கருப்பு + சிவப்பு = புரட்சி! -திரைப்பட இயக்குநர் -வசனகர்த்தா லியாகத் அலிகான் (78

ss

ff

(78) ராணியால் கெட்ட ராஜா நான்!

ரே ஷெட்யூலில் முடிக்க திட்டமிட்ட படம் "ராணி மகாராணி'. படத்தை தயாரிப்பதாகச் சொன்ன போலீஸ் அசிஸ்டெண்ட் கமிஷனர் "நான்தான் படத்திற்கு இசையமைப்பேன்' என்று சொன்னதால், அதை நான் ஏற்க மறுத்ததால்... படப்பிடிப்பு நின்றுபோனது. படத்தில் நடிக்க ஒப்பந்தமாயிருந்த எல்லோருடைய கால்ஷீட்டும் வீணாகிப்போனது. எல்லோருமே பிஸியான ஆர்ட்டிஸ்ட்டுகள். மறுபடியும் தொடங்கும்போது அவர்களுடைய கால்ஷீட் தேதிகளை எப்படி வாங்கப்போகிறோம், எப்பொழுது படப்பிடிப்பை தொடங்கப்போகிறோம் என்ற தவிப்புடன் இருந்தேன்.

அப்பொழுதே ஆர்.கே.செல்வமணி சொன்னார். "இதுவரைக்கும் நீங்கள் செலவழித்த பணம் போனால் போகிறதென்று விட்டுவிடுங்கள். மீண்டும் படத்தைத் தொடர நினைத்து சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள்'' என்று.

ஆர்.கே.செல்வமணியைப் பற்றி நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். தெளிவான சிந்தனை படைத்தவர். எதை எப்படிச் செய்யவேண்டும் என்ற வித்தை தெரிந்தவர். அன்று அவர் சொன்னபடி "ராணி மகாராணி' படத்தை நான் தொடராமல் விட்டிருந்தால் நானும் ராஜா மகாராஜாவாக இருந்திருப்பேன். அவர் சொன்னதை நான் கேட்கவில்லை. ஆர்.கே.செல்வமணி சொன்ன தைக் கேட்காதே என்று விதி எனக்குள்ளே புகுந்து தடுத்துவிட்டது.

தயாரிப்பு என்று ஒரு படத்தை ஆரம்பித்துவிட்டு அதை முடிக் காமல் விட்டுவிட்டால் கௌரவக் குறைச்சல் என்று நினைத்தேன்.

போலீஸ் மாமாவைப் பார்த்துப் பேச எனது மேனேஜரை அனுப்பிவைத்தேன். அவர் சந்திக்க மறுத்து திருப்பி அனுப்பினார். நான்

ff

(78) ராணியால் கெட்ட ராஜா நான்!

ரே ஷெட்யூலில் முடிக்க திட்டமிட்ட படம் "ராணி மகாராணி'. படத்தை தயாரிப்பதாகச் சொன்ன போலீஸ் அசிஸ்டெண்ட் கமிஷனர் "நான்தான் படத்திற்கு இசையமைப்பேன்' என்று சொன்னதால், அதை நான் ஏற்க மறுத்ததால்... படப்பிடிப்பு நின்றுபோனது. படத்தில் நடிக்க ஒப்பந்தமாயிருந்த எல்லோருடைய கால்ஷீட்டும் வீணாகிப்போனது. எல்லோருமே பிஸியான ஆர்ட்டிஸ்ட்டுகள். மறுபடியும் தொடங்கும்போது அவர்களுடைய கால்ஷீட் தேதிகளை எப்படி வாங்கப்போகிறோம், எப்பொழுது படப்பிடிப்பை தொடங்கப்போகிறோம் என்ற தவிப்புடன் இருந்தேன்.

அப்பொழுதே ஆர்.கே.செல்வமணி சொன்னார். "இதுவரைக்கும் நீங்கள் செலவழித்த பணம் போனால் போகிறதென்று விட்டுவிடுங்கள். மீண்டும் படத்தைத் தொடர நினைத்து சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள்'' என்று.

ஆர்.கே.செல்வமணியைப் பற்றி நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். தெளிவான சிந்தனை படைத்தவர். எதை எப்படிச் செய்யவேண்டும் என்ற வித்தை தெரிந்தவர். அன்று அவர் சொன்னபடி "ராணி மகாராணி' படத்தை நான் தொடராமல் விட்டிருந்தால் நானும் ராஜா மகாராஜாவாக இருந்திருப்பேன். அவர் சொன்னதை நான் கேட்கவில்லை. ஆர்.கே.செல்வமணி சொன்ன தைக் கேட்காதே என்று விதி எனக்குள்ளே புகுந்து தடுத்துவிட்டது.

தயாரிப்பு என்று ஒரு படத்தை ஆரம்பித்துவிட்டு அதை முடிக் காமல் விட்டுவிட்டால் கௌரவக் குறைச்சல் என்று நினைத்தேன்.

