அசிஸ்டெண்ட் கமிஷனருக்கு வந்த ஆசை!
""ராணி மகாராணி படத்தை டி.எஸ். சேதுராமன் தயாரிக்கிறதா இருந்தா நடிக்கமாட் டேன். நீங்க தயாரிக்கிறதா இருந்தா நான் நடிக்கிறேன்'' என்றார் ராதிகா மேடம்.
கொஞ்சம்கூட யோசிக்காமல் ""சரிம்மா நானே தயாரிக்கிறேன்'' என்றேன்.
"நீங்க தயாரிக்கிறதா இருந்தா நடிக்கிறேன்' என்று ராதிகா மேடம் சொன்னவுடன், கொஞ்சம் கூட யோசிக்காமல் நான் ஏன் "சரி' என்று சொல்லவேண்டும். அவர் ஒன்றும் என்னை வற்புறுத்தவில்லையே. யோசனை பண்ணிவிட்டு நாளை வந்து சொல்கிறேன் என்று சொல்லியிருக்கலாமே?… நான் அதைச் செய்யாமல் நேரே விஜயகாந்த், இப்ராகிம் ராவுத்தர் இருவரையும் பார்க்கப் போனேன்.
நடந்த விபரங்களையெல்லாம் சொன்னேன்.
""நீங்கள் சரியென்று சொன்னால் நான் அந் தப் படத்தை தயாரிக்கிறேன். வேண்டாம் என்று சொன்னால் விட்டு விடுகிறேன்'' என்றேன்.
""நல்ல விஷயம்தாண்ணே...… தயாரிப்பாளராக ணும்னு முடிவு பண்ணிட்டீங்கள்ல'' -இப்ராகிம் ராவுத்தர். இப்பொழுது யோசித்துப் பார்க்கும் பொழுதுதான் தெரிகிறது. அந்த இரண்டு வரிகளுக் குள் பல அர்த்தங்கள் இருந்திருக்கின்றன. ஒருவன் வாழ்க்கையில் முன்னேற அறிவாளியாக மட்டும் இருந்தால் போதாது, புத்திசாலியாக இருக்க வேண்டும்.
விஜயகாந்த்திடம் கேட் டேன். ""விஜிண்ணே… நீங்க எதுவுமே சொல்லாம இருக்கீங்களே... உங்களுக்கு ஓ.கே. இல்லன்னா வேண்டாம்னு சொல்லிர்றேண்ணே'' என்றேன்.
""சினிமாவுக்கு வரணும், பெரிசா வளரணும்... சாதிச்சுக் காட்டணும்னுதானே வந்திருக்கோம். தயாரிப்பாளரா வாய்ப்பு இப்ப உங்களுக்கு வந்திருக்கு. அதை ஏன் வேண்டாம்னு சொல்ல நி
அசிஸ்டெண்ட் கமிஷனருக்கு வந்த ஆசை!
""ராணி மகாராணி படத்தை டி.எஸ். சேதுராமன் தயாரிக்கிறதா இருந்தா நடிக்கமாட் டேன். நீங்க தயாரிக்கிறதா இருந்தா நான் நடிக்கிறேன்'' என்றார் ராதிகா மேடம்.
கொஞ்சம்கூட யோசிக்காமல் ""சரிம்மா நானே தயாரிக்கிறேன்'' என்றேன்.
"நீங்க தயாரிக்கிறதா இருந்தா நடிக்கிறேன்' என்று ராதிகா மேடம் சொன்னவுடன், கொஞ்சம் கூட யோசிக்காமல் நான் ஏன் "சரி' என்று சொல்லவேண்டும். அவர் ஒன்றும் என்னை வற்புறுத்தவில்லையே. யோசனை பண்ணிவிட்டு நாளை வந்து சொல்கிறேன் என்று சொல்லியிருக்கலாமே?… நான் அதைச் செய்யாமல் நேரே விஜயகாந்த், இப்ராகிம் ராவுத்தர் இருவரையும் பார்க்கப் போனேன்.
நடந்த விபரங்களையெல்லாம் சொன்னேன்.
