(11) "இருவர்'கள்!
ஆண்டவன் என்னை சென்னைக்கு அழைக்க வில்லை. முதலில் புகழேந்தியைத்தான் அழைத்தான்.
ஆம்...! எனக்கு முன்பே அவர் சென்னை சென்றுவிட்டார். மத்திய அரசு வேலை... எழும்பூரில் உள்ள தபால்-தந்தி அலுவலகத்தில்.
"எப்படியாவது உங்களை சென்னைக்கு அழைக்கிறேன்'' என்று சொல்லிவிட்டுப் போனார்.
சினிமா ஆசையில் சென்னைக்குப் போகிறவர்கள் எதாவது ஒரு அறை எடுத்து தங்குகிறார்கள். நண்பர்கள் இருந்தால், உறவினர்கள் இருந்தால் அவர்களுடன் தங்குகிறார்கள். கம்பெனி, கம்பெனியாக ஏறி இறங்கி வாய்ப்புக் கேட்கிறார்கள். டைரக்டர்களின் வீட்டு வாசலில் போய் தவம் கிடக்கிறார்கள். ஏதாவது ஹோட்டலிலோ, மளிகைக் கடையிலோ, பெட்ரோல் பங்க்கிலோ, வேறு எங்கோ வேலை தேடிக்கொண்டு, லீவு நாட்களில் அலைகிறார்கள். "ப்ளாட்பாரங்களில், கோவில் வாசல்களில் கூட படுத்துக்கிடக்கிறோம், பட்டினி கிடந்திருக்கிறோம். இரவு நேரங்களில் போலீஸ்காரர்களின் டார்ச்சரை அனுபவித்திருக்கிறோம்''
-இப்படி சினிமாவில் நுழைந்து வெற்றிபெற்ற பல கலைஞர்கள் பேட்டி கொடுத்திருக்கிறார்கள்... நானும் படித்திருக்கிறேன்.
படத்திற்கு ஹீரோ வேண்டும், ஹீரோயின் வேண்டும், வில்லன் வேண்டும், வேறு கேரக்டர்களுக்கு புதுமுகங்கள் வேண்டும் என்று தயாரிப்பாளர்களும் டைரக்டர்களும் தேடிக் கண்டுபிடிப்பார்கள். விளம்பரங்கள் கொடுத்து வரவைத்து தேர்ந்தெடுப்பார்கள்.
ஆனால் டெக்னீஷியன்கள், எழுத்தாளர்களுக்கெல்லாம் அந்தக் கொடுப்பினை இல்லை. நாவல் எழுதிய எழுத்தாளர்களுக்குக்கூட வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. ஆனால் எழுதத் தெரியும் என்று நிரூபிக்காத எழுத்தாளனுக்கு...
(11) "இருவர்'கள்!
ஆண்டவன் என்னை சென்னைக்கு அழைக்க வில்லை. முதலில் புகழேந்தியைத்தான் அழைத்தான்.
ஆம்...! எனக்கு முன்பே அவர் சென்னை சென்றுவிட்டார். மத்திய அரசு வேலை... எழும்பூரில் உள்ள தபால்-தந்தி அலுவலகத்தில்.
"எப்படியாவது உங்களை சென்னைக்கு அழைக்கிறேன்'' என்று சொல்லிவிட்டுப் போனார்.
