பீகாரில் நடந்துமுடிந்த தேர்தலில் பல்வேறு தடுமாற்றங் களுக்குப் பின் ஜே.டி.(யூ) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான மகாபந்தன் கூட்டணியின் பிரதான கட்சியான ஆர்.ஜே.டி., மத்திய அரசும் தேர்தல் ஆணையமும், ஜனநாயக தேர்தல் நடைமுறையின் முதுகில் குத்திவிட்டதாக குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறது. என்னதான் நடந்தது தேர்தலில்?

biharelection

தேர்தல் அறிவிப்பும் கூட்டணியும்

தேர்தல் ஆணையம் செப்டம்பர் 25-ஆம் தேதி பீகாரில் மூன்று கட்ட தேர்தலுக்கான தேதியை அறிவித்தது. தேர்தலை எதிர்பார்த்து ஏற்கெனவே கூட்டணிகளும் தொகுதிப் பங்கீடுகளும் இருதரப்பிலும் பேசப்பட்டுக்கொண்டிருந்தன. ஆர்.ஜே.டி. அணியில் காங்கிரஸ் இருப்பது உறுதியான நிலையில் இடதுசாரிகளும் இணைத்துக்கொள்ளப்பட்டனர். இந்நிலையில் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, பா.ஜ.க. போட்டியிடாத 143 தொகுதிகளில் போட்டியிடுமென அறிவித்தது. அசாதுதீன் உவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கூட்டணியுடன் களமிறங்கியது. மாயாவதியின் பகுஜன் சமாஜ். கட்சியும் நானும் தேர்தலில் இருக்கிறேன் என தலைகாட்டியது. பீகாரில் முஸ்லிம்கள் வாக்குகள் அதிகமுள்ள சீமாஞ்சல் பகுதிகளிலுள்ள தொகுதிகளில் களமிறங்க உவைசி கட்சி முடிவெடுத்தது. இதனால் இருமுனைப் போட்டி நான்குமுனைப் போட்டியானது.

Advertisment

சூடுபிடித்த பிரச்சாரம்

ஆளுங்கட்சியான ஒருங்கிணைந்த ஜனதா தளம், பா.ஜ. கூட்டணியுடன் பத்தாண்டுகள் பீகாரை ஆட்சிசெய்திருந்ததால் கிளம்பிய அதிருப்தி மேகங்கள் படிந்திருந்தது. ஊழல் குற்றச்சாட்டு கள் கிளம்பியிருந்தன. கொரோனா நெருக்கடி, வெள்ளத்தால் பாதிப்பு கொரோனாவின்போது நடந்தே ஊர்திரும்பிய லட்சக்கணக்கான பீகார்வாசிகளுக்கு உதவாத மத்திய- மாநில அரசுகள் மீதான பீகாரி களின் அதிருப்தி என நிதிஷ்குமா ரின் கால்சறுக்குவதற்கு ஏராள மான இடங்கள் இருந்தன. தேர்த லுக்கு தேர்தல் வளர்ந்துகொண்டி ருந்த பா.ஜ.க., ஜே.டி.யூ.வின் கழுத்தை இறுக்காத குறையாக கூடுதல் தொகுதிகளைக் கேட்டது. எனவே தனக்கு ஒரேயொரு தொகுதி கூடுதலாக எடுத்துக்கொண்டு, பா.ஜ.க.வுக்கு 121 தொகுதிகளைக் கொடுத்தது.

biharelection

Advertisment

ஆர்.ஜே.டி.யிலும் பிரச்சனைக்குப் பஞ்ச மில்லை. மதியூகியென அறியப்பட்ட லாலு சிறையில். கட்சியை நிர்வகிக்கும் தேஜஸ்வி யாதவிடம் தேசியக் கட்சி என்னும் மிடுக்கில் காங்கிரஸ் அடம்பிடித்து 70 இடங்களைப் பெற்றுக்கொண்டது. கம்யூனிஸ்ட்.எம்.எல். கட்சிக்கு 19 இடங்களும், சி.பி.ஐ.க்கு ஆறு இடங்களும், சிபிஐ.எம்-க்கு நான்கு இடங்களும் ஒதுக்கப் பட்டன. தனக்குக் கிடைத்த இடங்களில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, விகாஸிஸ் இன்சான் கட்சிக்கும் இடம் ஒதுக்கியது ஆர்.ஜே.டி.

