ராங்கால் அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். குரல்! அரசியல் சட்டத்தை மீறும் கவர்னர்! -கொந்தளிக்கும் கட்சிகள்! 2024 எம்.பி. தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல்? தமிழக காங்கிரஸை உடைக்க பா.ஜ.க. ப்ளான்!

ss

"ஹலோ தலைவரே, வரலாறு காணாத வகையில் ராஜ்பவன், எதிர்ப்புச் சூறாவளி யில் சிக்கி இருக்கு.''”

"ஆமாம்பா, கவர்னர் ஆர்.என். ரவியின், ஆர்.எஸ்.எஸ். முகம் முழுதாக வெளிப்பட ஆரம்பிச்சதற்கு, பெரியார் மண் பதிலடி கொடுக்கத் தொடங்கி இருக்கு.''”

rr

"உண்மைதாங்க தலைவரே, டெல்லியின் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கோம்ங்கிற தெனாவெட்டில், அரசியல் சட்டத்துக்கு எதிரான குரலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, எழுப்ப ஆரம்பிச்சிருக்கார். தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் மதம் சார்ந்த விசயங் களை பகிர்ந்து, நான் இந்துத்துவா ஆள்னு வரிஞ்சுகட்டுகிறார். இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதை அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. அதற்கு மாறாக, மதம் சார்ந்த நாடு என்பதை அழுத்தமாக சொல்லி, மதவெறியைத் தூண்டிக்கிட்டு இருக்கார். அவரால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாலாம்னு முதல்வர் ஸ்டாலின் கவலைப்பட்டதன் விளைவாக, தி.மு.க. தோழமை கட்சிகளின் தலைவர்கள், ஆளுநருக்கு எதிரான கண்டன அறிக்கையை வெளியிட்டு, தமிழகத்தின் கோபத்தைக் காட்டி இருக்காங்க.''”

"கவர்னர் தன் பதவியை ராஜினாமா செய்யணும்னு அவங்க வலியுறுத்தி இருக்காங்களே?''”

"ஆமாங்க தலைவரே, சில சட்டச் சிக்கல்களைக் கருதி, அந்த கண்டன அறிக்கையில் முதல்வர் கையெழுத்திடலை. அவருக்குப் பதில் தி.மு.க. பொருளாளரான டி.ஆர்.பாலு கையொப்பம் இட்டிருக்கிறார். ஆசிரியர் கி.வீரமணி, கே.எஸ். அழகிரி, வைகோ, திருமா, வேல்முருகன், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், முத்தரசன், பாலகிருஷ்ணன், காதர்மொய்தீன் ஆகிய தலைவர் களின் கையெழுத்த

"ஹலோ தலைவரே, வரலாறு காணாத வகையில் ராஜ்பவன், எதிர்ப்புச் சூறாவளி யில் சிக்கி இருக்கு.''”

"ஆமாம்பா, கவர்னர் ஆர்.என். ரவியின், ஆர்.எஸ்.எஸ். முகம் முழுதாக வெளிப்பட ஆரம்பிச்சதற்கு, பெரியார் மண் பதிலடி கொடுக்கத் தொடங்கி இருக்கு.''”

rr

"உண்மைதாங்க தலைவரே, டெல்லியின் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கோம்ங்கிற தெனாவெட்டில், அரசியல் சட்டத்துக்கு எதிரான குரலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, எழுப்ப ஆரம்பிச்சிருக்கார். தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் மதம் சார்ந்த விசயங் களை பகிர்ந்து, நான் இந்துத்துவா ஆள்னு வரிஞ்சுகட்டுகிறார். இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதை அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. அதற்கு மாறாக, மதம் சார்ந்த நாடு என்பதை அழுத்தமாக சொல்லி, மதவெறியைத் தூண்டிக்கிட்டு இருக்கார். அவரால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாலாம்னு முதல்வர் ஸ்டாலின் கவலைப்பட்டதன் விளைவாக, தி.மு.க. தோழமை கட்சிகளின் தலைவர்கள், ஆளுநருக்கு எதிரான கண்டன அறிக்கையை வெளியிட்டு, தமிழகத்தின் கோபத்தைக் காட்டி இருக்காங்க.''”

"கவர்னர் தன் பதவியை ராஜினாமா செய்யணும்னு அவங்க வலியுறுத்தி இருக்காங்களே?''”

