"ஹலோ தலைவரே, தேர்தலைக் குறிவைத்து தி.மு.க. அரசு விறுவிறுப்பாகத் திட்டங்களைத் தயாரித்துவருகிறதே?''”

"ஆமாம்பா, எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகையை வழங்க முதல்வர் தயாராகிறாரே?''”

"உண்மைதாங்க தலைவரே, தனது தேர்தல் அறிக்கையில் சொன்னதையெல்லாம் செயல்வடிவமாக மாற்றிவரும் முதல்வர், அதில் விடுபட்டிருக்கும் வாக்குறுதிகளெல்லாம் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று அண்மையில் அறிவித்தார். இப்போது அது குறித்த ஆய்வுகள் கோட்டையில் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. புதிதாக என்னென்ன மக்கள் நலத் திட்டங்களை அறிவிக்கலாம் என்றும் முதல்வர் ஆலோசிக்கிறாராம். அதேபோல், தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிருக்கு மாதந்தோறும் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில், தகுதியுள்ள மகளிரை மட்டும் தேர்வுசெய்து, அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை வழங்கி வருகிறது தி.மு.க. அரசு. அடுத்தகட்டமாக, ரேசன் அட்டை வைத்திருக்கும் அத்தனை மகளிருக்கும் அதே ஆயிரம் ரூபாயை வழங்குவதற்கான கோப்புகள் இப்போது நகர்ந்து வருகின்றன. இந்த மகளிர் உரிமைத் திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதால்தான், இதை அனைத்து மகளிருக்குமாக விரிவுபடுத்தித் தேர்தல் அஸ்திரமாக்க முனைந்திருக்கிறது தி.மு.க. அரசு என்கிறார்கள்.''”

"தி.மு.க. அரசின் இந்த திடீர் முடிவுக்கு வேறு காரணங்களும் கூறப்படுகிறதே?''”

"சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களே இருக்கின்றன. இந்தத் தேர்தலில் 200 இடங்களுக்கும் குறையாமல் போட்டியிட தி.மு.க. திட்டமிடுகிறது. அதன்படி தி.மு.க. போட்டியிட்டால், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு மீதமிருக்கும் 34 இடங்களை மட்டுமே பகிர்ந்தளிக்க முடியும். ஆனால் 2026 தேர்தலில் முந்தைய 2021 தேர்தலைவிட கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் உட்பட, தி.மு.க. கூட்டணியில் உள்ள அத்தனைக் கட்சிகளும் விரும்புகின்றன. அப்படியிருக்க, அந்த 34 இடங்களை எப்படி தி.மு.க. பகிர்ந்தளிக்கப்போகிறது என அதன் சீனியர்களே விவாதித்து வருகின்றனர். தாங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு சீட் கிடைக்காவிட்டால், அதை தி.மு.க.வின் கூட் டணிக் கட்சிகள் ஏற்குமா என்பது கேள்விக்குறி. இதை அறிந்து வைத்திருப்பதால்தான், 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று த.வெ.க. கட்சித் தலைவரான நடிகர் விஜய் குரல்கொடுத்து, தி.மு.க. கூட்டணிக் கட்சியினரை ஈர்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். விஜய்யின் அழைப்பு தங்களுக்கு சிக்கலை உண்டாக்கும் என்பதை உணர்ந்த முதல்வர் அதைச் சமாளிக்க, மகளிர் உரிமைத் தொகையை ரேசன் அட்டை வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் வழங்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்'' என்கிறது அறிவாலயத் தரப்பே.''”

"சரிப்பா, அ.தி.மு.க.வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறதே பா.ஜ.க.?''”

eps

"பா.ஜ.க.வுடன் எந்த நிலையிலும் கூட்டணி வைக்கமாட்டோம் என்று மார்தட்டி வந்தார் எடப்பாடி. அப்படிப்பட்டவருடன், டெல்லியின் அசைன்மெண்டின்படி, சீக்ரெட்டாக கூட்டணிப் பேச்சுவார்த்தையை முதல்கட்டமாக நடத்தியிருக்கிறது பா.ஜ.க. தரப்பு. அப்போது, அக்கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பவர், ’இந்தத் தேர்தலில் நான்தான் முதல்வர் வேட்பாளர் என எடப்பாடி அறிவிக்கவேண்டும். இப்படியொரு முக்கியத் துவம் பா.ஜ.க.வுக்குக் கிடைத்தால், அ.தி.மு.க. வையும் எடப்பாடி வகையறாவையும் நான் ஏற்றுக்கொள்ளத் தயார்’ என்று தெரிவிக்கச் சொன்னாராம். இதைக்கேட்டு எரிச்சலான எடப்பாடி, இதை ஏற்கவே முடியாது. இப்படி யெல்லாம் எங்களிடம் வந்து உளறக்கூடாது என்று கறார் காட்டியிருக்கிறார். அதேபோல் ஆட்சியில் பங்கு பற்றியும் எங்களிடம் பேசக்கூடாது. ஏனென்றால் அமையவுள்ள எங்கள் அரசை எல்லோரும் பலவீனமான அரசாக கருத ஆரம்பித்துவிடுவார்கள். வேண்டுமானால் வாரிய பதவிகள் சிலவற்றை பா.ஜ.க.வுக்கு விட்டுத்தருவோம் என்றும் சொன்னாராம். இதனால் பேச்சுவார்த்தை இழுபறியில் இருக்கிறதாம். எனினும் பா.ஜ.க.வின் தேசியத் தலைமை, அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தே ஆகவேண்டும் என்கிற பிடிவாதத்தில் இருக்கிறது.''”