""நீங்கள் சரியென்று சொன்னால் நான் அந் தப் படத்தை தயாரிக்கிறேன். வேண்டாம் என்று சொன்னால் விட்டு விடுகிறேன்'' என்றேன்.
""நல்ல விஷயம்தாண்ணே...… தயாரிப்பாளராக ணும்னு முடிவு பண்ணிட்டீங்கள்ல'' -இப்ராகிம் ராவுத்தர். இப்பொழுது யோசித்துப் பார்க்கும் பொழுதுதான் தெரிகிறது. அந்த இரண்டு வரிகளுக் குள் பல அர்த்தங்கள் இருந்திருக்கின்றன. ஒருவன் வாழ்க்கையில் முன்னேற அறிவாளியாக மட்டும் இருந்தால் போதாது, புத்திசாலியாக இருக்க வேண்டும்.
விஜயகாந்த்திடம் கேட் டேன். ""விஜிண்ணே… நீங்க எதுவுமே சொல்லாம இருக்கீங்களே... உங்களுக்கு ஓ.கே. இல்லன்னா வேண்டாம்னு சொல்லிர்றேண்ணே'' என்றேன்.
""சினிமாவுக்கு வரணும், பெரிசா வளரணும்... சாதிச்சுக் காட்டணும்னுதானே வந்திருக்கோம். தயாரிப்பாளரா வாய்ப்பு இப்ப உங்களுக்கு வந்திருக்கு. அதை ஏன் வேண்டாம்னு சொல்ல நினைக்கிறீங்க, நீங்க பண்ணுங்கண்ணே'' என்றார்.
விஜயகாந்த், இப்ராகிம் ராவுத்தர் இருவரில் யாராவது ஒருவர் வேண்டாம் என்று சொல்லியிருந்தால்கூட நான் தயாரிப்பாளராகும் முடிவு மாறியிருக்கும். அவர்கள் சொல்லவில்லை.
இந்த விஷயத்தை ஒரு நண்பரிடம் கூறினேன். அதற்கு அவர் சொன்னார். ""அவங்க சொன்னதுல எனக்கு உடன்பாடு இல்ல. "எங்க முதலாளி' படம் சரியா போகாததுனாலதான் இப்படி ஒரு சூழ்நிலை உருவாச்சு. அதுக்காக நீங்க ஏன் தயாரிப்பாளரா ஆகணும். உங்களுக்கு மறுபடியும் நாங்க கால்ஷீட் தர்றோம்ணே... நீங்க கதை ரெடி பண்ணுங்க, டைரக்ட் பண்ணுங்கன்னு சொல்லியிருக்கணும். இந்த நேரத்துலதான் கை கொடுத்திருக்கணும். அதுதான் நட்பு'' என்றார்.
""இது சினிமா வியாபாரம்'' என்றேன் நான்.
""ஏன் சினிமான்னா நட்பு இருக்கக்கூடாதா? வெற்றி கிடைக்கிறப்ப பாராட்டி கை குலுக்கிறது மட்டும் நட்பு இல்ல. வெற்றியை இழந்து நிக்கிறப்ப நான் இருக்கேன்னு கை குடுக்கிறதுதான் நட்பு'' என்றார். அவர் சொன்னது என் காதில் ஏறவில்லை.
ராதிகா மேடத்திற்கும் வேறு சில நடிகர், நடிகைகளுக்கும் டி.எஸ். சேதுராமனிடமிருந்து வாங்கிக் கொடுத்திருந்த அட்வான்ஸ் பணத்தை திருப்பிக் கொடுக்க நினைத்தேன். அதேபோல என்னுடைய சொந்தப் பணத்தை அவரிடம் போய் கொடுத்தேன். வேறு யார், யாருக்கு கொடுக்க வேண்டுமோ அதையும் நானே கொடுத்தேன். ராதிகா மேடம், ரகுவரன், மணிவண்ணன் சார், மனோபாலா, தியாகு, சார்லி, கோவை சரளா இவர் களுக்கெல்லாம் கொடுக்கும்போது என் மனதிலே உற்சாகம் இருந்தது. ஆனால் இசையமைப்பாளர் அண்ணன் "தேனிசைத் தென்றல்' தேவா அவர் களுக்கு அட்வான்ஸ் கொடுக் கும்போது என் மனதிலே ஒரு கனம் தெரிந்தது.
