தமிழகத்தில் வருமானவரித்துறையும், அமலாக்கத்துறையும் வரிந்து கட்டிக்கொண்டு நடத்தும் அதிரடி ரெய்டுகள் அ.தி.மு.க. கூடாரத்தை அதிரவைத்துள்ளன. குறிப்பாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள்.
எடப்பாடியின் பினாமியாகவும் அவருக்கு எல்லாமுமாக இருந்து வருபவர் அ.தி.மு.க.வின் சேலம் புறநகர் மாவட்ட செயலாளரான சேலம் இளங்கோவன். சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் சேர்மனாகவும் கடந்த எடப்பாடி தலைமையி லான ஆட்சியின்போது இருந்தவர். எடப்பாடி வேறு; இளங்கோவன் வேறு என்று அ.தி. மு.க.வினர் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு உச்சத்தில் இருப்பவர்.
இப்படிப்பட்ட நிலையில்தான், சேலம் இளங்கோவனுக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் தனது அதிரடி ரெய்டினை கடந்த 22-ந் தேதி தொடங் கியது மத்திய அரசின் வருமானவரித்துறை.
இளங்கோவனுக்கும் அவரது மகன் பிரவீன்குமாருக்கும் சொந்தமான திருச்சி மாவட்டம் முசிறியிலுள்ள எம்.ஐ.டி. வேளாண் மைக் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி, கோவையிலுள்ள இளங்கோவனின் சம்பந்தி பாலசுப்பிரமணியத்திற்கு சொந்தமான அருண் அஸ்வின் பேப்பர் மில்ஸ், ஆதித்யா அஸ்வின் பேப்பர் மில்ஸ், ப்ளு மவுண்ட் பேப்பர் மில்ஸ் ஆகிய அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் தங்களது வேட்டையை இரண்டு நாட்களாக தொடங்கி யிருக்கிறார்கள்.
இதுமட்டுமல்லாமல், புல் (இமகக) நிறுவன உரிமையாளர் பொன்னுதுரையின் அலுவலகம், லஷ்மி டூல்ஸ் மற்றும் நவ இந்தியா உரிமையாளர் கோவை வரதராஜன் அலுவலகத்திலும் வருமானவரித்துறை ரெய்டு நடந்தது.
ரெய்டு குறித்து வருமான வரித்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "எடப் பாடிக்கு நெருக்கமான வரான சேலம் இளங்கோவனும், அவரது உறவினர்களும் நடத்தும் கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களில் வரி ஏய்ப்பு நடப்பதாக தொடர்ந்து வந்த புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடந்துகொண்டிருக்கிறது.
கணக்கில் காட்டப்படாத பணப்பரி வர்த்தனைகள் நிறைய நடப்பதாகவும் தகவல்கள் கிடைத்தன. அதன்படி கிடைத்த விபரங்களை ஆராய்ந்த போது சில ஆதாரங்களும் கிடைத்தது. அதன்பிறகே ரெய்டுக்கு திட்ட மிடப்பட்டது.
வரி ஏய்ப்பு, கணக்கில் காட்டப்படாத பணப்புழக்கம் எனும் பின்னணியில் இந்த சோதனை நடந்தாலும், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான சில டாகுமெண்ட் ஆதாரங்களைக் கைப்பற்றும் பின்னணியும் இதில் இருக்கிறது என்கிறார்கள் வருமானவரித் துறையினர்.
அ.தி.மு.க. மேலிடத் தொடர்பாளர்களிடம் விசாரித்தபோது, "சேலம் இளங்கோவனுக்கு நிறைய அதிகாரங்களைக் கொடுத்து வைத்திருந்தார் எடப்பாடி. இந்த நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை சம்பவ வில்லங்கத்தில் எடப்பாடிக்கு எதிராக லூஸ் டாக் செய்திருக்கிறார் இளங்கோவன். இதனையறிந்ததும், அவரது ஆதிக்கத்தை வெகுவாகக் குறைத்தார் எடப்பாடி.
சேலம் மாவட்டத்தை கவனிக்கும் பொறுப்பிலிருந்தும் அவரை விடுவித்து விட்டு, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய நபரிடம் பொறுப்பு கொடுத்திருக்கிறார் எடப் பாடி. அதனால் சமீபகாலமாக, எடப்பாடிக்கும் இளங்கோவனுக்கும் டேர்ம் சரியில்லை.
