"ஹலோ தலைவரே, அரசியல் வானில் கூட்டணிக்கான மேகங்கள் வலுக்க ஆரம்பிச் சிருக்கு.''”

"ஆமாம்பா, தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணியை வலுப் படுத்துவதற்கான மூவ்கள் ஆரம்பிச்சிருக்கே?''”

rr

"உண்மைதாங்க தலைவரே, தமிழகத்தில் தி.மு.க.வுக்கு மாற்றாக ஒரு மெஹா கூட்டணியை உருவாக்க பா.ஜ.க. ஆசைப்படுது. லண்டன் சென்றிருக்கும் தங்கள் மாநில நிர்வாகி தமிழகம் திரும்பியதும், அவர் மூலம் கூட்டணியை பலப்படுத்த டெல்லி முடிவெடுத்திருக்குதாம். இதன் மூலம் களத்தில் டஃப் ஃபைட் கொடுக்கவும் அது திட்டமிடுது. குறிப்பாக பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. இடம்பெறுவதும் உறுதியாகியிருக்கிறது என் கிறார்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆர்வத்தால், இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இணக்கமான வகையிலேயே செல்கிறதாம். அதேபோல் சீமானின் நாம் தமிழர் கட்சியும் டாக்டர் ராமதாஸின் பா.ம.க.வும் இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்க இருக்கின்றனவாம். அண்மையில் ரஜினியை சந்தித்தபோது, பா.ஜ.க. அணியில் இடம்பெறும் தனது விருப்பத்தை அழுத்தமாக வெளிப்படுத்தி இருந்தார் சீமான். அதேபோல் பா.ஜ.க. கூட்டணி உறுதியானதால்தான் தி.மு.க.வுடன் பா.ம.க. தீவிர மோதல் போக்கைக் கையில் எடுத்து பரபரப்பை ஏற்படுத்துவதாக அவர்கள் தரப்பிலேயே பேச்சு எழுந்திருக்கிறது. எனவே அரசியல் களம் இப்போதே 2026-க்கான தேர்தல் பரபரப்பில் மூழ்க ஆரம்பித்திருக் கிறது.''”

"இந்த பரபரப்பான நேரத்தில் தங்கள் பொதுக்குழுவைக் கூட்டியிருக்கிறாரே எடப்பாடி?''

ff

"அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழுவை டிசம்பர் 15ஆம் தேதி கூட்டி யிருக்கிறார் எடப்பாடி. இதற்கான அழைப்பிதழ் கள் உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளன. தேர்தல் ஆணைய விதிகளின்படி அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு இரண்டு முறை, பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்டி, அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ஆணை யத்திற்கு அனுப்பவேண்டும். அதன்படி, இந்த கூட்டம் நடத்தப்பட்டாலும், சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களே இருப்பதால், அது குறித்தும் விவாதிக்க இருக்கிறார்கள். அ.தி.மு.க. தலைமையில் வலிமையான கூட்டணி இந்தமுறை உருவாகும் என எடப்பாடி சொன்னாலும், அவர்களை நம்பி எந்தக் கட்சியும் வருகிற அறிகுறி தெரியாததால், அதுகுறித்தும் ஆலோசிக்க இருக்கிறார்களாம். அதேபோல், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓ.பி.எஸ். உள்ளிட்டவர்களை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைக்கவேண்டும் என்று நினைக்கிற சீனியர் தலை வர்கள், இது குறித்தும் இந் தக் கூட்டத்தில் வலியுறுத்த தயாராகிவரு கிறார்களாம். எனவே இந்தக் கூட்டத்தில் காரசாரத்திற்குப் பஞ்சமிருக்காது என்கிறார்கள்.''”

"பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கரன்ஸியுடன் அழைப்பு போயிருப்பதாக சொல்கிறார்களேப்பா?''”

