(110) இடிக்கப்பட்ட விஜயகாந்த் மண்டபம்!
ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.வை அதிகமாக விமர்சனம் செய்து பேசிவிட்டு... தி.மு.க.வையும், கலைஞரையும் வேறுவிதமாக அணுகியிருக்க வேண்டும் விஜயகாந்த். அவர் தமிழ்நாட்டுக்கு இன்னும் என்னவெல்லாம் நன்மைகள் செய்ய நினைக்கிறாரோ அதையெல்லாம் நான் செய் கிறேன் என்றெல்லாம் பிரச்சாரம் செய்திருக்க லாம்.
அவரது ஒரே குறி, ஒரே தாக்குதல் அ.தி.மு.க. மீது மட்டும் இருந்திருக்கலாம். ஏனென்றால் அதுதான் ஆளுங்கட்சி. எத்தனை ஆயிரம் மக்கள் மத்தியில் நாம் பேசுகிறோம், எத்தனை லட்சம் மக்கள் மத்தியில் நாம் பேசுகிறோம் என்பது முக்கியமல்ல. நம்மைப் பார்க்க எவ்வளவு கூட்டம் கூடுகிறது என்பதும் முக்கியமல்ல. நமது கருத்தை எவ்வளவு மக்கள் மனதில் பதிய வைத்திருக்கிறோம் என்பதுதான் முக்கியம். அந்த வியூகத்தை விஜயகாந்த் வகுத்திருக்கலாம். பல ஆண்டுகள் அரசியல் அனுபவமிக்க, அறிவுசார்ந்த பலர் விஜயகாந்த்தை தலைவராக ஏற்றுக்கொண்டு அவருடன் இணைந்தார்கள். அவர்களையெல்லாம் விஜயகாந்த் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது.
விஜயகாந்த்தின் பலம் என்ன, அவரது ரசிகர் மன்றங்களின் பலம் என்ன என்பதை முழுமையாக அறிந்தவன் நான். அவர் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு ஐம்பது பேராவது வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர்களாகி அப்பொழுதே அதிகாரப்பூர்வமான சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராயிருக்க வேண்டும்.
ஆனாலும் மிகுந்த நம்பிக்கையோடு வ
(110) இடிக்கப்பட்ட விஜயகாந்த் மண்டபம்!
ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.வை அதிகமாக விமர்சனம் செய்து பேசிவிட்டு... தி.மு.க.வையும், கலைஞரையும் வேறுவிதமாக அணுகியிருக்க வேண்டும் விஜயகாந்த். அவர் தமிழ்நாட்டுக்கு இன்னும் என்னவெல்லாம் நன்மைகள் செய்ய நினைக்கிறாரோ அதையெல்லாம் நான் செய் கிறேன் என்றெல்லாம் பிரச்சாரம் செய்திருக்க லாம்.
அவரது ஒரே குறி, ஒரே தாக்குதல் அ.தி.மு.க. மீது மட்டும் இருந்திருக்கலாம். ஏனென்றால் அதுதான் ஆளுங்கட்சி. எத்தனை ஆயிரம் மக்கள் மத்தியில் நாம் பேசுகிறோம், எத்தனை லட்சம் மக்கள் மத்தியில் நாம் பேசுகிறோம் என்பது முக்கியமல்ல. நம்மைப் பார்க்க எவ்வளவு கூட்டம் கூடுகிறது என்பதும் முக்கியமல்ல. நமது கருத்தை எவ்வளவு மக்கள் மனதில் பதிய வைத்திருக்கிறோம் என்பதுதான் முக்கியம். அந்த வியூகத்தை விஜயகாந்த் வகுத்திருக்கலாம். பல ஆண்டுகள் அரசியல் அனுபவமிக்க, அறிவுசார்ந்த பலர் விஜயகாந்த்தை தலைவராக ஏற்றுக்கொண்டு அவருடன் இணைந்தார்கள். அவர்களையெல்லாம் விஜயகாந்த் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது.
விஜயகாந்த்தின் பலம் என்ன, அவரது ரசிகர் மன்றங்களின் பலம் என்ன என்பதை முழுமையாக அறிந்தவன் நான். அவர் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு ஐம்பது பேராவது வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர்களாகி அப்பொழுதே அதிகாரப்பூர்வமான சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராயிருக்க வேண்டும்.