போலீஸ் மாமாவைப் பார்த்துப் பேச எனது மேனேஜரை அனுப்பிவைத்தேன். அவர் சந்திக்க மறுத்து திருப்பி அனுப்பினார். நான் சந்தித்துப் பேச முயற்சித்தேன். "தேவா இல்லாமல், நான் மியூசிக் டைரக்டர் என்பதை ஏற்றுக்கொண்டால் சந்திப்போம்' என்று கூறிவிட்டார்.

என்னுடைய உறவினர் ஒருவர் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். போலீஸ் மாமாவுக்கு அவர் நண்பர். நடந்த விஷயங்களைக் கேள்விப் பட்டு எங்கள் இருவரையும் சந்திக்க வைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். தேவா அண்ணன் வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். படத்தின் பார்ட்னர் என்ற முறையில் அவர் இதுவரை கொடுத்த பணத்தைவிட கொஞ் சம் அதிகமாகவே கொடுத்துவிடுகிறேன். பார்ட்னர் ஷிப்பில் இருந்து விலகிக் கொள்ளுமாறு கேட் டேன். முதலில் மறுத்து, பிடிவாதம் பிடித்து, "இந்தப் படத்தை நீங்கள் எப்படி எடுக்கிறீர்கள் பார்க்கலாம்' என்று சவால்விட்டு கடைசியில் சம்மதித்தார். மறுநாளே அவருக்கு கொடுக்கவேண் டிய பணத்தை கொண்டுபோய் கொடுத்த பிறகு பார்ட்னர்ஷிப்பிலிருந்து விலகிக்கொண்டார்.

ff

மீண்டும் ராதிகா மேடத் தை சந்தித்து கால்ஷீட் வாங்கி னேன். மற்ற நடிகர், நடிகைகளிடமும் வாங்கி னேன். முதலில் வாங்கியது போல மொத்தமாக வாங்க முடியவில்லை. மூன்று மாதங் களில் முடிக்க வேண்டிய படம் ஒன்றரை வருடங்களானது. க்ளை மேக்ஸ் மட்டும் எடுக்க வேண்டும். ரீ-ரிகார்டிங் பண்ணவேண்டிய தேதி குறித்து முடிவு செய்ய தேவா அண்ணனைப் போய்ப் பார்த்தேன்.

"க்ளைமேக்ஸ் காட்சியைத் தவிர மற்ற எல்லாம் முடித்து பன்னிரெண்டு ரீல்கள் தயாராக இருக்கிறது'' என்றேன்.

அதற்கு தேவா அண்ணன் "முதலில் நான் பன்னிரெண்டு ரீல்களுக்கு ரீ-ரிகார்டிங் பண்ணி விட்டு சபரிமலைக்குப் போகிறேன். நான் திரும்பி வர மூன்று நாட்களாகும். அதற்குள் க்ளைமேக்ஸ் சீனை எடுத்து முடித்துவிடுங்கள். வந்ததும் அதையும் முடித்துவிடுகிறேன்'' என்றார்.

சபரிமலை போய்விட்டு வந்ததும் அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி சார் பட வேலைகள் இருந்தது. அதனால் "ராணி மகாராணி' படத்தின் ரீ-ரிகார்டிங் தள்ளிப்போகக்கூடாது என்பதற்காக நானும் அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டேன்.

சொன்னபடியே பன்னிரெண்டு ரீல்களுக்கு ரீ-ரிகார்டிங் முடித்துவிட்டு அவர் சபரிமலைக்கு கிளம்பினார். மறுநாள் க்ளைமேக்ஸ் சீன் எடுப்பதற்காக ராதிகா, ரகுவரன், மணிவண்ணன், ஸ்ரீவித்யா, சார்-, கோவை சரளா, தியாகு, கோகிலா... இவர்கள் இல்லாமல் மேலும் பல நடிகர், நடிகைகளின் கால்ஷீட் வாங்கி படப்பிடிப்பு வேலைகள் நடந்துகொண்டிருந்தது.

மணிவண்ணன் சார் வயிற்றுவலி என்று கூறி டாக்டரைப் பார்க்கப் போனார். அவருக்கே தெரியாது அந்த ஹாஸ்பிட்டலில் நூறு நாட்கள் இருக்கப்போகிறார் என்பது. அவரை செக் பண்ணிய டாக்டர் உடனே ஆபரேஷன் பண்ண வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். நாளை ஒரே ஒருநாள் "ராணி மகாராணி' க்ளைமேக்ஸ் ஷுட்டிங் இருக்கிறது. அதை முடித்துவிட்டு நாளை மறுநாள் ஆபரேஷனை வைத்துக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த டாக்டர், "உடனே பண்ணணும். இல்லேன்னா உங்களுக்கு பிரச்சினை பெரிசாயிரும்' என்று சொல்லியிருக்கிறார்.

வேறு வழியில்லாமல் மணிவண்ணன் சாரும் ஆபரேஷனுக்கு சம்மதித்திருக்கிறார்.