"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க.வை கரன்ஸி பலத்தின் மூலம் கைப்பற்ற சசிகலா தரப்பு திட்டம் போட்டிருந்தது ஏற்கனவே அறிந்த கதைதான். அதேபோல் உட்கட்சியில் இருக்கும் தனது எதிரிகளும் கரன்ஸியில் தாராளம் காட்டி வருவதை அறிந்து எரிச்ச லடைந்திருக்கிறார் எடப்பாடி. அதனால், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரையும் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொள்ள அவர் சகல அஸ்திரங்களையும் கையிலெடுக்க முடிவு செய்திருக்கிறாராம். முதற்கட்டமாக, கட்சியின் பொதுக்குழுவில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு மா.செ.க்கள் மூலம் தலா ஒரு லட்ச ரூபாய் வீதம் விநியோகித்திருக்கிறார் எடப்பாடி. இது அவர்கள் தரப்பை வெகுவாக உற்சாகப்படுத்தி இருக்கிறது. அதனால், எடப்பாடி கட்சியை சீட்டுக் கம்பெனியைப் போல் நடத்திவருகிறார் என்று விமர்சிக்கிறார் கள், அங்கிருக்கும் சீனியர்கள். இதற்கிடையே, கட்சியின் கள ஆய்வுக் கூட்டங்களில் நிர்வாகிகளுக்கும் நடுநிலையாக உள்ள தொண்டர்களுக்கும் இடையிலேயே மோதல்கள் ஏற்படுவதால், இனி தொண்டர்களை அழைக்காமல், இத்தகைய கூட்டங்களை நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யவேண்டும் என்று அவர் அறிவுறுத்தியிருக்கிறாராம்.''”

"நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடக்கும்போது, பிரதமர் மோடி அவைக்கு வருவதில்லை என்கிற குற்றச்சாட்டு வலுத்திருப்பதை நாம் கவனிக்கணும்.''”

"ஆமாங்க தலைவரே, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட் டுள்ள வழக்கு குறித்துப் பேசுவதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சிக்கும் போதெல்லாம், அவர்களுக்கு அனுமதி கொடுக் கப்படுவதில்லை. இது எதிர்க்கட்சிகளை எரிச்சலடைய வைத்திருப்பதால் அமளிதுமளி நடப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து நாடாளுமன்ற முகப்பில் பத்திரிகையாளர்களிடம் பேசிய தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, நாடாளுமன்றத்துக்கு பிரதமர் வருகிறார். நேராக தனது அலுவலக அறைக்கு வந்துவிட்டு அப்படியே சென்றுவிடுகிறார். பிரதமர் பொறுப்பில் இருக்கும் அவர், முக்கிமான நேரத்தில் கூட அவைக்கு வருவதில்லை. எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளைத் தட்டிக் கழிக்கவே அவர் விரும்புகிறார். மணிப்பூர் கலவரம், அதானி மீதான குற்றச்சாட்டு, உ.பி.யில் நடந்து வரும் மோதல்கள் என நாங்கள் எந்த ஒரு பிரச்சனையை எழுப்பினாலும் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதிப்பதில்லை. அதானிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லவேண்டிய கடமை பிரதமருக்கு இருக்கிறது”என்று குற்றச்சாட்டை அழுத்தமாகவே வைத்திருக்கிறார்.''”

"மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை கனிமொழி எம்.பி. சந்தித்திருக்கிறாரே?''”

rr

Advertisment

"அண்மையில் லட்சத்தீவு அருகே தூத்துக்குடி தருவைக்குளம் பகுதி மீனவர்கள் 10 பேர் மீன் பிடித்தபோது. அவர்களையும் அவர்களது படகுகளையும் இந்திய கடலோர காவல்படையினர் மடக்கினர். தனது தொகுதியைச் சேர்ந்த இந்த மீனவர்கள் கைது செய்யப் பட்டதை அறிந்ததும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் அப்பாயின்ட்மெண்ட்டைப் பெற்று உடனடியாக அவரை சந்தித்தார் கனிமொழி. அப்போது, கைது செய்யப்பட்ட 10 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்கச் செய்வதோடு, அவர்களின் படகுகளையும் மீட்டுத் தரவேண்டும் என்ற கோரிக்கையை ராஜ்நாத்சிங்கிடம் வைத்திருக்கிறார். மேலும், குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே மீன் பிடித்துக் கொண் டிருந்த தூத்துக்குடி மாவட் டம் அயன் பொம்மையாபுரம் அண்ணாதுரை, கடலில் தவறி விழுந்துவிட்டார். அவரை கண்டுபிடித்துத் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதை எல்லாம் கவனமாகக் கேட்டுக்கொண்ட ராஜ்நாத் சிங், உடனடியாக ஆக்சன் எடுப்பதாக உறுதி தந்ததோடு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக் கும் இது தொடர்பான உத்த ரவுகளைப் பிறப்பித்திருக் கிறார்.''”

"தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் பற்றிய கோரிக்கைக் குரலும் எழுந்திருக்கேப்பா?''”

