dd

(35) ஆனந்த்ராஜ் அட்டகாசம்!

ப்போதெல்லாம் அடிக்கடி குடிசைகள் எரிந்துகொண்டிருக்கும். "ஏழைகள் குடிசைகள் எரிவதில் கூட அரசியலும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்' என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தேன்... "மாநகர காவல்' படத்தில்... எனது வசனத்தின் மூலம். வரவேற்பை பெற்ற இன்னொரு காட்சி...

Advertisment

குடிசைகளை எரித்ததற்காக எம்.பி. யை அரெஸ்ட் பண்ண அசிஸ்டெண்ட் கமிஷனர் விஜயகாந்த் வருவார்.

எம்.பி: வாய்யா... ஏ.சி. ஏதாவது ரெக்கமண்டேஷனா? நான் அவசரமா ஏர்போர்ட் போயிட்டிருக்கேனே...

ஏ.சி: நீங்க போகவேண்டிய இடம் ஏர்போர்ட் இல்ல.

Advertisment

எம்.பி: ஏன் பிரதமர் மேடம் ட்ரெய்ன்ல வர்றாங்களா? ஃப்ளைட் கேன்சலாயிருச்சா?

ஏ.சி: இல்ல... உங்க எம்.பி. பதவிதான் கேன்சலாகப் போகுது.

எம்.பி: என்னது எம்.பி. பதவி கேன்சலாகப் போகுதா? என் பதவியப் பறிக்க நீ என்ன சபாநாயகரா?

ஏ.சி: சபாநாயகரையே மதிக்காத நீங்க, சாதாரண போலீஸ் அதிகாரிய மதிக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா அவருக்கு இருக்கிற பொறுமை எனக்கு இல்லைன்னு உங்களுக்கு தெரியாது... வந்து ஜீப்ல ஏறுங்க.

எம்.பி: போலீஸ் ஜீப்லயா எதுக்கு...?

ஏ.சி: குடிசைக்கு நெருப்பு வச்ச உன்னை தெருநாய் மாதிரி கழுத்துல கயித்தப் போட்டு கார்ப்பரேஷன் லாரிலதான் கொண்டுபோகணும்.

எம்.பி: ஏ.சி. தமாஷா பேசுறாருய்யா... ஏய்யா, ஊருல உள்ள குடிசைங்க எல்லாம் பத்திக்கிச்சுன்னா... பத்தவச்சவனப் போயி கேளு. பாராளுமன்ற உறுப்பினர்கிட்ட வந்து, தகராறு பண்றியா. உன்னை தண்ணி யில்லாத காட்டுக்கு மாத்திருவேன்.

ஏ.சி: புதுசா எதாவது சொல்லு.

எம்.பி: நான்தான் நெருப்பு வச்சேன்கிறதுக்கு உன்கிட்ட என்ன ஆதாரம் இருக்கு?

ஏ.சி: நெருப்பு வச்ச உன்னோட ஆளுங்கள அன்பா விசாரிச்சு ஹாஸ்பிடலுக்கு அனுப்பிட்டு வந்திருக்கேன். நீங்க எப்படி ஸ்டேஷனுக்கு வர்றீங்களா... ஹாஸ்பிடலுக்குப் போறீங்களா?

எம்.பி: ஓஹோ... ஆளுங்க சொன்னாங்கன்னு என்னை அரெஸ்ட் பண்ண வந்துட்டியா? வேண் டாம்னு ஐ.ஜி. சொன்னா என்ன பண்ணுவ?

எம்.பி. வண்ணைவரதன், ஐ.ஜி.க்கு போன் பண்ணிப் பேசுவார். ஐ.ஜி.யாக எம்.என்.நம்பியார் நடித்திருப்பார். ஐ.ஜி.யின் போனை ஏ.சி. சுபாஷிடம் கொடுப்பார் எம்.பி.

aa

ஐ.ஜி: (நம்பியார்) மிஸ்டர் சுபாஷ். உங்களுக்கு எந்த நேரத்துல என்ன பண்றதுன்னே தெரியல.

ஏ.சி: (விஜயகாந்த்) சார்...

ஐ.ஜி: பிரைம் மினிஸ்டர் வர்றப்ப அவங்க கட்சி எம்.பி.ய அரஸ்ட்பண்ணா என்ன நடக்கும்னு கொஞ்சமாவது யோசனை பண்ணிப் பாத்தீங்களா சார்?

