aa

(61) "மந்திரிகுமாரி!'

ஜினி சார் நடித்த "படிக்காதவன்', கமல் சார் நடித்த "காக்கிச் சட்டை' போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கிய டைரக்டர் ராஜசேகர், நான் இயக்கவிருந்த பாண்டியராஜன் படத்தை இயக்கினார். அந்தப் படத்தின் பெயர் "புது வாரிசு.' இந்த நிகழ்வைக் கேள்விப்பட்டு பலர் என்னிடம் கேட்க ஆரம்பித் தார்கள். "பாண்டியராஜன் படத்தை கதை டிஸ்கஷன் எல்லாம் முடிஞ்ச பிறகு விட்டுட்டுப் போயிட்டீங் களாமே?' -இப்படி சிலர்.

"விஜயகாந்த் தும், இப்ராகிம் ராவுத்தரும் கூப்பிட்டா எந்த வேலையா இருந்தாலும் லியாகத் அலிகான் விட்டுட்டுப் போயிடு வாரு' இப்படி சிலர்.

Advertisment

"நீங்க இப்படியே பண்ணிக்கிட்டிருந்தா உங்கள விஜயகாந்த்தோட ஆளுன்னு முத்திரை குத்திருவாங்க. வேற யாரும் கூப்பிட மாட்டாங்க' என்று இப்படியும் சிலர் சொல்ல ஆரம்பித்தார்கள். நான் சொன்னது தவிர வேறு சில படங்களையும் நான் விட்டதினால் வந்த விமர்சனங்கள் அவை.

விஜயகாந்த்தின்மேல் அவ்வளவு அன்பும் விசுவாசமும் வைத்திருந்தேன்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் "புரட்சித் தமிழன்' சத்யராஜ் அவர்களைச் சந்தித்தேன். விளம்பரமில்லாமல் வெளியே தெரியாமல் கொடுக் கின்ற வள்ளல் அவர். ஷூட்டிங் நடக்கின்ற பொழுது அவரிடம் யாராவது உதவி கேட்டு வந் தால் தனது உதவியாளரை அழைத்து ரகசியமாக பணம் கொடுக்கச் சொல்வார். ஒருமுறை நானே அவரிடம் உதவி கேட்டுப் போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. விஜயகாந்த், ராவுத்தர் இருக்கும்போது அவரிடம் ஏன் போனேன் என்பதற்கான காரணம் இங்கு முக்கியமல்ல. அவரிடம் உதவி கேட்டுப் போனபோது என்ன நடந்தது என்பதைச் சொல்கிறேன். இது நடந்தது 1990களில்.

Advertisment

"சார்… என் சிஸ்டர் பையனை மெடிக்கல் காலேஜில சேர்க்கலாம்னு இருக்கேன். என்கிட்ட பணம் கொஞ்சம் குறைவா இருக்கு. கேட்ட இடத்துல கிடைக்கல. ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தீங்கன்னா ஒரு வாரத்துல திருப்பித் தர்றேன் சார்'' என்றேன் தயக்கத்துடன்.

ஐம்பதாயிரம் ரூபாய் என்பது அப்பொழுது பெரிய தொகை. உடனே பதில் சொல்லா மல் என்னையே பார்த்தார்.

"ஒரு வாரத்தில திருப்பித் தர்றேன் சார்'' என்றேன் மறுபடி யும்.

"இல்ல லியாகத் சார்'' என்றார் பட்டென்று.

எனக்கு ஒரு மாதிரியாகப் போய்விட்டது. என் முகம் வாடிப் போனதைப் பார்த்து விட்டுச் சொன்னார்.

"நீங்க திருப்பித் தர்றதா இருந்தா இல்லேன்னு சொன்னேன்'' என்றார்.

"சார்'' என்றேன் சற்றும் புரியாமல்.

"நீங்க நான் கொடுக்கிற ஐம்பதாயிரம் ரூபாயை திருப்பித் தரவேணாம் அப்படின்னா குடுக் கிறேன்'' என்று சொன்னார்.

உள்ளே போய் எடுத்து வந்து கொடுத்தார்.

அவர்தான் புரட்சித் தமிழன் சத்யராஜ். அப்படிப் பட்ட நல்ல உள்ளம் கொண்ட வரை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன்.