சினிமா ஆசையில் சென்னைக்குப் போகிறவர்கள் எதாவது ஒரு அறை எடுத்து தங்குகிறார்கள். நண்பர்கள் இருந்தால், உறவினர்கள் இருந்தால் அவர்களுடன் தங்குகிறார்கள். கம்பெனி, கம்பெனியாக ஏறி இறங்கி வாய்ப்புக் கேட்கிறார்கள். டைரக்டர்களின் வீட்டு வாசலில் போய் தவம் கிடக்கிறார்கள். ஏதாவது ஹோட்டலிலோ, மளிகைக் கடையிலோ, பெட்ரோல் பங்க்கிலோ, வேறு எங்கோ வேலை தேடிக்கொண்டு, லீவு நாட்களில் அலைகிறார்கள். "ப்ளாட்பாரங்களில், கோவில் வாசல்களில் கூட படுத்துக்கிடக்கிறோம், பட்டினி கிடந்திருக்கிறோம். இரவு நேரங்களில் போலீஸ்காரர்களின் டார்ச்சரை அனுபவித்திருக்கிறோம்''
-இப்படி சினிமாவில் நுழைந்து வெற்றிபெற்ற பல கலைஞர்கள் பேட்டி கொடுத்திருக்கிறார்கள்... நானும் படித்திருக்கிறேன்.
படத்திற்கு ஹீரோ வேண்டும், ஹீரோயின் வேண்டும், வில்லன் வேண்டும், வேறு கேரக்டர்களுக்கு புதுமுகங்கள் வேண்டும் என்று தயாரிப்பாளர்களும் டைரக்டர்களும் தேடிக் கண்டுபிடிப்பார்கள். விளம்பரங்கள் கொடுத்து வரவைத்து தேர்ந்தெடுப்பார்கள்.
ஆனால் டெக்னீஷியன்கள், எழுத்தாளர்களுக்கெல்லாம் அந்தக் கொடுப்பினை இல்லை. நாவல் எழுதிய எழுத்தாளர்களுக்குக்கூட வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. ஆனால் எழுதத் தெரியும் என்று நிரூபிக்காத எழுத்தாளனுக்கு... அலைந்து வாய்ப்புத் தேடவேண்டும். இல்லையென்றால்... எதாவது ஒரு இயக்குநரிடமோ, எழுத்தாளரிடமோ போய் உதவியாளராக சேரவேண்டும். தயாரிப்பாளருக்கு வேண்டியவ னாக இருக்கவேண்டும். இல்லை... சொந்தமாக பணம் போட்டு படம் எடுக்கவேண்டும். ஆனால் முயற்சி செய்யாமல் எதுவும் கிடைக்காது என்று தெரிந்தும் நான் எந்த முயற்சியும் செய்யவில்லை.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஹீரோக்கள்தான் கொடிகட்டிப் பறந்தார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும், இரண்டிரண்டு பேர்களாக ரசிகர்கள் தங்களைப் பிரித்துக்கொண்டார்கள்.
பி.யு.சின்னப்பா -எம்.கே.தியாகராஜ பாகவதர்
எம்.ஜி.ஆர். -சிவாஜி, கமல் -ரஜினி
இப்பொழுது கூட விஜய் -அஜித்... என்று அது தொடர்ந்துகொண்டிருக்கிறது.
பி.யு.சின்னப்பா -எம்.கே.தியாகராஜ பாகவதர் காலத்தில் நடந்த சம்பவங்கள், அவர்களின் ரசிகர்கள் எப்படியிருந்தார்கள் என்பதையெல்லாம் படித்துத் தெரிந்துகொண்டேன். பலபேர் சொல்லித் தெரிந்துகொண்டேன்.
எம்.ஜி.ஆர். -சிவாஜி கொடி கட்டிப் பறந்த காலத்தில் நானே அவர்களின் ரசிகனாக இருந்தேன். அதனால் அப்பொ ழுது நடந்தவையெல்லாம் எனக்கே நன்றாகத் தெரியும். இருவரும் அரசியலில் வேறு இருந்தார்கள். ரசிகர்களின் மோதலுக்கு கேட்கவா வேண்டும்...!
எம்.ஜி.ஆர்., தி.மு.க.
சிவாஜி... காங்கிரஸ்.