ஆனாலும் மிகுந்த நம்பிக்கையோடு விஜயகாந்த்தின் அரசியல் பயணம் தொடர்ந்தது. தமிழ்நாட்டில் எந்த ஊரில் விஜயகாந்த் கூட்டமென்றாலும் கட்டுக்கடங்காமல் மக்கள் கூடினார்கள். அவர் ஒருவர் மட்டும் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரான பிறகும்கூட அவரது தொண்டர்கள் நம்பிக்கை இழக்க வில்லை. ஆனால் அவரை நம்பி அவருடன் இணைந்த பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒவ்வொருவராக அவரை விட்டு வெளியேறினார்கள். தோல்வி மட்டும்தான் அவர்கள் வெளியேறுவதற்கு காரணமா என் றால் இல்லையென்றுதான் சொல்லவேண்டும். அப்படிப்பட்ட சில தலைவர்களுடன் நானே பேசியிருக்கிறேன். விஜயகாந்த்துடன் பயணத் தை தொடர முடியாதபடி பல இடையூறுகள் இருந்ததாகச் சொன்னார்கள். யார் வெளி யேறினாலும் சரி தே.மு.தி.க.வை சேதப்படுத்தி விட முடியாது. காரணம், விஜயகாந்த்துக் காகவே அந்தக் கட்சி இருந்தது. விஜயகாந்த் துக்காகவே ரசிகர்களும், தொண்டர்களும் அவருடன் இருந்தார்கள். அவருக்காக உயிரைக் கூட கொடுப்போம் என்ற உறுதி படைத்தவர்கள் அவர்கள். மீண்டுவிடும்... மிகப்பெரிய வெற்றியை அடுத்தடுத்த தேர்தலில் பெறுவோம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது.
ஆனால் தி.மு.க. ஆட்சியில் 2007ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவமும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகளும் அந்த நம்பிக்கையை தகர்த்துவிட்டது.
விஜயகாந்த் கட்சி தொடங்குவதற்கு முன் அவரது அம்மா -அப்பா பெயரில் கல்யாண மண்டபம் கட்டினார். ஆண்டாள் அழகர் திருமண மண்டபம், திரைப்படங்கள் வெளியிடுவதற்காக தாய்-தந்தை பெயரில் ஆண்டாள் அழகர் விநியோக கம்பெனி மதுரையிலும், ஏழை, மாணவ-மாணவியருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னைக்கு அருகே ஆண்டாள் அழகர் கல்லூரியும் கட்டினார். அவ்வளவு தூரம் தாய் தந்தையரை நேசித்தவர் விஜயகாந்த்.
அவர் தே.மு.தி.க. என்ற கட்சியைத் தொடங்கியதும், கோயம்பேட்டில் உள்ள அவரது திருமண மண்டபத்தை கட்சி அலு வலகமாகப் பயன்படுத்தினார். கோயம்பேட் டில் போக்குவரத்தை சீராக்கும் நோக்கத்தில் ஒரு மேம்பாலம் கட்ட தி.மு.க. அரசு முடி வெடுத்தது. அப்படி ஒரு மேம்பாலம் கட்டி னால், ஆண்டாள் அழகர் திருமண மண்டபத் தின் ஒரு பகுதி இடிக்கப்படும் என்ற சூழ்நிலை உருவானது. அந்த மண்டபத்தை கொஞ்சம் கூட இடிக்காமல் மேம்பாலம் கட்டவேண்டும் என்று தி.மு.க. அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை வைத்ததாகவும், வேறு மாதிரி பாலத்தைக் கட்டுவதற்காக புதிய வரைபடம் ஒன்று கொடுக்கப்பட்டதாகவும் அதை தி.மு.க. அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் செய்திகள் வர ஆரம்பித்தன. விஜயகாந்த், முதலமைச்ச ராக இருந்த கலைஞரை சந்தித்ததாகவும், மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலுவை சந்தித்துப் பேசியதாகவும் செய்திகள் வந்தன.
ஆனால் கலைஞரும், டி.ஆர்.பாலுவும் "அந்த இடத்தில் வேறு மாதிரி பாலம் கட்ட முடியாது என்றும், விஜயகாந்த்தின் திருமண மண்டபத்தின் ஒரு பகுதியை இடித்துதான் அதைச் செய்யமுடியும் என்றும் அதற்கான இழப்பீட்டுத் தொகையை அரசு கொடுத்து விடும்' என்றும் சொல்லப்பட்டதாக தகவல்கள் வந்தன. "விஜயகாந்த் எவ்வளவோ வேண்டு கோள் வைத்தும் அது ஏற்கப்படவில்லை என் றும், வேண்டுமென்றே தி.மு.க. அரசு திருமண மண்டபத்தை இடிக்க நினைப்பதாக விஜய காந்த் கருதுவதாகவும்' செய்திகள் பரவின.
