கருப்பு + சிவப்பு = புரட்சி! -திரைப்பட இயக்குநர் - வசனகர்த்தா லியாகத் அலிகான் (13)

ll

ll

(13) பாட்டிக்கு பணம் கொடுத்த எம்.ஜி.ஆர்!

விஜயகாந்த் அவர்கள் நடிக்க வேண்டும் என்ற லட்சி யத்தாடு சென்னை வந்த வர். இப்ராகிம் அண்ணன் கதை எழுதவேண்டும் என்ற லட்சியத்தோடு சென்னை வந்தவர். அதற்காக வலம்புரி சோமநாதன் என்ற சினிமா கதாசிரியரிடம் சில நாட்கள் உதவி யாளராகக் கூட இருந்திருக்கிறார். அவருடைய உடலும் மனமும் யாரிடமும் உதவியாளராக இருப் பதற்கு ஒத்துப்போகாது... நான் வந்த பிறகு என்னிடம் கதைகளைப் பற்றி நிறைய பேசுவார். பார்த்த படங் களின் கதையைப் பற்றிப் பேசுவதைவிட புதிதாக எப்படி யெல்லாம் கதை பண்ணலாம் என்று கருத்துக்கள் கூறுவார்.

எதாவது ஒரு கதை ஐடியா கூறுவார். அதை நான் முப்பது பக்கங்கள் அளவுக்கு கதையாக எழுதிக் காட்டுவேன். அவர் சொன்ன மூன்றுவரி கதை, முப்பது பக்கம் ஆனதில் அவர் முகத்தில் தெரியுமே ஒரு மகிழ்ச்சி... அளவிட முடியாது. கதாநாயகியை மையமாக வைத்து ஒரு கதை சொன்னார். அதற்கு அவரே "ஜமீலா' என்ற பெயரும் வைத்திருந் தார். "கதாநாயகி குதிரையில் வரும்போதே தியேட்டரில் தீப்பொறி பறக்கவேண் டும்' என்பார். "குதிரையைப் பார்த்தாலே ரசிகர்கள் மிரளவேண்டும்' என்று சொல் வார். அதற்கு சில ஆங்கிலப் படங்களில் வரும் குதிரைகளை உதாரணமாகச் சொல் வார். "ஜமீலாவை வாள் சண்டையில் கெட்டிக்காரியாக காட்டவேண்டும்' என்றார்.

"சண்டைக் காட்சிகளில் எம்.ஜி.ஆர் அவர்களைப் போல யாராலும் நடிக்க முடியாது. அதுவும் வாள் சண்டையில் அவருடைய ஸ்டைலே தனியாக இருக்கும். புன்னகை முகத்தோடு வாள் வீசுவார். எம்.ஜி.ஆர். போலவே ஜமீலாவும் சிரித்துக்கொண்டே சண்டை போடுவது போல் இருக்கவேண்டும்'' என்பார்.

அவர் சொல்லாமலேயே அவர் சொன்ன "ஜமீலா' ஐடியாவை நாற்பது பக்கங்களுக்கு சினிமாவுக்கேற்ற வாறு எழுதிக்கொண்

ll

(13) பாட்டிக்கு பணம் கொடுத்த எம்.ஜி.ஆர்!

விஜயகாந்த் அவர்கள் நடிக்க வேண்டும் என்ற லட்சி யத்தாடு சென்னை வந்த வர். இப்ராகிம் அண்ணன் கதை எழுதவேண்டும் என்ற லட்சியத்தோடு சென்னை வந்தவர். அதற்காக வலம்புரி சோமநாதன் என்ற சினிமா கதாசிரியரிடம் சில நாட்கள் உதவி யாளராகக் கூட இருந்திருக்கிறார். அவருடைய உடலும் மனமும் யாரிடமும் உதவியாளராக இருப் பதற்கு ஒத்துப்போகாது... நான் வந்த பிறகு என்னிடம் கதைகளைப் பற்றி நிறைய பேசுவார். பார்த்த படங் களின் கதையைப் பற்றிப் பேசுவதைவிட புதிதாக எப்படி யெல்லாம் கதை பண்ணலாம் என்று கருத்துக்கள் கூறுவார்.