எம்.ஜி.ஆர். சண்டைக் காட்சிகளில் அசத்தினார். சிவாஜி நடிப்பில் அசத்தினார். எம்.ஜி.ஆர். வில்லனுடனோ, வில்லனின் அடியாட்களுடனோ மோதப்போகிறார் என்றாலே தியேட்டரில் விசில் பறக்கும். சிரித்துக் கொண்டே சண்டைபோடும் அவர் ஸ்டைலே தனியாக இருக்கும். வாள் சண்டையாக இருந்தாலும், சிலம்பாட்டச் சண்டையாக இருந் தாலும் வில்லன்கள்மேல் கூட கண்கள் போகாது. ரசிகர்களின் கண்கள் எம்.ஜி.ஆர். மீதுதான் இருக்கும். அவ்வளவு அழகு. அதிலும் எதிரிகள் தாக்குதலில் அவருக்கு காயம் ஏற்பட்டு, அதை அவர் பார்த்துவிட்டு கையால் துடைத்து விட்டு எதிரி களைப் பார்க்கும்போது தியேட்டரில் ஒரு உற்சாகமும், வேகமும் பிறக்கும். அதற்குப் பிறகு வில்லன்களைப் பந்தாடும் போது ரசிகர்களிடையே ஒரு வேகமும், துள்ளலும், மகிழ்ச்சியும் ஏற்படுவதைப் பார்த்து ரசிப்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும்.
எம்.ஜி.ஆர். அப்படியென்றால், சிவாஜி வேறு மாதிரி. அவரது ரசிகர்களும் வேறு மாதிரி.
சிவாஜி "நடிப்புச் சக்கரவர்த்தி', "நடிகர் திலகம்', "சிம்மக் குரலோன்' என்றெல்லாம் கொண்டாடப்பட்டார். சிவாஜி நடந்தால் கைதட்டல், நின்று திரும்பிப் பார்த்தால் கைதட்டல், சிரித்தால் கைதட்டல், அழுதால் கைதட்டல்... ஒவ்வொரு அசைவுக்கும் கைதட்டல்... அரங்கம் அதிரும்.
உண்மையில் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் அண்ணன்-தம்பி போல பழகிக்கொண்டிருப்பார்கள். இருவரின் ரசிகர்கள் மட்டும் மோதிக்கொண்டேயிருப்பார்கள். அதிலும் இருவர் படங்களும் ஒரேநாளில் ரிலீஸ் ஆனால் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும். எம்.ஜி.ஆர். படங்கள் ரிலீசாகும் தியேட்டர்களும், சிவாஜி படங்கள் ரிலீசாகும் தியேட்டர்களும் அல்லோலகல்லோலப்படும். அலங்காரங்களும், ஆர்ப்பாட்டமும் என்று தெறிக்கவிடுவார்கள்.
இருவர் படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகி, அதில் ஒருவர் படம் வெற்றி பெற்றுவிட்டால், வெற்றிபெற்ற ரசிகர்களின் கொண்டாட்டமும், தோல்வியடைந்த ரசிகர்களின் ஆத்திர மும் எப்படியிருக்கும் என்பதை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன்.
எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கென்று "திரை உலகம்' பத்திரிகை எம்.ஜி.ஆர். புகழ் பாடும்.
சிவாஜி ரசிகர்களுக்கென்று "மதி ஒளி' பத்திரிகை சிவாஜி புகழ் பாடும்.
ரசிகர்கள் அதைக் கையில் வைத்துக்கொண்டு அலைவார்கள். இருவருக்குமே ஆயிரக்கணக்கான மன்றங்கள். பின்புலத்தில் ஆளுக் கொரு அரசியல் கட்சி வேறு... மோதலுக்குக் கேட்கவா வேண்டும்?
அவர்களுக்குப் பிறகு...
ரஜினி -கமல்
ரஜினி ஸ்டைலில் மன்னன்.
கமல் நடிப்பில் மன்னன்.
இப்படித்தான் இருவரின் ரசிகர்களும் பிரித்துக்கொண்டார்கள்.
