(99) கேப்டனை உரசிய புல்லட்!
"ராவுத்தர் பிலிம்ஸ்னு தனியா கம்பெனி ஆரம்பிக்கலாம்ணே...'' என்றார் இப்ராகிம் ராவுத்தர். நான் தயங்கினேன். ஆனாலும் அவருடைய ஆழ்மனதில் பதிந்துபோனது "ராவுத்தர் பிலிம்ஸ்' என்பது. அதை வேண்டாம் என்று சொல்வது நியாயமாக இருக்காது என்று நினைத்து, வேறு மாதிரி பேசிப் பார்த்தேன்.
"இல்லண்ணே...… நாம பொதுவா ஜாதி, மதம் பாக்கமாட்டோம். அதுலயும் நீங்க எல்லா சாமியையும் ரூம்ல வச்சுக் கும்புடு றீங்க. வெங்கடாஜலபதி கோவிலுக்கெல்லாம் போறீங்க.… "இவரப் பாத்தியா ராவுத்தர்னு பேர் வச்சிருக்காரே?'ன்னு விமர்சனம் பண்ணமாட்டாங்களா'' என்றேன்.
"நம்ம மனசுல மத வேறுபாடு இருக்காண்ணே''
"இல்ல''…
"பின்ன ஏண்ணே மத்தவங்களைப் பத்தி நாம பயப்படணும்'' என்றார்.
பீச்சிலிருந்து திரும்பி வந்தோம். ஷுட்டிங் முடிந்து வந்து டி.வி. டெக்ல ஒரு ஆங்கிலப் பட சண்டைக் காட்சியை பார்த் துக்கொண்டிருந்தார் விஜயகாந்த். சண்டைக் காட்சிகளை தேடித் தேடிப் பார்ப்பார் அவர். ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு அந்தப் படங் களையும் ஃபைட்டையும் பார்க்கச் சொல் வார். அவர் படங்களில் செய்த பல ஃபைட் கள் அவர் ஆலோசனை சொன்னதாக இருக்கும்.
"என்னண்ணே… பீச்சுக்கு கூட்டிட்டுப் போனானா?''
"ஆமாண்ணே...''…
"என்னண்ணே பேசுனீங்க?'' என்றார் விஜயகாந்த்.
சில முடிவுகளை பீச்சுல இருக்கும்போது எடுப்போம்... அதனால் கேட்டார். நான் இப்ரா கிம் ராவுத்தரைப் பார்த்தேன்.
"சொல்லுங்கள்'' என்பது போல தலையசைத்தார்.
நான் சொன்னேன்.
சொன்னவுடனே ஒரு செகண்ட் கூட தாமதிக்கவில்லை விஜயகாந்த், "அது அவன் கனவுண்ணே.… என்கிட்ட கேட்டி ருந்தாலும் "ராவுத்தர்
(99) கேப்டனை உரசிய புல்லட்!
"ராவுத்தர் பிலிம்ஸ்னு தனியா கம்பெனி ஆரம்பிக்கலாம்ணே...'' என்றார் இப்ராகிம் ராவுத்தர். நான் தயங்கினேன். ஆனாலும் அவருடைய ஆழ்மனதில் பதிந்துபோனது "ராவுத்தர் பிலிம்ஸ்' என்பது. அதை வேண்டாம் என்று சொல்வது நியாயமாக இருக்காது என்று நினைத்து, வேறு மாதிரி பேசிப் பார்த்தேன்.
"இல்லண்ணே...… நாம பொதுவா ஜாதி, மதம் பாக்கமாட்டோம். அதுலயும் நீங்க எல்லா சாமியையும் ரூம்ல வச்சுக் கும்புடு றீங்க. வெங்கடாஜலபதி கோவிலுக்கெல்லாம் போறீங்க.… "இவரப் பாத்தியா ராவுத்தர்னு பேர் வச்சிருக்காரே?'ன்னு விமர்சனம் பண்ணமாட்டாங்களா'' என்றேன்.
"நம்ம மனசுல மத வேறுபாடு இருக்காண்ணே''
"இல்ல''…
"பின்ன ஏண்ணே மத்தவங்களைப் பத்தி நாம பயப்படணும்'' என்றார்.