எதாவது ஒரு கதை ஐடியா கூறுவார். அதை நான் முப்பது பக்கங்கள் அளவுக்கு கதையாக எழுதிக் காட்டுவேன். அவர் சொன்ன மூன்றுவரி கதை, முப்பது பக்கம் ஆனதில் அவர் முகத்தில் தெரியுமே ஒரு மகிழ்ச்சி... அளவிட முடியாது. கதாநாயகியை மையமாக வைத்து ஒரு கதை சொன்னார். அதற்கு அவரே "ஜமீலா' என்ற பெயரும் வைத்திருந் தார். "கதாநாயகி குதிரையில் வரும்போதே தியேட்டரில் தீப்பொறி பறக்கவேண் டும்' என்பார். "குதிரையைப் பார்த்தாலே ரசிகர்கள் மிரளவேண்டும்' என்று சொல் வார். அதற்கு சில ஆங்கிலப் படங்களில் வரும் குதிரைகளை உதாரணமாகச் சொல் வார். "ஜமீலாவை வாள் சண்டையில் கெட்டிக்காரியாக காட்டவேண்டும்' என்றார்.

"சண்டைக் காட்சிகளில் எம்.ஜி.ஆர் அவர்களைப் போல யாராலும் நடிக்க முடியாது. அதுவும் வாள் சண்டையில் அவருடைய ஸ்டைலே தனியாக இருக்கும். புன்னகை முகத்தோடு வாள் வீசுவார். எம்.ஜி.ஆர். போலவே ஜமீலாவும் சிரித்துக்கொண்டே சண்டை போடுவது போல் இருக்கவேண்டும்'' என்பார்.

அவர் சொல்லாமலேயே அவர் சொன்ன "ஜமீலா' ஐடியாவை நாற்பது பக்கங்களுக்கு சினிமாவுக்கேற்ற வாறு எழுதிக்கொண்டு வந்து காண்பித்தேன்... பூரித்துப்போனார். அந்தக் கதை படமாக்கப்பட்டு திரையில் வருவதுபோல் நினைத்துப் பூரித்தார். நான் கொடுத்த கதை ஃபைலை பொக்கிஷம் போல் பல ஆண்டுகள் வைத்திருந் தார். அவரது கற்பனை யை நான் கதையாக்கிக் கொடுத்ததால் என் மீது அவருக்கிருந்த அன்பும் நம்பிக்கையும் பல மடங்கு அதிகமாகிப்போனது. என் அண்ணன் வீட்டிலிருந்து எப்பொழுது வருவேன் என்று காத்திருக்க ஆரம்பித்தார். இரவு நேரங் களில் பெரும்பாலும் என் அண்ணன் வீட்டிற்குப் போகாமல் விஜயகாந்த் அவர்களின் அறையில் தங்க ஆரம்பித்தேன். இரவெல்லாம் கதை பேசுவோம். நைட் ஷோ எதாவது படத்துக்குப் போவோம். விஜயகாந்த் அவர் களின் வளர்ச்சியைப் பற்றி பேசிக்கொண்டிருப்போம்.

நாங்கள் இரவு நேரங் களில் ரூமுக்கு வெளியே அமர்ந்து பேசிக்கொண்டி ருக்கும்போது ரூமுக்குள்ளே யிருந்து விசில் சத்தம் கேட் கும். டி.வி.யில் எம்.ஜி.ஆர். படமோ அல்லது பாடல் காட்சியோ பார்த்தபடி விஜயகாந்த் விசிலடித்து ரசித்துக்கொண்டிருப்பார்.

நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்... எம்.ஜி.ஆர். அவர்களின் வெறித்தனமான ரசிகர் விஜயகாந்த். அவர் நடிக்க வருவதற்கு முன் நடந்த சம்பவம் இது.

தி.மு.க.வின் மூத்த முன்னணித் தலைவர்களில் ஒருவரும், தி.மு.க. மாவட்டச் செயலாளருமாக இருந்த பவர்ஃபுல் அர சியல்வாதி முத்து. எம்.ஜி.ஆர். தி.மு.க.வை விட்டு வெளியேற்றப்பட்ட பிறகு "உலகம் சுற்றும் வாலிபன்' படம் திரைக்கு வரப் போகிறது. படம் வெளியாவதற்கு முன்பே அதைத் தடுப்பதற்காக பல முட்டுக்கட்டைகள் போடப்படு கிறது. "படம் வெளிவந்தால் நான் புடவை கட்டிக் கொள்கிறேன்' என்று சவால்விடுகிறார் மதுரை முத்து.