இதனையறிந்த பா.ஜ.க.வுடனான கூட்டணியை விரும்பும் அ.தி.மு.க. சீனியர்களில் இரண்டு பேர், எடப்பாடிக்கும் இளங்கோவ னுக்குமிடையே நீறுபூத்த நெருப்பு போல கனன்றுகொண்டிருக்கும் பிரச்சனைகளை பா.ஜ.க. மேலிடத்துக்குப் போட்டுக் கொடுத் துள்ளனர். எடப்பாடிக்கு எதிரான வாக்கு மூலத்தை இளங்கோவனிடமிருந்து பெறும் முயற்சியாகவே இந்த ரெய்டுகள் நடந்துள்ளன'' என்கிறார்கள்.
இந்த நிலையில் 23-ந் தேதி, ஓ.பி.எஸ். ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடுகளில் அமலாக்கத்துறை நடத்திய ரெய்டு, எடப்பாடியை மேலும் அதிர வைத்திருக்கிறது என்கிறார்கள்.
அதாவது, 2011-2016 அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். அப்போது, ஸ்ரீராம் கட்டுமான நிறுவனத்தின் பெருங்களத்தூர் ப்ராஜெக்ட் டுக்கு சி.எம்.டி.ஏ. அப்ரூவல் வழங்கப்படாமல் 3 ஆண்டுகாலமாக நிலுவையில் இருந்த பிரச்சனையில், சுமார் 28 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு அப்ரூவல் கிடைக்கச் செய்தார் என வைத்திலிங்கத்துக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் தெரிவித்திருந்தது அறப்போர் இயக்கம்.
அந்த புகார் அமலாக்கத்துறைக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், அதன்மீது ஆக்ஷன் எடுக்காமல் பல வருடங்களாகக் கிடப்பில் வைத்திருந்தனர்.
இந்த நிலையில் தான், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மத்திய நிதியமைச்சகம் தரப்பிலிருந்து அம லாக்கத்துறைக்கு க்ரீன் சிக்னல் கொடுக்கப் பட்டதும், வைத்திய லிங்கம் வீடுகள் மற் றும் அலுவலகங்களில் தங்கள் வேட்டையை 23-ந்தேதி தொடங்கியிருக்கிறது அமலாக்கத் துறை.
தஞ்சை மாவட்டத்தில் வைத்திலிங்கத்துக்கு சொந்தமான பல இடங்களில் ரெய்டு நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னையில் உள்ள எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் அவரது அறை மற்றும் சி.எம்.டி.ஏ. தலைமையகம் ஆகியவற்றிலும் சோதனை நடத்தியுள்ளனர். ஸ்ரீராம் கட்டுமான நிறுவனம் தொடர்பாக 2013-2016 காலகட்டங்களில் நடந்துள்ள கோப்புகளின் பரிமாற்றத்தை ஆராய்ந்துள்ளனர்.
அதில் அமலாக்கத்துறைக்குத் தேவையானதும், வைத்திலிங்கத்துக்கு எதிரானதுமான பல டாகுமெண்டுகள் கிடைத்துள்ளன. இது தவிர, கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக வேறு சில வில்லங்க விபரங்களும் கிடைத்திருக்கிறதாம்.
பா.ஜ.க. ஆதரவு மனநிலையில் இருக்கும் எடப்பாடிக்கு எதிரான அ.தி.மு.க. சீனியர்கள் சிலரிடம் விசாரித்தபோது, ‘வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியை வீழ்த்த, அ.தி.மு.க.வுடன் கூட்டணியை புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறது பா.ஜ.க. அதற்கு அ.தி.மு.க. பலமாக இருக்கவேண்டும். அதற்காக, அ.தி.மு.க.விலிருந்து எடப்பாடியால் நீக்கப்பட்ட ஓ.பி.எஸ்., சசிகலா, ஓ.பி.எஸ்.ஸுக்கு உறுதுணையாக இருந்துவரும் வைத்திலிங்கம் உள்ளிட்ட பெருந்தலைகள் பலரையும் அ.தி.மு.க.வில் இணைக்கும் முயற்சியை எடுத்தது பா.ஜ.க. தலைமை. மேலும் அ.தி.மு.க. கூட்டணி யில் டி.டி.வி.தினகரனின் கட்சியை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் பா.ஜ.க.வின் முயற்சி. ஆனால் பா.ஜ.க.வுடன் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை ; அக்கட்சியுடம் இனி எப்போதும் கூட்டணியும் கிடையாது என்பதை பா.ஜ.க. தலைவர்களுக்குப் புரியும் வகையில் பலமுறை சொல்லிவிட்டார். இதனை ஜீரணிக்க முடியாத டெல்லி எஜமானர்கள், அ.தி.மு.க.வை உடைத்து எடப்பாடிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என திட்டமிட்டனர். இதன் ஒருகட்டமாக அ.தி.மு.க.வின் முக்கிய லீடர் களைக் கொண்டு எடப்பாடிக்கு குடைச்சல் கொடுக்கத் துவங்கியது.