"ஆமாங்க தலைவரே, சில சட்டச் சிக்கல்களைக் கருதி, அந்த கண்டன அறிக்கையில் முதல்வர் கையெழுத்திடலை. அவருக்குப் பதில் தி.மு.க. பொருளாளரான டி.ஆர்.பாலு கையொப்பம் இட்டிருக்கிறார். ஆசிரியர் கி.வீரமணி, கே.எஸ். அழகிரி, வைகோ, திருமா, வேல்முருகன், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், முத்தரசன், பாலகிருஷ்ணன், காதர்மொய்தீன் ஆகிய தலைவர் களின் கையெழுத்துக்கள் இதில் இடம்பெற்றிருக்கு. இந்த அறிக்கை கவர்ன ருக்கு பகீரை ஏற்படுத்தினாலும், தான் அலட்டிக்கொள்ளாதது போலவே அவர் காட்டிக்கிறாராம். சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என்ன சொல் றாங்கன்னா, ருசிகண்ட பூனையான கவர்னர், தானா பதவி விலகமாட்டார். அதனால், கவர்னரால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ள தால், அவரை திரும்பப் பெறணும்னு டெல்லியிடம் தமிழக அரசு கோரிக்கை வைக்கணும். அப்பதான் எதிர்பார்த்தது நடக்கும்னு சொல்றாங்க.''”

"அதுசரிப்பா, கோவை கார் குண்டுவெடிப்பு விவகாரத்தில் நாம் குற்றம்சாட்டிய உளவுத்துறை அதிகாரி மீது தப்பில்லைன்னு முதல்வர் கருதுகிறாரே?''”

"உண்மைதாங்க தலைவரே, தமிழக உளவுத்துறையின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு ஐ.ஜி.யாக இருக்கும் ஈஸ்வரமூர்த்தி நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர். கடந்த நக்கீரன் இதழில், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவ காரத்தில் இவர் புலனாய்வில் கோட்டை விட்டதாகப் பதிவான செய்தியைக் கண்ட முதல்வர், அதில் உண்மை இல்லைன்னு வருந்தினாராம். காரணம், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதம் குறித்து கடந்த ஜூலையிலும், செப்டம்பரிலும் தலா ஒரு முறை முன்கூட்டியே அரசுக்கு எச்சரிக்கை ரிப்போர்ட் அனுப்பிவிட்டாராம் ஈஸ்வர மூர்த்தி. அதேபோல் கண் காணிக்க வேண்டியவர்கள் குறித்தும் அவர் சுட்டிக் காட்டி இருந்தாராம். காவல்துறைதான் இதில் மெத்தனமா இருந்திருக்கு. அதோடு, உளவுத்துறைக் கும், உள்நாட்டுப் பாதுகாப் புப் பிரிவுக்கும் இடையே நல்லிணக்கம் பேணப்பட வில்லைங்கிற விசயமும் இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது.''”

"கார் சிலிண்டர் வெடிப்பு இன்னும் சில சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறதே?''”

rr

"ஆமாங்க தலைவரே, உளவுத்துறை தலைவர் பதவியிலிருந்து டேவிட்சன் தேவ ஆசிர்வாதத்தை மாற்றி விட்டு அவருக்கு பதிலாக வேறொரு சீனியர் அதிகாரியை அந்த இடத்தில் நியமிக்கவேண்டும் என்று, ஏற்கனவே பல இடங்களில் இருந்தும் முதல்வருக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்போதைய கோவை சம்பவத்திற்குப் பிறகு, அவரை மாற்றினால்தான் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்களைத் தடுக்க முடியும் என்று ஒருசில காவல்துறை உயரதிகாரிகள் சொல்லிவருகின்றனர். இதற்கிடையே ‘தமிழகத்தில் விரைவில் ஆட்சிக் கலைப்பு ஏற்படும், 2024-ல் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று நடக்கும்’ என்றெல்லாம் பா.ஜ.க., அ.தி.மு.க., கூட்டணியினர் அடிக்கடி சொல்லி வருவதற்கும், இந்த கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா?’என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறதாம்.''”

"இந்த கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில், ஒன்றிய உளவுத்துறை முன்கூட்டியே எச்சரித்ததாகவும், அதை மாநில காவல்துறை கண்டுக்கலைன்னும் பா.ஜ.க. அண்ணாமாலை, சந்தடிச் சாக்கில் ஒரு குண்டு வீசினாரே?''”

"அண்ணாமலையின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து, முதல்வர் ஸ்டாலின், காவல்துறையிடம் விசாரித்தபோது, அப்படி எதுவும் டெல்லியில் இருந்து தகவல் வரவில்லை. வழக்கமாக அனுப்பும் ஒரு சுற்றறிக்கை மட்டும் கடந்த 18ஆம் தேதி வந்தது என்று விளக்கம் கொடுத்திருக்காங்க. அப்ப டின்னா, அண்ணாமலைக்கு டிபார்ட்மெண்ட் மூலமாவே பதில் கொடுத்துடுங்கன்னு சொல்லிவிட்டாராம் ஸ்டா லின். இதைத் தொடர்ந்துதான், அண்ணாமலை வதந்தி பரப்பு கிறார்னு அங்கிருந்து அறிக்கை வெளியாச்சு. அதேநேரம் தமிழக அரசின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு கொடுத்த ஒரு ரிப்போர்ட்டை, தனது சோர்ஸ் மூலம் சேகரித்திருக் கிறாராம் அண்ணாமலை.''”

rr

"பா.ம.க. நிர்வாகிகளை அ.தி.மு.க.வில் இணைத்ததன் மூலம், ராமதாசுக்கும் அன்பு மணிக்கும் அதிர்ச்சி தந்திருக் கிறாரே எடப்பாடி?''’