அவர் இல்லாததால் மறுநாள் நடக்கவேண் டிய க்ளைமாக்ஸ் ஷூட்டிங் கேன்சலாகிப் போனது. அலைந்து, அலைந்து கெஞ்சி கெஞ்சி எல்லா நடிகர் நடிகைகளிடமும் கால்ஷீட் வாங்கி வைத்திருந் தேன். அத்தனையும் வீணாகிப்போனது.

சபரிமலைக்குப் போய்விட்டு வந்ததும் என்னை அழைத்த தேவா அண்ணனிடம் விபரத்தைச் சொன்னேன்.

"உங்களுக்குத்தான் எத்தனை சோதனை. இந்தப் படம் உங்கள பாடாப் படுத்திருச்சு' என்று எனக்காக வருத்தப்பட்டார்.

ஆபரேஷன் முடிந்து நூறு நாட்கள் ஹாஸ்பிடலில் இருந்துவிட்டு வீட்டுக்கு வந்தார் மணிவண்ணன். அவரைப் போய்ச் சந்தித்தேன்.

"ஒருவாரம் கழித்து க்ளைமேக்ஸ் சீனை எடுங்கள். ஆனால் உடல்ரீதியாக என்னால் ஓடியாடி நடிக்க முடியாது. அதற்கு தகுந்ததுபோல சில மாற்றங்கள் செய்துகொள்ளுங்கள்'' என்று கூறினார்.

அவர் சொன்னது போல மாற்றங்கள் செய்து ஒருவாரம் கழித்து க்ளைமாக்ஸ் காட்சியை எடுத்து முடித்தேன். அதற்கும் தேவா அண்ணன் ரீ-ரிகார்டிங் செய்து கொடுத்தார். இரண்டு ரீல் ரீ-ரிகார்டிங் வாசிக்க நான்கு மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஆகிவிட்டது. இதயம் இரும்பால் செய்தது அல்ல என்பதை "ராணி மகாராணி' படம் எனக்கு உணர்த்தியது. காரணம் மூன்று மாதத்தில் படம் முடிந்திருந்தால் செலவு குறைந்திருக்கும். பல பிரச்சினைகள் ஏற்பட்டு படம் முடிய ஒன்றரை வருடங்களுக்கும் அதிகமாகிப் போனதால் படத்தின் செலவு அதிகமாகிப் போனது. என் சொந்தப் பணத்தைத் தவிர இரண்டு பைனான்சியர்களிடம் கடன் வாங்கியிருந்தேன். அதற்கான வட்டியும் அதிகமாகிப்போனது.

"ராணி மகாராணி' படம் பூஜை போட்டு தொடங்கும் பொழுது ராதிகா மேடம் நடித்த "கிழக்குச் சீமையிலே' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்ததால் விநியோகஸ்தர்கள் என் படத்தை வாங்க ஆர்வம் காட்டினார்கள். நல்ல விலைக்கும் கேட்டார்கள். ஆனால் போலீஸ் மாமா தடுத்துவிட்டார். "படத்தை நானே சொந்தமாக ரிலீஸ்பண்ண முடிவெடுத்திருக் கிறேன். அதனால் யாருக்கும் விற்க வேண்டாம்' என்று கூறிவிட்டார். ஒன்றரை வருட இடைவெளியில் எல்லாமே மாறிப்போனது. "கிழக்குச் சீமையிலே' படத்தின் வெற்றி இப்பொழுது கைகொடுக்கவில்லை. படத்தில் ஹீரோ இல்லை, ஹீரோயின் கதை. அதனால் படத்தை வாங்க விநியோகஸ்தர் கள் ஆர்வம் காட்டவில்லை.

படம் மொத்த பணிகளும் முடிந்து ஃபர்ஸ்ட் காப்பி ரெடியானதும் புரஜக்ஷன் போட ஆரம்பித்தேன். பிரிவியூ தியேட்டர்களில் பார்த்தவர்கள் ரசித்து, சிரித்து மகிழ்ந்தார்கள். ராதிகா மேடம் பல வேடங்களில் நடித்திருப்பதை பார்த்தவர்கள் எல்லோருமே பாராட்டினார்கள். படம் நன்றாக இருக்கிறது என்று தெரிந்தபிறகு படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் வந்தார்கள். ஆனால் குறைவான விலைக்குக் கேட்டார்கள். ஹீரோ இல்லை என்று காரணம் சொன்னார்கள். அவர்கள் கேட்ட விலைக்கு நான் கணக்குப் போட்டுப் பார்த்தேன். படத்திற்காக நான் செலவு செய்த என் சொந்தப் பணம் எனக்குத் திரும்ப கிடைக்காது என்று தெரிந்தது. நம் பணம் போனால் பரவாயில்லை, படம் வெளிவந்தால் போதும் என்று நினைத்தேன். அப்பொழுதுதான் ஒரு கதாசிரியராக, வசனகர்த்தாவாக, ஒரு இயக்குநராக நான் மகிழ்ச்சியடையும்படி ஒரு நிகழ்வு நடந்தது.

(வளரும்...)

nkn021223
இதையும் படியுங்கள்
Subscribe