2007ஆம் ஆண்டு மே மாதம் என்று நினைக்கிறேன். மேம்பாலம் கட்டுவதற்காக ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தின் முன்பகுதி இடிக்கப்பட்டது. விஜயகாந்த் வெகுண்டெழுந்தார், ஆவேசப்பட்டார் என்று பலரும் பேச ஆரம்பித்தார்கள். தே.மு.தி.க. தொண்டர்கள் தி.மு.க. மீதும், கலைஞர் அவர்கள் மீதும் கடும் கோபத்தில் கொதித்தார் கள். விஜயகாந்த்தும் வெளிப்படையாக அதைப் பேச ஆரம்பித்தார். அவரது பேச்சு செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் வெளிவந்து உஷ்ணத்தைக் கிளப்பியது.
கலைஞரை சந்தித்தும், மாற்று ஏற்பாடு செய்யுங்கள் என்று டி.ஆர்.பாலுவிடம் கேட்டும், அரசியல் நோக்கத்திற்காக தன்னை வளரவிடாமல் தடுப்பதற்காக மண்டபத்தை இடித்து பழிவாங்கப் பார்க்கிறார்கள் என்று தி.மு.க.வை விஜயகாந்த் விமர்சித்ததும், அவர்கள் மீது குற்றம் சுமத்தியது அரசியல் அரங்கை அதிர வைத்தது.
அந்த சம்பவத்திற்குப் பிறகு விஜயகாந்த்தும், அவரது கட்சியைச் சேர்ந்தவர்களும் தி.மு.க.வை எதிரியாகப் பார்க்க ஆரம்பித்தார்கள். கலைஞர் மீது வெறுப்பைக் காட்டி னார்கள். மண்டபத்தை இடித்த தி.மு.க. அரசை வீழ்த்தாமல் விடமாட்டோம் என்று பேச ஆரம்பித்தார்கள். தி.மு.க. அரசை விமர்சிப்பதும், தி.மு.க. அரசை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்புமே விஜயகாந்த்தின் மனதில் ஆழப் பதிந்துவிட்டது என்று அவருடைய கட்சியைச் சேர்ந்த முக்கியமான சில நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள்.
மண்டபம் இடிக்கப்பட்டது தொடர்பாக நான் சொல்லியிருக்கும் கருத்துகள் நான் பொதுவெளியில் கேள்விப்பட்டது, செய்திகளாக வெளிவந்தது. விஜய காந்த்துடன் நெருக்கமாக பழகிக்கொண்டிருந்தவர்கள் என்னிடம் சொன்னவைதான்.
இனிமேல் நான் சொல்லப்போகிற விஷயங்கள், மண் டபம் இடிக்கப்பட்டதை விஜயகாந்த் எப்படி அணுகி யிருக்க வேண்டும், மக்கள் மத்தியில் எப்படி பேசியிருக்க வேண்டும், மக்கள் மனதில் எப்படிப்பட்ட கருத்தை பதிய வைத்திருக்கவேண்டும் என்று நான் நினைத்ததை சொல்லப்போகிறேன். நான் சொல்வது நியாயம் என்று சிலருக்குத் தோன்றலாம். இந்தக் கருத்தை இப்பொழுது ஏன் இவர் சொல்கிறார் என்று சிலர் நினைக்கலாம். சிலர் என்னைப் பாராட்டலாம். சிலர் என்னை விமர்சிக்கலாம். அதைப் பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. விஜய காந்த்திடம் உண்மைகளை மட்டுமே பேசியவன் நான். அவர் முதலமைச்சராக வேண்டும் என்று உண்மையாக உழைத்தவன். அதனால் இப்பொழுதும் அவர்மீது கொண்டி ருக்கும் உண்மையான அன்பினால்தான் சொல்கிறேன். அவரது திருமண மண்டபம் இடிக்கப்பட்டதற்கு அவர் எதிர்ப்பு காட்டிய விதம் தவறு என்று நான் நினைக்கிறேன்.
திருமண மண்டபம் இடிக்கப்பட்டதற்கு விஜயகாந்த் எதிர்ப்பு காட்டிய விதம் எதனால் தவறு…என்று விளக்கம் சொல்வதற்கு முன் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியையும் அரசியலில் உண்மையில் நடந்த ஒரு நிகழ்வையும் சொல்ல விரும்புகிறேன்.
(வளரும்...)