"அண்மையில் சேலத்தில் நடந்த பா.ம.க. முன்னாள் எம்.எல்..ஏ. கார்த்திக் இல்லத் திருமண வரவேற்பில் எடப்பாடி கலந்துக்கிட்டார். மறுநாள் அந்தத் திருமண நிகழ்வில் பா.ம.க. ராமதாசும் அன்புமணியும் கலந்துக்கிட்டாங்க. அதே நேரம், பா.ம.க. ஒன்றிய மாணவர் அணி துணைச் செயலாளர் முருகேசன் தலைமையில் ஒரு குழுவும், மீனவர் அணி செயலாளர் ஜவஹர் தலைமையில் ஒரு குழுவுமாக 100-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க.வில் ஐக்கியம் ஆகிவிட்டார்கள். ஏற்கனவே அன்புமணி மீது அதிருப்தியில் இருக்கும் ராமதாஸ், இதையெல்லாம் கவனிக்கக்கூடாதான்னு அன்புமணியிடம் காட்டம் காட்டியதாக செய்திகள் உலவுது. அந்த கோபம் அப்படியே சேலம் பா.ம.க. நிர்வாகிகள் மீது திருப்பப்பட்டதாம்.''”

"தமிழக காங்கிரஸை உடைக்க பா.ஜ.க. திட்டமிடுகிறதே?''”

rr

"உண்மைதாங்க தலைவரே, ராகுல் காந்தியின் பாதயாத்திரை எபெக்ட் காங்கிரஸின் செல்வாக்கை உயர்த்தியதாக நினைக்கும் பா.ஜ.க. அமித்ஷா தரப்பு, தமிழக காங்கிரஸை பிளந்து ஒரு புதிய அணியை உருவாக்க முனைந்திருக்கிறது. இதற்கான பட்ஜெட் 1000 கோடி ரூபாயாம். அதன்படி, காங்கிரஸை உடைக்கவேண்டும் என்று, பிரியங்காவுக்கு நெருக்கமான தமிழ் நாட்டுக்காரரான, கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் ரமணியை அமித்ஷா தரப்பு அணுகியதாம். ஆனால் அதற்கான பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லையாம். அதேசமயம், இந்த சீக்ரெட் சதித்திட்டத்தை அறிந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேர், அந்தப் பணத்தை எங்களிடம் கொடுங் கள். நாங்கள் எங்கள் கட்சியை உடைத்து புது அணியை உருவாக்குறோம் என்று பா.ஜ.க. தரப்பை பரபரப்பாக முற்றுகை இட்டிருக்கிறார்களாம்.''”

rr

"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். முதுகுவலியால் அவதிப்பட்ட முதல்வர் ஸ்டாலின், தேவர் ஜெயந்திக்கான பசும்பொன் பயணத்தை ரத்து செய்துவிட்டார். அவர் சார்பில் துரைமுருகன் உள்ளிட்ட சீனியர் அமைச்சர்கள் கலந்துக்கிட்டாங்க. அன்று சாயங்காலம் உதயநிதி ஸ்டாலின் பசும்பொன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, விழாக் குழுவினரை மகிழ்ச்சியில் திளைக்க வைத்திருக்கிறார். அவருடன் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலரும் தேவர் நினைவிடத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி இருக்காங்க. ஏற்கனவே தேவேந்திரகுல வேளா ளர் சமூகத்தின் ஆகப்பெரிய தலைவராக கொண்டாடப்படும் இமானுவேல் சேகரன் நினைவு நாளில், அவருக்கான விழா வில் கலந்துகொண்டு, அவரது சமூகத்தினரின் நம்பிக்கை யைப் பெற்ற உதயநிதி, இப்போது, முக்குலத்தோர் சமூக இளைஞர்களின் பார்வையைத் தன்பக்கம் திருப்பி இருக்கிறார். அனைத்து சமூக இளைஞர்களிடமும் திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் கொள்கைகளைக் கொண்டு சேர்க்கணும்னு உதயநிதி நினைக்கிறார்.''”

nkn021122
இதையும் படியுங்கள்
Subscribe