(79) ஸ்ரீதேவிய வேணாங்கல.... சீதேவியையே வேணாங்கிறீங்க...!
"ராணி மகாராணி' படம் நன்றாக இருக்கிறது என்று கேள்விப்பட்டு இரண்டு தெலுங்குப் பட தயாரிப்பாளர்கள் (இருவரும் பார்ட்னர்ஸ்) என்னைப் பார்க்க வந்தார்கள். "ராணி மகாராணி' படத்தில் ஹீரோயினுக்கு ஆக்சன் காட்சிகள் இருக்கும். தெலுங்கில் விஜயசாந்தி மிகப்பெரிய மார்க்கெட்டில் இருந்தார். அவரை வைத்து ராணி மகாராணியை தெலுங்கிலே தயாரிப்பதற்கு உரிமை கேட்டார்கள். ஒரு தொகை பேசி முடிக்கப்பட்டது.
"இன்று எங்களுக்கு நல்லநாள். சென்ட்டி மெண்ட்டாக எப்பொழுதுமே நாங்கள் ஆயிரம் ரூபாய்தான் அட்வான்ஸ் கொடுப்போம்... வாங்கிக் கொள்ளுங்கள்'' என்றார்கள். நான் வாங்கிக் கொண்டேன்.
தெலுங்கிலே விஜயசாந்தி ஆக்ஷனில் பின்னி எடுப்பார். ஆனால் "தமிழில் ராதிகா மேடம் நடித்தது போல அவரால் நடிக்க முடியுமா?' என்று கேட்டேன். கதையிலே சில மாற்றங்கள் செய்து கொள்ளலாம். அதையும் நீங்களே செய்து கொடுங்கள் என்று அந்தத் தயாரிப்பாளர்கள் சொன்னார்கள்.
நான் சொந்தமாகப
(79) ஸ்ரீதேவிய வேணாங்கல.... சீதேவியையே வேணாங்கிறீங்க...!
"ராணி மகாராணி' படம் நன்றாக இருக்கிறது என்று கேள்விப்பட்டு இரண்டு தெலுங்குப் பட தயாரிப்பாளர்கள் (இருவரும் பார்ட்னர்ஸ்) என்னைப் பார்க்க வந்தார்கள். "ராணி மகாராணி' படத்தில் ஹீரோயினுக்கு ஆக்சன் காட்சிகள் இருக்கும். தெலுங்கில் விஜயசாந்தி மிகப்பெரிய மார்க்கெட்டில் இருந்தார். அவரை வைத்து ராணி மகாராணியை தெலுங்கிலே தயாரிப்பதற்கு உரிமை கேட்டார்கள். ஒரு தொகை பேசி முடிக்கப்பட்டது.
"இன்று எங்களுக்கு நல்லநாள். சென்ட்டி மெண்ட்டாக எப்பொழுதுமே நாங்கள் ஆயிரம் ரூபாய்தான் அட்வான்ஸ் கொடுப்போம்... வாங்கிக் கொள்ளுங்கள்'' என்றார்கள். நான் வாங்கிக் கொண்டேன்.
தெலுங்கிலே விஜயசாந்தி ஆக்ஷனில் பின்னி எடுப்பார். ஆனால் "தமிழில் ராதிகா மேடம் நடித்தது போல அவரால் நடிக்க முடியுமா?' என்று கேட்டேன். கதையிலே சில மாற்றங்கள் செய்து கொள்ளலாம். அதையும் நீங்களே செய்து கொடுங்கள் என்று அந்தத் தயாரிப்பாளர்கள் சொன்னார்கள்.
நான் சொந்தமாகப் போட்ட பணம் போய்விடும் என்று நினைத்திருந்த எனக்கு சற்று ஆறுதலாக இருந்தது. அன்று மாலை வேறு ஒரு தெலுங்குப் பட தயாரிப்பாளர் என்னைப் பார்க்க வந்தார். அப்பொழுதெல்லாம் தெலுங்குப் பட உலகைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் சென்னையில்தான் இருந்தார்கள். அதனால் சரளமாக தமிழ் பேசுவார்கள். அவர் சொன் னார். "லியாகத் அலிகான் சார், ஒரு நண்பர் கூப்பிட்டார்னு நேத்து பிரிவியூ தியேட்டர்ல உங்களோட ராணி மகாராணி படம் பார்த்தேன். எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நடிகை ஸ்ரீதேவியை ஹீரோயினா வச்சு தெலுங்கு, ஹிந்தி ரெண்டு மொழிகள்லயும் எடுக்கலாம்னு முடிவு பண்ணி யிருக்கேன். நாளைக்கு ஸ்ரீதேவிக்கு ஸ்பெஷலா ஷோ போட்டு காட்ட முடியுமா?'' என்று கேட்டார். இரண்டு மொழிப் படங்களுக்கும் சேர்த்து கதை உரிமைக்காக ஒரு தொகையைச் சொன்னார். விஜயசாந்திக்காக வந்து பேசிய தயாரிப்பாளர்கள் சொன்ன தொகையை விட அதிகமான தொகை. அப்பொழுது என்னுடன் என் உதவியாளர் ஒருவரும், நண்பர் ஒருவரும் இருந்தார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.
