"ஹலோ தலைவரே, மீண்டும் ரஜினியைக் களமிறக்கும் முயற்சி நடக்குது.''”

"ஆமாம்ப்பா, ரஜினியை மையப்படுத்தி இதுக்காகவே ஒரு அமைப்பு தொடங்கப் பட்டிருக்குதே?''”

rajini

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, ரஜினி மூலம் பா.ஜ.க.வுக்கு பலமான அடித்தளத்தை தமிழகதில் உருவாக்கிக் காட்டுவதாக ஆடிட்டர் குருமூர்த்தி, டெல்லிக்கு வாக்குறுதி கொடுத்திருக்காராம். இதற்காக ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா மூலம் ’"தலைவர் ரஜினி யுனிவர்சல் சோஷியல் டிரஸ்ட்'’ என்ற அமைப்பைத் தொடங்கி யிருக்கிறார்கள். இதற்கு தமிழகம் முழுக்க கிளைகள் தொடங்கி இதை, பா.ஜ.க.வுக்கு சப்போர்ட்டாக ஆக்கவிருக்கிறார்கள். மேலும் சசிகலா டீம், தினகரனின் அ.ம.மு.க. மற்றும் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க. உள்ளிட்டவைகளை ஒருங்கிணைத்து ஒரே அணியாக செயல்படுவதோடு, அ.தி.மு.க.வின் இரட்டை இலையை முடக்கிவிட்டு, தி.மு.க.வுக்கு பெரும் மாற்று சக்தியாக பா.ஜ.க. தலைமையிலான டீமை உரு வாக்குவதே குருமூர்த்தி தரப்பின் திட்டமாம். அதற்கான வேலைகள்தான் நடக்குது.''

"அ.தி.மு.க. விவகாரத்தில் அடுத்தடுத்து எதிரும் புதிருமாகத் தீர்ப்புகள் வந்தி ருப்பதால் இரு தரப்பினரும் நீதியின் படிக்கட்டுகளில் உருண்டிருக்கிறார்களே?''”

"உண்மைதாங்க தலைவரே, அ.தி.மு.க. அதிகாரப் போட்டியில் களமிறங்கிய எடப்பாடியும் பன்னீரும், மாறி மாறி நீதிமன்றத்தில் முறையிட்டனர். ஒருமுறை ஓ.பி.எஸ்.ஸுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்தால், அடுத்தமுறை இ.பி.எஸ்.ஸுக்கு சாதகமான தீர்ப்புன்னு வந்துடுது. அந்த வகையில், எடப்பாடித் தரப்பு ஜூலை 11-ந் தேதி கூட்டிய அ.தி.மு.க.வின் பொதுக்குழுவை, எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்துக்குப் போனார் ஓ.பி.எஸ். இந்த வழக்கினை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், எடப்பாடி ஜூலை 11-ந் தேதி கூட்டிய பொதுக்குழுவை ரத்து செய்தார். இது ஓ.பி.எஸ்.ஸுக்கு சாதகமாகஅமைந்தது. இதையொட்டி அ.தி.மு.க.வினர் அவர் பின்னால் திரளுவதற்கான சூழல்கள் கட்டியமைக்கப்பட்டன. இதனையடுத்து சசிகலா, தினகரன் உள்ளிட்டவர்களை அ.தி.மு.க.வுக்குள் கொண்டுவரும் முயற்சியை எடுத்தார் ஓ.பி.எஸ். இந்த நிலையில் தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்தார் எடப்பாடி. இரு தரப்பையும் விசாரித்து செப்டம்பர் 2 அன்று தீர்ப்பளித்த இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், "ஜூலை 11-ந் தேதி எடப்பாடி கூட்டிய பொதுக்குழு செல்லும்' என்று கூறிவிட்டது. இதனால், மீண்டும் எடப்பாடியின் கை ஓங்கியிருக்கு. இந்த நிலையில், டிவிசன் பெஞ்ச் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டிற்குப் போகிறார் ஓ.பி.எஸ். தங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும்னு அவர் அழுத்தமாக நம்புகிறார்..''”