ஆனாலும் எடப்பாடி அசரவில்லை. அதேசமயம், ஓ.பி.எஸ். ஆதரவாளர்களாக இருக்கும் பலரையும் அ.தி.மு.க.வுக்குள் கொண்டுவரும் திட்டத்தை தொடங்கினார் எடப்பாடி. அதில் முதல் விக்கெட் வைத்தி லிங்கம். வைத்தியுடன் நேரடியாகப் பேசி "அ.தி.மு.க.வுக்கு வாருங்கள்; ஓ.பி.எஸ். என்கிற ஒற்றை நபரை நம்பி உங்கள் எதிர்கால அரசியலை கேள்விக்குறியாக்கிக் கொள்ளாதீர் கள்' என தூபம் போட்டார் எடப்பாடி. அதில் வைத்திலிங்கமும் மயங்கினார்.
இதனைத் தொடர்ந்து, ஓ.பி.எஸ்.ஸுடன் இருக்கும் பலரை யும் அழைத்துக் கொண்டு தனது தலைமையில் அ.தி.மு.க.வில் இணைந்து எடப் பாடியின் தலை மையை ஏற்பது என்கிற முடிவுக்கு வந்தார் வைத்தி லிங்கம். 2026-ல் அ.தி.மு.க.தான் ஆட்சியமைக்கும். அதனால் அவருடன் இணைவதுதான் நல்லது என தனது ஆதரவாளர்களிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார் வைத்தி. ஆக, பா.ஜ.க. கூட் டணிக்கு எதிர்ப்புத் தெரிவித்துவரும் எடப்பாடி, வைத்திலிங்கம் போன்ற ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை இணைப்பதன் மூலம் பலம் பெறுவதை டெல்லி எஜமானர்கள் ரசிக்க வில்லை. அதனால்தான், வைத்திலிங்கத்திற்கு எதிரான பழைய கோப்புகள் தூசு தட்டப்பட்டு இதோ ரெய்டு நடத்தப்பட்டுள்ளது” என்று தங்களுக்கு கிடைத்த தகவல்களை பகிர்ந்துகொண்டனர் அ.தி.மு.க. சீனியர்கள்.
ஆக, கூட்டணிக் கணக்கிற்காக எடப்பாடிக்கு எதிரான வலையை இறுக்கத் தொடங்கியிருக்கிறார்கள் டெல்லி எஜமானர் கள். இதில் எடப்பாடி தப்பிப்பாரா? சிக்கிக்கொள்வாரா? என்கிற கேள்விகள்தான் அ.தி.மு.க.வில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
_________________
இறுதிச் சுற்று!
தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட "முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்-2024' நிறைவு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வியா ழக்கிழமை (24/10/24) விமர்சையாக நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் நடந்தது. இந்த விழாவிற்காக கொடுக்கப்பட்ட அரசு விளம்பரங்களில் பெரியார், அண்ணா, கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரின் படங்கள் இடம் பிடித்திருந்தன. பொதுவாக, பெரியார் மற்றும் அண்ணா பிறந்த நாளில் கொடுக்கப்படும் விளம்பரங்களில் தான் அவர்களின் படங்கள் இடம்பெறும். மற்ற விளம்பரங்களில் இடம்பெறாது. ஆனால், தற்போது, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் விழாவுக்கான விளம்பரங்களில் அவர்கள் படங்கள் இடம் பிடித்திருப்பது புது விசயமாகப் பார்க்கப்பட்டது. திராவிடத்துக்கு எதிராக சில உச்சபட்ச அதிகாரங்கள் கம்பு சுழற்றுவதால், திராவிட மாடல் அரசு என்பதை நிலை நிறுத்த பெரியார், அண்ணா படங்களுடன் விளம்பரங்கள் கொடுக்கப் பட்டது என்கிறார்கள்.
-இளையர்
___________
ரகசிய கூட்டம்! நெருக்கடியில் அ.தி.மு.க!
