"ஹலோ தலைவரே, பா.ஜ.க.வில் புதுசு புதுசா சலசலப்பு கிளம்புது.''”

"பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணா மலை பற்றி சுழன்றடிக்கும் புகாரைப் பத்திச் சொல்றியா?''”

ff

Advertisment

"சரியா, பாயிண்ட்டைப் பிடிச்சிட்டீங்களே தலைவரே, பா.ஜ.க. அண்ணாமலை, பிரச்சினைகளை வைத்து லாபம் பார்க்கிறார்னு இப்ப புது புகார் ஒண்ணு, அவங்க தரப்பில் இருந்தே டெல்லி நோக் கிப் பறந்துக்கிட்டிருக்கு. அந்தப் புகாரில், தி.மு.க. அரசில் எதாவது ஒரு துறையைப் பத்தி அண்ணா மலை ஒரு பிரச் சினையைக் கையில் எடுப்பார். உடனே அதை அப்படியே விட்டுட்டு அடுத்த பிரச்சினையைக் கையிலெடுக்க ஆரம்பிச் சிடுவார். பிறகு அதையும் அப்படியே கிடப்பில் போட்டுட்டு, அடுத்த விவகாரத்துக்குப் போவார். இப்படி அவர் தாவித்தாவிப் போறதுக்குக் காரணம், பிரச்சினையைக் கிளப்பிய வேகத்தி லேயே அவர், சம்பந்தப்பட்டவர்களிடம் சீக்ரெட்டா காம்ப்ரமைஸ் ஆகிவிடுகிறார்னு அதில் குறிப்பிட்டிருக்காங்களாம். இதனால் டெண்டர் கோரிக்கையோடு யாராவது கோட் டைத் தரப்பைப் பார்க்கச் சென்றால்... முதலில் கமலாலயம் போய், அண்ணாமலையைப் பார்த்துட்டு வந்துடுங்கன்னு சொல்றாங்களாம். இதுபோன்ற புகார்கள் கட்சித் தலைமைக்குப் போவதை, கட்சித் தலைமையில் இருக்கும் தனக்கு நெருக்கமான நபர் மூலம், இருட்டடிப்பு செய்ற வேலை யையும் அண்ணாமலை செய்கிறாராம்.''”

"சரிப்பா, நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் அமைக்கப் பட்டிருக்குதே?''”

"நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு துறை சார்ந்ததாக மொத்தம் 22 நிலைக்குழுக்கள் இருக்கின்றன. இந்தக் குழுக்கள் அதிகாரம் மிக்கவை. நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் எந்த மசோதாவாக இருந்தாலும், அவற்றுக்கு இந்த நிலைக் குழுவின் ஒப்புதல் பெற்றுதான் தாக்கல் செய்வாங்க. அந்த அளவுக்கு நிலைக்குழுக்கள் பவர் கொண்டவை. நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள எம்.பி.க் களின் எண்ணிக்கையைப் பொறுத்து நிலைக்குழுக்களின் உறுப்பினர்களையும் அவற்றின் தலைவர்களையும் நியமிப்பது நடைமுறையாக இருக்குதாம். இப்ப அந்தக் குழுக்களுக்கு புதிய உறுப்பினர் களும் சேர்மன்களும் நியமிக்கப்பட்டி ருக்காங்க.''”

Advertisment

"நிலைக்குழுவின் தலைவர்களாக, தி.மு.க. எம்.பி.க்களான திருச்சி சிவாவும், கனிமொழியும் நியமிக்கப் பட்டிருக்காங்களேப்பா?''”

oo

"ஆமாங்க தலைவரே, தொழில்துறை சார்ந்த நிலைக்குழுவின் சேர்மனாக திருச்சி சிவாவும், கிராமப் புற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை சார்ந்த நிலைக் குழுவின் சேர்மனாக கனிமொழியும் இப்ப நியமனம் செய்யப்பட்டிருக்காங்க. இவர்களில் கிராம ஊரக வளர்ச்சி நிலைக்குழுவுக்கு கனிமொழியை சேர்மனாக்குங்கள்னு பிரதமர் மோடியே பரிந்துரை பண்ணி னாராம். காரணம், இந்திய எம்.பி.க்களில் முதன்முதலாக வெங்கடேஷ்புரம் என்ற ஒரு கிராமத்தைத் தத்தெடுத்துக் கொண்டு, அதை கனிமொழி தரம் உயர்த்தியது மோடியைக் கவர்ந்துவிட்ட தாம். அதனால், வட மாநிலங்களில் உள்ள பின்தங்கிய கிராமங்களை உயர்த்த கனிமொழியின் ஆலோசனை யையும் டெல்லி எதிர்பார்க்குதாம்.''”

