dd

(25) தூங்கவிடாமல் செய்த கலைஞர்!

"பூ விலங்கு' படம் வரும்போதாவது பரவா யில்லை... விஜயகாந்த் வளர்ந்திருந்தார். இன்னும் மார்க்கெட் உயரவேண்டும் என்று நினைத்தோம். "பூ விலங்கு' வந்த ஆண்டு 1984. பல ஆண்டுகளுக்குப் பிறகு விஜயகாந்த் விஸ்வரூப வளர்ச்சியடைந்த பிறகு 1991-ல் நடிகர் சரவணன் "வைதேகி வந்தாச்சு' படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அவரும் பார்ப்பதற்கு விஜயகாந்த் மாதிரியே இருந்தார்.

"என்னண்ணே... விஜி மாதிரி அப்படியே இருக்கான்...'' னு என்கிட்ட ஆரம்பிச்சார் இப்ராகிம் ராவுத்தர்,

Advertisment

"லூசாடா நீ...'' என்றார் விஜயகாந்த்.

இப்ராகிம் ராவுத்தர் என்னைப் பார்த்தார்.

"அண்ணனை ஏண்டா பாக்கறே. அண்ணே... இவன்கூட சேர்ந்து நீங்களும் லூசாயிடாதீங்க'' என்று என்னைப் பார்த்து சொன்னார்.

Advertisment

"லூசாடா நீ'' என்ற டயலாக் தமிழ் சினிமாவில் மட்டு மல்ல... தமிழ்நாட்டில் பலர் பயன்படுத்திய புகழ்மிக்க வார்த்தை.

அதை முப்பது வருடங்களுக்கு முன்பே விஜயகாந்த் கூறிவிட்டார்.

விஜயகாந்த்திடம் ஒரு குணம் உண்டு. படத்தின் டைரக்டர் களிமண்ணாக இருந்தால் கூட, (இந்த வார்த் தையைப் பயன்படுத்துவதற்கு மன்னிக்கவும்) படத்தின் டைரக் டர்களுக்கு மிகுந்த மரியாதை தருவார். இதை இப்ராகிம் ராவுத் தர்தான் ஒருமுறை விஜயகாந்த்திடம் கூறினார்... "டைரக்டரை மதிக்க வேண்டும், நாம் பெரிய நடிகராகிவிட்டோம் என்று நினைக்கவே கூடாது' என்று.

அதை அப்படியே கடைப்பிடித்தார் விஜயகாந்த். இப்ராகிம் ராவுத்தருக்குப் பிடிக்காவிட்டால், "டைரக்டர் சொன்னா, எதுவா இருந்தாலும் கேட்டுக்குவியா?'' என்று கோபப்படுவார்.

"நீதானேடா சொன்னே... டைரக்டர் சொன்னா கேட்டுக்கணும்னு. ஏண்ணே, நீங்களும்தானே இருந்தீங்க... சொல்லுங்கண்ணே'' என்பார்.

நான் சமாதானப்படுத்துவேன்.

உண்மையிலேயே இருவருக்குமிடையே பலத்த வாக்குவாதங்கள் எல்லாம் நடந்திருக்கிறது. நாங்கள் மூவர் மட்டுமே இருப்போம். அப்போதெல்லாம் நான்தான் சமாதானப் புறாவாக மாறுவேன்.

இப்ராகிம் ராவுத்தர், விஜயகாந்த்துக்காக செய்தவை வெளியே தெரிந்திருக்கும். விஜயகாந்த் அவருக்குச் செய்தவை நிறைய பேருக்குத் தெரியாது. விஜயகாந்த் எப்பொழுதுமே அதைச் சொல்லிக் காட்டியதில்லை. என்னிடம் தனிப்பட்ட முறையில் நிறைய பேசியிருக்கிறார். அதில் எல்லாவற்றையும் என்னால் சொல்ல முடியாது. சொல்லாமல் விடவும் முடியாது. போன அத்தியாயத்தை முடிக்கும்போது "விஜயகாந்த் அவர்களிடமிருந்து இப்ராகிம் ராவுத்தர் பிரிந்தாரா... பிரிக்கப்பட்டார்களா... இல்லை பிரித்தார்களா...?' என்று முடித்திருந்தேன்.

dd

அதே கேள்வி எனக்கும் பொருந்தும்.

"விஜயகாந்த்திடமிருந்து நான் பிரிந்தேனா... பிரிக்கப்பட்டேனா...?'

கலைஞரைப் போல திரையிலே டைட்டில் வரவேண்டும். அவரைப் போலவே வசனம் எழுத வேண்டும் என்ற ஆசையோடு நான் சென்னைக்கு வந்ததாக சொல்லியிருந்தேன்.

