(5) வேட்டியோட இருக்கேன்... வெட்டியா இருக்கேன்...
நான் திரையுலகிற்கு வந்து பாராட்டப் படுகின்ற வசனகர்த்தாவாக வளர்ந்து வரும்பொழுது கே.பாலசந்தர் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்புகளைச் சொல்கிறேன்.
அவருடன் நான் தனிப்பட்ட முறையில் நெருங்கிப் பழகியதில்லை. ஆனால் பல நிகழ்ச்சிகளில் குறிப்பாக, திரைப்பட விழாக்களில் சந்திப்பேன். அவரைப் பார்த்ததும் ஓடிப்போய் வணக்கம் சொல்வேன்.
"லியாகத் அலிகான்' என்று கம்பீரக் குரலில் அழைத்து, என் தோளை அழுத்தி "நல்லா எழுதுறய்யா' என்று பாராட்டுவார்.
ஒருதடவை "உங்க வாயால பாராட்டு வாங்கறதுக்கு நான் பாக்யம் செஞ்சிருக்கணும் சார்'' என்றேன்.
"என் வாயாலதான் பாராட்டணும்... அதுக்கு வேற வாயவா வாங்கிட்டு வர முடியும்' என்று சிரித்தார்.
2014-ஆம் ஆண்டு அந்த சாதனை மன்னன் நம்மைவிட்டு மறைந்தார்.
அவர் மறைவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஒருநாள் அவரது வீட்டிலிருந்து காலை 11 மணிக்கு எனக்கு போன் வந்தது. அவரே பேசினார்.
"என்னைப் பார்க்கணும்... 4 மணிக்கு வர்றியா?''.
"உடனே வரச்சொன்னாலும் வர்றேன் சார்'' என்றேன்.
"வேண்டாம், 4 மணிக்கு வா'' என்றார்.
அவரிடமிருந்து போன் வந்ததும், அவரே பேசியதும் எனக்கு இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி. எதுக்காக வரச் சொல்லியிருப்பாரு என்ற தவிப்பு.... 4 மணி எப்பொழுது வ
(5) வேட்டியோட இருக்கேன்... வெட்டியா இருக்கேன்...
நான் திரையுலகிற்கு வந்து பாராட்டப் படுகின்ற வசனகர்த்தாவாக வளர்ந்து வரும்பொழுது கே.பாலசந்தர் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்புகளைச் சொல்கிறேன்.
அவருடன் நான் தனிப்பட்ட முறையில் நெருங்கிப் பழகியதில்லை. ஆனால் பல நிகழ்ச்சிகளில் குறிப்பாக, திரைப்பட விழாக்களில் சந்திப்பேன். அவரைப் பார்த்ததும் ஓடிப்போய் வணக்கம் சொல்வேன்.
"லியாகத் அலிகான்' என்று கம்பீரக் குரலில் அழைத்து, என் தோளை அழுத்தி "நல்லா எழுதுறய்யா' என்று பாராட்டுவார்.
ஒருதடவை "உங்க வாயால பாராட்டு வாங்கறதுக்கு நான் பாக்யம் செஞ்சிருக்கணும் சார்'' என்றேன்.
"என் வாயாலதான் பாராட்டணும்... அதுக்கு வேற வாயவா வாங்கிட்டு வர முடியும்' என்று சிரித்தார்.
2014-ஆம் ஆண்டு அந்த சாதனை மன்னன் நம்மைவிட்டு மறைந்தார்.
அவர் மறைவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஒருநாள் அவரது வீட்டிலிருந்து காலை 11 மணிக்கு எனக்கு போன் வந்தது. அவரே பேசினார்.
"என்னைப் பார்க்கணும்... 4 மணிக்கு வர்றியா?''.
"உடனே வரச்சொன்னாலும் வர்றேன் சார்'' என்றேன்.
"வேண்டாம், 4 மணிக்கு வா'' என்றார்.
அவரிடமிருந்து போன் வந்ததும், அவரே பேசியதும் எனக்கு இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி. எதுக்காக வரச் சொல்லியிருப்பாரு என்ற தவிப்பு.... 4 மணி எப்பொழுது வரும் என்ற துடிப்பு.
