dd

(105) "திருப்பி அடி...'' -விஜயகாந்த் ஆவேசம்!

ந்தக் கூட்டம் நடந்தது 2004ஆம் ஆண்டு. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாகிவிட்டது. பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது. இந்த அத்தியாயம் எழுதும்போது 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க.வும் தே.மு.தி.க.வும் ஒரே கூட்டணியில் இணைய வாய்ப்பிருப்பதாகப் பேசப்படுகிறது. இந்த நேரத்தில் 2004-ல் விஜயகாந்த் என்ன பேசினார் என்பதைச் சொல்லி பிரச்சினைகள் உண்டாக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்.

அதை மட்டும்தான் சொல்லாமல் கடந்துபோகிறேன். ஆனால் அந்தக் கூட்டம் என்ன விளைவுகளை ஏற்படுத்தியது என்பதைச் சொல்கிறேன்.

Advertisment

விஜயகாந்த் என்ன பேசினார் என்பதைக் கேள்விப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தலை வர்கள் கோபப்பட்டார்கள். அந்தக் கட்சியின் தொண் டர்கள் கொந்தளித்தார்கள். திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் அதிர்ச்சியடைந் தார்கள். பலர் நேரில் வந்து விஜயகாந்த்தை சந்தித்து தங்களது வருத்தத்தை தெரிவித்தார்கள்.

"என்ன விஜி... எதுக்குத் தேவை யில்லாமல் பாட்டாளி மக்கள் கட்சியோட மோதறீங்க'' என்று சிலர்... "ஏன் விஜி சார், பிரச்சினையை விலை கொடுத்து வாங்குறீங்க?'' என்று சிலர். "அவங்க கிட்ட ரஜினி சாரே தோத்துட்டாரு, "பாபா' பட விஷயத்தில் அவங்கள எதிர்க்காம அவரு சமாதானமா போயிட்டாரு... உங்களுக்கு எதுக்கு இதெல்லாம்'' என்று சிலர்.

அவர்களுக்கெல்லாம் விஜயகாந்த் சொன்ன ஒரே பதில்... "லியாகத் அலிகான் முதல்ல பேசுனாரு, அவர் பேசுனதுல நியாயம் இருந்தது, அதை வலியுறுத்தி நான் பேசினேன். நான் பேசுனதுல எந்தத் தப்பும் இல்ல. படத்துல மட்டும் பேசற ஹீரோவா நான் இருக்க விரும்பல. நிஜத்துலயும் நான் நியாயத்த பேசுவேன். யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன். எங்க தப்பு நடந்தாலும் அதுக்கு எதிரா குரல் கொடுப்பேன். யாரை நெனச்சும் நான் பயப்படவும் மாட்டேன், நான் பேசுனதுல இருந்து பின்வாங்கவும் மாட்டேன்'' என்று உறுதியாகச் சொன்னார்.

Advertisment

அவரது மன உறுதியைப் பார்த்து கேட்டவர்கள் மலைத்துப்போனார்கள். கர்ணன் கவச குண்டலத்தோடு பிறந்ததைப் போல, பிறக்கும்போதே துணிச்சலோடு பிறந்தவர் விஜயகாந்த் என்பது அடுத்தடுத்து தெரிய ஆரம்பித்தது.

பாட்டாளி மக்கள் கட்சி பலமாக இருக்கும் பகுதிகளில் இருந்து பல போன்கால்கள் வர ஆரம்பித்தது. அவரது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த தம்பிகள் பேசினார்கள். "அண்ணே பாட்டாளி மக்கள் கட்சிக்காரங்க நம்ம மன்றத்துக் கொடியை வெட்டிச் சாய்க்கிறாங்க. நம்ம மன்றத்து போர்டுகளை அடிச்சு நொறுக்குறாங்க. நம்ம மன்றங்களையும் சேதப்படுத்துறாங்க. நாங்க என்ன பண்றது?'' என்று தவித்துப்போய்க் கேட்டார்கள்.

அவர்களுக்கு விஜயகாந்த் " "கேப்டன் பிரபாகரன்' படத்துல என்னோட பாலிசி என்னென்னு சொல்லியிருக்கேன்ல... அதைப் பண்ணுங்க' என்றார்.

அந்த ஸீன் என்ன என்பதைச் சொல்கிறேன்...