கமல் சினிமாவுக்கு முதலில் வந்தார், ரஜினி பின்னால் வந்தார். பின்னால் வந்த ரஜினி கமலை முந் திச் சென்று "சூப்பர் ஸ்டார்' ஆனார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி அளவுக்கு இல்லாவிட்டாலும் ரஜினி, கமல் ரசிகர்களுக்கு இடையேயும் ஒரு போட்டி இருக்கும். அதற்குக் காரணம். அவர்களுக்குப் பின்னால் எந்த அரசியல் கட்சியும் இல்லை, அவர்களும் அரசியலில் இல்லை.
எங்கு அரசியல் வருகிறதோ, அங்கு எல்லாமே வந்துவிடும். இன்றுவரை நாம் அதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நிஜத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி அண்ணன்-தம்பி என்று பழகியதைப் போல, ரஜினியும் கமலும் நண்பர்களாகவே இருந்தார்கள். ஆரம்ப காலத்தில் இருவரும் சேர்ந்து சில படங்கள் நடித்தார்கள். ரசிகர்களுக்கிடையே மோதல் வரும் என்பதால் சேர்ந்து நடிக்கவேண்டாம் என்று முடிவெடுத்தார்கள்.
பொதுவாக சினிமா ரசிகர்கள் எப்படியோ...?
தமிழ் ரசிகர்கள் சினிமாவை வாழ்க்கையாகப் பார்த்தார்கள். ஹீரோக்களை தலைவர்களாகப் பார்த்தார்கள். ஏன்... தெய்வங்களாகக்கூட பார்த்தார்கள். படங்கள் ரிலீஸாகும்போது ஹீரோக்களின் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தார்கள். தியேட்டருக்குள், திரைக்கு முன் தீபாராதனை காட்டினார்கள். குடும்பங்களைக் கவனிப்பதை விட்டுவிட்டு, ஹீரோக்களைக் கொண்டாடுவார்கள். வீட்டில் சாப்பாட்டுக்கு அரிசி இருக்காது. தனது மானசீக ஹீரோவுக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்து கொடி கட்டுவார்கள், தோரணம் கட்டுவார்கள். கட்அவுட் பேனர் வைப்பார்கள். மொக்கப் படமா இருந்தாக்கூட மூணுதடவை பாப்பாங்க. திரையிலே ஹீரோ, வில்லனை அடிச்சா இவங்களே அடிச்ச மாதிரி துள்ளிக் குதிப்பாங்க.
"வெறித்தனம்... வெறித்தனம்...', "தெறிக்க விடலாமா' என்று இப்பொழுது ரசிகர்கள் இருப்பதுபோல ரஜினிக்கும் கமலுக்கும் இருந்தார்கள். எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு இருந்ததைப் போலவே இவர்கள் இருவருக்கும் ரசிகர் மன்றங்கள் இருந்தன.
இப்படி இருவரும் கொடிகட்டிப் பறந்து உச்சத்தில் இருந்த காலத்தில்... விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமை யாளர்களும் ரஜினி படம், கமல் படம் என்று தேடிக்கொண் டிருந்த காலத்தில், இருவர் படங்களும் ரிலீசாகும்போது, ரசிகர்கள் அலைமோதிக்கொண்டிருந்த காலத்தில்...
மதுரையிலிருந்து வந்த ஒரு தென்றல் புயலாக மாறியது.
எப்படி?
சாதாரண மனிதனாக சினிமாவிற்குள் வந்து சாதிக்க ஆரம்பித்தது எப்படி...?
"கருப்பா இருக்கே, நீயெல்லாம் நடிகனாகணும்கிற ஆசையிலே வந்திருக்க' என்று கிண்டலும் கேலியும் செய்யப் பட்டவர் "கருப்பு எம்.ஜி.ஆர்.' என்று அழைக்கப்பட்டது எப்படி?
விஜயகாந்த் கேப்டன் ஆனது எப்படி?
அரசியல் கட்சி தொடங்கியது எப்படி?
அதற்கு நானும் ஒரு காரணமானது எப்படி...?
(வளரும்...)
படம் உதவி: ஞானம்