(19) டைரக்டருடன் தகராறு செய்த ரசிகர்கள்!
விஜயகாந்த்தின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது சென்னை யில் உள்ள எல்லா தியேட்டர்களுக்கும், சென்னையைச் சுற்றி யுள்ள தியேட்டர்களுக் கும் சென்று ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்துவிட்டு விஜயகாந்த்திடம் "எப்படி யெல்லாம் ரசிக்கிறார்கள், கை தட்டுகிறார் கள், விசிலடித்து அமர்க்களப்படுத்துகிறார்கள்' என்று சொல்வோம்.
சினிமாவில் முகத்துக்கு நேரே சூப்பர் என்று சொல்லிவிட்டு, பின்னால் போய் மோசமாக விமர்சனம் செய்பவர்கள் அதிகம்.
நான் அந்தத் தவறை செய்ததே இல்லை. விஜயகாந்த்திடமும், இப்ராகிம் ராவுத்தரிடமும் வெளிப்படையாகப் பேசுவேன். குறைகளைப் பற்றியும் தயங்காமல் பேசுவேன். அதெல்லாம் அவர்களின் வளர்ச்சிக்குப் பலம் சேர்த்தது என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஆரம்ப கால விஜயகாந்த் படம் ஒவ்வொன்றையும் எத்தனை முறை பார்த் திருப்பேன் என்று கணக்கே இல்லை. தினம், தினம் தியேட்ட ருக்குப் போய்கொண்டி ருப்பேன். முழு படம் பார்ப்பேன், பாதி படம் பார்ப்பேன், ஒரு தியேட்டரில் ஓபனிங் சீன் பார்ப்பேன், இன் னொரு தியேட்டரில் இடைவேளைக் காட்சி பார்ப்பேன்... சில தியேட்டர்களில் க்ளை மாக்ஸ் பார்ப்பேன். கூட்டம் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும், கூட்டம் குறைவாக இருந்தால் அதிர்ச்சியாக இருக்கும். இதைப்பற்றி யெல்லாம் இரவுகளில் நெடுநேரம் இப்ராகிம் ராவுத்தரிடம் ஆலோசித்துக்கொண்டிருப் பேன். இப்ராகிம் ராவுத்தரின் சிந்தனையெல் லாம் "விஜயகாந்த் பெரிய ஹீரோவாக வரவேண் டும்' என்பதைப் பற்றியதாகவே இருக்கும். என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் என் ஆலோசனை களும் ரொம்பப் பிடிக்கும். அப்படி இரவு நேரங்களில் நாங்கள் பேசிக்கொண் டிருக்கும்பொழுது விஜ
(19) டைரக்டருடன் தகராறு செய்த ரசிகர்கள்!
விஜயகாந்த்தின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது சென்னை யில் உள்ள எல்லா தியேட்டர்களுக்கும், சென்னையைச் சுற்றி யுள்ள தியேட்டர்களுக் கும் சென்று ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்துவிட்டு விஜயகாந்த்திடம் "எப்படி யெல்லாம் ரசிக்கிறார்கள், கை தட்டுகிறார் கள், விசிலடித்து அமர்க்களப்படுத்துகிறார்கள்' என்று சொல்வோம்.
சினிமாவில் முகத்துக்கு நேரே சூப்பர் என்று சொல்லிவிட்டு, பின்னால் போய் மோசமாக விமர்சனம் செய்பவர்கள் அதிகம்.