ll

படம் வெளியாகி பிரமாண்ட வெற்றியைப் பெறுகிறது. மதுரை முத்து வுக்கு புடவையும் வளையலும் அனுப்பி வைத்து வெற்றியைக் கொண்டாடுகிறார் விஜயகாந்த். அந்த அளவுக்கு அவர் எம்.ஜி.ஆர். பக்தராக இருந்தார். அவரை நான் முதன்முதலில் பார்த்த பொழுது அவரது கருப்பு நிறமே எனக்கு ஒரு மின்னல் போல இருந்தது. அவரது கண்களைக் கூர்ந்து பார்த்தால் அன்பு, பாசம், கருணை, இரக்கம், அநியாயத்தை சுட்டெரிக்கும் கோபம், தீயவர்களைத் தண்டிக்கிற வேகம்... என அத்தனை உணர்ச்சிகளும் அதில் தெரியும்.

அவர் பெரிய நடிகரானதும் அவர் கண்களும் அவரது நடிப்புக்கு மெருகூட்டியது என்றுகூடச் சொல்வார்கள்.

மதுரையில் அவர்களுடைய ரைஸ்மில்லில் வேலை பார்த்துப்... பார்த்து உரமேறிப்போன கைகள்.. இரும்பு மாதிரி ஆகிப்போன உடல் அமைப்பு... ஆனால் அவர் இதயம் மட்டும் மென்மையானதாகவே இருந்தது. அந்த இதயத்தில் எனக்கொரு தனி இடம் கொடுத்து வைத்திருந்தார்.

என் அண்ணன் வீட்டில் எனது அம்மாவும் இருந்தார். அவருக்கு சினிமாவைப் பற்றி ஒன்றும் தெரியாது. அரசியலைப் பற்றியும் தெரியாது. சினிமாவில் வேலை தேடி வந்திருக்கிறேன் என்பது மட்டும் தெரியும். காலையில் சாப்பிட்டுவிட்டு விஜயகாந்த் ஆபீஸ் போனால் சில நேரங்களில் இரவு வந்தாலும் வருவேன். இல்லையென்றால் அங்கேயே தங்கிவிடுவேன். இரவு எனக்கு எடுத்து வைத்த சாப்பாடு அப்படியே இருக்கும்.

"அங்க சாப்பிட்டியாப்பா... நல்லா பாத்துக்கிறாங்களாப்பா'' என்று கேட்பார்.

வசனம் எழுதுவது என்றால் என்னவென்று அவருக்குத் தெரியாது. "என்ன எழுதப்போறேப்பா, நல்லா காசு கிடைக்குமா? எவ்வளவு கிடைக்கும்?'' என்று கேட்பார். எல்லா தாய்களுக்குமே பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் என்ற அக்கறை. சில நேரங்களில் அது கவலையாகவும் வெளிப்படும்.

ஒருநாள் என்னிடம் கேட்டார்.

"ஏம்பா... நீ போறியே விஜயகாந்து... அவரு பெரிய நடிகர் இல்லியாமே... சின்ன நடிகர் தானாமே?''

ஹவுஸ் ஓனர் அம்மா, பக்கத்துவீட்டுப் பெண்கள், "உங்க சின்ன மகன் எதுக்கு வந்திருக்காரு?' என்று கேட்கும்போது அவர் விஜய காந்த் பெயரைச் சொல்லியிருக்கிறார்கள். சினிமாவைப் பற்றித் தெரிந்த அவர்கள், விஜயகாந்த் பெரிய நடிகர் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். அதைத்தான் என்னிடம் கேட்டார்.

நான் சொன்னேன்... "ஆரம்பத்திலேயே எல்லாரும் பெரிய நடிகர் ஆகறதில்லேம்மா... படிப்படியாத்தான் பெரிய நடிகரா ஆவாங்க...''

"அதைச் சொன்னாங்கப்பா... விஜயகாந்து பெரிய நடிகர் ஆவாருல்ல...'' என்று என் அம்மா கேட்டார்.

ll

நான் என்ன விளக்கிச் சொன்னாலும் என் அம்மாவுக்குப் புரியப்போவதில்லை. ஆனால் அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக ஒரு பதிலைச் சொல்லவேண்டும். காரணம், விஜயகாந்த் பெரிய நடிகரானால் நானும் அவரோடு சேர்ந்து வளர்ந்துவிடுவேன் என்பது அம்மாவின் எண்ணம்.