Advertisment

"எடப்பாடியின் வியூகம் என்ன?''”

"இந்தத் தீர்ப்பால் எடப்பாடி மிகுந்த உற்சாகத்தில் இருக்கார். அவரது அரசியல் ஆலோசகரான சுனில், இப்போது காங்கிரஸுக்கும் எடப்பாடிக்கும் இடையில் ஒரு நட்புப்பாலத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இருக்கிறாராம். இந்த நிலையில், விரைவில் பொதுக்குழுவைக் கூட்டி, அதில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி, போட்டிக்கு ஒருவரை அவரே நிறுத்தி, அந்தப் போட்டியில் தன்னை கட்சியினர் தேர்ந் தெடுத்ததாகவும், ஜனநாயக முறையில் வெற்றி பெற்று, பொதுச்செயலாளராக ஆனதுபோல் காட்ட நினைக்கிறாராம் எடப்பாடி. அதாவது ஓ.பி.எஸ்., சுப்ரீம்கோர்ட்டில் ஒரு தீர்ப்பை வாங்குவதற்கு முன்னதாகவே, அவர் பொதுச்செயலாளராக வேண்டும் என்று நினைக்கிறார். பொதுக்குழு மற்றும் நிர்வாகிகளின் பேராதரவைப் பெற்றதுபோல், கட்சித் தொண்டர்கள் மத்தியிலும் தனது செல்வாக்கைப் பெருக்க, என்னவெல்லாம் செய்யலாம் என்றும் ஆலோசித்து வருகிறாராம் எடப்பாடி.''”

vijaykanth

"தே.மு.தி.க.விலும் பவர் பாலிடிக்ஸ் ஆரம்பிச்சிடுச்சே?''”

"ஆமாங்க தலைவரே, தே.மு.தி.க. தலைவர் நடிகர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறார். கட்சியின் பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதாதான் கட்சியை வழிநடத்தி வருகிறார். கட்சியைப் பொறுத்தவரை தலைவர் பதவியில் இருப்பவருக்குத்தான் முக்கிய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், பல முடிவுகள் எடுக்கவேண்டி இருப்பதால் .அந்த முடிவுகளை, விஜயகாந்தின் பெயரில்தான் ரிலீஸ் செய்தாக வேண்டிய நிலை இருக்கிறது. ஆனால், விஜயகாந்தின் உடல்நல கண்டிஷன் அனைவருக்கும் தெரியும் என்பதால், அவர் பெயரில் வரும் முடிவுகள், அறிக்கைகள் எல்லாம் நகைப்பிற்கு உரியதாக மாறிவிடும்னு அந்தக் கட்சியின் சீனியர்கள் கருதுறாங்க. அதனால், விஜயகாந்தைக் கட்சியின் நிறுவனத் தலைவராக கௌரவப்படுத்திவிட்டு, தலைவர் பதவியை அதிகாரபூர்வமாக பிரேமலதா எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பலரும் வலியுறுத்துகிறார்கள். இன்னும் சிலரோ கட்சித் தலைவராக கேப்டனே தொடரட்டும். பிரேமலதா வேண்டுமானால் செயல்தலைவராக சகல அதிகாரத்தோடும் அமரட்டும்னு சொல்றாங்களாம்.''”

"ம்...''…”

