சென்னையை ஒட்டி யுள்ள காஞ்சி புரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆதாயக் கொலைகள் தொடர் கதையாகின்றன. ஒரு காலத்தில் அமைதிப் பூங்காவாக இருந்துவந்த இம்மாவட்டங் களில் எப்போது பன்னாட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகளை நிறுவ ஆரம்பித் தனவோ அப்போதிருந்தே தொழில் போட்டியின் காரணமாக பகை மூள்வதும், அது கொலையில் முடிவதும் வாடிக்கையாக உள்ளது. இதன் தொடர்ச்சியாகக் கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி சனிக்கிழமை இரவு கொடூர கொலைச் சம்பவம் நடந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் திருமாறன் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு, வேலைக்கு ஆட்கள் சப்ளை செய்யும் தொழிலும், கார்ப்பரேட் நிறுவனங்களில் ஸ்கிராப் எடுக்கும் தொழிலும் செய்துவருகிறார்.
தொழிலில், கடந்த சில வருடங்களில் அபார வளர்ச்சியை இவர் அடைந்திருக்கிறார். இவரது வளர்ச்சிக்கேற்ப தொழிலில் போட்டியும் வளர, தொழிலில் ஏற
சென்னையை ஒட்டி யுள்ள காஞ்சி புரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆதாயக் கொலைகள் தொடர் கதையாகின்றன. ஒரு காலத்தில் அமைதிப் பூங்காவாக இருந்துவந்த இம்மாவட்டங் களில் எப்போது பன்னாட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகளை நிறுவ ஆரம்பித் தனவோ அப்போதிருந்தே தொழில் போட்டியின் காரணமாக பகை மூள்வதும், அது கொலையில் முடிவதும் வாடிக்கையாக உள்ளது. இதன் தொடர்ச்சியாகக் கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி சனிக்கிழமை இரவு கொடூர கொலைச் சம்பவம் நடந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் திருமாறன் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு, வேலைக்கு ஆட்கள் சப்ளை செய்யும் தொழிலும், கார்ப்பரேட் நிறுவனங்களில் ஸ்கிராப் எடுக்கும் தொழிலும் செய்துவருகிறார்.
தொழிலில், கடந்த சில வருடங்களில் அபார வளர்ச்சியை இவர் அடைந்திருக்கிறார். இவரது வளர்ச்சிக்கேற்ப தொழிலில் போட்டியும் வளர, தொழிலில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, திருப்போரூர் அருகே இவரைக் கொலைசெய்ய முயன்றபோது இவர், அதிலிருந்து தப்பினார். இதனால் பாதுகாப்பு வேண்டி நீதிமன்றத்தை அணுகியதால், எழிலரசன் என்ற காவலரை பாது காப்புக்காக நீதிமன்றம் நியமித்தது.
திருமாறனின் திருமண நாளை முன்னிட்டு, கடந்த சனியன்று மறைமலை நகர், இளவழகன் நகரிலுள்ள செல்வ முத்துக் குமாரசாமி ஆலயத்தில் சாமி கும்பிட்டு விட்டு, அன்ன தானம் வழங்கி னார். அப்போது, திருமாறனிடம் அன்னதானம் வாங்குவதுபோல வந்த ஒருவன், கையிலிருந்த நாட்டு வெடி குண்டை வீசி யதில் பக்தர்கள் சிதறி ஓட, திருமாறன் நிலை தடுமாறினார். மேலுமொரு நாட்டு வெடிகுண்டை திருமாறனின் முகத்தின் மீது வீச, குண்டு வெடித்ததில் முகம் சிதறி, சம்பவ இடத்திலேயே திருமாறன் பலியானார். குண்டு வெடித்த சத்தம்கேட்டு கோவிலுக்குள் வந்த பாதுகாப்புக் காவலர் எழிலரசன், அசம்பாவிதத்தைப் புரிந்துகொண்டு உடனடியாக அலர்ட்டாகி துப்பாக்கியால் ஆறு ரவுண்டுகள் சுட்டதில், கொலையாளியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். காவல்துறை விசாரணையில், கொலையாளி, திருவள்ளூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த 19 வயதான சுரேஷ் என்பது தெரியவந்தது. சுரேஷுடன் வேறு யாருக்கேனும் தொடர்பு உண்டா என்றும் போலீஸ் தேட ஆரம்பித்தது.
