காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணத்தையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அனைத்துத் தரப்பு மக்களையும், அரசியல் நோக்கர்களையும் கூர்ந்து பார்க்க வைத்துள்ளது. 2026ல் நடைபெறப்போகும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக டில்லி சட்டமன்றத் தேர்தலோடு சேர்த்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நடத்தி விடலாம் என்பது பா.ஜ.க.வின் கணக்கு. ஆனால் அப்படி நடந்தால் அது அ.தி.மு.க.வுக்கு பேரிடியாகவே அமையும். வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஈரோடு தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு பெரிய கட்சிகளுக்குமே அக்கட்சிகளின் பலத்தை நிரூபிக்கவேண்டியிருக்கும் என்பதால், அந்தத் தேர்தலில் வெற்றிபெறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விசயம். அது அரசியல் களத்தில் பல கூட்டணிகளை மாற்றியமைக்கும் பெரும் சக்தியாகவே இருக்கும்.

vv

தமிழக மக்கள் அடுத்துவரும் 2026 தேர்த லில் யாருக்கு ஓட்டுப் போடுவார்கள் என்பதை உறுதியாகத் தெரிவிக்கும் இடைத்தேர்தலாகவும் ஈரோடு கிழக்கு தேர்தல் இருக்கும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கில் அ.தி.மு.க. போட்டியிட்டது. ஆனால் விக்கிர வாண்டி தேர்தலில் போட்டியிடவில்லை. ஈ.வி.கே.எஸ். மரணத்தால் தேர்தல் நடக்கும் பட்சத்தில் ஆட்சியிலிருக்கும் தி.மு.க. அதிகார துஷ்பிரயோகங்கள் செய்து வெற்றிக்கனியைப் பறித்துவிடும் என்ற பயம் அ.தி.மு.க.வுக்கு வந்துள்ளது. கட்சிக்குள் முக்கிய தலைவர்களின் அதிருப்தி மற்றும் குழப்பங்கள் நிறைந்த சூழல் நிலவுகிறது. அ.தி.மு.க. எந்தக் கட்சிகளுடனும் கூட்டணி என்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. போட்டி போடுவதற்கும் இன்னும் தயாராகவில்லை. எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், வீரமணி, கே.பி.அன்பழகன் போன்ற அ.தி.மு.க. முக்கியத் தலைவர்கள் எடப்பாடி மேல் கடும் அதிருப்தியில் இருந்த சூழலில்தான் அ.தி.மு.க. பொதுக்குழு கூடியது. பொதுக்குழுவுக்கு முன்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கலந்தாய்வுக் கூட்டங்களை எடப்பாடி நடத்தியபோது உட்கட்சி மோதல்கள்தான் நடந்தன.

ஆனால், இந்தப் பொதுக்குழுவில் என் தலைமையில்தான் கட்சி, அ.தி.மு.க. என்றால் அதன் தலைவர் தான்தான் என்பதை உறுதியாக நிரூபித்தார் எடப்பாடி. பணத்தைப் பண மாகவே பார்க்காத எடப்பாடி கோடிக்கணக் கில் செலவழித்து பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரிடமும் கையெழுத்துப் பெற்று அதைத் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பும் முயற்சி யில் மிக உறுதியுடன் இயங்கினார். இம்முயற்சி யின் ஒரு பகுதியாக பொதுக்குழு கூடும் முன்னரே சி.வி.சண்முகம் இல்லத்தில் ஒரு மீட்டிங். பின்னர் அனைவரையும் சந்தித்த எடப்பாடி, எல்லோரையும் சமாதானப்படுத்தி அவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றார். எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், செங்கோட் டையன், நத்தம் விஸ்வநாதன், வீரமணி, கே.பி. அன்பழகன் போன்றவர்களை ஒரே நேர்கோட் டில் ஒருங்கிணைத்தார். எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் போன்ற அ.தி.மு.க. முன்னணித் தலைவர்களே "“கட்சிக்குள் எந்தக் குழப்பமும் இல்லை.. எடப்பாடிதான் தலைவர்.. அடுத்த தமிழக முதல்வர்''’என்றார்கள்.