பீச்சிலிருந்து திரும்பி வந்தோம். ஷுட்டிங் முடிந்து வந்து டி.வி. டெக்ல ஒரு ஆங்கிலப் பட சண்டைக் காட்சியை பார்த் துக்கொண்டிருந்தார் விஜயகாந்த். சண்டைக் காட்சிகளை தேடித் தேடிப் பார்ப்பார் அவர். ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு அந்தப் படங் களையும் ஃபைட்டையும் பார்க்கச் சொல் வார். அவர் படங்களில் செய்த பல ஃபைட் கள் அவர் ஆலோசனை சொன்னதாக இருக்கும்.
"என்னண்ணே… பீச்சுக்கு கூட்டிட்டுப் போனானா?''
"ஆமாண்ணே...''…
"என்னண்ணே பேசுனீங்க?'' என்றார் விஜயகாந்த்.
சில முடிவுகளை பீச்சுல இருக்கும்போது எடுப்போம்... அதனால் கேட்டார். நான் இப்ரா கிம் ராவுத்தரைப் பார்த்தேன்.
"சொல்லுங்கள்'' என்பது போல தலையசைத்தார்.
நான் சொன்னேன்.
சொன்னவுடனே ஒரு செகண்ட் கூட தாமதிக்கவில்லை விஜயகாந்த், "அது அவன் கனவுண்ணே.… என்கிட்ட கேட்டி ருந்தாலும் "ராவுத்தர் பிலிம்ஸ்'னு வைடான்னுதான் சொல்லியிருப்பேன்'' என்று சொன்னார்.
அந்த அளவுக்கு நட்பை மதித்தவர் விஜயகாந்த்.
திரைப்படக் கல்லூரி மாண வர்கள் ஆபாவாணன், அரவிந்த் ராஜ் உருவாக்கிய "ஊமை விழிகள்' படம் மிகப்பெரிய வெற்றிப்பட மானது. அதே டீமை வைத்து "ராவுத்தர் பிலிம்ஸ்' பேனரில் எடுக்கப்பட்ட படம்தான் "உழவன் மகன்.' தயாரிப்பு அ.செ.இப்ராகிம் ராவுத்தர். சாண்டோ சின்னப்பா தேவர் அவர்களை தேவர் என்று பலர் ஷார்ட்டாக அழைப்பார் கள். அதைப் போல, "உழவன் மக'னுக்குப் பின் "ராவுத்தர்' என்று எல்லோரும் அழைத்தார்கள்.
தயாரிப்பாளர்களோ, இயக்குநர்களோ பேசினால் கூட "ராவுத்தரிடம் பேசுங்கள்'' என்று விஜயகாந்த்தே, அவரையும் அறியாமல் சொல்வார். மத்த வங்ககிட்ட பேசறப்ப "எனக்கும் ராவுத்தர்னு வந்திருதுண்ணே'' என்பார் என்னிடம். ஒருமுறை விஜயகாந்த்துடன், கலைஞர் அவர்களைப் பார்க்கப் போயிருந்தேன்.
அவர் கேட்டார், "உங்க நண்பர் ராவுத்தர் நல்லா இருக்காரா?''
"நல்லா இருக்காண்ணே'' என்று சொல்லிவிட்டு, "ராவுத்தர் பிலிம்ஸ்' என்ற பெயர் வைத்ததற்கான காரணத்தையும் சொன்னார் விஜயகாந்த்.
"லட்சியம் நியாயமோ, தவறோ… லட்சியத்துல ஜெயிக்கிறது ரொம்பப் பெரிய விஷயம் விஜி''… என்றார்.
அப்பொழுது நான் சொன்னேன்... "எங்க ஊர் கம்பத்துல காலேஜ் இல்லப்பா. உத்தமபாளையத்துல தான் இருக்கு. காலேஜுக்குப் பேரு ஹாஜி கருத்த ராவுத்தர் காலேஜ்'' என்றேன். மிகப்பெரிய கொடை வள்ளல். கல்விக்காக எவ்வளவோ அர்ப்பணிப்புகள் செய்தவர். ராவுத்தர்னு பேரு வச்சதுனால அவர் செஞ்ச நல்ல காரியங்களை யாரும் பாராட்டாம இருந்ததில்லையே'' என்றேன்.