நான் அந்தத் தவறை செய்ததே இல்லை. விஜயகாந்த்திடமும், இப்ராகிம் ராவுத்தரிடமும் வெளிப்படையாகப் பேசுவேன். குறைகளைப் பற்றியும் தயங்காமல் பேசுவேன். அதெல்லாம் அவர்களின் வளர்ச்சிக்குப் பலம் சேர்த்தது என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஆரம்ப கால விஜயகாந்த் படம் ஒவ்வொன்றையும் எத்தனை முறை பார்த் திருப்பேன் என்று கணக்கே இல்லை. தினம், தினம் தியேட்ட ருக்குப் போய்கொண்டி ருப்பேன். முழு படம் பார்ப்பேன், பாதி படம் பார்ப்பேன், ஒரு தியேட்டரில் ஓபனிங் சீன் பார்ப்பேன், இன் னொரு தியேட்டரில் இடைவேளைக் காட்சி பார்ப்பேன்... சில தியேட்டர்களில் க்ளை மாக்ஸ் பார்ப்பேன். கூட்டம் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும், கூட்டம் குறைவாக இருந்தால் அதிர்ச்சியாக இருக்கும். இதைப்பற்றி யெல்லாம் இரவுகளில் நெடுநேரம் இப்ராகிம் ராவுத்தரிடம் ஆலோசித்துக்கொண்டிருப் பேன். இப்ராகிம் ராவுத்தரின் சிந்தனையெல் லாம் "விஜயகாந்த் பெரிய ஹீரோவாக வரவேண் டும்' என்பதைப் பற்றியதாகவே இருக்கும். என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் என் ஆலோசனை களும் ரொம்பப் பிடிக்கும். அப்படி இரவு நேரங்களில் நாங்கள் பேசிக்கொண் டிருக்கும்பொழுது விஜயகாந்த் வருவார். "ரெண்டு துலுக்கனும் என்ன பேசிக் கிட்டிருக்கீங்க?'' என்று கேட்பார். (பாசத்தோடு அழைக்கும் வார்த்தைகளுக்கு தயவு செய்து யாரும் தவறாக அர்த்தம் எடுத்துக்கொள்ள வேண்டாம்) சில நேரங்களில் மட்டும்தான் அப்படி அழைப்பார். மற்ற நேரங்களில் "அண்ணே', "லியாகத் அண்ணே' இதைத் தவிர வேறு வார்த்தைகள் வராது.
இப்ராகிம் ராவுத்தர் அவர்களை பல நேரங்களில் அப்படி அழைத்தது உண்டு. (பாசத்தோடும் சிலநேரங்களில் கோபத்தோடும்)
ஆனால் அவர் அப்படி அழைக்கும் விதம் காயப்படுத்துகிற மாதிரி இருக்காது. நட்பின் ஆழம் தெரியும்.
அவர் எங்களுடன் பேச உட்கார்ந்தால் "உனக்கு காலையில ஷூட்டிங் இருக்கு, நீ போய் தூங்கு'' என்பார் இப்ராகிம் ராவுத்தர்.
"ஏண்டா... உங்க ப்ளான் என்னன்னு எனக்குத் தெரியக்கூடாதா?'' என்பார் விஜயகாந்த்.
"அண்ணே... நாங்க என்ன ப்ளான் பண்ணாலும் உங்ககிட்ட சொல்லிட்டுத்தான பண்ணுவோம்'' என்று நான் சொல்லுவேன், தூங்கப் போயிடுவார்.
எங்கள் இருவருடைய பேச்சும் சுற்றிச் சுற்றி... எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றியதாகவே இருக்கும். "விஜி, எம்.ஜி.ஆர். மாதிரி பெருசா வரணும். எம்.ஜி.ஆருக்கு இருக்கிற மாதிரி ரசிகர் மன்றங்களைப் பெருசா வளர்க்கணும்' என்று பேசுவோம். அப்பொழுதெல்லாம் கட்சி தொடங்குவதைப் பற்றி நாங்கள் பேசியதே இல்லை. ஆனால் எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கும்பொழுது அவருக்கு அரணாக, பலமாக இருந்ததெல்லாம் அவருடைய ரசிகர் மன்றங்கள்தான் என்பதைப் பற்றிப் பேசியிருக்கிறோம்.
"சிவப்பு மல்லி' படத்துக்குப் பிறகு இடைவிடாத படப்பிடிப்பு, ஓய்வில்லாத உழைப்பு. அதே 1981-ஆம் ஆண்டு "நெஞ்சிலே துணிவிருந்தால்', "சாதிக்கொரு நீதி', "நீதி பிழைத்தது' படங்கள் வெளியாகியது..
"நீதி பிழைத்தது' படமும் எஸ்.ஏ.சந்திரசேகர் சார் எழுதி இயக்கிய படம்தான். அந்தப் படம் ரிலீசானபோது நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. இதை எஸ்.ஏ.சந்திரசேகர் சார் கூட மறந்திருக்கலாம்.