"தலைவரே... தமிழக அரசின் செய்தித்துறையில், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பதவிகளுக்கான காலிப் பணியிடங் களை நிரப்புவதற்கான அரசாணை ஆகஸ்ட் 1-ந் தேதி பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதில், தமிழக அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் 50 சதவீதத்தினரும் நேரடி நியமனங்கள் மூலம் 50 சதவீதத்தினருமாக இனி அந்தப் பதவிகளில் அமர வைக்கப்பருவார்கள்னு என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. கடந்த 40 ஆண்டுகாலமாக இந்த பணியிடங்களை ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் நேரடியாகவே நியமித்து வந்தன. கட்சியினருக்காகவே இந்த நியமனங்கள் நடந்துவந்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக இதில் நிறைய ஊழல்கள் நடந்தன. பணம் பெற்றுக்கொண்டு பலருக்கும் சிபாரிசு செய்தனர் ஆளும் கட்சி அரசியல்வாதிகள். கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில், ஏ.பி.ஆர்.ஓ. பதவி ஒன்று 30 லட்சம் வரை விலைபோனது. இந்த நிலையில், ஏ.பி.ஆர்.ஓ. பதவிகளை நேரடியாக நியமிக்கக்கூடாது. டி.என்.பி.எஸ்.சி. மூலமே நியமிக்க வேண்டும் என்று 1992-ல் ஒரு வழக்கு போடப்பட்டது. அதில் 2012-ல் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், "டி.என்.பி.எஸ்.சி. மூலம் அந்தப் பணியிடங்களை நிரப்பவேண்டும்' என்று பரிந்துரைத்திருந்தது. ஆனால் ஜெயலலிதா அரசும், எடப்பாடி அரசும் அதைச் செய்யவில்லை. இந்த வழக்கு நீடித்திருந்த நிலையில்தான்., மு.க.ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய தி.மு.க. அரசு, 50:50 என்ற சதவீதத்தில் இடங்களை நிரப்ப அரசாணை யைப் பிறப்பிச்சிருக்கு.''”

"இந்த அரசாணைக்கு வரவேற்பு எப்படி?''”

"இந்த அரசாணையைக் கண்டு வேலையில்லா பட்டதாரிகளும் அரசுப் பணியாளர்களும் மகிழ்கிறார்கள். வரவேற்கவும் செய்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில், சீனிவாசா மாசிலமாணி என்பவர், டி.என்.பி.எஸ்.சி. மூலம் இந்த பணியிடங்களை நிரப்பக்கூடாதுன்னு மனுத் தாக்கல் செய்திருக்கிறார். மனுதாரர் தரப்பில் இந்த மனுவை தாக்கல் செய்திருப்பவர் தி.மு.க. எம்.பி.யும் சீனியர் வழக்கறிருமான வில்சன். இவர் மனுதாரருக்காக ஆஜராகியும் வாதிட்டுள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசின் அரசாணைக்குத் தற்காலிகத் தடை கொடுத்துள்ளது. இந்த ஸ்டே ஆர்டர் வேலையில்லாத பட்டதாரிகளிடம் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. அதே நேரத்தில், முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் கட்சியினருக்கு அரசாங்கத்தில் எந்தப் பங்கும் இல்லைங்கிற அதிருப்தி குரல் தொடர்ந்து ஒலித்து வருகிறது. இந்த வழக்குதான் கட்சிக்காரங்களுக்கு ஓரளவு ஆறுதலைத் தந்திருக்கு. தி.மு.க. அரசின் அரசாணைக்கு எதிராக தி.மு.க. எம்.பி.யே ஆஜராகி உள்ள நிலை யில், இது குறித்து வழக்கறிஞர் வில்சனிடமே நாம் கேட்டபோது, "நான் ஆஜரானது தொழில்ரீதியாக. தொழில் வேறு அரசியல் வேறு. இரண்டுக்கும் சம்பந்தமில்லை'' என்றார். இது ஒருபுறமிருக்க, ஏ.பி.ஆர்.ஓ. பதவியை வாங்கித் தருவதாக தற்போது 80 லட்சம் வரை இந்த பணியிடங்களுக்காக பேரங்கள் நடந்துவருகின்றன என்கிறது கோட்டை வட்டாரம்.''”