"நடிகர் விஜய் பற்றியும் ஏதேதோ செய்திகள் எல்லாம் சிறகடிக்கிறதே?''”

Advertisment

vv

"திராவிட அரசியலுக்கு எதிராகக் களத்தில் இறங்கியிருப்பதாக, நடிகர் விஜய்யின் த.வெ.க. கட்சியினர் சொல்லிவரும் நிலையில், தி.மு.க. அரசு தொடர்பான ஊழல்களையும், அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்களையும் நடிகர் விஜய் ஆதாரங்களோடு தொகுத்துவரு கிறார் என்றும், அதை கவர்னரிடம் கொடுத்து அரசியலில் பரபரப்பைப் பற்ற வைக்க விருக்கிறார் என்றும் விதவிதமாக தகவல்கள் அண்மையில் கிளம்பின. இதுகுறித்து அவர் தரப்பிலேயே விசாரித்தபோது, "அப்படியெல் லாம் எதுவும் எங்கள் பக்கம் நடக்கவில்லை. இப்போது திரைப்படத்தில் விஜய் தீவிரமாக நடித்துவருகிறார். தேர்தல் வரப்போவதால், அரசியலில் பலமான எதிரிகளை உரு வாக்கிக்கொள்ள அவர் விரும்ப வில்லை. இளைய தலைமுறை யினரைக் கவரும் வகையில் புதிய இலவசத் திட்டங்களையும் அறிவிப்புகளையும் மட்டுமே அவர் தனது தேர்தல் நேர டெக்னிக் காகப் பயன்படுத்தவிருக்கிறார் என்கிறார்கள்.''”

"ஒன்றிய அரசின் நிதி ஆணையத்தினர் தமிழகம் வருகிறார்களே?''”

Advertisment

"ஒன்றிய அரசின் 16ஆவது நிதி ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தமிழகத்திற்கு 17ஆம் தேதி வருகிறார்கள். அவர் கள் தமிழகத்தில் 4 நாட்கள் இருக்கிறார்கள். இவர்களின் ஆலோசனைக் கூட்டம் கோட்டையில் நடக்கிறது. அதில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும், நிதித்துறைச் செயலாளர், தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர் கள், துறை வாரியான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொள் கிறார்கள்.''”

"நல்லது.''”

"நிதி சார்ந்த பல பிரச்சனைகள் பற்றி தமிழக திட்டக் குழுவுக்கு நிறைய தெரியும். அதனால் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், அதுகுறித்துப் பேசினால் சிறப்பாக இருக்கும் என்று அரசுத் தரப்பு கருதுகிறது. ஆனால், இந்த கூட்டத்தில் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சனை பேச அனுமதிப்பார்களா? என்கிற சந்தேகம் இப்போதே நிதித்துறை வட்டாரங்களில் எழுப் பப்படுகிறது. ஆலோ சனைக் கூட்டங்கள் முடிந்ததும், நிதி ஆணை யத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஃபீல்ட் விசிட்டுக்கு அழைத்துச் செல்லவும் நிதித்துறையினர் திட்டமிட்டிருக்கிறார்கள். அதாவது, தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட, ஒன்றிய அரசின் திட்டங்களை நேரில் அழைத்துச் சென்று காட்ட இருக் கிறார்கள். இதற்கிடையே, நிதி ஆணையத்தின் அதிகாரிகள் அனைவரையும் தனி விமானத்தில் மதுரைக்கு அழைத்துச்சென்று, அங்கிருந்து கீழடி அகழாய்வு மையத்தை அவர்களுக்குச் சுற்றிக்காட்டவும் திட்டமிட்டிருக்கிறார்கள். டெல்லியிலிருந்து வரும் அதிகாரிகள் ஒவ் வொருவரையும் கவனித்துக் கொள்ள ஐ.ஏ.எஸ். அதி காரிகளை நியமித்துள்ளது தி.மு.க. அரசு. அதேபோல் இந்த ஆணையத்தினர், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப் பட்ட மற்றும் பதிவு செய்யப் பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஒரு ஆலோ சனைக் கூட்டத்தையும் நடத்த விருக்கின்றனராம்''”

ss

"ஓவியர் டிராட்ஸ்கி மருதுக்கு தி.மு.க. அரசு பொறுப்பு ஒன்றைக் கொடுத்திருக்கிறதே?''”