சென்னை அண்ணாசாலையில் காஸ்மோ பாலிடன் க்ளப்புக்கு அடுத்த காம்பவுண்டில் பிளாசா தியேட்டர் இருந்தது. இப்பொழுது அந்த தியேட்டர் இல்லை. அந்தத் தியேட்டரில் "நீதி பிழைத்தது' படம் வெளியாகியிருந்தது. முதல்நாளன்று வழக்கம்போல ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்து ரிசல்ட் தெரிந்து கொள் வதற்காக நான் போயிருந்தேன். எஸ்.ஏ.சந்திரசேகர் சாரும் வந்திருந்தார். அவர் எப்பொழுது வந்தார் என்று எனக்குத் தெரியாது.
அந்தப் படம் ரிலீசாகும்போது விஜயகாந்த்துக்கு ஒரு பெரிய ரசிகர் வட்டம் உருவாகியிருந்தது. அதுவும், தீவிரமான ரசிகர்கள். சிலர் கொஞ்சம் ஓவரான வேகம் உள்ளவர்கள். ராஜாபாதர் தெருவில் இருக்கும் விஜயகாந்த் அலுவலகத்திற்கு அவர்கள் மன்ற வேலையாக வந்து போய்க்கொண்டிருந்ததால், அதில் பலபேரை எனக்குத் தெரியும். விஜயகாந்த்துடன் நான் மிகவும் நெருக்கமாக இருப்பதால்... அவர்களும் என்மீது பிரியத்துடன் இருப்பார்கள். அவர்களில் பலர் பிளாசா தியேட்டருக்கு வந்திருந்தனர்.
படம் முடிந்தது. அவ்வளவு திருப்தியாக இல்லை. ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. காரணம் "சட்டம் ஒரு இருட்டறை', "நெஞ்சிலே துணிவிருந்தால்' இரண்டுமே மிகப்பெரிய வெற்றி. அந்த இயக்குநரின் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்புடன் வந்தார்கள். அதுதவிர, தொடர்ந்து விஜயகாந்த் படங்கள் வெற்றிபெற வேண்டும் என்ற வெறியோடு இருந்தார்கள். அந்த வெறிக்கு தீனி போடவில்லை "நீதி பிழைத்தது' படம்.
படம் முடிந்து வெளியே வரும்போதுதான் எஸ்.ஏ.சந்திரசேகர் சார் அவர்களை நான் பார்த்தேன். அவருக்கு நான் வணக்கம் சொல்வதற்கு முன் ரசிகர்கள் அவûரைச் சூழ்ந்துகொண்டார்கள். அவர் ஒரு இயக்குநர் என்பதைக்கூட நினைக்காமல், ஆளாளுக்கு கூச்சல் போட ஆரம்பித்தார்கள்.
"படமா சார் எடுத்திருக்கீங்க..? வேஸ்ட்... வேஸ்ட்... இனிமே உங்க படத்துல எங்க தலைவர நாங்க நடிக்கவிடமாட்டோம்...'' என்று என்னென்னமோ வார்த்தைகளால் திட்டினார்கள்.. கத்தினார்கள்.
விஜயகாந்த்துக்கு இவ்வளவு வெறித்தனமான ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள் என்று அந்த நேரத்தில் என்னால் சந்தோஷப்பட முடியவில்லை. பதட்டம் ஏற்பட்டது. அவரும் என்ன பேசுவதென்று தெரியாமல் தவித்துப்போய் நின்றிருந்தார்.
எவ்வளவு பெரிய திறமையான டைரக்டராக இருந்தாலும், அவர் இயக்கும் எல்லா படங்களும் வெற்றி பெற்றுவிடுவதில்லை. ஆனால் இந்த மாதிரி ரசிகர்கள் அதைப் புரிந்துகொள்ள முடியாது. புரிந்துகொள்ளும் மனநிலையில் அவர்கள் இல்லை. அவர்களில் பலர் எனக்கு அறிமுகமானவர்கள் என்பதால் அந்தச் சிக்கலான சூழ்நிலையை என்னால் சமாளிக்க முடிந்தது.