Advertisment

எடப்பாடி பேசும்போது, "வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் விரும்பும், தொண்டர்கள் விரும்பும் வலிமை மிக்க கூட்டணியை அமைப்போம். நாம் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்''’என்றார்.

vv

ஆனால், ஓ.பி.எஸ்., சசிகலாவால் ஏற்படும் இழப்பை நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைத்து சரிக்கட்டலாம் என்பதே எடப் பாடியின் விருப்பம் என்பதைப் புரிந்துகொண்ட பா.ஜ.க.வின் கணக்கோ வேறு வகை. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வைவிட பா.ஜ.க.வானது ஆடுமலை அமைத்த தேர்தல் வியூகத்தால், தந்திரங்களால் சற்று முன்னணியைக் காட்டியது. ஆனாலும், அடுத்து வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரிய அளவில் வெற்றிபெற்று தனது பலத்தை நிரூபிக்க அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் தான் முடியும். அதற்குள் அ.தி.மு.க. வின் தேர்தல் சின்னமான இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் மூலம் முடக்குவது என்ற பிளானில் இறங்கியுள்ளது. மதுரையிலும் சின்னம் தொடர்பாக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தலுக்குள் இரட்டை இலை சின்னத்தை முடக்கி, அங்கு பா.ஜ.க. தனி அணியாக நின்று குறிப் பிட்ட சில ஜாதியினரின் வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்துக்கு பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வை மூன்றாம் இடத்துக்கும் தள்ளுவது என்பது ஆடுமலை நிலைப்பாடு. இதன்மூலம் பா.ஜ.க. வுடன் கூட்டணி இல்லை என்றால் அ.தி.மு.க. அடுத்து வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்கிற பயத்தை அ.தி.மு.க.வுக்கு கொடுத்து அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிக்குள் எடப்பாடியை இழுத்து வருவதே பா.ஜ.க.வின் கனவு. ஏற்கெனவே ரெய்டுகள் மூலம் அ.தி.மு.க.வை மிரட்டிக்கொண்டுள்ள பா.ஜ.க., மேலும் ரெய்டுகளைத் தொடரும் என்கிற பேச்சும் அ.தி.மு.க. பொதுக்குழுவில் உலாவியது.

Advertisment

“இதையெல்லாம் நன்கு புரிந்துகொண்ட எடப்பாடி, அவரது மகன் மிதுன் மூலம் சைலண்டாக சில மூவ்களை நடத்திவருகிறார். மிதுன் நண்பர் அர்ஜுன் ரெட்டி மூலம் நடிகர் விஜய்யின் த.வெ.க. மற்றும் சீமானின் நா.த.க., பா.ம.க., என ஒரு மாறுபட்ட கூட்டணியை அமைக்க முயற்சி செய்துவருகிறார் எடப்பாடி. ஆனால் பா.ஜ.க.வோ எஸ்.பி.வேலுமணி போன்ற சில தலைவர்களை வைத்து அ.தி.மு.க. வை கருவறுக்கும் முயற்சிகளைச் செய்துவரு கிறது. ஒருபுறம் பா.ஜ.க.வின் அரசியல் சதி மறுபுறம் நடிகர் விஜய்யின் வளர்ச்சி, செல் வாக்கு என ‘இரண்டுக்கும் இடையே ஒருவித பதட்டத்துடனேயே பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் இருந்தார்கள் என்பதே அரசியல் பார்வையாளர்கள் கருத்து.

________________

சுந்தர் சிவலிங்கம் இறுதிச் சுற்று!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்றத் தின் நடப்புக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற பா.ஜ.க. அரசு திட்டமிட்டுவரும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து திங்கள்கிழமை (16-12-24) எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், "நமது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான, நடைமுறைக்குச் சாத்தியமில்லாத "ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை இந்தியா கூட்டணி வலுவாக எதிர்க்கிறது. இது நம் நாட்டை ஒற்றை ஆட்சி அதிகாரத்தின்கீழ் கொண்டுபோய் தள்ளிவிடும். "ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் சர்வாதி காரத்துக்கு வழிவகுக்கும். நாட்டின் பன்முகத்தன்மை, ஜனநாயகத்தை இந்தத் தேர்தல் முறை அழித்துவிடும்'' என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

-இளையர்