"சார், நமக்கு நேரம் நல்லா இருக்கு சார். ஸ்ரீதேவிய வச்சு இரண்டு மொழிகள்ல எடுத்தா பெரிசா இருக்கும். நமக்கு கிடைக்கிற பணமும் பெரிசா இருக்கும்'' என்றார்கள். நான் மனம் நொந்துபோயிருக்கும்பொழுது அந்தத் தயாரிப் பாளர் சொன்னது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
எனக்கு மட்டும் கேட்கும் குரலில் அவர்கள் பேசினார்கள். அதைக் கவனித்த தயாரிப்பாளர் "பேசிட்டு சொல்லுங்க சார். ஒரு தம் அடிச்சிட்டு வந்துர்றேன்' என்று சொல்லிவிட்டு வெளியே போனார்.
"உடனே ஓ.கே. சொல்லாம ஏன் சார் யோசிக்கிறீங்க'' என்றார் என் உதவியாளர்.
"இல்ல... நேத்து விஜயசாந்திக்காக பேச வந்த தயாரிப்பாளர்கள் கிட்ட சம்மதம் சொல்லி அட்வான்ஸும் வாங்கியாச்சுல்ல அதான் யோசிக்கிறேன்'' என்றேன்.
"சார், அது தெலுங்கு மட்டும். இது தெலுங்கு, இந்தி ரெண்டு மொழிக்குக் கேக்குறாங்க. நேத்து வந்தவங்க அட் வான்ஸா வெறும் ஆயிரம் ரூபாய் மட்டும்தான் சென்டிமெண்ட்டுன்னு சொல்லிக் கொடுத்தாங்க. அக்ரிமெண்ட் எதுவும் போடல. அவங்கள கூப்பிட்டு பேசுங்க. இந்திக்கும் சேர்த்து வாங்கச் சொல்லுங்க. இவரு சொன்ன தொகை கொடுப்பாங் களான்னு கேளுங்க. இல்லேன்னா வேண்டாம்னு சொல்லிட்டு இவர்கிட்ட அக்ரிமெண்ட் போட்டு பணத்தை வாங்குங்க சார்'' என்றார் என் உதவியாளர். என் நண்பரும் அதையே சொன்னார்.
"அவங்க தெலுங்கு மட்டும் போதும். இந்திக்கு வேண்டாம்னு சொன்னா என்ன பண்றது?''ன்னு நான் கேட்டேன்.
"சார், நீங்க அக்ரிமெண்ட்டும் போடல. பெரிய தொகையா அட்வான்ஸும் வாங்கல. இரண்டு மொழிக்கும் சேர்த்து நான் விக்கப் போறேன்னு சொல்லிருங்க சார். ஏன் தயங்குறீங்க'' என்றார்கள் இருவரும் திரும்பத் திரும்ப.
என் பிரச்சினைகள் தீரவேண்டும். எனக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற அக்கறை அவர்களுக்கு. அந்த அக்கறை என்னை ஆட்டிப் படைக்கும் விதிக்கு இல்லாமல் போய்விட்டது.
"டேய் லியாகத் வாக்கு தவறக்கூடாது. பணம் முக்கியம் இல்ல. நாணயம்தான் முக்கியம். நீ நல்லவனாவே இரு. பணத்துக்காக மனசை அலைய விடாதே' என்று என்னை யோசிக்க வைத்தது.
அந்த தயாரிப்பாளர் உள்ளே வந்தார். "என்ன லியாகத் சார். உங்களுக்கு ஓ.கே.வா. நாளைக்கு ஸ்ரீதேவி படம் பார்க்க ஏற்பாடு பண்றீங்களா?'' என்றார்.
"சாரி சார்... தெலுங்குக்கு நேத்தே நான் பேசி முடிச்சுட்டேன். இந்திக்கு மட்டும் வேணும்னா பேசலாம்'' என்றேன்.
அவர் யோசித்தார். பிறகு சொன்னார்.
"ரெண்டு மொழிக்கும் சேர்த்து கொடுத்தா வாங்கிக்கிறேன். இல்லேன்னா வேணாம் சார்'' என்று கூறிவிட்டு போய்விட்டார்.
"நீங்க ஸ்ரீதேவிய வேணாங்கல. தேடி வந்த சீதேவியையே வேணாம்னு சொல்லிட்டீங்க'' என்றார் என் நண்பர். "ராணி மகாராணி' படத் தைப் பற்றி நீண்ட கதை போல சொல்லிக் கொண்டி ருக்கிறேன் என்று வாசகர்கள் நினைக்கலாம்.
எனது ஆயுள் சீக்கிரம் முடிந்து போகாமல் நீண்ட கதை இதில் இருக்கிறது. சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்கள் என் உயிரைக் காப்பாற்றிய கதை இதில் இருக்கிறது. "ராணி மகாராணி' பற்றிய என் வலியை விளக்கமாகச் சொன்னால்தான்... சரத்குமார் அவர்கள் எனக்கு செய்தது எவ்வளவு பெரிய உதவி என்பது வாசகர்களுக்குப் புரியும்.
(வளரும்...)