"மொத்தமாக தென்னக ரயில்வேயில் 6 கோட்டங்கள் இருக்கின்றன. இதில் சென்னை, திருச்சி, சேலம், மதுரை ஆகிய 4 கோட்டங்களும் ffதமிழ் நாட்டில் உள்ளன. மீதமுள்ள திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 2 -ம் கேரளாவில் உள்ளன. இந்த நிலையில், தென்னக ரயில்வேயில் காலியாக உள்ள பல்வேறு நிலையைச் சார்ந்த சுமார் 10,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, சென்னை, திருச்சி, சேலம் ஆகிய கோட்டங்களில் உள்ள காலிப் பணி யிடங்களை நிரப்ப, சென்னையில் உள்ள தேர்வாணையம் தேர்வு வைத்து தகுதியுள்ளவர்களை தேர்வு செய்யும். அதேசமயம், மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய கோட்டங்களின் பணியிடங்களுக்கான தேர்வை, திருவனந்த புரத்திலுள்ள தேர்வாணையம் நடத்தும். இதனால், மதுரை கோட்டத்தில் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய சுமார் 1000 காலி இடங்களில் மலையாளிகள் ஆக்ரமித்துக்கொள்ளும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்த மதுரைக் கோட்டத்தை, சென்னை ரயில்வே தேர்வாணையத்தோடு இணைக்க வேண்டும் என்று தென்னக ரயில்வேயில் உள்ள தமிழக அதிகாரிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். தமிழக எம்.பி.க்கள் பலருக்கும் இந்த கோரிக்கை நகல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் எத்தனை பேர் இதற்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப் பார்கள் என்கிற எதிர்பார்ப்பும் இப்போது ஏற்பட்டிருக்கிறது.''”

Advertisment

"தி.மு.க. அரசின் சட்டம் ஒழுங்கு பற்றி, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரமே கேள்வி எழுப்பி, பரபரப்பைப் பற்றவைக்கி றாரே?''”

"ஆமாங்க தலைவரே, காங்கிரஸ் எம்.பி.யான கார்த்தி சிதம்பரம், அக்கட்சி யின் நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் படு கொலை செய்யப்பட்டு பல மாதங்களாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றபடி, தி.மு.க. அரசின் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்விகளை எழுப்பி வருகிறார். இதற்கு ஒரு பின் னணி காரணம் இருக்கிறதாம். அதாவது, படுகொலை செய் யப்படுவதற்கு முன்பு ஜெயக் குமார் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தில், தனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் கீழ்க்கண்டவர் கள்தான் பொறுப்பு என பலரின் பெயர்களை எழுதி வைத்திருந்தார். அதில் முக் கியமான ஒன்று, காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும் எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் பெயராகும். அந்த ரூபி, இது தொடர்பாக எந்த சிக்கலும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, அண்மையில் தி.மு.க. அரசில் லீகல் பதவியில் நியமிக்கப்பட்ட ஒருவரோடு நெருக்கமாக நட்பு பாராட்டி வருகிறாராம். அவர் மூலம் சில காய் நகர்த்தல்களும் நடக்கிற தாம். இதைத் தெரிந்து கொண்டதால்தான் கார்த்தி சிதம்பரம், ஜெயக்குமார் படுகொலை விசயத்தை கிளறிவருகிறார் என்கிறார்கள் சத்தியமூர்த்தி பவன் தரப் பினர்.''”