"கேப்டன் பிரபாகரன்' படத்தில் வீரப்பனிடம் (படத்தில் வைத்த பெயர் வீரபத்ரன்) இருந்து சந்தன மரங்கள், யானைத் தந்தங்கள் போன்றவற்றை பிரபாகரனாக நடிக்கும் விஜயகாந்த் கைப்பற்றியிருப்பார். ஆனால் அந்த சாதனையைச் செய்தது கலெக்டர், டி.எஸ்.பி., எம்.எல்.ஏ. என்று செய்தி வரவைத்திருப்பார்கள். அதில் கோபப்பட்ட விஜயகாந்த் "பிரஸ் மீட்' வைத்து நடந்ததைப் பற்றி சொல்லிவிடுவார். அதற்காக ஆத்திரப்பட்ட கலெக்டரும் டி.எஸ்.பி.யும் விஜயகாந்த்தை சந்திக்க வருமாறு அழைத்திருப்பார்கள்.

கலெக்டரும் டி.எஸ்.பி.யும் அமர்ந்திருக்க அந்த அறைக்குள் விஜயகாந்த் என்ட்ரி ஆவார்.

அந்தக் காட்சிக்கு நான் எழுதிய வசனம்...

கலெக்டர்: யோவ் என்னய்யா இது... வாட் இஸ் திஸ்? நீ நாட்டை அமைதிப்படுத்த வந்த புத்தரா? இல்ல... மறுபடியும் சுதந்திரம் வாங்கிக் கொடுக்க வந்த காந்தியா?

aaa

விஜயகாந்த்: வாங்கற சம்பளத்துக்க வஞ்சகம் இல்லாம வேலை செய்யவந்த சர்வண்ட்.

டி.எஸ்.பி: அப்ப நாங்கள்லாம் கவர்மென்ட் சர்வண்ட் இல்லையா?

விஜயகாந்த்: காக்கிச்சட்டை போட்டவன் எல்லாம் போலீஸ்காரனாயிட முடியாது. கையெழுத்துப் போட்டு சம்பளம் வாங்குறவன் எல்லாம் கவர்மென்ட் சர்வண்ட் ஆகிட முடியாது.

கலெக்டர்: திமிரா பேட்டி கொடுக்கிறவன் தான் கவர்மென்ட் சர்வண்ட்டா? அதுக்கு உனக்கு அதிகாரம் கிடையாது.

விஜயகாந்த்: நடந்த உண்மையை வெளியே சொல்றதுக்கு அதிகாரமும் தேவையில்லை, எவனுக்கும் பயப்படவும் தேவையில்லை.

கலெக்டர்: நீ என்ன அரிச்சந்திரனுக்கு பக்கத்து வீட்டுக்காரன்னு நெனைப்பா?

விஜயகாந்த்: என் வீட்டுக்கு பக்கத்துல அரிச்சந்திரன் இருக்காருன்னு இப்ப நீங்க சொல்லித் தான் எனக்குத் தெரியும்.

கலெக்டர்: வர்ன்... வர்ன்... பிரபாகரா நீ ரொம்பப் பேசுற..

விஜயகாந்த்: நர்ழ்ழ்ஹ் நண்ழ், நீங்க பேசவைக்கிறீங்க.

கலெக்டர்: நான் ஒரு கலெக்டர்ங்கிறதையே நீ மதிக்காம நடந்துக்கிற...

விஜயகாந்த்: நான் சாதாரண மனுசனையும் மதிக்கிறவன். ஆனா நீங்கதான் உங்க பதவியை மதிக்காம நடந்துக்கிறீங்க. சுதந்திர தினத்துக்கும், குடியரசு தினத்துக்கும் கொடியேத்துறது மட்டும் கலெக்டரோட வேலை இல்லை. மக்களைச் சந்திச்சு அவங்களோட குறைகளை தீர்க்கறதா சொல்லி மனுவை வாங்கி தூக்கி எறியறது இல்ல சார் கலெக்டரோட வேலை.

கலெக்டர்: அதைப்பத்தி நீ கேட்கக் கூடாது.

விஜயகாந்த்: ஏன் சார் கேக்கக்கூடாது? இந்த நாட்டுல பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் ஓட்டுப்போடற உரிமை இருக்கு. கேள்வி கேட்க உரிமை இல்லையா? தப்பைத் தட்டிக் கேக்கக்கூடாதா?

கலெக்டர்: தப்பு, தப்புன்னு புலம் பறியே... என்னய்யா பெருசா தப்பைக் கண்டு புடிச்சுட்டே?

s

விஜயகாந்த்: வீதியில் விளக்கு எரியறதப் பத்தி கவலைப்படற நீங்க, ஏழைங்க வயிறு எரியறதைப் பத்தி கவலைப்படாம இருக்கிறது தப்பில்லையா சார்?

