலைவர் களின் சொத்துப் பட்டியலை வெளியிடுவேன் என பேசியது அ.தி.மு.க. தலை வர்களை காயப் படுத்தியது. “தி.மு.க. ஊழல் கட்சி, அவர்கள் கொள்ளையடித்தவர்கள் என்பதுதான் அ.தி.மு.க.வின் அடிநாதமான தாரக மந்திரம்.” அதைப்பற்றி யார் பேசினாலும் தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளை கைப்பற்றுவதில் முன்னணி கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வுக்கு தான் இலாபம். ஆனால், தி.மு.க.வுடன் சேர்த்து அ.தி.மு.க.வையும் ஊழல் கட்சி என அண்ணாமலை சொல்வது ஏன்?
அது அ.தி.மு.க., தி.மு.க. தவிர்த்து தனி இயக்கம் கண்ட தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர், பா.ம.க., மக்கள் நீதி மையம் போன்ற கட்சிகள் செய்த செயல். அதை ஏன் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்கிறார்? என அ.தி.மு.க. குழம்பிப் போனது. அவர்கள் பா.ஜ.க.வின் தேசியத் தலைவர்களோடு தொடர்புகொண்டு “அ.தி.மு.க.வை ஊழல் கட்சி என தமிழக பா.ஜ.க. தலைவரே சொல்கிறார். எப்படி நாம் கூட்டணியாகத் தொடரமுடியும்”எனக் கேள்வி எழுப்பினார்கள்.
பா.ஜ.க.வுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் ஜக்கி வாசுதேவ், வேலுமணி, தங்கமணி ஆகியோரிடமும் எடப்பாடி தொடர்பு கொண்டு அண்ணாமலையின் அ.தி.மு.க. மீதான குற்றச்சாட்டு ஏன் எனக் கேள்வி எழுப்பினார். பதினாறாம் தேதி நடை பெற்ற அ.தி. மு.க. செயற்குழு கூட்டத்திற்குள் இந்தக் கேள்வி விவாதத் துக்கு உள்ளானது. அ.தி.மு.க.வினர் பலரும் இந்தக் கேள்வியை எடப் பாடியை நோக்கி முன்வைத்தார்கள். அதற்கு எடப்பாடி சொன்ன பதில் “அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக் கும் பா.ஜ.க.விற்கும் எந்தத்தொடர்பும் இல்லை. அவர் தனியாக போட்டியிட வேண்டும் என விரும்புகிறார். அவரது நிலைப்பாட்டை பா.ஜ.க. ஏற்கவில்லை என்றார்.
எடப்பாடி, “"அண்ணாமலை ஒரு முதிர்ச்சியற்ற அரசியல் தலைவர். அண்ணா மலையின் செயல் சிறுபிள்ளைத்தனமானது' என்றார். எடப்பாடிக்கு மிக நெருக்கமான கே.பி.முனுசாமி, டி.ஜெயக்குமார், செல்லூர் ராஜூ போன்றவர்கள் அண்ணாமலையின் அ.தி.மு.க. எதிர்ப்பு கருத்துக்களை கண்டித்தார் கள். இப்படி ஒட்டுமொத்த அ.தி.மு.க.வும் கொந்தளித்த நிலையில் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரமும் அ.தி.மு.க. கூட்டத்தில் எதிரொலித்தது. அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்தின் மருமகன் ராஜா என்பவர் பா.ஜ.க.வில் துணைத்தலைவர் ஆக உள்ளார். அவருடைய உறவினர்தான் சேரலாதன். ரபேல் வாட்ச் விவகாரம் பெரிதாக வெடித்தவுடன் சேரலாதனிடமிருந்து அந்த வாட்ச்சை வாங்கியதாக ‘இரண்டாவது விற்பனை பில்லை தயாரித்துள்ளார் அண்ணாமலை என கோவை மாவட்ட அ.தி.மு.க. தலைவர் ஒருவர் அந்தக் கூட்டத்தில் தெரிவித்தார்.
இப்படி அ.தி.மு.க. முழுவதும் கொந் தளித்து நிற்க, வருகின்ற பாராளுமன்ற தேர்த லின் போது அண்ணாமலையுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தமுடியாது. அ.தி.மு.க. மேடைகளிலும் அண்ணாமலை ஏற அனு மதிக்க முடியாது என்கிற கருத்து ஒட்டுமொத்த அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் எழ அதற்குப் பதில்அளித்த எடப்பாடி, "அண்ணாமலை பாராளுமன்ற தேர்தலின்போது பா.ஜ.க. தலைவராக இருக்க மாட்டார்'” என்றுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் அண்ணா மலையை மிகக் கடுமையாக விமர்சித்தார் டி.ஜெயக்குமார்.
அண்ணாமலையின் பிரஸ் மீட் அவர் வெளியிட்ட சொத்துப்பட்டியல் தி.மு.க. வட்டாரங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ப்பு வழக்கில்தான் தண்டனை அனுபவித்தார். எனவே தி.மு.க. மீது அந்த திசையில் குற்றச்சாட்டுக்களை முன் வைக்கிறார் என அண்ணாமலையின் ஆதர வாளர்கள் பேசிய விபரத்தை தி.மு.க. வட்டாரம் சீரியஸ் ஆக எடுத்துக்கொண்டது. ஐநூறு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு ஒரு வழக்கறிஞர் நோட்டீசை தி.மு.க. அனுப்பியது. வழக்கறிஞர் வில்சன் மூலம் அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது தேவையில்லாத வேலை. அண்ணாமலையை கண்டுகொள்ளா மல் விட்டுவிட வேண்டும் என்கிற கருத்தே தி.மு.க.வில் மேலோங்கி இருந்தது.