"வன்னிய சமூக மக்களின் கவனம் தி.மு.க. பக்கம் திரும்பி யிருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, வன்னிய சமூக இட ஒதுக் கீட்டுப் போராட்டத்தில் உயிர்நீத்த 21 பேருக்கான நினைவு மண்டபத்தை விழுப் புரத்தில் தி.மு.க. அரசு அமைத் திருக்கிறது. அதாவது, 80-களில் பா.ம.க. நடத்திய அந்தப் போராட்டத்தின்போது, துப் பாக்கிச் சூட்டில் இறந்தவர் களுக்கான நினைவு மண்டபம் அது. இதை வருகிற 29ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்துவைக்கிறார். இந்த விழாவில் தி.மு.க. ஆட்சியில் வன்னியர்களுக்கு செய்திருக்கும் சாதனைகளை அவர் பட்டியலிடவிருக்கிறார். இதன்மூலம், வட தமிழகத்தில் அடர்த்தியாக இருக்கும் வன்னிய சமுதாய மக்களிடம் இருக்கும் ஒரு சில வருத்தங்களை துடைக்க முடியும் என்று நினைக்கிறாராம் ஸ்டாலின். இந்த நிகழ்ச்சிக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸையும் அழைக்க லாம் என்று தி.மு.க.விலேயே இருக்கும் வன்னிய சமூகத்தைச் சேர்ந்த சிலர் சொல்ல, அப்படி அழைப்பதை நம் மோடு இருக்கும் விடுதலை சிறுத்தை கள் விரும்பமாட்டார்கள் என்று அந்த ஆலோசனையைத் தவிர்த்துவிட்டா ராம் ஸ்டாலின். பா.ம.க.வின் இட ஒதுக்கீட்டுத் தியாகிகளுக்கு தி.மு.க. அரசு திறக்கவுள்ள இந்த நினைவு மண்டபம், வன்னிய சமூக மக்களைப் பெரிதும் கவர்ந்துவருகிறது. தற்போது புயல் சின்னம் காரணமாக இந்த நினைவு மண்டபத் திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.''”

"தமிழ்நாட்டிலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் நிம்மதியாக வசிக்கும் ஈழத்தமிழர் களை சிக்கலுக்குள்ளாக்கப் பார்ப்ப தாக அங்குள்ள ஒருசிலர் மீது புகார்கள் எழுந்துள்ளதாமே?''

"ஆமாம் தலைவரே, தமிழ் நாட்டிலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டு அரசியல் சூழலுக்கேற்ப இங்கே செயல்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கான தேவையறிந்து தமிழ்நாடு அரசும் பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்துவருகிறது. இங்கு வசிப்பவர்கள், ஈழ அரசியலையும், அங்குள்ள அரசியல் நிகழ்வு களையும் இங்கே கொண்டுவருவது கிடையாது. தற்போது இலங்கையில் நடந்துமுடிந்த தேர்தல் குறித்தும், புதிய ஆட்சி குறித்தும்கூட பெரிதும் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரை இங்கே வாழும் சூழலில், நிம்மதியான வாழ்க்கையையே மனதில் கொண்டிருக்கிறார்கள். எனவே ஈழ அரசியல் சூழலில் சிக்கிக்கொண்டு அங்குள்ள அரசியலை இங்கே பிரதிபலிக்கக்கூடாது என்பதில் தெளிவோடு இருக்கிறார்கள். ஆனால் இந்த புரிதல் இல்லாமலும், இங்குள்ள மக்களின் நிம்மதியான சூழலைக் கெடுக்கும் விதமாகவும், இங்கு வசிக்கும் ஒரு சிலரே ஈழ அரசியலை பிரதிபலிப்பதாகவும், அதன் காரணமாக, தங்களது நிம்மதிக்கு சிக்கலாகி விடுமோ என்றும் அஞ்சு கிறார்களாம்.''

"நானும் என் கவனத்துக்கு வந்த தக வலைப் பகிர்ந்துக்கறேன். வாக்காளர் சேர்ப்பு முகாமில் நடிகர் விஜய்யின் த.வெ.க. கட்சியினர் பரவ லாக தி.மு.க., அ.தி.மு.க. வுக்கு இணையாக ஆர்வம் காட்டியிருக்கிறார் களாம். சில இடங்களில் ஆளும் கட்சியான தி.மு.க.வுக்கு டஃப் கொடுக் கும் அளவிற்கு அவர்களின் தீவிரம் இருந்ததாம். குறிப்பாக சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இந்த விவகாரத்தில் தி.மு.க.வினருக்கும் த.வெ.க. கட்சியினருக்கும் இடையில் மோதலே ஏற்பட்டிருக்கிறது. அந்த அளவிற்கு, தங்கள் தரப்பை நடிகர் விஜய், வாக்காளர் சேர்ப்பில் தீவிரமாகக் களமிறக்கியிருக் கிறார் என்கிறார்கள். த.வெ.க.வுக்கு இன்னும் தமிழகத்தில் குறிப்பிடும்படியாக அமைப்பு களே ஏற்படுத்தப்படவில்லை. அதனால் நிர்வாகிகள் நியமனமும் அங்கே முறைப் படி நடக்கவில்லை. அப்படியிருந்தும் அவர்கள் காட்டிய தீவிரம், மற்ற அரசியல் கட்சிகளை ஆச்சரியப்படுத்தியிருக்கிறதாம்.''