ஏ.சி: யோசனை பண்ணிப் பாக்கறதுக்கு இவரு ஒண்ணும் திருவண்ணாமலை தீபத்தை ஏத்தி வைக்கல சார். ஏழைங்களோட குடிசைங்களையும், இல்லாதவங்க வயிறையும் எரியவச்ச பாவி சார்.

ஐ.ஜி: ஏழைங்க குடிசை எரிஞ்சா உங்களுக் கென்ன? இல்லாதவங்க பசியால துடிச்சா உங்க ளுக்கென்ன? இப்ப நம்ம டிபார்ட்மெண்ட்டோட வேலை, பிரதமரை பத்திரமா பாதுகாத்து டெல்லிக்கு அனுப்பிவைக்க வேண்டியதுதான். ஏழைகளைப் பத்தி கவலைப்படுறதில்ல.

ஏ.சி: அந்தக் கவலை உங்களுக்கு இல்லாம இருக்கலாம். எனக்கு இருக்கக் கூடாதுன்னு சொல்றதுக்கு உங்களுக்கு உரிமை இல்ல.

ஐ.ஜி: எம்.பி.ய அரஸ்ட் பண்ணக்கூடாதுன்னு சொல்றதுக்கு எனக்கு உரிமையிருக்கு.

ஏ.சி: பெரிய ஆளுங்க தப்புபண்ணா தண்டிக்காம விடறவன்தான் பொறுப்பான போலீஸ் அதிகாரியா?

ஐ.ஜி: "இந்த (சென்சார் கட்) நாட்டுல இப்ப நிலமை அப்படித்தான்' என்று கூறி ஐ.ஜி. போனை வைப்பார்.

எம்.பி: என்ன ஏ.சி. உங்க போலீசு சாதாரண வார்டு செயலாளர்கிட்டயே வாயைத் தொறக்க முடி யாது. நீ ஒரு எம்.பி.கிட்ட வந்து எகிறிக் குதிக்கிற...

இப்படி அரசியல்வாதிகளிடம் காவல்துறை படும்பாட்டையெல்லாம் துணிச்சலாக பேசிய படம் "மாநகர காவல்'.

ஐ.ஜி. அனுமதி கொடுக்காததால் பிரதம மந்திரியையே போய் சந்திப்பார் ஏ.சி. குடிசைக்கு நெருப்பு வைத்த எம்.பி.யை அரஸ்ட் பண்ண அனுமதி கேட்பார்.

பிரதமருக்கும் ஏ.சி.க்கும் நடந்த விவாதத்தில் நாட்டின் அவலநிலையை சொல்லியிருப்பேன்.

பிரதமர்: இந்த நாட்டு அரசியல் எப்படி? அரசியல்வாதிங்க எப்படி?ன்னு தெரிஞ்சிருந்தும், என்கிட்டயே துணிச்சலா பேசறீங்களே? உங்களைப் பாராட்டறேன். உங்களை மாதிரியே எல்லாரும் நேர்மையான அதிகாரிங்களா இருந்திருந்தா... இன்னிக்கு உலகத்தில் இந்தியா முதல் நாடா இருந்திருக்கும்.

ஏ.சி: உண்மைதான் மேடம். ஆனா, இந்தியா தப்பான இடத்துக்குப் போனதுக்கு காரணமே அரசியல்வாதிங்கதான்.

பிரதமர்: இந்நேரம் என் எடத்துல எம்.பி.ய சப்போர்ட் பண்ற வேற யாராவது இருந்திருந்தா உங்களை டிஸ்மிஸ் பண்ணச் சொல்லியிருப்பாங்க. எம்.பி.யோட அடியாளுங்க உங்க உயிருக்கே உலை வச்சிருப்பாங்க.

ஏ.சி: அப்போ... தப்பு பண்ற அரசியல் வாதிங்கள எங்க டிபார்ட்மெண்ட் தண்டிக்கவே கூடாதா? இன்னிக்கு நீங்க சொல்றதக் கேக்கணும். நாளைக்கு யாரு ஆட்சியில இருக்காங்களோ... அவங்க சொல்றதக் கேக்கணும். இதுக்கு ஏன் மேடம் போலீஸ் டிபார்ட்மெண்ட்... உங்க கட்சிக் காரங்களுக்கே காக்கிச்சட்டை போட்டு அனுப்பவேண்டியதுதான?

பிரதமர்: மிஸ்டர் சுபாஷ்... எங்க கட்சியில லட்சக்கணக்கான மெம்பர்ஸ் இருக்காங்க. அதுல யாராவது ஒருத்தர் ரெண்டுபேரு தப்பு பண்ணா... அவங்க யாருன்னு எங்களால எப்படி கண்டுபுடிக்க முடியும்?