காரணம் நான் எழுதிய படங்கள், இயக்கிய படங்கள் எல்லாவற்றிற்குமே அண்ணன் இளையராஜா அவர்கள்தான் இசை. அவரோடு பல வருடங்கள் பல படங்களில் பயணித்தவன். எழுத்தாளராக மட்டுமல்ல, இயக்குநராக மட்டு மல்ல.. ஒரு தம்பியாகப் பயணித்தவன். அவரை விட்டுவிட்டு முதன்முதலாக தேவா அவர்களிடம் இணையப் போகிறேன். "கட்டளை' படத்தின் மூலம் ஏற்பட்ட கசப்பான அனுபவம்...…அதனால் மனதில் ஏற்பட்ட காயம் என்னை அப்படி ஒரு முடிவெடுக்க வைத்தது. உயிருக்குயிரான காதலைப் பிரியும்போது ஏற்படும் வலியை விட, உறவைப் பிரியும் வலியைவிட அதிகமாக வலித்தது. அவரைப் பிரியும் போது… வலியைத் தாண்டி ஒரு குற்றஉணர்வுகூட தோன்றியது. ஒரு இசை மேதை யை, இமாலய சாதனையாளரை பிரிகிறோம். இறைவன் கொடுத்த அண்ணனைப் பிரிகிறோம் என்ற வேதனை என் மனதை விட்டு மறையவே இல்லை.
"ஏ.ஆர்.ரகுமான் வேண்டாம், இளையராஜா தான் வேண்டும்' என்று உறுதியாக இருந்த நான், "இளையராஜா வேண்டாம்... தேவாதான் வேண்டும்' என்று முடிவெடுக்க வைத்தது விதி.
பட பூஜைக்காக அழைப்பிதழ் அடிக்க கொடுப்பதற்கு முதல்நாள் விதி தன் ஆட்டத்தின் போக்கை மாற்றியது.
நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த போலீஸ் உதவி கமிஷனர் ஒருவரை சந்தித்தேன். அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்றாலும், நான் அவரை "மாமா' என்றும், அவர் என்னை "மாப்ள' என்றும் அழைத்துப் பழகுமளவுக்கு பாசக்காரர். அவரிடம் ""மாமா நான் தயாரிப்பாள ராகப் போகிறேன்'' என்றேன்.
""என்ன மாப்ள சொல்றீங்க. சொந்தமா படம் தயாரிக்கப்போறீங்களா. நல்ல கதையா சொல்லுங்க கேக்கலாம்'' என்றார்.
அவர் சினிமா ஆர்வமிக்கவர். பல சினிமாக் காரர்களுடன் பழகிக்கொண்டிருப்பவர். நான் அவரைப் பார்க்கும்பொழுதெல்லாம் சினிமாவைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார். வீட்டில் இருந்தால் ஆர்மோனியப் பெட்டியை வைத்து வாசித்தபடி பாடிக்கொண்டிருப்பார். அவராகவே மெட்டமைத்துப் பாடுவார். "ஒரு காவல்துறை அதிகாரிக்குள் கலைத்துறை கலந்துவிட்டது' என்று சொல்லுமளவுக்கு இருக்கும் அவரது செயல்பாடுகள். அப்படிப் பட்டவர் "ராணி மகாராணி' படத்தின் கதையைச் சொல்லச் சொன்னார். அவர் மட்டும் கேட்கவில்லை. அவரது மனைவி, மகன், மகள் ஆகியோரையும் அழைத்து பக்கத்தில் அமர வைத்துக்கொண்டார்.
நான் கதையைச் சொன்னேன். கேட்டு முடித்ததும் அவர் சொன்னார்.
""மாப்ளே இந்தப் படத்தை நீங்க தயாரிக்க வேணாம்!''
எனக்கு திக்கென்றிருந்தது.