"சார் உங்கள மனசுல வச்சு ஒரு கதை ஐடியா வச்சிருக்கேன் சார்''

"சொல்லுங்க சார்''

"முழுக்கதையும், திரைக் கதையும் என்கிட்ட இல்ல. சில சீன்களோட ஒரு நல்ல ஐடியா இருக்கு''

"என்ன இருக்கோ அதைச் சொல்லுங்க''

சில சீன்களோடு அதற்கான வசனங்களோடு ஒரு கதையைச் சொன்னேன்.

சத்யராஜுக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது.

"திரைக்கதைய முழுசா பண்ணா சூப்பரா வரும் லியாகத் சார்''

"நீங்க ஓ.கே. சொன்னா நான் பண்றேன் சார்''

"தயாரிப்பாளர் யாருன்னு முடிவு பண்ணிட்டுச் சொல்றேன்'' என்றார் சத்யராஜ்.

சத்யராஜுக்கு நான் சொன்ன கதை பிடித்துப் போய்விட்டது என்பதைக் கேள்விப்பட்டு சந்திரபிரகாஷ் ஜெயின் என்ற தயாரிப்பாளர் என்னைச் சந்தித்தார். அவர் பெரிய ஃபைனான்சியரும் கூட. சத்யராஜை வைத்தும், வேறு ஹீரோக்களை வைத்தும் பல படங்கள் தயாரித்தவர்.

aa

"சத்யராஜ் சாருக்கு நீங்க கதை சொன்னதா கேள்விப்பட்டேன். அதை நானே தயாரிக்கிறேன். எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறீங்க?'' என்று கேட்டார்.

"சத்யராஜ்கிட்ட பேசிட்டு சொல்றேன்'' என்றேன்.

சத்யராஜைப் பார்த்து நடந்ததைச் சொன்னேன். அவர் சொன்ன பதிலில் இருந்து அவருடைய இன்னொரு உயர்ந்த குணம் எனக்குத் தெரிந்தது.

"லியாகத் சார், சந்திரபிரகாஷ் ஜெயின் நல்ல தயாரிப்பாளர்... நல்ல மனிதர். பெரிய ஃபைனான்சியர். அவருக்கு படம்பண்ணுனா பொருளாதார ரீதியா உங்களுக்கும் நல்லா இருக்கும். ஆனா நான் ஒரு முடிவுல இருக்கேன். எனக்கு விசுவாசமா என் கூடவே இருக்கிற நண்பர்களுக்கும் அப்பப்ப நான் படம் பண்ணனும். எனக்கு மார்க்கெட் நல்லா இருக்கிற நேரத்துல அவங்களுக்கு கால்ஷீட் கொடுத்தாதான் அவங்க லாபம் சம்பாதிச்சு நல்லா இருக்க முடியும். அதனால கே.பி. பிலிம்ஸ் பாலுவுக்கு பண்ணலாம் உங்களுக்கு ஓ.கே.வா?'' என்றார்.

கே.பி. பிலிம்ஸ் பாலு சாருடன் நானும் நெருங்கிப் பழகிக்கொண்டிருப்பவன். பல படங்கள் தயாரித்தவர். பி.வாசு சார் இயக்கி, பிரபு சார் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற "சின்னத் தம்பி' படத்தையும் தயாரித்தவர்.

"ஓ.கே. சார், அவருக்கே பண்ணலாம்'' என்றேன்.

பாலுவை வரச் சொன்னார். அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. கதாநாயகியாக பானுப்பிரியாவை முடிவுசெய்து அவரிடம் போய், படத்தில் அவருடைய கேரக்டரைப் பற்றிச் சொல்லி அவரும் ஓ.கே. சொல்லிவிட்டார்.

சத்யராஜ் படப்பிடிப்புக்காக பொள்ளாச்சி போய்விட்டார். இரண்டு, மூன்று நாட்கள் கழித்து கே.பி. பிலிம்ஸ் பாலு, சத்யராஜ் மேனேஜர் ராமநாதன் இருவரும் என்னிடம், "சத்யராஜ் சார் கூட பானுப்பிரியா நிறைய படங்கள்ல நடிச்சுட்டாங்க. புதுசா ஒரு ஹீரோ யின் போட்டா நல்லா இருக்கும்'' என்றார்கள்.

