(68) விசுவாசத்தால் வந்த விபரீதம்!
போலி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேஷத்தில் போய் சத்யராஜ் வசூலித்த மாமூல் பணத்தைப் பார்த்து மலைத்துப்போய் ஐ.ஜி. கேட்டார்.
ஐ.ஜி : என்னய்யா இது?
சத்யராஜ்: லஞ்சமா கிடைச்ச பணம் சார்.
ஐ.ஜி: வாட்
சத்யராஜ்: ஆமா சார். கள்ளச்சாராயம் காய்ச்சற இடம் கடத்தல் பண்ற இடம். போதை மருந்து விக்கிற இடம். அந்த மாதிரி இடங்கள்ல கிடைச்ச லஞ்சப்பணம் சார்.… ஒரு ஏரியாவுல ஒரு மணி நேரத்துல இவ்வளவு லஞ்சம் கிடைச்சா, இந்த மெட்ராஸ்ல ஒரு ராத்திரி யில எவ்வளவு சார் கிடைக்கும்? ஒருநாள் முழுக்க எவ்வளவு சார் கிடைக்கும்? இந்த தமிழ்நாடு முழு வதும் எவ்வளவு சார் கிடைக்கும்? இவ்வளவு அள்ளி அள்ளி லஞ்சம் கொடுக்கிறவங்க எவ்வளவு அநியாயம் பண்றாங்க தெரியுமா சார்? எவ்வளவு அரா ஜகம் பண்றாங்க தெரியுமா சார்? அவங்ககிட்ட கைநீட்டி லஞ்சம் வாங்கற போலீஸ்காரங்க இதையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்காங்க தெரியுமா சார்?
ஐ.ஜி: லஞ்சம் வாங்கறவங்கள மட்டும் குறை சொல்லாதீங்க. லஞ்சம் கொடுக்குறதுதான் பெரிய தப்பு.
சத்யராஜ்: சார்… நீங்க டீ கொடுத்தா குடிப்பீங்க. காபி கொடுத்தா குடிப்பீங்க. விஷம் கொடுத்தா குடிப்பீங்களா சார்?
ஐ.ஜி. அதிர்ச்சியாகப் பார்க்க...
சத்யராஜ்: சட்டம் ஒழுங்கு கெட்டுப் போறதுக்கு பொதுமக்கள் மட்டும் காரணமில்ல சார். உண்மையான காரணம் போலீஸ்காரங்கதான் போலீஸ்காரங்களப் பார்த்து ரவுடித்தனம் பண்றவங்க. பயப்பட்ட காலம் போயி ரவுடித்தனம் பண்றவங்கள பார்த்து போலீஸ்காரங்க பயப்படறாங்க. இது எப்ப சார் மாறும்? எப்ப சார் மாத்துவீங்க? ஜனங்கள எப்படி சார் காப்பாத்தப் போறீங்க? அதை நான் உங்களுக்கு உணர்த்தணும். அதனாலதான் இந்தப் பணத்தை இங்க கொண்டு வந்தேன்.
ஐ.ஜி: என் சர்வீஸ்ல இப்படி ஒரு துடிப்பான போலீஸ்காரன நான் பார்த்ததே இல்ல. ஆமா நீ எந்த ஏரியா இன்ஸ்பெக்டர்?
சத்யராஜ்: எந்த ஏரியாவும் இல்ல சார். சும்மா நாடகத்துக்காக இந்தக் காக்கிச்சட்டைய போட்டேன்.
ஐ.ஜி: என்னது நாடகத்துக்காகவா?
சத்யராஜ்: ஆமா சார். ஒரு போலீஸ் ஜீப்பை திருடிட்டுத் தான் அந்த இடங்களுக்கெல்லாம் போனேன். ஆனா ஒன்று சார். காக்கிச் சட்டைய மாட்டணும். இந்த நாட்டோட கண் ணியத்தைக் காப்பாத்தணும்ங்கிறதுதான் சார் என் லட்சியம்.
ஐ.ஜி: உன்னை மாதிரி ஆளுங்கதான் போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கணும். உன்னை என்ன பண்றதுன்னு எனக்குத் தெரியும். நீ வீட்டுக்குப் போ. நான் பாத்துக்கிறேன்.
சத்யராஜ்: "எஸ் சார்' என்று சல்யூட் அடித்துவிட்டுப் போவார்.
ஐ.ஜி. போனை எடுத்து டயல் செய்து மனைவியிடம் பேசுவார்.
ஐ.ஜி: ஏம்மா… வைர நெக்லஸ் வாங்கணும்னு சொன்னியே. என்னோட பிசினஸ் பார்ட்னர்கிட்ட இருந்து பணம் வந்திருச்சு. இன்னிக்கே வாங்கிரலாம்.
இந்தக் காட்சியில் என்னோட பிசினஸ் பார்ட்னர்ங்க கிட்ட இருந்து என்ற வார்த்தையை சென்சாரில் கட் பண்ணிவிட்டார்கள்.
இந்த சீனைப் போல படத்தில் பல சீன்கள் அரசியல் அசிங்கங்களைப் பற்றி அரசியல்வாதிகளின் அராஜகங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசப்பட்ட வசனங்கள் சத்யராஜ், அண்ணன்கள் ராதாரவி, மறைந்த எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர் பேசும்போதெல்லாம் அரங்கங்கள் அதிர்ந்தன.
இப்படியெல்லாம் அமைந்த படத்தில் திரைக்கதை சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தால் "கட்டளை' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும்.