"நல்ல பேரு வைக்கிறதை விட நல்ல பேரு வாங்கணும்... அதுதான் முக்கியம். எவ்வளவோ சாதனைகள் பண்ணவங்க, தர்மம் பண்ணவங்ககூட பேருக்கு பின்னால தங்களோட அடை யாளத்தையும் சேர்த்து வச்சிருக்காங்க'' என்றார் கலைஞர். கலைஞர் மட்டுமல்ல… மதிப்பிற்குரிய ஜி.கே.மூப்பனார் ஐயா கூட "ராவுத்தரே வாங்க'' என்றுதான் கூப்பிடுவார்.
விஜயகாந்த், கலைஞரின் பேரன்பிற்கு பாத்திரமாக இருந்த ராவுத்தர், மூப்பனாரை சந்தித்து காங்கிரஸில் இணைந்தார். கலைஞர் மீது இப்ராகிம் ராவுத்தருக்கும் பெரிய மரியாதை இருந்தது. பின் எதற்காக மூப்பனாரிடம் போய் சேர்ந்தார்?
1987ஆம் ஆண்டு இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் தயாரித்த "காலை யும் நீயே மாலையும் நீயே' படப் பிடிப்பில் விஜயகாந்த்தின் கண்ணுக்கு அருகே துப்பாக்கியின் டம்மி புல்லட் பாய்ந்து காயமேற்பட்டது. துடித்துப் போய்விட்டார் விஜயகாந்த். படப் பிடிப்பு குழுவினர் பயந்துபோய்விட் டார்கள். உடனே படப்பிடிப்பு நிறுத் தப்பட்டு, மருத்துவச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த். விஷயம் கேள்விப்பட்டதும் இப்ரா கிம் ராவுத்தரும் நானும் உடனே கிளம்பிப் போனோம். போகும்போது அவரது கைகள் நடுங்கிக்கொண்டி ருந்தது. அவரது கையை அழுத்திப் பிடித்தேன்.
"ஒண்ணும் ஆகாதுண்ணே...… விஜி அண்ணனோட நல்ல மனசு ஆண்ட வனுக்குத் தெரியாதா'' என்றேன்.
எல்லா மத கடவுள்களையும் கும்பிடும் பழக்கம் உள்ள அவர் வாயில் அப்பொழுது வந்த வார்த்தை "அல்லாவே...' -உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.
"அண்ணே ஒன்றும் ஆகாதுண்ணே'' …
"அண்ணே விஜிக்கு பிளஸ்ஸே கண்ணுதாண்ணே. அந்தக் கண்ணுக்கு எதாவது ஆச்சுன்னா அவனால நடிக்க முடியாம போயிருமாண்ணே'' அவரது அழுகை நிற்கவில்லை.
சாதாரணமாக நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே விஜயகாந்த்தின் கண்களைப் பற்றி பரவசத்தோடு பேசுவார் இப்ராகிம் ராவுத்தர். "அவன் கண்ணு மாதிரி எந்த ஹீரோவுக்கு இருக்குண்ணே? என்பார்.
அவர் ரசித்துப் பேசுவதை நான் ரசித்துக் கேட்டுக்கொண்டிருப் பேன். அது எங்கள் இருவருக்கு மிடையே அடிக்கடி ஏற்படும் இன்ப அனுபவம்.… கே.பாலசந்தர் இயக்கி ரஜினி-கமல் இருவரும் நடித்த படத் தலைப்புதான் நினைவுக்கு வருகிறது... "நினைத்தாலே இனிக்கும்'. விஜயகாந்த் பற்றி இப்ராகிம் ராவுத்தரும் நானும் பகிர்ந்துகொண்ட, பேசிக்கொண்ட சம்பவங்களும் அந்த டைட்டில் போலத்தான் இருக்கும்.
அப்படியெல்லாம் பேசி மகிழ்ந்த அவர், விஜய காந்த் கண்ணில் அடிபட்டதும் எப்படி வேதனைப் பட்டிருப்பார் என்று சொல்ல வேண்டியதில்லை.