விஜயகாந்த்துக்கு கலைஞருடன் மிகப்பெரிய அன்பும், பாசமும் ஏற்பட்டதுதான் எனக்கும் கலைஞரிடம் நெருக்கத்தை ஏற்படுத்தியது.

கலைஞரை நான் தனியாகவும் போய் சந்தித்திருக்கிறேன். விஜயகாந்த் துடனும் போய் பல தடவை சந்தித்திருக்கிறேன். கோபாலபுரம் வீட்டிலும், ஆழ்வார்பேட்டை வீட்டிலும் விஜயகாந்த்தும், நானும் அவருடன் நீண்டநேரம் பேசியிருக்கிறோம், டீ காபி சாப்பிட் டிருக்கிறோம், டிபன் சாப்பிட்டிருக்கிறோம்.

விஜயகாந்த் நடித்து, நான் எழுதிய எல்லா படங்களையும் கலைஞர் குடும்பத்தினரோடும், கட்சியின் அடுத்தகட்ட தலைவர் களுடன் வந்து பார்த்திருக்கிறார். அவருக்காக விஜயகாந்த், இப்ராகிம் ராவுத்தர் தனிக் காட்சி ஏற்பாடு செய்வார்கள்.

படம் பார்த்துவிட்டுப் போகும்போது, அப்போதே என்னிடம் நிறைய பேசுவார், பாராட்டுவார், கருத்துக்கள் சொல்வார். அவர் மீது எனக்கிருந்த பற்றையும், என் னுடைய திராவிட உணர்வையும் தெரிந்துகொண்டு, என்னை யும் அவருடைய உடன்பிறப்பாகவே நினைத்தார்.

சகோதரி கனிமொழி எம்.பி.யும் என்னை அண்ணனாக பாவித்து எனது உறவினரான கட்சிப் பிரமுகரிடம் பேசியது தெரியவந்ததும் நான் மிகவும் நெகிழ்ந்துபோனேன்.

ஒருமுறை உறவினரான கட்சிப்பிரமுகர் என்னை ஆட்டோவில் அழைத்துப் போனதை பார்த்துவிட்டு, "ஏன் அண்ணன கார்ல கூட்டிட்டுப் போகாம ஆட்டோவுல கூட்டிட்டுப் போனீங்க?' என்று கூட விசாரித்திருக்கிறார்.

2014ஆம் ஆண்டு. நான் அ.இ.அ.தி.மு.க. தேர்தல் பிரச்சாரத்தில் தி.மு.க.வை விமர்சித்து பல விஷயங் களைப் பேசினேன். அப்பொழுது ஒருநாள் இரவு 11 மணிக்கு, எனது உறவினரான கட்சிக்காரரிடமிருந்து போன்.

"கனிமொழி மேடம் போன் பண்ணாங்க. லியாகத் அலிகான் அண்ணன் என்னைப் பத்தி பிரச்சாரத்தில் பேசறாருன்னு சொன்னாங்க. அரசியல்னா யாரைப் பத்தி வேணும்னாலும் பேசலாம். அதைப் பத்தியெல்லாம் நான் கொஞ்சம்கூட கவலையேபடற தில்ல. ஆனா, லியாகத் அலிகான் அண்ணன் பேசறது எனக்கு வருத்தமா இருக்குன்னு மேடம் சொன்னாங்க'' என அந்த உறவினர் சொன்னார்.

அவர் என்னை அண்ணனாக நினைத்துக் கொண்டிருக்கிறார். நான்தான் அவரை சகோதரி என்பதை மறந்துவிட்டேனோ என்ற குற்றவுணர்வு எனக்குள் ஏற்பட்டது. "இனிமே அவங்களைப் பத்தி, அவங்க சொன்ன அந்த விஷயத்தைப் பத்தி நான் பேசவே மாட்டேன். அதை அவங்க கிட்ட சொல்லிடுங்க'' என்று சொன்னேன்.

1994ஆம் ஆண்டு. அப்பொழுது தமிழ் நாட்டின் முதலமைச்சர் கலைஞர். திரைப் படத் துறையினருக்கான அரசு விருதுகள் அறிவிக் கப்படுகிறது. விஜயகாந்த்துக்கு எம்.ஜி.ஆர். விருதும், எனக்கு அண்ணா விருதும் அறிவிக்கப் படுகிறது. நன்றி தெரிவிப்பதற்காக விஜய காந்த்தும், நானும் சால்வை பொக்கேயோடு கோபாலபுரம் இல்லத்திற்குப் போனோம். அவ ரோடு தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன்

(இயக்குநர் ஏ.எல். விஜய்யின் அப்பா) இருந்தார். பொக்கே கொடுத்தோம், சால்வை அணிவித்தோம். அவருடன் புகைப்படம் எடுத்தோம். நீண்ட நேரம் பேசிக் கொண் டிருந்தோம்.