கதையின் மையக் கருத்தாக நான் என்ன சொல்ல நினைத்தேனோ அதை வலுவாகச் சொல்லவில்லை. சரியாகச் சொல்லவில்லை. அதற்குக் காரணம் நான்தான். திரைக்கதை எழுதுவதற்காக சத்யராஜ், எனக்கு சில நாட்கள் அவ காசம் கொடுத்தார். அந்த நாட்களில் "சக்கரைதேவன்' படமும் "எங்க முதலாளி' படமும் இடையூறாக வந்து விட்டன. அந்தப் படங்களின் வேலை களைக் கவனிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டதால் "கட்டளை' திரைக்கதை அமைக்கும் வேலையை என்னால் நிறைவாகச் செய்ய முடிய வில்லை. "சக்கரைதேவன்', "எங்க முத லாளி' இரு படங்களும் பலவந்தமாக திணிக்கப்பட்டதுதானே உண்மையான காரணம். பிறகு நான் எப்படி காரண மாவேன் என்று நீங்கள் நினைக்கலாம்.
நான் மட்டுமல்ல. பல மனிதர்கள் பல சூழ்நிலையால் "நோ' என்ற வார்த் தை சொல்லத் தயங்குவதுதான் காரணம். சில நேரங்களில் தயக்கம். சில நேரங்களில் பயம். சில நேரங்களில் "நோ' என்ற வார்த்தையை நாம் சொன் னால் மற்றவர்களுக்கு வலிக்குமே என்ற தடுமாற்றம். பல அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள். "நோ' என்ற வார்த் தையை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாமல் இருந்துவிடாதீர்கள். அது வாழ்க்கையில் பலவித சிக்கல்களை உண்டாக்கிவிடும்.
"நோ' சொல்ல வேண்டிய நேரத் தில் சொல்லத் தயங்கினால், சொல் லாமல் இருந்துவிட்டால் தோற்று நிற்பீர்கள். மற்றவர் களுக்கு வலிக்குமே என்பதற்காக "நோ' சொல்லாமல் விட்டுவிட்டால், வாழ்க்கை முழு வதும் நாம் வலியோடு வாழ்கின்ற நிலைமைகூட உருவாகிவிடலாம்.
நான் ரசிக்கின்ற மிகச்சிறந்த சொற்பொழிவாளர் முனைவர் பேராசிரியை பர்வீன் சுல்தானா அவர்களுடைய சொற்பொழிவில் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். அவருடைய சொற்பொழிவைக் கேட்டால் ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். புது உத்வேகம் பிறக்கும்.
அன்பு சகோதரர் இயக்குநர், எழுத்தாளர் விஜயபாலாஜி, முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் பேசிய யூடியூப் வீடியோ ஒன்றை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். பெற்றோர்கள் குழந்தைகளிடம் "நோ' சொல்லிப் பழகவேண்டும். அப்பொழுது தான் அவர்களது எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதை அற்புதமாகச் சொல்லியிருப்பார். அதையும் தாண்டி "நோ' சொல்லவேண்டிய அவசியத்தை அழகாகச் சொல்லியிருப்பார்.
நான் எப்பொழுது சத்யராஜுக்காக "கட்டளை' படத்தை எழுதி இயக்கச் சம்மதித்தேனோ அதை ஒரு தவமாக எண்ணி செயல்பட்டிருக்க வேண்டும். அதற்கு இடையூறாக வந்த மற்ற படங்களை "நோ' சொல்லி நிராகரித்திருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறிவிட்டேன். எனக்கு எழுத்தாற்றலைக் கொடுத்த இறைவன், அப்பொழுது விஜயபாலாஜி போன்ற சகோதரர்களை கொடுக்கவில்லை. அப்படி அமைந்திருந்தால் எனக்கு ஆலோசனை சொல்லியிருப்பார்கள். முனைவர் பர்வீன் சுல்தானா போன்ற அறிவாளிகளின் சொற்பொழிவுகளை அறிவுரையாகச் சொல்லியிருப்பார்கள்.
எனக்கு மட்டுமல்ல, எந்தத் துறையாக இருந்தாலும் அதில் வெற்றிபெற நல்ல நண்பர்கள் வேண்டும். நல்ல ஆலோசகர்கள் வேண்டும். உரிமையோடு உண்மையை எடுத்துச் சொல்பவர்கள் வேண்டும்.
அப்படி அமையாதவர்கள் எளிதில் வெற்றி பெற்றுவிட முடியாது. அவற்றில் திரைப்படத்துறையும், அரசியலும் மிக முக்கியமானது. திறமையானவர்களின் துணையில்லாமல் தனி மனிதனாக எதையும் சாதிக்க முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து. இதிலிருந்து சிலர் வேறுபடலாம். சிலர் வெளிப்படையாகச் சொல்லத் தயங்கலாம். ஆனால் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் நோ சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாமல் இருந்ததினால் ஏற்பட்ட பாதிப்பு எதாவது ஒன்று இருக்கத்தான் செய்யும்.
நான் பலமுறை "நோ' சொல்லாமல் இருந்து பாதிக்கப்பட்டவன். என் மீது பெரிய நம்பிக்கை வைத்திருந்த சத்யராஜுக்குக் கூட எனக்குள்ளே இருக்கும் வலி தெரிந்திருக்காது. நம்மை நம்பியவர்களை எந்த விதத்திலும் ஏமாற்றிவிடக்கூடாது என்பது எனக்கு காலம் கற்றுக் கொடுத்த பாடம். "விசுவாசம் காட்டியதால் விளைந்த விபரீதங்கள்' என்று தலைப்பிட்டு தனியாகவே ஒரு தொடர் எழுதலாம்.
அந்த அனுபவங்களில் ஒன்றுதான் "எங்க முதலாளி' படம்.
(வளரும்...)
படம் உதவி: ஞானம்