ஒரே வார்த்தையில் இப்படிச் சொல்லிவிட்டாரே. "கதை எப்படி இருந்தது' என்று கேட்பதற்கு முன்பே எழுந்து உள்ளே போய் விட்டார். கதை பிடிக்கவில்லையோ என்று நினைத்துக் கொண்டிருக் கும்போதே கையில் பணக்கட்டுடன் வந்தார்.
""மாப்ளே… இந்தாங்க. இதுல ஒரு லட்சம் இருக்கு. கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ட் பண்றதுக்கு உங்களுக்கு அட்வான்ஸா வச்சுக்குங்க'' என்று கையிலிருந்த பணக்கட்டுகளை என்னிடம் கொடுத்தார். ஒன்றும் புரியாமல் நான் அவரைப் பார்த்தேன்.
""என்ன மாப்ளே புரியலியா? படத்தை நானே தயாரிக்கிறேன். கதை எனக்கு ரொம்ப புடிச்சுப் போச்சு'' என்றார்.
""நீங்க தயாரிக்கப்போறீங்களா?'' என்றேன் ஆச்சர்யமாக.
""ஆமா மாப்ள,… படக் கம்பெனிக்குன்னு ஆபீஸ் போட்டிருப்பீங்க. அதுக்கு எவ்வளவு அட்வான்ஸ் குடுத்திருக்கீங்க. இதுவரைக்கும் எவ்வளவு பணம் செலவாகியிருக்கு? எல்லா டீடெயிலும் எழுதிட்டு நாளைக்கு வாங்க. அந்தப் பணத்தை மொத்தமா நான் குடுத்திடுறேன். நான் புரொடியூசர், நீங்க ரைட்டர், டைரக்டர் ஓ.கே.வா.'' என்றார்.
என்னிடம் எந்த பதிலையும் எதிர்பார்க் காமல் அவரே எல்லாவற்றையும் பேசி முடித்தார்.
""என்ன மாப்ள ஹேப்பிதானே...?'' என்றார்.
""ரொம்ப தாங்க்ஸ் மாமா. நாளைக்கு லிஸ்ட்டோட வர்றேன்'' என்று சொல்லிவிட்டு மகிழ்ச்சியோடு என்று சொல்வதை விட... நிம்மதியோடு கிளம்பினேன்.
ஆனால் அந்த நிம்மதி ஒருநாள் கூட நிலைக்கவில்லை.
மறுநாள் லிஸ்ட்டோடு போகும்போது அவர் சொன்னார். ""மாப்ளே… நான் தனியா தயாரிக்க லாம்னு நெனைச்சேன். அப்புறம் யோசனை பண்ணிப் பார்த்தேன். நீங்களும் நானும் சேர்ந்து பார்ட்னரா இருந்து தயாரிச்சா நல்லதுன்னு தோணுது... என்ன சொல்றீங்க?'' என்றார்.
நான் என்ன சொல்வது?
""ஓ.கே. மாமா... அப்படியே பண்ணலாம்'' என்றேன்.
""இன்விடேஷன்ல தயாரிப்பு யாருன்னு போடணுமுல்ல. உங்க பேரையும் என் மகன் பேரையும் போட்ருங்க'' என்றார்.
அவர் சொன்னபடியே இன்வி டேஷன் அடித்து கொடுக்க வேண்டி யவர்களுக்கெல்லாம் கொடுத்து முடித்தேன். தேவா அண்ணனுடைய பாடல் பதிவுடன் பூஜை. இன்விடேஷனை வாங்கிப் பார்த்த எல்லோருமே என்னிடம் கேட்ட கேள்வி என்ன இளையராஜாவ விட்டுட்டு தேவாகிட்ட போயிட்டீங்க என்பதுதான். அத்தனை பேருக்கும் பதில் சொல்வதற்குள் மனம் புண்ணாகிப் போனது.
அதை மேலும் புண்ணாக்கினார், என்னுடைய தயாரிப்பாளரான அஸிஸ்டெண்ட் கமிஷனர் மாமா.
(வளரும்...)
படம் உதவி: ஞானம்