சென்னை கிழக்கு கடற் கரை சாலையிலுள்ள பங்களாவில் மாஜிக்களான தங்கமணி, வேலு மணி, சி.வி.சண்முகம் உள்பட 16 அ.தி.மு.க. ச.ம.உ.க்கள் மா.செ.க் கள் ரகசிய கூட்டம் போட்டுள்ள னர். இதில் 11 பேர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த ரகசிய கூட்டத்தில் "ஓ.பி. எஸ். உள்ளிட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வலியுறுத்து வோம். இல்லையென்றால் ஒரத்த நாடு வைத்திலிங்கத்தையாவது சேர்க்கச் சொல்வோம். இதற்காக வைத்திலிங்கத்தை மன்னிப்பு கடிதம் கொடுக்கச் சொல்வோம்' என்று முடிவெடுக்கப்பட்டது.
இதற்கிடையில் எடப்பாடி, ஓ.பி.எ.ஸ் இரு தரப்பிற்கும் ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்க நினைத்த பா.ஜ.க., அக்டோபர் 23 அதி காலையில் வைத்திலிங்கம் வீடு மற்றும் அவரது உறவினர்கள், வீட்டுவசதி வாரிய அமைச்சராக இருந்தபோது லஞ்சம் கொடுத்த நிறுவனம், லஞ்சப் பணத்தை முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் என பல இடங்களிலும் அமலாக்கத் துறை ரைடுக்கு சிக்னல் கொடுத் தது. அத்துடன் எடப்பாடியின் ஆதரவாளரான சேலம் இளங் கோவனின் திருச்சி கல்லூரிக்கு வருமான வரித்துறை ரெய்டு விட்டது எடப்பாடியை அதிர வைத்திருக்கிறது.
விசாரணைக்கு 11 அமலாக் கத்துறை அதிகாரிகள் தெலுங்கன் குடிக்காடு கிராமத்திலுள்ள வைத்திலிங்கத்தின் வீடு, தஞ்சா வூரிலுள்ள பிரபு வீடு, பேய்கரும் பிரான்கோட்டை கிராமத்திலுள்ள வைத்திலிங்கம் சம்பந்தி பன்னீர் செல்வம் வீடு ஆகிய இடங்களில் புதன்கிழமை காலை முதல் சோதனையைத் தொடங்கினர்.
தெலுங்கன்குடிகாடு வீட்டில் வைத்திலிங்கம் இருந்தார். அதிகாரிகள் உள்ளே நுழைந்ததும் அனைத்து வெளித்தொடர்பு களையும் துண்டித்து ஒரு அறையில் வைத்திலிங்கத்தை அமரவைத்திருந்தனர். வைத்தி லிங்கம் வீட்டில் சோதனை என்ற தகவல் வேகமாகப் பரவியதும் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக் கணக்கானோர் வைத்திலிங்கம் வீடு முன்பு குவிந்துவிட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டதால் கூடுதல் பாதுகாப்பு போடப் பட்டது. திரண்டிருந்த ஆதர வாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. காலை 11 மணிக்கு மேல் திருச்சி வெல்ல மண்டி நடராஜன் வைத்தி லிங்கம் வீட்டிற்கு வர, யாரிட மும் பேச அனுமதிக்கவில்லை. இரவைத் தாண்டியும் வியாழன் வரை சோதனை நடந்தது. கட்டுக்கட்டாக ஆவணங்களை அதிகாரிகள் அள்ளிச் சென் றுள்ளனர்.
தங்கள் வழிக்கு வராத எடப்பாடிக்கு, பா.ஜ.க. நெருக்கடி கொடுக்கத் தொடங்கிவிட்டது. தற்போது நடப்பது சாம்பிள்தான். அடுத்து கொடநாடு வழக்கை விஸ்வரூபம் எடுக்கவைத்து எடப்பாடியையே தூக்கும்... உடைந்த அ.தி.மு.க.வை ஒட்ட வைத்து கூட்டணிஅமைத்து மாவட்டத்திற்கு ஒரு சீட்டு வாங்கி, சுமார் 30 தொகுதிகளையாவது கைப்பற்றவேண்டும் என்ற இலக்கில் பா.ஜ.க. இருக்கிறது. தேர்தல் நேரத்தில் கூடுதல் குடைச்சல்களைக் கொடுக்கப் போகிறது பா.ஜ.க. என்கிறார்கள் விவரமறிந்த அரசியல் நோக்கர்கள்.
-பகத்சிங், துரைமகேஷ்