அவர்களுக்கு சினிமாவில் நன்றாகத் தெரிந்த பெயர் எம்.ஜி.ஆர். சினிமாவைப் பற்றித் தெரியாதவர்களுக்குக்கூட எம்.ஜி.ஆரைத் தெரியாமல் இருக்காது. ஏனென்றால் அவர் அரசியலிலும் இருந்தார். அதுவும் இல்லாமல் அள்ளிக்கொடுக் கும் வள்ளல் என்று மக்களிடத்தில் பெயரும் வாங்கியிருந்தார்.

"ஏழைபாழைங்க யார் போனாலும் எம்.ஜி.ஆர். பணம் குடுப்பாராமில்ல...'' என்று என் அம்மாவே, நான் சிறு வயதில் இருக்கும்பொழுது கேட்டிருக்கிறார்.

அதற்குக் காரணம் இருக்கிறது. என் ஊர் கம்பத்தில் நாங்கள் இருந்த வீட்டுக்கு இரண்டு தெரு தள்ளி ஒரு பாட்டி இருந்தார். பெயர் காமாட்சி என்று ஞாபகம். அந்தப் பாட்டி எம்.ஜி.ஆர். பைத்தியம். அந்தம்மாவுக்கு மகள்கள் இருந்தார்கள்... மகன் இல்லை. ஆனால் "யாரு சொன்னா எனக்கு மகன் இல்லன்னு... எம்.ஜி.ஆருதான் என் மகன்'' என்று சொல்லும் அளவுக்கு எம்.ஜி.ஆர். மேல் உயிராக இருந்தவர். அப்பொழுது எங்கள் ஊரில் இரண்டு தியேட்டர்கள் இருந்தன. கிரசன்ட் டாக்கீஸ், ராஜா டாக்கீஸ். எம்.ஜி.ஆர். படம் போட் டால், காமாட்சி தினமும் மேட்னி ஷோவுக்குப் போயிடும். எத்தனை தடவை வேண்டுமானாலும் சலிக் காமல் பார்க்கும். இரண்டு தியேட்டர் களிலும் எம்.ஜி.ஆர். படம் போட்டால், மேட்னி ஷோ ஒரு தியேட்டருக்கும், ஈவினிங் ஷோ இன்னொரு தியேட்ட ருக்கும் போய்விடும்.

எம்.ஜி.ஆர். இரண்டு வேடங் களில் நடித்து அசத்திய வெள்ளிவிழா படம் "மாட்டுக்கார வேலன்' படப் பிடிப்பு. அதாவது 1969-ல் என்று நினைக் கிறேன்... தேனிக்கு அருகில் வைகை டேமில் நடந்தது. அதைக் கேள்விப் பட்ட காமாட்சிப் பாட்டி "என் மகனைப் பாக்கப்போறேன்''னு சொல்லி தனியாக பஸ் ஏறி கிளம்பிவிட்டார்.

எம்.ஜி.ஆரைப் பார்த்து, "உன் னை நான் என்னோட மகன்னு எங்க ஊர்ல இருக்கிறவங்ககிட்டயெல்லாம் சொல்லிக்கிட்டிருக்கேன்'' என்று சொல்லி எம்.ஜி.ஆரின் கன்னத்தை தொட்டுப் பேசி "தினமும் ஷூட்டிங் முடிஞ்சதும் வீட்டுக்குப் போய் சுத்திப் போடு ராசா. சூரியன மாதிரி உன் முகம் ஜொலிக்குதுய்யா'' என்று கூறியிருக் கிறார். காமாட்சிப் பாட்டிக்கு பிஸ்கட் பாக்கெட்டும், நூறு ரூபாய் பணமும் கொடுத்து, "பத்திரமா ஊருக்குப் போங்க'' என்று அனுப்பி வைத்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

நூறு ரூபாய் என்பது அப்பொழுது பெரிய விஷயம். அதுவும் காமாட்சி பாட்டிக்கு ரொம்ப ரொம்ப பெரிய விஷ யம். எங்கள் ஊரில் வந்து எம்.ஜி.ஆர். கொடுத்த நூறு ரூபாயைக் காமாட்சி பாட்டி காட்டி, "எம்புள்ள குடுத்தது...''ன்னு சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.

விஜயகாந்த் கருப்பு எம்.ஜி.ஆர். ஆன கதை!

(வளரும்...)

nkn190423
இதையும் படியுங்கள்
Subscribe