"தமிழ்நாடு அரசின் திரைப்பட மற்றும் தொலைக் காட்சி பயிற்சி நிறுவனத் தலைவராக ஓவியர் டிராட்ஸ்கி மருது நியமிக்கப்பட்டிருக்கிறார். டிரட்ஸ்கி மருதுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதில் கலைத் துறையினர் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.'' ”

"தமிழக கல்லூரி முதல்வர் ஒருவருக்கு அமலாக்கத்துறை ஷாக் கொடுத்திருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, மதுரையில் இருக்கும் அமெரிக்கன் கல்லூரியின் பிரின்சிபாலாக (முதல்வர்) இருப்பவர் தவமணி கிறிஸ்டோபர். இவர் வெளிநாடு செல்வதற்காக உயர்கல்வித் துறையிடம் தடையில்லாச் சான்றிதழ் கேட்டு வாங்கியிருக்கிறார். இந்த நிலையில் வருமானத்துக்கு அதிகமாக இவர் சொத்துக்களைச் சேர்த்திருப்பதாக, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஏற்கனவே புகார் போக, அதன் அடிப்படையில் வழக்கும் பதிவாகியிருக்கிறது. இதையெல்லாம் மறைத்து, வெளிநாடு செல்வதற்கான அனுமதியைப் பெற்றிருக்கிறாராம் தவமணி. இது அமலாக்கத்துறைக்கு தெரியவர, லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, எப்படி வெளிநாடு செல்ல தவமணிக்கு அனுமதி கொடுத்தீர்கள் என அது உயர் கல்வித் துறையிடம் கேள்வி எழுப்பியது. இதில் ஷாக்கான உயர் கல்வித்துறை, லஞ்ச ஒழிப்புத் துறையில் உங்களுக்கு எதிரான வழக்கு இருப்பதால் அனுமதி மறுக்கப்படுகிறது ’என்று தவமணிக்கு ஹைவோல்ட் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. அதேபோல், தவமணிக்கு அனுமதி கொடுத்ததன் பின்னணியில் யார், யார் இருக்கிறார்கள் என்றும் அமலாக்கத்துறை இப்போது குடைந்துவருகிறதாம்.''”

"இந்துத்துவா பிரமுகர் வசமாக சிக்கியிருக்கிறாரே?''”

"சிதம்பரத்தில் கோசாலையை நடத்திவரும் இந்துத்துவா பிரமுகரான முருகன் என்பவர், ஏகப்பட்ட ஏடாகூடங்களை அரங்கேற்றி, சென்னைப் பகுதியில் மட்டுமே ஏறத்தாழ 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களைச் சேர்த்திருக்கிறாராம். இதற் காக ஒரு டீமையே வைத்திருக்கும் இவர், சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் இயன்றவரை சொத்துக்களையும் நிலங் களையும் மடக்கி இருக்கிறாராம். இந்த கோல்மால்களுக்கு உடன்படாத பத்திரப் பதிவு அதிகாரிகளையும் இவர் ஏகத்துக்கும் மிரட்டியதாகவும் சொல்கிறார்கள். இப்படிப் பட்ட வில்லாதி வில்லனை, காவல்துறை அதிரடியாகக் கைது செய்திருக்கிறது. அடுத்த கட்டமாக இவரது டீமில் உள்ள அனைவரையும் மடக்கும் முயற்சியில் சென்னை போலீஸ் பரபரத்து வருகிறதாம். இவரது பின்னணியில் இருக்கும் பா.ஜ.க. பிரமுகர் களையும் காவல்துறை குறிவைத்திருக் கிறதாம்.''’

"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலை பகிர்ந்துக்கறேன். நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று நூற்றாண்டு விழாக் குழுவின் தலைவர் என்ற முறையில் முதல்வரை அழைக்கவந்த பழ.நெடுமாறனை, முதல்வரே வாசல்வரை வந்து வரவேற்றதோடு அதேபோல் சிறப்பாக வழியனுப்பியிருக்கிறார். எல்லா ஒடுக்குமுறை களையும் தாண்டி, ஜெ. ஆட்சிக் காலத்திலும் விடுதலைப் புலிகளை ஆதரித் தவரும், மிகுந்த அறிவும் அனுபவமும் படிப்பும் உடையவர் நெடுமாறன். தானே முன்வந்து அவருக்கு வரவேற்பளித்ததன் மூலம், பதவி பெரிதில்லை பண்புதான் பெரிதுன்னு காட்டி யிருக்கிறார் முதல்வர்.''”