ஒருமுறை அவரை சந்திக்கும் போது "உங்களை நான் "ஐயா' என்று அழைப்பதா? "அண்ணே' என்று அழைப் பதா? ரெண்டுமே மனசுக்கு ஒட்டமாட்டேங்குது. நடிகர் தியாகு உங்களை அப்பான்னு கூப்பிடு வாரு. அதேமாதிரி நானும் அப்பான்னு கூப்பிடவா?'' என்று கேட்டேன்.

"உனக்கு எப்படித் தோணுதோ... அப்படியே கூப்பிடு'' என்று சொன்னார். நன்றி சொல்லப் போன நேரத்தில்... "அப்பா இதுதான் எனக்கு கிடைத்த முதல் விருது. நீங்க முதலமைச்சரா இருக்கிறப்ப, உங்க கையால் வாங்கப்போறேன்'' என்றேன். "இதான் உனக்கு முதல் விருதா... வேற அரசு விருது உனக்கு கிடைக்கலியா?'' என்றார்.

"அ.தி.மு.க. பீரியட்ல ரெண்டு தடவை சிறந்த வசனகர்த்தா லிஸ்ட்ல என்பேரு இருந்துச்சாம். இவரு தி.மு.க.வுக்கு சப்போர்ட் பண்றவருன்னு சொல்லி சி.எம். ஜெயலலிதாம்மா (அப்பொழுது அப்படி பேரைச் சொன்னேன்) என்பேர அடிச்சுட்டாங்களாம். நம்ம ஆட்சியில (தி.மு.க. ஆட்சியில்) கூட சிறந்த வசனகர்த்தா

லிஸ்ட்ல என் பேரு இருந்துச்சாம். அரசியல் வசனம்னு சொல்லி அடிச்சிட்டாங்களாம்'' என்றேன்.

"அப்படியா?'' என்றார்.

"கேள்விப்பட்டேன்'' என்றேன்.

"இனிமேல், எந்தப் படத்துக்கு எழுதுனா, அதாவது குடும்பப்படத்துக்கா, இல்ல லவ் ஸ்டோரிக்கா, இல்ல ஆக்ஷன் மசாலா படங் களுக்கா? எந்த மாதிரி படங்களுக்கு எழுதுனா அரசு விருது கிடைக்கும்னு சொல்லிட்டா நல்லா இருக்கும்''னு சொன்னேன். எதற்குப் பதில் சொல்ல வேண்டும், எதை, எப்படி கடந்து போவது என்பதைப் பற்றி கலைஞருக்கு நன்றாகவே தெரியும். எனக்குப் பதில் சொல்லாமல், அவருக்கு பின்னால் நின்றிருந்த தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனிடம், "கடவுள் படம் எப்படி இருக்கு?'' என்று கேட்டார்.

"பரவாயில்ல... வசூலும் சுமாரா இருக்கு'' என்றார் அழகப்பன்.

"அப்பா, வேலு பிரபாகரன் என்னை ஒரு ஷூட்டிங்ல சந்திச்சாரு. "கடவுள் படம் ஆரம் பிக்கப் போறேன், நீங்கதான் வசனம் எழுதணும்'னு கேட்டார். நானும் சரின்னு சொன்னேன். ஆனா அதுக்குப் பிறகு அவர் என்னை வந்து சந்திக்கவும் இல்ல, எழுதச் சொல்லவும் இல்ல'' என்றேன். "நீ எழுதியிருந்தா படம் இன்னும் நல்லா வந்திருக்கும்யா. உன் எழுத்துல ஒரு லாவகம் இருக்குய்யா'' என்றார். எவ்வளவு பெரிய பாராட்டு. ஒரு மாநிலத்தின் முதல்வர், கட்சியின் தலைவர், எழுத்துப் பணி செய்பவர் இப்படி எத்தனையோ வேலைகளுக்கு மத்தியிலும் என்னையும் எடை போட்டு வைத்திருக்கிறார். நான் எழுதிய படங்களையும், வசனங்களையும் மனதில் வைத்திருக்கிறார்.

"உன் எழுத்துல ஒரு லாவகம் இருக் குய்யா'' -என்ன வார்த்தை அது. அன்று இரவு மட்டும் அல்ல இரண்டு மூன்று இரவுகள் அதை நினைத்து, நினைத்து தூக்கம் வரவில்லை.

(வளரும்...)