துரையில் உலகப் பாரம்பரிய வார விழா நவம்பர் 19 முதல் 25-ஆம் தேதி வரை கொண்டாடப் பட்டது. இதையொட்டி, இந்திய தொல்லியல் துறையின் திருச்சி வட்டம் மற்றும் மதுரை தியாகராசர் கல்லூரி ஆகியவை இணைந்து 'தென்தமிழக கோயில்கள்' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்திருந்த புகைப்படக் கண்காட்சியை மதுரை தியாகராசர் கல்லூரி வளாகத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நவம்பர் 20-ஆம் தேதி தொடங்கிவைத்துப் பேசினார்.

ss

அதில், “"கோயிலில் திருடப் படும் சொத்துக்கள் யாருக்குப் போகிறது என்று தெரிய வில்லை. தமி ழகத்தின் பாரம் பரியத்தை நம் முன்னோர்கள் பாறைகளில் அருமையாக வடிவமைத் துள்ளனர். அமைச்சர் வருகிறார் என பாரம்பரிய கல்வெட்டு உள்ள இடங்களில் வெள்ளையடித்துவிடுகிறார்கள்.

வெள்ளையடிக்கப்பட்டதற்குப் பின்னா லுள்ள சரித்திரம் யாருக்கும் தெரிவதில்லை. தமிழ் இலக்கியங்களுக்கும், குடைவரைக் கோவில்களுக்கும் தொடர்புகள் உள்ளன. குடைவரைக் கோவில்களில் உள்ள எழுத்துக் களுக்கும், தமிழ் மொழி, ஆன்மிகம், இலக்கியம் ஆகியவற்றிற்கும் தொடர்பு உள்ளது. நம்முடைய ஆணி வேரே தமிழ் பாரம்பரியம்தான். அதனை நாம் பாதுகாக்க தவறிவிடுகின்றோம்''’என்று பேச, அது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலை களை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய நிதியமைச்சரின் குற்றச்சாட்டுக்குப் பதிலடி கொடுக்கும்விதமாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “"காய்த்த மரம்தான் கல்லடி படும். ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அரசின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் எந்தவித ஆதாரமும் இல்லாமல் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பதுபோல பேசியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

ss

Advertisment

இத்தனைக்கும் அவர் ஒன்றிய அரசின் நிதியமைச்சர் பொறுப்பிலுள்ளவர். வருமான வரி, அமலாக்கத்துறை, உளவுத்துறை, நிதித்துறை என்று அனைத்தையும் கையில் வைத்திருப்பவர். அனைத்து ஆதாரங்களையும் வைத்துக்கொண்டு பேசியிருக்க வேண்டும். அதைவிடுத்து போகிறபோக்கில், கட்சி மேடையில் பேசுவதுபோல் குற்றச்சாட்டை வைக்கிறார். இந்துக்களின் ஓட்டு தங்கள் பக்கம் வராது என நம்பிக்கையிழந்த காரணத்தால் தொடர்ந்து இதுபோன்ற அவதூறுகளைப் பரப்புகின்றனர்''’என்று கூறினார்.

நிர்மலா சீதாராமனின் மற்றொரு கருத்தான தொல்லியல் சின்னங்கள் சேதப்படுத்தப்படுவதாக கூறியதற்குப் பதிலளிக்கும்விதமாக சி.பி.எம். எம்.பி. சு.வெங்க டேசன், “"இந்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வை கைவிட்டு வெளியேறியது ஏன்?" என கேள்வியெழுப்பியுள்ளார்.

ss

Advertisment

"மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மதுரையில் தொல்லியல்துறை பற்றியும், தமிழ்நாட்டு வரலாறு பற்றியும் பெருமை யோடு பேசியிருக்கிறார். தமிழ்நாட்டு வரலாற்றின் புதிய திருப்பு முனை கீழடி. மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான ஒரு குறியீட்டுச் சொல். கீழடியில் எதுவுமே இல்லை, அங்கு வரலாற்றுத் தொடர்ச்சி யில்லை என்று கூறி மத்திய அரசு வெளியேவந்தது. அவர்கள் சொன்னது தவறு என்பதை நான்காம்கட்ட அகழாய்வில் தமிழக அரசு நிரூபித்துள்ளது. ஆனால் இதே ஒன்றிய அரசு கீழடி அகழாய்வை கைவிட்டு வெளியேறியது ஏன் என்பதைக் கூறமுடியுமா?

இதே கீழடி பற்றிய அமர்நாத் இராம கிருஷ்ணனின் ஆய்வறிக்கையை இன்றுவரை வெளியிடாமல் வைத்திருப்பது ஏன்? இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றை எழுதத் தீர்மானித்த குழுவில் தமிழ்நாட்டு ஆய்வாளர் ஒருவரைக்கூட இடம்பெறச்செய்யாதது ஏன்?'' என்று கேள்விகளை அடுக்கினார்.

மேலும், "இன்றும் இவர்கள் தமிழ் மீது அக்கறை இருப்பதுபோல் வாய்ச் சொல்லில் காட்டிக்கொள்வார்கள். ஆனால் அதற்கு எதிரான கொள்கையையே வைத்திருப்பார்கள். இல்லாத சரஸ்வதி நதி நாகரிகம் என்று பாராளுமன்றத்தில் கூறியவர்தானே நிர்மலா சீதாராமன். தமிழ்நாட்டிற்கு வரும்போது ஒரு வேஷம் போட்டுவிட்டு, வடக்கே போனதும் தமிழருக்கு எதிரான தங்களது வழக்கமான சனாதன இந்துத்துவாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துவிடுவார்கள். இந்த வேஷமெல்லாம் தமிழ்நாட்டில் எடுபடாது. இந்தியாவிலுள்ள வடமாநிலங் களில் பொய்களையும் அவதூறுகளையும் அவிழ்த்துவிட்டு மக்களை நம்பவைத்து பா.ஜ.க. காரியம் சாதிப்பதுபோல் தமிழ்நாட்டிலும் நூல்விட்டுப் பார்க்கிறார்கள். அது இங்கு எடுபடாது''’என்றார்.

கொளுத்திவிட்டாலும் பற்றவில்லையே?!

ss