சரியாக 4 மணிக்கு அவரது வீட்டிற்குச் சென்றேன். இப்பொழுது தம்பி சமுத்திரக்கனி அவர்களின் மேனேஜராக இருக்கும் மோகன் அங்கே இருந்தார். கே.பாலசந்தர் அவர்களுக்கு நிழலாக இருந்தவர். என்னை அழைத்துச் சென்று ஒரு அறையில் அமரவைத்தார். காபி கொண்டுவரச் சொன்னார். வந்தது. "குடிங்க சார்' என்று சொன்னாலும் எனக்கு அதில் மனமில்லை.
கே.பாலசந்தர் சார் எப்பொழுது வருவார். எதற்காக வரச் சொன்னார்? என்ற சிந்தனையி லேயே இருந்தேன். காபியை எடுத்துக் குடித் தேன். மகிழ்ச்சியில் கை லேசாக நடுங்கியது.
"லியாகத் அலிகான்'' என்ற கம்பீரக் குரலோடு கே.பாலசந்தர் சார் உள்ளே வந்தார். எப்பொழுதுமே பேன்ட்லிசர்ட்டோடு இருப் பவர், வேஷ்டி அணிந்திருந்தார்.
"என்னய்யா பாக்கறே... வேட்டியோட இருக்கேன்னா? வேட்டியோட இல்லய்யா... வெட்டியா இருக்கேன்'' என்று சிரித்தார்.
"சார்... 100 படங்களுக்கு மேல எழுதி யிருக்கீங்க, டைரக்ட் பண்ணியிருக்கீங்க... நீங்க அப்படிச் சொல்லலாமா சார்?'' என்றேன்.
"இப்ப சும்மாத்தான இருக்கேன்'' என்றார்.
"இல்ல சார்... நீங்க சும்மா இல்ல. எங்கள மாதிரி உள்ளவங் களுக்கு பாடமா இருக்கீங்க. ஒரு பல்கலைக்கழகமா இருக்கீங்க'' என்றேன்.
"இது எந்தப் படத்துக்கு எழுதுன டயலாக்'' என்று கேட்டார்.
"அந்தத் தவிப்புலதான் சார் காலையில இருந்தே இருக்கேன்'' என்றேன்.
"மறுபடியும் நான் நாடகம் போடலாம்னு இருக்கேன். நீ என்னய்யா நெனைக்கிறே?''
"சார்... நீங்க தாராளமா போடலாம் சார். எப்ப வேணும்னாலும் போட லாம் சார். நீங்க நாட கம் எழுதி டைரக்ட் பண்ணா பெரிய அளவுல வரவேற்பு கிடைக்கும் சார். சபாக் காரங்க ரொம்ப சந்தோஷப் படுவாங்க'' என்றேன்.
கே.பாலசந்தர் அவர்கள் திரையுல கிற்கு வருவதற்கு முன் நாடகங்கள் எழுதி, இயக்கி அவையெல்லாம் மிகப்பெரிய வெற்றிபெற்றன. "எதிர் நீச்சல்', "மேஜர் சந்திரகாந்த்' போன்ற அவரது புகழ்பெற்ற நாடகங்கள் சபாக்களில் தொடர்ந்து நடந் தன. வசூலிலும் முதலிடத்தில் இருந்தது. அவரது நாடகங்களுக்கு சென்னை சபாக்களில் பெரும் வரவேற்பு கிடைத்த தால் திரையுலகம் அவரை திரும்பிப் பார்த்தது.
அவரை முதலில் திரையுலகிற்கு அழைத்து வந்தவர் சத்யா மூவிஸ் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள். எம்.ஜி.ஆர். நடித்த "தெய்வத்தாய்' படத்திற்கு வசனம் எழுதவைத்தார். அதெல்லாம் நான் படித் திருக்கிறேன், கேள்விப்பட்டிருக்கிறேன்.
"சார்... சரித்திரம் மறுபடியும் திரும்புது சார். எப்ப சார் ஆரம்பிக்கப் போறீங்க?''ன்னு கேட்டேன்.
"மொதல்ல நாடகமா போடப்போறேன். அப்புறம் அதை படமா எடுக்கப்போறேன்'' என்றார்.
"நிச்சயமா அது படமாகும் சார். நீங்க எழுதுன எல்லா நாடகமும் படமாயிருக்கே சார்'' என்றேன்.
