ரசியல் களத்தில் பா.ஜ.க. உருட்டும் தாயங்களில் ஒன்று மு.க. அழகிரி. "அவர் விரைவில் பா.ஜ.க.வில் சேர்வார், கலைஞர் தி.மு.க. என்ற புதுக்கட்சியைத் தொடங்குவார்' என ஒவ்வொரு முறை செய்தி வரும்போதும், அதன் உண்மைப் பின்னணியை முழுமையாக வெளியிட்டு வந்தது நக்கீரன்.

alagiri

தி.மு.க.வில் தென்மண்டல அமைப்புச் செயலாளராக தி.மு.க. ஆட்சியில் தென் மாவட்டங்களில் அதிரடி அரசியல் செய்து, கோட்டைவரை கொடிகட்டிப் பறந்தவர் அழகிரி. அவரால் ஏற் பட்ட சலசலப்புகளால் 2016-ல் கலைஞராலேயே அவர் அதிரடியாகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அழகிரியின் நிழலாக இருந்த பொட்டு சுரேஷ் படுகொலை செய்யப்பட... இதன்பின் அழகிரியை சுற்றி இருந்த அவரது முக்கிய ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக அவரைவிட்டு விலக ஆரம்பித்தனர். கலைஞர் மரணத்திற்குப் பிறகு, மீண்டும் அழகிரி தி.மு.க.வில் என்ட்ரி ஆவார் என அவர் தரப்பு எதிர் பார்த்தது. அழகிரி குடும்பத்தினரும் அவர்களுக்கு வேண்டியவர்களும் எடுத்த முயற்சிகளை, ஸ்டாலின் குடும்பத்தினர் விரும்பவும் இல்லை, ஏற்கவும் இல்லை. இன்னமும் தீராத இந்தப் பங்காளி தகராறுதான், அழகிரி பற்றிய பரபரப்பை லைவ்வாக வைத்துள்ளது.

Advertisment

கலைஞர் நினைவிடம் நோக்கி நீதி கேட்டு 2018 செப்டம்பரில் அழகிரி நடத்திய பேரணி, தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதன்பின், பிறந்த நாளையும் தடபுடலாகக் கொண்டா டாமல், சைலண்டாக அமெரிக்கா வுக்கு பறந்துவிட்டார். திரும்பத் தரையிறங்கியபோது, ’"ஸ்டாலின் தலைவ ராக இருக்கும்வரை தி.மு.க. ஒரு போதும் வெற்றி பெறாது'’என்று தன் கோபத்தை கையெறி குண்டாய் வீசிவிட்டுச் சென்றார். இந்த நிலையில்தான், தி.மு.க.வுக்கு அழகிரி மூலம் செக் வைக்க நினைத்த பா.ஜ.க. தரப்பு, ’"பா.ஜ.க.வில் இணையுங்கள். அல்லது கலைஞர் தி.மு.க. என்று புதிய கட்சியைத் தொடங்குங்கள்'’ என்று பல விதங்களிலும் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தது.