"சசிகலா தரப்புக்கு பதிலடி கொடுக்க எடப்பாடி ஒரு பக்கம் களமிறங்கறாரே?''”

rr

"ஆமாங்க தலைவரே, சசிகலா தரப்புக்கு, சமூக ரீதியில் பலமாக இருப்பது தென்மாவட்டங்கள்தான். அதேபோல் ஓ.பி.எஸ்.ஸும் அந்த சமூகத்தினரின் பலத்தை நம்பியே அரசியல் செய்துக்கிட்டு இருக்கார். அதனால் ஒரே கல்லில் ரெண்டு மாங்காயை அடிப்பது போல், தென்மாவட்டங்களுக்கு டூர் அடித்து, முக்குலத்தோரின் கவனத்தைத் தன்பக்கம் இழுத்து, அந்த இருவருக்கும் ஷாக் கொடுக்கத் திட்டமிட்டிருக்காராம் எடப்பாடி. இந்த நிலையில், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான அய்யாத்துரை பாண்டியனை முதலாவதாகத் தன் பக்கம் வளைத் துள்ள எடப்பாடி, அவரை தங்கள் கட்சியில் இணைத் திருக்கிறார். இந்த அய்யாதுரைக்கு ஓ.பி.எஸ்.ஸும், பா.ஜ.க. அண்ணாமலையும் தூண்டில் போட்டுவந்த நிலையில்தான், அவரைக் கொத்திக்கொண்டு போய்விட்டார் எடப்பாடி. இப்போது எடப்பாடியின் தென்மாவட்ட பயணத் திட்டம், அய்யா துரையிடம்தான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவர், ஒரு பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதில் 10 ஆயிரம்பேரை அ.தி.மு.க.வில் இணைக்கப்போகிறாராம்.''”

"அதிகாரிகள் பத்தி கசப்பான சில விஷயங்கள் நம் காதுக்கு வருது. குறிப்பா, அரியலூர் கலெக்டர் ரமணசரஸ்வதிக்கு எதிராக மாநில மனித உரிமை ஆணையம், தானாக முன்வந்து புகார் பதிவு செய்திருக்கு!''”

ff

"உண்மைதாங்க தலைவரே, கலெக்டர் ரமணசரஸ்வதி, தனக்கு கீழ் பணிபுரியும் மாவட்ட அதிகாரிகளையும் அலுவலர்களையும் ஜாதி ரீதியாக அவமானப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறாராம். அதேபோல் அவர்கள் மீது கோபத்தோடு கோப்புகளை வீசி அடிப்பதையும், கேவலமான வார்த்தைகளில் அர்ச்சிப்பதையும் தொடர்ச்சியாக செய்துவருகிறாராம். இத்தகைய அவமானங்களை எதிர்கொண்ட பெண் தாசில்தார் ஒருவர், மன உளைச்சலால் தற்கொலை முயற்சியில் இறங்கி, கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டிருக்கிறார். அதேபோல, பி.டி.ஓ. ஒருவரை அடிக்க, கலெக்டர் கை ஓங்கியதாகவும் விவகாரம் வெடித்தது. இதையெல்லாம் கவனித்த மாநில மனித உரிமை ஆணையம், தாமாகவே புகாரைப் பதிவு செய்து, கலெக்டரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி யிருக்கிறது. இதேபோல் பாதிக்கப் பட்டவர்களின் சார்பில், தேசிய தாழ்த்தப் பட்டோர் ஆணையத்துக்கும் இவருக்கு எதிரான புகார்கள் பறந்திருக்கு.''”

"தலைமைச் செயலகத்தில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் மீதும் இப்படிப்பட்ட புகார்கள் எழுந்திருக்கே?''”

"தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத் துறையின் செயலாளராக இருப்பவர் ஜவஹர் ஐ.ஏ.எஸ். கால்நடை, பால்வளம், மீன் வளம் ஆகிய மூன்று துறைகளின் செயலாளராக பவர்ஃபுல்லாக இருந்த ஜவஹர் மீது, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவரை ஆதிதிராவிடர் நலத்துறைக்குத் தூக்கியடிச்சிருக்காங்க. இதனால் எரிச்சலின் உச்சத்தில் இருக்கும் ஜவஹர், தனது துறை சார்ந்த அதிகாரிகளையும் அலுவலர்களையும் கீழ்மையாக நடத்துவதோடு, ஒருமையிலும் பேசுகிறாராம். அலுவலக நேரம் முடிந்தும் பணியாளர்களை அலுவலகத்தில் அமரவைத்து டார்ச்சர் கொடுக்கும் அவர், அவர்கள் வீட்டுக்குச் சென்ற பிறகும் செல்போனில் தொடர்புகொண்டு, இம்சை கொடுக்கறாராம். இதனால் அந்தத் துறையே புகைச்சலில் இருக்கிறது.''”

"நானும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி பற்றிய செய்தியைப் பகிர்ந்துக்கறேன். உயர்கல்வித் துறையின் கீழ் தமிழகம் முழுவதும் இயங்கும் பாலிடெக்னிக் மற்றும் சிறப்பு பயிலகங்களில் சுமார் 1,300 பேர் பகுதி நேர விரிவுரையாளராக சேர்ந்து, தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் மாதம் 15,000 சம்பளத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வருகிறார்கள். தற்காலிகப் பணியாளர்கள் அனைவரும் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைக்கு மாறாக, தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் ஆணையரான லஷ்மிபிரியா ஐ.ஏ.எஸ்., இவர்கள் அனைவரையும் பணியில் இருந்து நீக்குவதாக கடந்த 30-ஆம் தேதி திடீரென உத்தரவு பிறப்பித்து, அவர்களுக்கு கடும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இதெல்லாம் முதல்வருக்கு தெரிந்து நடக்கிறதா? தெரியாமல் நடக்கிறதா? என்றபடி அவர்கள் பரிதவித்து வருகிறார்கள்.''