சிறிது மௌனத்திற்குப் பிறகு, "நாடகத்த எழுதிட்டீங்களா சார்'' என்று கேட்டேன்.
"இன்னும் எழுதல... நீதான் எழுதணும்'' என்றார்.
"என்ன சொல்றீங்க சார்?''
"ஆமாய்யா! கதையில கொஞ்சம் அரசியலும் இருக்கும். ஸ்க்ரீன்பிளே யோட சொல்றேன். ஏதா வது மாத்தணும்னா சொல்லு... மாத்திருவோம். நீ வசனம் எழுத ஆரம்பிச்சிரு. படத்துக்கு ஸ்க்ரீன் ப்ளே யில என்ன மாற்றங்கள் பண்ணணுமோ பண்ணிருவோம். படத்துக்கும் நீதான் எழுதப்போறே...''
என்று கூறிவிட்டு, ஒரு புத்தம் புது ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து என்னிடம் கொடுத்தார்.
"இது அட்வான்ஸ்... வெறும் ஆயிரம் ரூபாய்னு நெனைக்காதே. சென்ட்டிமென்ட்டா குடுக்கறேன். சம்பளமெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்'' என்றார்.
நான் ரசித்துக் கைதட்டிய எழுத்தாளர் ஒரு ரசிகனாக இருந்து, நான் ரசித்த மாபெரும் சாதனையாளர், அவர் என்னை எழுதச் சொன்னார்.
கண்கள் கலங்கி அவரையே பார்த்தேன்.
"ஏய்யா... என்னாச்சு? நீ நல்லா எழுதுறய்யா..'' என்றார்.
"நீங்க என்மேல வச்சிருக்கிற நம்பிக்கை யை காப்பாத்துவேன் சார்'' என்று அவரிடம் சொல்லிவிட்டு, வெளிவே வந்து லிஃப்டில் ஏறினேன். லிஃப்டில் என்னோடு மோகனும் வந்தார். என் கையைப் பிடித்து குலுக்கி வாழ்த் துச் சொன்னார்.
லிஃப்ட் கீழே வந்தது. ஆனால் என் மனம் மகிழ்ச்சியில் வானை நோக்கிப் போனது.
எவ்வளவு பெரிய லெஜண்ட். எத்தனை படங்களுக்கு எழுதிய லெஜண்ட். எவ்வளவு சமுதாயக் கருத்துகளை எழுதிய லெஜண்ட். எவ் வளவு கைத்தட்டல்களை வாங்கிய லெஜண்ட்.
நானே எவ்வளவு கைதட்டியிருக்கிறேன். அவர் என்னை வசனம் எழுதுமாறு கேட்டது, எவ்வளவு பெரிய விஷயம்? "எவ்வளவு பேருக்கு வாரி, வாரிக் கொடுத்த வள்ளல் கர்ணன், என்னிடம் கொடை கேட்டது போல' இருந்து எனக்கு.
அவரிடம் இல்லா மலா என்னிடம் கேட் பார். "இல்லை... என் னையும் கொடுப்பதற்கு... கொடுக்கத் தூண்டு வதற்கு, அதாவது மேலும் என்னை உற்சாகப் படுத்துவதற்காக' கேட் டார் என்று நினைத்துக் கொண்டேன்.
இரண்டு, மூன்று நாட்கள் கழித்து கே.பி. சார், (சினிமாவில் கே.பாலசந்தர் அவர்களை சுருக்கமாக அப்படித்தான் அழைப்பார்கள்) என்னை மீண்டும் அழைத்தார். கதை சொல்லப் போகிறார் என்று ஆர்வத்துடன் போனேன்.
"சென்ற முறை என்னை சந்தித்துவிட்டு மகிழ்ச்சியுடன் போனாய். இந்தமுறை வருத்தத் துடன் போகப்போகிறாய். அதை நினைத்தால் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது' என்று கூறினார்.
"சொல்லுங்கள் சார்...'' என்றேன்.
"உன்னை நெனைச்சாதான் எனக்கு கஷ்டமா இருக்கு. எவ்வளவு சந்தோஷமா இருந்திருப்பே... அதை உடைச்சுட்டேனே லியாகத் அலிகான்'' என்றார். நான் சற்று ஷாக் ஆனேன்... அவரைப் புரியாமல் பார்த்தேன்.
(வளரும்...)