"காங்கிரஸின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மாற்றப்பட இருக்கிறார்னு செய்தி வருதே?''”

rr

"ஆமாங்க தலைவரே, அடுத்த மாதம் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தல் முடிந்ததும் மாநில காங்கிரஸ் தலைவர்கள் பலரையும் மாற்றும் திட்டத்திலும் இருக்கிறாராம் ராகுல்காந்தி. புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் மாநில தலைவர்களை மாற்றியமைப்பதுதான் கட்சியின் முதல் வேலையாக இருக்குமாம். அதேசமயம் அகில இந்திய காங்கிரஸின் தலைவராக வருபவர், சோனியா மற்றும் ராகுலின் சொல்லுக்கு கட்டுப்பட்டவராகத்தான் இருப்பாராம். அதேபோல், மாற்றப்பட வேண்டிய மாநிலத் தலைவர்களின் பட்டியலில் கே.எஸ். அழகிரியின் பெயரும் இருக்கிறதாம். அழகிரியின் 3 ஆண்டு கால பதவிக்காலம் இயல்பாகவே முடிந்துவிட்டதாம். அதனால் அவர் மாற்றப்படவிருக்கிறார். எனவே அவர் இடத்தை கைப்பற்ற முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு, எம்.பி.க்கள் செல்லக்குமார், விஷ்ணுபிரசாத், மாணிக்தாக்கூர், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட பலரும் இப்போதே காய்களை நகர்த்துகின்றன ராம். இவர்களில் மாணிக்தாக்கூர், ராகுல்காந்தியிடம் தனது விருப்பத் தைச் சொன்னபோது, "தெலுங் கானா மாநிலத்தின் பொறுப் பாளராக நீங்கள் இருக்கிறீர்கள். முதலில் அந்த மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றிபெற உழையுங்கள். பிறகு பார்க்கலாம்'னு சொல்லிவிட்டாராம் ராகுல்.''”

"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். முதல்வரின் பாதுகாப்புப் பிரிவின் கோர்செல் அதிகாரி தனக்கு கீழுள்ள காவலர்கள் முதல் காவல்துறை அதிகாரிகள் வரை விரட்டுகிறாராம். ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கூட தங்கள் வாகனங்களில் சைரன் வைக்கக்கூடாது என்கிற உத்தரவு இருக்கிறது. ஆனால், கோர்செல் அதிகாரியோ, தனது வாகனத்தில் சைரன் பொருத்திக் கொண்டிருக்கிறாராம். இவரைப் போலவே, சென்னை மாநகராட்சி யில் இருக்கும் விஜிலன்ஸ் ஆய்வாளர்கள் இருவரும், துணை கமிஷனரும் இவரைப் போலவே சைரன் பொருத்திய வாகனங் களைப் பயன்படுத்துகிறார்களாம். முதல்வர் அலுவலகம் உடனடியாக கவனிக்க வேண்டிய விஷயம் என்கிறார்கள் உயரதிகாரிகள்.''

___________

புதுமைப்பெண்

rr

செப்டம்பர் 5 திங்கட்கிழமையன்று சென்னை, பாரதி மகளிர் கல்லூரியில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டமான, "புதுமைப் பெண்' என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்படி, அரசுப் பள்ளி களில் 6 முதல் 12ஆம் வகுப்புவரை படித்து, உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக, மாதம் ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரிப் பள்ளிகள் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். விழாவில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "புதுமைப்பெண் திட்டம், தமிழகத்திலுள்ள பெண்களுக்கு மட்டு மின்றி, நாட்டிலுள்ள அனைத்துப் பெண்களுக்கும் முன்னோடித் திட்டமாக விளங்கப்போகிறது'' என்று பாராட்டினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது உரையில், "எனது வாழ்வின் மகத்தான, மகிழ்ச்சியான நாள் இன்று. படிக்க வைக்க பணம் இல்லையென்ற தயக் கம் பெற்றோருக்கு இருக்கக்கூடாது. புதுமைப் பெண் திட்டத்தைத் தொடங்கி வைத்து, ஒரு தந்தைக்குரிய உணர்வோடு இருக்கிறேன். அனை வருக்கும் கல்வி என்பதே "திராவிட மாடல்' அரசின் லட்சியம். பணம் இருப்பவர்களுக்கு ஒரு கல்வி, இல்லா தவர்களுக்கு ஒரு கல்வி என்பதைப் போக்கவே தகை சால் கல்விக் கூடங் கள்'' என்றார்.

-கீரன்