alagiriபா.ஜ.க.வின் முதல் சாய்ஸான ரஜினியுடன் அழகிரிக்கு நல்ல நெருக்கம் உண்டு. பரஸ்பர வாழ்த்துகளும் பரிமாறப்படும். அதனால், ரஜினி தொடங்க இருக்கும் புதிய கட்சியில் சேரப் போகிறார் என்ற செய்தியும் விறுவிறுப்பானது. அண்மையில் ஒரு செய்தி சேனல் அழகிரியிடம் "புதுக்கட்சி தொடங்கப் போகிறீர்களா?' என்று கேள்வி எழுப்ப... அழகிரியோ, ""எதுக்கு இப்படிப்பட்ட கேள்விகளை தேவையில்லாமல் கேட்கறீங்க?'' என்றார். அந்த சேனலோ, ’’"என் ஆதரவாளர்களிடம் ஆலோசித்துவிட்டுதான் எதையும் அறிவிப்பேன்'’என்று அழகிரி சொன்னதாக தெரிவித்தது. இதனால் அழகிரி பா.ஜ.க. வலையில் விழுந்துவிட்டார் என்றும், 21-ந் தேதி சென்னை வரும் அமித்ஷாவை அவர் சந்திக்கலாம் என்றும் செய்தி கள் சிறகடிக்கத் தொடங்கி இருக்கிறது. நாம் அழகிரியின் நெருக்கமான ஆதரவாளர்களிடம் இது குறித்து விசாரித்தபோது... “""இந்த தீபா வளிக்கு நாங்க அழகிரி அண்ணனைத் தனித்தனியா சந்திச்சி அவ ரிடம் வாழ்த்து பெற்றோம். அப்ப, பா.ஜ.க. வியூகம் பற்றிக் கேட்டதும் கோபமாகிவிட்டார். ""ஏம்பா, அவங்களுக்குதான் வேற வேலையில்லாம காதில் பூ சுத்தறாங்கன்னா அதை நீங்களுமா நம்புறது? என்னைப் போய் பா.ஜ.க.வோடு சேர்க்கறாங்களே, நான் கலைஞர் மகன்டா... என் கல்யாணமே தந்தை பெரியார் தலைமையில்தான் நடந்தது. அப்பா கட்டிக் காத்த கட்சியை நானே உடைப்பேனா? அந்த துரோகத்தை மட்டும் என் வாழ்வில் செய்யவேமாட்டேன்''னு அழுத்தமாகச் சொன்னார்.

alagiri

Advertisment

alagiriகடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது ஹெச்.ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் போன்ற பா.ஜ.க. பிரமுகர்கள் அண்ணனிடம் பேசிப் பார்த்தார்கள். அதேபோல் நடிகர் விஜயகுமார் போன்ற திரையுலகின ரை அனுப்பியும் அழகிரியின் மனதைக் கரைக்க முயன்றது பா.ஜ.க. இதேபோல் அமைச்சர் செல்லூர் ராஜூவின் அம்மா இறந்தபோது அழகிரி அண்ணன் நேரில் சென்று துக்கம் விசாரித்ததால், அ.தி.மு.க.வும் அவருக்கு நூல்விட்டுப் பார்த்தது. ஆனாலும் இதுவரை அவரை யாராலும் அசைக்க முடியலை. ஏன்னா அவர் உடம்பில் ஓடுறது கலைஞர் ரத்தம்''’என்றார்கள் பெருமிதமாய். அழகிரி தர்பாரில் மன்னனாக வலம்வந்த அந்த பிரமுகர் நம்மிடம், ""அழகிரியின் அரசியல் பற்றி அவரது துணைவியாரிடம் கேட்டபோது, "அண்ணனைத் தொந்தரவு படுத்தாதீங்க. அவர் உடல்நலனில் கவனம் செலுத்துறாரு. அவரைச் சேர்த்தாலும் சேர்க்காட்டியும் அவர் தி.மு.க.தான்'னு கலங்கினாங்க'' என்றார் தெளிவாக. அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கும் பா.ஜ.க. வலைவீசும் நிலையில்... தி.மு.கவில் மீண்டும் சேர்ப்பு, அறக்கட்டளை யில் பொறுப்பு என்பதே அழகிரி குடும்பத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அழகிரியின் தீவிர ஆதரவாளரான இசக்கிமுத்து நம்மிடம்...’ ""அழகிரி அண்ணனை தீபாவளி அன்று சந்தித்தேன். "பொறுங்க... கட்டாயம் பா.ஜ.க.விற்கு போக மாட்டேன்' என்றார். ஆனால் ஒன்று தி.மு.க தொடர்ந்து அவரை உதாசீன படுத்தினால் அவர் எந்த முடிவையும் எடுக்கத் தயங்கமாட்டார். தென் மாவட்டத்தில் உள்ள பெரும்பா லான தி.மு.க. தொண்டர்கள், அழகிரி மீண்டும் தி.மு.க.வில் இருக்கவேண் டும் என்றே விரும்புகிறார்கள்'' என்றார்.

"வாழ்வா-சாவா தேர்தல் களத்தில் கட்சித் தலைமை எல் லாவற்றையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்கி றார்கள்' அழகிரி தரப்பினர்.

-அண்ணல்