ஏ.சி: உங்களால முடியாது. ஆனா எங்களால முடியும். அவங்க கையில விலங்க மாட்டி தெருத்தெருவா இழுத்துட்டுப் போக முடியும்.

பிரதமர்: அரஸ்ட் பண்ணி கோர்ட்ல கேஸ் போட்டா எதாவது தில்லுமுல்லு பண்ணி வெளிய வந்திருவாங்களே... எனக்கே சொல்ல கூச்சமா இருக்கு. நாட்ல அரசியல் அசிங்கமாயிருச்சு. எரியற கொள்ளியில எந்தக் கொள்ளி நல்ல கொள்ளின்னு தேர்ந்தெடுக்கிற நிலைமையிலதான் மக்கள் இருக்காங்க.

இதைப்போல பல காட்சிகள். அதுவும் ஏ.சி.யாக விஜயகாந்த்தும், பிரதமர் ரூபாவதியாக லட் சுமியும் சந்திக்கும் காட்சிகள், தமிழ்நாட்டு அரசியலை யும் டெல்லி அரசியலையும் அம்பலப்படுத்தி, வெளிச் சம் போட்டுக் காட்டும் காட்சிகள். அரசியலில் ஆர்வ மாக இருக்கும் இன்றைய இளைஞர்கள், குறிப்பாக திரைப்படத் துறையைச் சேர்ந்த இளைஞர்கள் அவ சியம் ஒருமுறை இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்.

தம்பி ஆனந்த்ராஜுக்கு கிடைத்த கைத்தட்டல் கள், விஜயகாந்த்துக்கு நிகராக அமைந்த படம் "மாநகர காவல்'. ஆனந்த்ராஜின் நடிப்பிற்காகவும், எனது வசனத் திற்காகவும் அவரை புகழின் உச்சிக்கு கொண்டுசென்ற படம்.

ஒரு காட்சி...

பிரதமர் ரூபாவதியை கொலை செய்ய பிரதம ருக்கு அடுத்த இடத்தில் இருந்த தலைவரால் ஏற்பாடு செய்யப்பட்ட கொலையாளிதான் ஆனந்த்ராஜ் என்பதை ரசிகர்களுக்கு ஓபன் செய்யும் காட்சி.

ஆனந்த்ராஜ்: வணக்கம் மேத்தாஜி

மேத்தாஜி: நீ செய்றதா ஒத்துக்கிட்ட காரியம் என்ன... நீ செஞ்ச காரியம் என்ன?

ஆனந்த்ராஜ்: நீங்க செய்யச் சொன்ன காரியம் சாதாரணமானது இல்ல. இந்த நாட்டோட பிரதமர் ரூபாவதியை கொலை செய்யச் சொல்லியிருக்கீங்க.

மேத்தாஜி: அதுக்காகத்தான் உனக்கு கோடிக் கணக்குல பணம் குடுக்குறதா சொல்லியிருக்கேன்ல...

ஆனந்த்ராஜ்: குடுக்குறேன்னு சொல்லியிருக்கீங்க, ஆனா இன்னும் குடுக்கல.

மேத்தாஜி: நாம பேசுனபடி பாதிப் பணம் இதுல இருக்கு... என்று சூட்கேஸை கொடுக்கிறார்.

ஆனந்த்ராஜ்: பணத்தை வாங்கிக்கொண்டு... "ஜனவரி 26-ஆம் தேதியன்னிக்கு அந்தக் கொலை நடக்கும்'

மேத்தாஜி: பாதி பணம் வாங்கிட்ட... சொன்னதை செய்யாம நீ என்னை ஏமாத்திட் டேன்னா...?

ஆனந்த்ராஜ்: நாட்டோட பிரதமரையே கொல்ல திட்டம் போட்ட உனக்கு நான் சாதாரணம்.

மேத்தாஜி: காரியம் முடிஞ்சதும் மீதிப்பணம் குடுக்காம நான் உன்னை ஏமாத்திட்டேன்னா...?

ஆனந்த்ராஜ்: நாட்டோட பிரதமரையே கொல்லப்போற எனக்கு நீ சர்வசாதாரணம்.

(இந்தக் காட்சியில் கைத்தட்டல் அடங்க வெகுநேரமானது....)

லிபடத்திலே இப்படி எல்லாமே சிறப்பாக அமைந்திருக்கும்போது நான் ஏன் அதிர்ச்சியடைய வேண்டும் என்று நினைப்பீர்கள்.

(வளரும்...)

படம் உதவி: ஞானம்