"புது ஹீரோயின், புது காம்பினேஷன் இருந்தா நல்லாத் தான் இருக்கும்' என்று நானும் சொன்னேன். அவர்கள் பிஸினஸை மனதில் வைத்து யோசிக்கிறார்கள் என்று நினைத்தேன்.

"ஹீரோயினை முடிவு பண்ணிட்டீங்களா?'ன்னு கேட்டேன்.

அவர்கள் சொன்னது ரோஜா அவர்களை.

அப்பொழுது அவர் புதிதாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்திருந்த நேரம்.

எனக்கும் சத்யராஜ் -ரோஜா ஜோடி இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. உடனே நானும் சம்மதித்தேன்.

ரோஜாவை சந்தித்துப் பேசி கதையையும் கேரக்டரையும் சொல்லி சம்மதமும் வாங்கிவிட்டோம்.

சத்யராஜ் அவுட்டோர் ஷூட்டிங் முடிந்து வந்ததும் அவரிடமும் சொல்லி சம்மதிக்க வைத்து விடலாம் என்று பாலு சாரும், ராமநாதன் சாரும் சொன்னார்கள்.

கே.பி.பிலிம்ஸ் படத்துக்கு அப்பொழுது அண்ணன் இளையராஜாதான் இசையமைப்பாளர். என்னுடைய படங் களுக்கும் அவர்தான். படத்திற்கு டைட்டில் முடிவு செய்தோம், "மந்திரிகுமாரி'.

அந்த காலகட்டத்தில் அதிவீரபாண்டியன் என்ற மூத்த பத்திரிகையாளர் இருந்தார். தினத்தந்தியில் பணிபுரிந்து வந்தார். திரைப்படத் துறையைச் சேர்ந்த அனைவருக்கும் அறிமுக மானவராகவும், பிடித்தமானவராகவும் இருந்தார்.

படத்தின் ஹீரோயின், டைட்டில் எல்லாம் நன்றாக அமைந்து விட்டது என்ற மகிழ்ச்சியோடு இருந்த ஒரு மாலை நேரத்தில் கே.பி.பிலிம்ஸ் அலுவலகத்திற்கு அதிவீரபாண்டியன் வந்தார்.

அவருடன் பேசிக்கொண்டிருந்தபொழுது பாலு சார் சொன்னார்...

"அண்ணே நம்ம கே.பி. பிலிம்ஸ்ல அடுத்த படம் என்னன்னு முடிவாயிருச்சு. நல்லா இருக்கான்னு சொல்லுங்க. சத்யராஜ்-ரோஜா நடிக்கும் மந்திரிகுமாரி. இசை இளையராஜா. கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் லியாகத் அலிகான். எப்படிண்ணே?'' என்று சொன்ன உடனேயே... "தம்பி சூப்பரா இருக்கு தம்பி' என்றார் அதிவீரபாண்டியன். சிறிதுநேரம் பேசி விட்டுப் போய்விட்டார். இரண்டு நாட்கள் கழித்து அதாவது ஞாயிற்றுக்கிழமை கே.பி.பிலிம்ஸ் பாலுவுக்கு அதிவீர பாண்டியன் போன் செய்தார்.

"தம்பி பாலு… நீங்க சொன்ன விஷயத்தை சினிமா நியூஸ் போடச் சொல்லிட்டேன். செவ்வாய்க்கிழமை பேப்பர்ல வரும்'' என்று சொல்ல... பாலு அதிர்ச்சியில் ஆடிப்போய்விட்டார்.

"அண்ணே நல்லா இருக்கான்னு உங்ககிட்ட கேக்கறதுக் காகத்தாண்ணே சொன்னேன். முறைப்படி எல்லா பத்திரிகை காரங்களையும் கூப்பிட்டு நாங்க பிரஸ்மீட் வச்சு சொல்லணும்ணே.…

நியூஸ் போட வேண்டாம்ணே'' என்றார்.

அதற்கு அவர் சொன்ன பதில், பாலுவுக்கு மேலும் அதிர்ச்சி யாய் இருந்தது.

(வளரும்...)