எதிர்க்கட்சி என்பதால் பிரச்சாரத்தில் அடித்து ஆட ஆர்.ஜே.டி.க்கு இடமிருந்தது. மத்திய- மாநில அரசுகளின் தோல்வி களை தோரணம் கட்டித் தொங்க விட்டது. பா.ஜ.க. பார்த்தது, இன்னும் கண்டுபிடித்தே முடிக்காத கொரோ னா தடுப்பூசியை, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசமாகப் போடுவோம் என அறிவித்தது. ஜனநாயகக் கூட்ட ணியின் நிதிஷ்குமாரோ, இதுதான் எனது கடைசித் தேர்தல் என வாக் காளர்களை சென்டிமெண்ட் டால் அடித்தார்.

தேர்தல் முடிவு

கருத்துக் கணிப்பு- வாக்கு கணிப்பு ஆகி யவை மகாபந்தன் கூட்டணிக்கு சாதகமாக இருந்தன. நவம்பர் 10-ஆம் தேதி காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் சுற்று எண் ணிக்கையில் ஆர்.ஜே.டி. முன்னிலை வகித்தது. அடுத்தடுத்த சுற்றுகளில் பா.ஜ.க. முன்னிலைக்கு வந்தது. இரண்டு கட்சிகளும் அரசமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு நெருக்கமாக ஊசலாடிக்கொண்டி ருந்தன. கிட்டத்தட்ட எழுபதுக்கு நெருக்கமான தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 1000 முதல் 500-க்கு உள்ளேயே இருந்தது.

அதேசமயம் வாக்கு எண் ணிக்கை வேண்டுமென்றே தாமதப் படுத்தப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. வாக்குச்சீட்டு முறை கைவிடப்பட்டு ஈ.வி.எம். முறைக்குப் பின்னர் முடிவுகள் அறிவிப்பது எளிதாகவும் விரைவாகவும் ஆகியிருக்கிறது. இருந்தும், பீகாரில் தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்க தாமதமானது ஏன் என்ற கேள்வி எழுந்தது.

யாருக்குமே பெரும்பான்மை பெறாத நிலையில், குறிப்பிட்ட தொகுதிகளின் முடிவுகள் மட்டுமே வெளியாகியிருந்த நிலையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியமைப்பதாக நவம்பர் 10-ஆம் தேதியே பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட் டன. ஆனால் கிட்டத்தட்ட ஐம்பது சதவிகித வாக்குகள் கணக்கிடப்படாத நிலையில், இத்தகைய ஊகச் செய்திகளுக்கு அர்த்தமில்லையென்பது மாலையே நிரூபணமானது. மாலையில் மீண்டும் இரு கூட்டணிகளும் ஓரிரு சீட்டுகள் வித்தியாசத்தில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஊசலாடத் தொடங்கின.

ஆட்டத்தைக் கெடுத்தவர்கள்

நான்குமுனைப் போட்டிக்குக் காரணமான அசாதுதீன் உவைசியும், சிராக் பாஸ்வானும் பீகார் தேர்தலில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததை தேர்தல் முடிவுகள் காட்டின. முஸ்லிம்கள் பெரும்பான்மையுள்ள 20 தொகுதி களில் போட்டியிட்ட அசாதுதீனின் கட்சி ஐந்து இடங்களை வென்றிருக்கிறது. மிச்சமுள்ள இடங்களில், காங்கிரஸ்-ஆர்.ஜே.டி. கூட்டணியின் வாக்குகளைப் பிரித்து, பா.ஜ.க கூட்டணி வெல்லக் காரணமாயிருக்கிறது என காங்கிரஸ் குற்றம்சாட்டியது. உத்தரப்பிரதேச தேர்தலிலும் இதே காட்சி அரங்கேறியதையும் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரத்தில், தேசியக் கட்சி என்ற பெருமிதத்துடன் 70 இடங்களைப் போராடிப் பெற்ற காங்கிரஸ், தேர்தல் வெற்றிக்காக அத்தனை மும்முரத்துடன் போராடவில்லையென்பது தேர்தல்முடிவுகளில் வெளிப்பட்டுள்ளது. 19 தொகுதிகளை ஜெயித்து 51 இடங்களைத் தொலைத்துள்ளது காங்கிரஸ்.