அண்ணாமலை சொன்ன ஆல்ஸ்டோம் (ஆகநபஞங) என்கிற நிறுவனத்திற்கு முறைப் படியான சர்வதேச டெண்டர் மூலமாகத்தான் அனுமதி வழங்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் பணிகளை முறையின்றி வழங்கப்படவில்லை என்கிற விளக்கம் தி.மு.க. தரப்பில் இருந்து அளிக்கப்பட்டது. அத்துடன் உதயநிதி பங்குதாரராக இருக்கும் நிறுவனம் என அண்ணாமலை குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்கும் உதயநிதிக்கும் எந்த தொடர்பும் இல்லையென விளக்கமும் வக்கீல் நோட்டீஸ் ஆகவே அனுப்பப்பட்டது.
இப்படி தி.மு.க.வின் ரியாக்சன் அமைந் திருக்க பா.ஜ.க.வின் ரியாக்சன் வேறுவிதமாக அமைந்திருந்தது. அமர் பிரசாத் ரெட்டி, “"எடப் பாடி தரையில் தவழ்ந்துபோய் சசிகலாவின் காலில் விழுந்தவர். அவர் அண்ணாமலை அரசியலில் முதிர்ச்சி அடையாதவர் என சொல்லக் கூடாது'’என்று சொன்னதற்கு, "இது தேவையற்ற செயல்' என பா.ஜ.க.விலேயே கருத்து எழுந்திருக்கிறது.
ரபேல் வாட்ச்சின் வரிசை எண்-149 என முன்பு அண்ணாமலை கூறியிருந் தார். அதை 147 என பிரஸ் மீட்டின் போது மாற்றிக் கூறியிருந்தார். அதைக் கிண்டலடித்தார் வானதி. பா.ஜ.க.வின் ஏ.பி.முருகானந்தம் என்பவர் ‘ஜி ஸ்கொயர்’ என்கிற நிறுவனத்திடம் இருந்து நான்கு கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு அதை அண்ணாமலைக்குத் தரவில்லை என்கிற பஞ்சாயத்து பா.ஜ.க.வில் நிலவி வந்தது. அந்த ஜி ஸ்கொயர் நிறுவனத்தைப் பற்றி அண்ணாமலை பேசியது ஏ. பி.முருகானந்தம் உட்பட பா.ஜ.க. தலைவர்களை சங்கடத்தில் ஆழ்த்தியது. அவர்களுக்குள் இந்தப் பட்டியலை தயாரித்தது யார் என விவாதம் வந்தது.
‘வாராகி’ என்கிற பி.எல்.சந்தோஷுக்கு நெருக்கமான ஒரு கும்பல்தான் இந்தப் பட்டி யலை தயாரித்தது என பேசப்பட்டது. இந்தப் பட்டியல் பா.ஜ.க.வின் தேசியத் தலைமையின் ஒப்புதலோடு வெளியிடப்படவில்லை. நரேந்திர மோடியை கிள்ளுக்கீரை கணக்கில், நான் எப்பொழுது நினைத்தாலும் சந்திப்பேன்” என அண்ணாமலை சொன்னது பா.ஜ.க. தலைவர் களை கொந்தளிக்க வைத்தது. அமித்ஷாவையே நேரில் சந்திக்க முடியாத அண்ணாமலை, அவ ருடன் நிகழ்த்திய சந்திப்பை ஒரு போட்டோ வாகக் கூட வெளியிட முடியாத அண்ணாமலை மோடியை நினைத்த நேரத்தில் சந்திப்பேன் என சொல்கிறார் என்று தங்களுக்குள் கிண்டலடித் துக் கொண்டனர் பா.ஜ.க. தலைவர்கள்.
"அண்ணாமலை தனிக் கட்சி தொடங்கப் போகிறார் அதற்காகத்தான் தி.மு.க.வை யும், அ.தி.மு.க.வையும் விமர்சித்து, “நான் மிஸ்டர் கிளீன்’என ஒரு இமேஜை உருவாக்க நினைக்கிறார். கடந்த இருபது மாதங்களில் இவருக்காக நூறு கோடி ரூபாய்க்கு மேல் பா.ஜ.க. மேலிடம் கொடுத்துள் ளது. அதை யெல்லாம் மறைத்து விட்டு, “எனது செலவுகளை என் நண்பர்கள் பார்த்துக் கொள்கிறார்கள் என அண்ணாமலை கதையளக்கிறார். அவர் சுரானா, ஆருத்ரா போன்ற போலி நிதி நிறுவனங்களில் பணம் பெற்றிருக்கிறார். ஆருத்ரா விவகாரத்தில் இருந்து தப்பிக்க கொங்கு மண்டலத்தில் இருக்கும் தி.மு.க.வுக்கு நெருக்கமான ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியை சந்தித்துப் பேசி இருக்கிறார். அமர் பிரசாத் ரெட்டி, கோவை முருகானந்தம் போன்றவர்கள் மூலமாக வார் ரூம் அமைத்து தொழிலதிபர்களை மிரட்டி பணம் வாங்கி கர்நாடகாவிலும் அமெரிக்கா விலும் சொத்துக்களை சேர்த்துள்ளார் அண்ணாமலை. அவரது நெருங்கிய உறவினர் கள் பலர் சொத்துக்களை வாங்கியுள்ளனர். இதையெல்லாம் நாங்கள் பட்டியல் தயாரித்து அண்ணாமலை பாணியிலேயே வெளியிடு வோம்'’என அண்ணாமலைக்கு சவால்விடு கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.
மொத்தத்தில் தலைவர் பதவி நீக்கம், தனிக்கட்சி ஆகியவற்றை குறிவைத்து அண்ணாமலை தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.