கொலையாளியோடு உடன் வந்த கூலிப்படையினரைப் பிடிக்க ஆறு தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருவதாக மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனன் தெரிவித்தார். இரு உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குண்டு வெடித்ததில் காயமடைந்த திருமாறனின் மனைவி ஸ்ரீமதி, கார் டிரைவர் சுரேஷ் மற்றும் கோயிலுக்கு வந்திருந்த புவனேஷ்வரி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சையெடுத்ததில், புவனேஷ்வரியின் நிலை மட்டும் கவலைக்கிடமாக உள்ளது.
திருமாறனுடன் ஆரம்ப கட்டத்தில் இணைந்து தொழிலில் ஈடுபட்ட அவரது நண்பர் ராஜேஷ் என்கிற மாந்தோப்பு ராஜேஷ், பின்னர் கருத்து வேறுபாட்டால் பிரிந்தார். இருவருக்குள்ளும் ஏற்பட்ட தொழில் போட்டி பெரும்பகையானது. இதனால் ராஜேஷ், திருமாறனைக் கொலை செய்யத் திட்டமிட்டி ருந்தார்.
இதில் மூன்று முறை தப்பிய திருமாறன், ராஜேஷ் செய்துவரும் தொழிலை முடக்கும் விதமாகச் சில வழக்குகளை, போலீசாரின் உதவியுடன் பதிவுசெய்ய, ராஜேஷின் தொழில் முடங்கியது. இதனால் பகை மேலும் பெரிதானது.
இது ஒருபக்கம் இருக்க... ஒரகடம், மறைமலைநகர், ஸ்ரீபெரும்புதூர் பகுதி யில் ஸ்கிராப் எடுப்பது தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி குன்றத்தூர் வைரத்துடன் பகை மூண்டது. இதனால் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் ராஜேசும், ரவுடி வைரமும் இணைந்து கொண்டனர். இந்நிலையில், அ.தி.மு.க. பிரமுகர் கவுஸ்பாஷாவின் பேரனுடன் காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் படிக்கும் திருமாறனின் மகன் லலித்குமாருக்கு ஏற்பட்ட தகராறில், மாணவர்கள் மீது திருமாறன் துப்பாக்கியில் சுட்ட சம்பவம் நடந்திருக்கிறது. ஏற்கெனவே இருவரோடு இருந்த பகை, மூன்றாக உயர, இந்த மூவரும் கூட்டாக இணைந்து இந்த படுகொலையைச் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை விசாரித்தது.
விசாரணையில், திருமாறனிடம் முன்பு டிரைவராக வேலைசெய்த மகேஷ், ராஜேசுடன் இணைந்து கொலை செய்யத் திட்டமிட்டதாகத் தெரியவந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த கூலிப்படையான குணா, அஜித்குமார், சுரேஷ்குமார் மற்றும் ஒரு நபருடன் சேர்ந்து திருமாறனை கொலை செய்வதற்காக, வண்டலூரில் உள்ள லாட்ஜில்தான் சதித் திட்டம் தீட்டி யிருக்கிறார்கள். அதுதான் திருமாறனின் திருமணநாளை மரண நாளாக்கியிருக்கிறது. இந்நிலையில், கடந்த திங்களன்று திருச்சியில் சரண்டர் ஆனார் ராஜேஷ். அடுத்த கட்ட விசாரணைகளைத் தொடங்கியுள்ளது காவல்துறை.
ஒருபக்கம் தமிழகத்தில் தொழில் துறை வளர்ச்சி வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், கூலிப்படையால் கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துவருவது சென்னைப் புறநகரை ரவுடி ராஜ்ஜியமாக்கி அது செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் ரத்தப் பசியை உண்டாக்கியுள்ளது.