விஜயகாந்த்தின் கண்களுக்கு அருகில் பட்ட குண்டு,… தெய்வத்தின் அருளால் கண்களைப் பாதிக்க வில்லை. அதை மருத்துவர்கள் சொன்ன பிறகுதான் நிம்மதியடைந்தார் இப்ராகிம் ராவுத்தர். எத்தனை முறை கையை மேலே உயர்த்தி கடவுளுக்கு நன்றி சொல்லியிருப்பார் என்ற கணக்கே இல்லை. "வலிக்குதாப்பா...… வலி இல்லியேப்பா'' என்று எத்தனை தடவை விஜயகாந்த் திடம் கேட்டிருப்பார் என்பதற்கும் கணக்கே இல்லை. "வலிக்கலேன்னு எத்தனை தடவைடா சொல்றது' என்று கோபிப்பார் விஜயகாந்த்.
சில நாட்கள் ஓய்வுக்காக விஜயகாந்த் அவர்களை கோயம்புத்தூர், ஊட்டி சென்று ஓய்வெடுக்கச் சொன்னார் ராவுத்தர்.
"விஜி அண்ணன் அங்க போய் தங்கியிருக்கிறது ரசிகர்களுக்கு தெரிஞ்சா தொந்தரவா போயிரும். அவங்கள சமாளிக்க ராமுவசந்தன் கூடப்போகட்டும்'' என்றேன் நான். "நீங்களும் போங்க'' என்றார் ராவுத்தர்.
கோவையில் இருக்கும்போது பாபா காம்ப்ளக்ஸில் உள்ள அர்ச்சனா தியேட்ட ருக்குப் போய் கமல் சார் நடித்த "நாயகன்' படம் பார்த்தோம். தியேட்டர் அதிபர் எங்களை வரவேற்று உபசரித்தது மறுநாள் காலை பேப்பரில் போட்டோவுடன் வந்தது.
அந்த செய்தி ரசிகர்களுக்கு தெரிந்து லாட்ஜுக்கு வர ஆரம்பித்தார்கள். கூட்டம் கூட்டமாக வந்தார்கள். அவர்களைச் சமாளிக்க முடியாமல் அங்கிருந்து ஊட்டி போனோம். அங்கு இரண்டு, மூன்று நாட்கள் தங்கிவிட்டு சென்னை திரும்பினோம்.
விஜயகாந்த்தை பாதுகாப்பதற்காகத் தான் மூப்பனாரை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் ராவுத்தர். சேர்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே என்னிடம் ஆலோசனை செய்தார்.
"அண்ணே… நான் நினைக்கிறது சரியான்னு சொல்லுங்கண்ணே.… விஜி கலைஞர்கிட்ட நெருக்கமா இருக்கான்.… நம்ம படங்கள்லயும் நிறைய அரசியலைச் சொல்லணும்னு பேசிக்கிட்டிருக்கோம். விஜி அரசியல் வசனம் பேச ஆரம்பிச்சுட்டா அது பலபேரை தாக்கற மாதிரி இருக்கும். பல கட்சிகளை தாக்கற மாதிரி இருக்கும். அத னால நமக்கு நெறைய பிரச்சனைகள் வரும்.''
"அப்படிப் படங்கள் எடுத்தா வரத்தாண்ணே செய்யும்'' என்றேன் நான்.
"இல்லண்ணே… இங்க தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் என மாறி மாறித்தான் ஆட்சிக்கு வருது.… ஆனா சென்ட்ரல்ல காங்கிரஸ்தான் ஸ்டிராங்கா இருக்கு. இங்க ரெண்டு கட்சியுமே மாறி மாறி காங்கிரஸ் கூடத்தான் கூட்டணி வச்சுக்கிறாங்க. இங்க நமக்கு எதாவது பிரச்சினைன்னு வந்தா நமக்கு ஒரு சப்போர்ட் வேணும்ல... அதான் நான் காங்கிரஸ்ல சேரலாம்னு யோசனை பண்ணுனேன்'' என்றார்.
(வளரும்...)
படம் உதவி: ஞானம்