மாவட்டத்தை வளப் படுத்துறதுக்கு வந்த நீங்க... ஒவ்வொரு கட்சி மாவட்டத் தலைவரையும் வளமாக்கி விட்டது தப்பில்லையா சார்? ஜனாதிபதியோ, பிரதமரோ வந்தா தடுப்புக்கட்டைப் போட்டு ஆபத்தை தடுக்க நினைக்கிற நீங்க, அரசாங்க சொத்து திருடு போகறதை தடுக்காம இருக்கிறது தப்பில்லையா சார்? ஜனங்களோட வசதிக்காக ரோடு போட்டுக் கொடுக்காத நீங்க, வீரபத்ரனோட கடத்தல் லாரி மட்டும் போகிறதுக்கு ரோடு போட்டுக் கொடுத்தது தப்பில்லையா சார்?

கலெக்டர்: நான்சென்ஸ்... அதைப்பத்தி நீ பேசாத. பத்திரிகைக்காரங்ககிட்ட நீ சொல்லியிருக்கக்கூடாது... அதுதான் இப்ப பிரச்சினை.

விஜயகாந்த்: சரி... அவங்ககிட்ட சொல் லாம உங்ககிட்ட சொல்லியிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க?

கலெக்டர்: தப்பு பண்ணுனவங்கள புடிச்சிருப்போம்.

விஜயகாந்த்: கிழிச்சிருப்பீங்க. திருட்டுத்தனமா வெட்டி வச்சிருந்த சந்தன மரங்களையெல்லாம் யார் சார் பிடிச்சது? இந்த டி.எஸ்.பி.யா?

அரசாங்க சட்டத்தை மீறி யானைகளைக் கொன்னு பதுக்கி வச்சிருந்த தந்தங்களை யார் சார் புடிச்சது... இந்த டி.எஸ்.பி.யா?

ஒரு அராஜக கும்பலுக்கு துணை போறதுக்காக திருட்டுத்தனமா நடந்த துப்பாக்கி தொழிற்சாலையை யார் சார் கண்டுபுடிச்சது? இந்த டி.எஸ்.பி.யா? அதை கண்டுபிடிக்க துப்பு கொடுத்தது எம்.எல்.ஏ.வா?

டி.எஸ்.பி: உனக்கு கிடைக்கவேண்டிய பேரும் புகழும் அடுத்தவங்களுக்குப் போய்ச் சேருதேங்கிற ஆத்திரத்துலதான் இப்படி நடந்துக்கிறே...

விஜயகாந்த்: மக்களுக்காக உழைக்கிறதுதான் என் லட்சியம். பேரையும், புகழையும் தேடி அலையிறது இல்ல.

கலெக்டர்: அப்புறம் ஏய்யா எம்.எல்.ஏ.வை புடிச்சுக் கொடுக்கணும்னு துடிக்கிறே?

விஜயகாந்த்: ஒரு திருடன் தப்பிக்கிறதை நான் அனுமதிக்கவேமாட்டேன்.

டி.எஸ்.பி: எம்.எல்.ஏ.வை திருடன்னு சொல்றியா?

விஜயகாந்த்: திருடறவனும் திருடன்தான்... அவனுக்கு துணைபோறவனும் திருடன்தான். பதவிய தப்பா பயன்படுத்துற எல்லாருமே திருடனுங்கதான்.

(இப்படி ஆவேசமாக பேச்சு நீளும். ஒருகட்டத்தில்...)

டி.எஸ்.பி: சட்டம் ஒழுங்கை காப் பாத்துறதுக்காக இப்பவே என்னால உன்னை அரெஸ்ட் பண்ண முடியும்.

விஜயகாந்த்: தர்மம், நீதியை காப்பாத்தறதுக்காக எதையும் செய்ய என்னால முடியும்.

டி.எஸ்.பி: என்னய்யா செய்வே?

விஜயகாந்த்: என்மேல கைய வச்சுப் பாரு...

டி.எஸ்.பி: வச்சுட்டா...

விஜயகாந்த்: லீகலுக்கு லீகல்... இல்லீகலுக்கு இல்லீகல். அடிக்கு அடி... உதைக்கு உதை...

-இதுதான் வசனத்தின் மூலம் நான் சொன்ன விஜயகாந்த்தின் பாலிசி.

அந்தப் பாலிசியை விஜயகாந்த் ரசிகர்கள், பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக கையில் எடுத்தார்கள். லீகலுக்கு லீகல். இல்லீகலுக்கு இல்லீகல். அடிக்கு அடி... உதைக்கு உதை...

(வளரும்...)