biharelection

மிளிரும் சிவப்பு

மாறாக பீகார் தேர்தல் களத்தில் மூன்று கம்யூனிஸ்ட் கட்சிகளும் சிறப்பாக செயல்பட்டிருக் கின்றன. தேர்தல் களத்தில் அதிக நம்பிக்கை வைக்காத மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சி பீகாரில் தொடர்ந்து தேர்தல் களத்தை சந்திக் கிறது. அதன் தலைவரான தீபங்க் பட்டாச்சார்யா, நாங்கள் உழைக்கும் வர்க்கம், விவசாயிகள் ஆகியோருக்காகப் போராடிய எங்கள் மாணவத் தலைவர்கள் மேல் நம்பிக்கை வைத்தோம். அது பொய்க்கவில்லை என்றிருக்கிறார். மகாபந்தன் கூட்டணியில் இடம்பெற்ற இடதுசாரிகளுக்கு ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகளின் ஆதரவு இருந்தது. எம்.எல். கட்சி 12 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதேபோல சி.பி.ஐ, சிபி.ஐ.எம் . கட்சிகளும் தலா இரு இடங்களில் வென்றுள்ளது,. கம்யூனிச ஆதரவாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

நிதிஷை டம்மியாக்கிய பா.ஜ. வியூகம்

மாறாக, சிராக் பாஸ்வனின் லோக் ஜனசக்தி கட்சி பா.ஜ.க. போட்டியிடாத தொகுதிகளாகப் பார்த்துப் போட்டியிட்டது. இதன்மூலம் நிதிஷ்குமாரின் ஜே.டி.யூ. கட்சிக்கு திட்டமிட்டு இடையூறு செய்ததுடன் அதன் வெற்றி எண்ணிக்கை உயர்ந்துவிடாமல் பார்த்துக்கொண்டது. ஜே.டி.யூ. 43 இடங்களை மட்டுமே வெல்ல, அதன் கூட்டணியில் இருந்த பா.ஜ.க.வோ 74 இடங்களை வென்றிருக்கிறது. நிதிஷ் ஆட்சியமைத்தாலும்கூட, இம்முறை ஆட்சியின் லகான் பா.ஜ.க.விடம்தான் இருக்கும். சிராஜ், துணைமுதல்வர் பதவிகேட்டு வெளியே சென்றதேகூட, பா.ஜ.க.வின் வழிகாட்டுதலில்தான் என்றும், அவருக்கு இடப்பட்ட பணியைச் செம்மையாய் செய்துமுடித்துவிட்டார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

biharelection

ஏமாற்றத்தில் ஆர்.ஜே.டி.

பீகாரில் தனிப்பட்ட முறையில் அதிக இடங்களை வென்றது 75 இடங்களை வென்ற ஆர்.ஜே.டிதான். ஆனால் காங்கிரஸ் கோட்டை விட்ட 50 இடங்கள் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. நிதிஷ்குமாரும், துணைமுதல்வர் சுஷில்குமாரும் மாவட்ட மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு அழுத்தம்தந்து, வெற்றி வித்தியாசம் குறைவாக இருந்த தொகுதிகளில் ஆளும்கட்சி கூட்டணியிலிருந்த கட்சிகள் வெற்றிபெற்றதாக அறிவிக்கவைத்திருப்ப தாக குற்றம்சாட்டியுள்ளார். நிதீஷ், தேஜஸ்வி இரண்டு கட்சிகளுக்குமான ஸ்லீப்பர் செல்களை வலுவாக களமிறக்கி வென்றிருக்கிறது பா.ஜ.க.

நவம்பர் 10 ஆம் தேதி இரவு 12 மணியளவில் 119 தொகுதிகள் நாங்களும் எங்கள் கூட்டணிக் கட்சியினரும் வென்றதாக, தேர்தல் ஆணைய வலைத்தளத்திலே அறிவிக்கப்பட்டிருந்தது. ரிட்டர்னிங் ஆபிசர்களும் இந்த வேட்பாளர்கள் வென்றதாக வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். ஆனால் பின்பு தோற்றதாகக் கூறி சான்றிதழ் தர மறுத்துவிட்டனர். இப்படி எங்களிடமிருந்து கொள்ளையடித்த 10 தொகுதிகளின் வெற்றி களாலேயே அவர்கள் வெற்றிபெற்றதாக ஜம்பமடித்துக்கொள்கின்றனர் என கொந்தளிக் கிறார் யாதவ்.

2021-ல் தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல் இருக்கும் நிலையில், பீகாரைப் போல தமிழகத்திலும் பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல்கள் வேகமெடுக்கலாம் என்ற அச்சம் அ.தி.மு.க-தி.மு.க. இரு கட்சிகளையும் மிரள வைத்துள்ளது. இப்போதே அ.தி.மு.க. கூட்டணியில் அதிக சீட் கேட்போம் என்கிறது பா.ஜ.க. அத்துடன், தி.மு.க கூட் டணியில் உள்ள சில கட்சிகள் சீட் போதாமல் வெளியேறும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் பீகார் போன்ற பதற்றத்தில் இருக்கிறது தமிழ்நாடு.

-க.சுப்பிரமணியன்