ரசிகர்களை அமைதிப்படுத்தி னேன்... ஆசுவாசப்படுத்தினேன். "இவர்தாண்டா சட்டம் ஒரு இருட்டறை படம் மூலமா அண்ணனை பெரிய ஹீரோ ஆக்குனாரு, அவரைப்போயி கோபப்படறீங்க. விஷயம் அண்ணனுக்குத் தெரிஞ்சா காம்பவுண்டுக்குள்ளேயே விடமாட்டாரு, மன்றத்துலயும் இருக்க வேண்டாம்னு சொல்லிடுவாரு...'' என்று சொன்னதும் அடங்கினார்கள்.
டைரக்டர் சாரிடமும் ஸாரி சொல்லி அனுப்பி வைத்தேன். அன்று ஆவேசப்பட்ட ரசிகர்களுக்கு, அப்பொழுது தெரியாது... "அடுத்தடுத்த படங்களால் சற்று சறுக்கலைச் சந்தித்த விஜயகாந்த்துக்கு, "சாட்சி' படம் மூலம் மீண்டும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தப் போகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்' என்று.
"எந்த ஒரு ஹீரோவுக்கு இப்படி வேகமான, வெறித்தனமான ரசிகர்கள் அமைகிறார்களோ அந்த ஹீரோ உச்சத்திற்குப் போகப்போகிறார் என்று அர்த்தம்... இல்லை, உச்சத்திற்கு வந்துவிட்டார்' என்று அர்த்தம்.
பல ஆண்டுகளுக்கு முன் நான் கேள்விப்பட்ட ஒரு செய்தி...
நான் மதிக்கிற விஜயன் மாஸ்டர். மிகப்பெரிய ஹீரோக்கள் எல்லோருக்கும் பிரமாண்ட சண்டைக் காட்சிகள் எடுத்தவர். பல படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். அவர் கன்னட பட உலகின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் நடித்த படத்திற்கு சண்டைக் காட்சிகள் அமைத்துக் கொடுத்திருந்தார். ராஜ்குமாரை கன்னட ரசிகர்கள் தெய்வமாகவே கொண்டாடினார்கள்.
சந்தனக்கடத்தல் வீரப்பன் கடத்திக்கொண்டு போய் காட்டில் வைத்திருந்து, யாராலும் போக முடியாத அந்தக் காட்டுக்குள் நம் நக்கீரன் கோபால் சார் துணிச்சலாகப் போய் பத்திரமாக மீட்டுக்கொண்டு வந்தாரே, அதே ராஜ்குமார்தான்.
அவருக்கு சண்டைக்காட்சி அமைத்துக் கொடுத்த அதே நேரத்தில்... அப்பொழுது புதிய ஹீரோவாக இருந்த விஷ்ணுவர்தன் நடிக்கும் படத்திற்கும் சண்டைக் காட்சி அமைத்துக் கொடுத்திருந்தார்.
அதில் ராஜ்குமார் சண்டைக் காட்சிகளை விட விஷ்ணுவர்தனின் சண்டைக் காட்சிகள் சூப்பராக இருந்ததாம்.
ராஜ்குமார் ரசிகர்கள் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார்கள். பெங்களூரில் விஜயன் மாஸ்டர் தங்கியிருந்த ஹோட்டல் ரூமுக்கே போய் "எங்க ராஜ்குமாரை விட எப்படி விஷ்ணுவர்தன் சண்டைக் காட்சிய சூப்பரா எடுத்தீங்க?''ன்னு அவரை தாக்கியதாகக் கூறுவார்கள்.
விஷயத்தைக் கேள்விப்பட்டு, ராஜ்குமார் அவர்கள் விஜயன் மாஸ்டரிடம் தன் வருத்தத்தை தெரிவித்துக் கொண்டாராம்.
இது நான் கேள்விப்பட்ட விஷயம்.
அதைப்போல விஜயகாந்த் அவர்களுக்கும் வெறித்தனமான ரசிகர்கள் உருவாக ஆரம்பித்தார்கள்.
(வளரும்...)